Tuesday, May 16, 2017

பிரதமர்.

வலைதளங்களில் பிரதமரை விமர்ச்சிப்பவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டுமென்கிறார் எச்.ராசா.. .. நாட்டின் பிரதமரை விமர்சிக்கலாமா என கேட்டால் விமர்சிக்கபடவேண்டும் அதுதான் சரியும் கூட.. அவரின் நடவடிக்கைகள் ஏதோ ஒரு சாராருக்கு மட்டுமானதாக இருப்பதும் சுயமாக சிந்தித்தோ அல்லது தன் கேபினெட் சகாக்களோடு கலந்தாலோசித்தோ முடிவெடுக்காமல் .. எங்கிருந்தோ வரும் கட்டளையை பின்பற்றுகிறவரை எப்படி விமர்சிக்காமல் இருக்கமுடியும்.. .. வாயை திறந்தால் பொய்யை சொல்லும்.. ஒரு பிரதமரை நாடு இதுவரை சந்தித்ததே இல்லையே.. அரசதர்மத்தோடு நடந்துக்கொள்ளுங்கள் என குஜராத் இனபடுகொலை நடந்தபோது வாஜ்பாய் சொன்னாரே.. அப்போதுகூட வங்க இதழொன்று குஜராத்தின் கசாப்கடைக்காரன் என தலைப்பிட்டதே .. எந்த தகுதியில் அவரை பிரதமராக்கினீர் என தொடங்கி.. இன்றுவரை பாஜக மீதும் பிரதமர் மீதும் எதிர்மறை கருத்துக்கள் தொடர்ந்து வந்துக்கொண்டுதானிருக்கிறது.. ஒரு ஜனநாயக நாட்டில் பொதுவாழ்விற்கு வந்தவர்கள் விமர்சனத்திற்குள்ளாவதை யாரும் கேள்வி கேட்க முடியாது.. நாட்டின் தலைநகரில் ..நாட்டின் குடிமகன் நிர்வாணமாக நின்ற போதும் ஏன் என கேட்கவில்லையே.. மற்றொரு நிகழ்வாய் பெண்களும் ஆடைகளை கலைந்து அம்மணமாய் நிற்கிற கொடுமை வேறு யாருடைய ஆட்சியிலாவது.. ஏன் வாஜ்பாய் ஆட்சியிலாவது நடந்ததா.... .. தமிழகத்தின் இதுவரை ஏன் ஆளுநரை நியமிக்கவில்லை.. ஏன் திரைமறைவில் ஆட்சியை நடத்திட துடிக்கிறீர் வேண்டாவதர்களை சோதனை என்ற பெயரில் அலைக்கழிப்பதும்..கடைசியில் ஒன்றுமில்லாமல் போய் கரியை பூசிக்கொள்வதையும் கேட்கவேண்டியிருக்கிறதே.. மாட்டிற்காக மனிதனை கொல்கிற அவலம் வேறெப்போதாவது நடந்ததுண்டா.. நாங்கள் வந்தால் எல்லையை மீற முடியாதென்றீர்கள் இதுவரை 258 ராணுவர் வீரர்கள் பலியாகியிருக்கிறார்களே.. ஒரு பெண்மணி பிராவை அனுப்பிவைத்திருக்கிறாரே இப்படி எந்த பிரதமராவது அசிங்கப்பட்டிருக்கிறாரேகளா.. தலித்கள் வேட்டையாட படுகிறார்கள் முஸ்லிம்கள் மீது வன்மத்தை/வெறித்தனத்தை/குரோதபோக்கை வெகு மக்களிடையே பரப்பிவருகிறார்களே அதை இந்த பிரதமர் கண்டித்ததுண்டா.. ஒரே நாளில் நாட்டுமக்களை நடுதெருவில் நிறுத்தி.. கருப்புபணத்தை ஒழிப்பதாக சொன்னாரே ஒழிந்துவிட்டதா.. நிறைய கேள்வி மீதமிருக்கிறது.. கோமாளித்தனமாய் ..ஆட்சி செய்துக்கொண்டு நாட்டை கெடுத்துகொண்டிருக்கிற பிரதமரை விமர்சிக்காமல்/கண்டனத்தை பதிவுசெய்யாமல் புகழவா முடியும் .. இந்தியா கண்ட மிக மோசமான பிரதமர்.. மோடி .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment