Thursday, May 18, 2017
இன விடுதலை..
எங்கே விழுந்தது இன விடுதலை/உரிமை போராட்டம்..
..
நீண்ட வரலாறை கொண்ட ஈழ விடுதலை போராட்டம் ஆரம்பகாலங்களில் தமிழகத்தில் தன்னெழுச்சியான வரவேற்பை ஆதரவை பெற்றிருந்தது.. மக்கள் தாமாகவே முன் வந்து பேருதவி செய்திருக்கிறார்கள்.. பல்வேறு பிரிவுகளாக .. சில அமைப்புகள் ஜனநாயகத்தின் மீதுமட்டுமே நம்பிக்கையும் சிலர் தோக்கு தீர்வுதருமென நம்பினார்கள்.. ஆனால் இருசாராரையும் தமிழகமக்கள் ஏதோயொருவகையில் பின்துணைத்தார்கள்
தமிழகத்தில் காட்சிகள் மாற துவங்கியதன் பின்னணியை கொஞ்சம் ஆராயவேண்டும்..
..
80 களில் விடுதலை போராட்டம் தீவிரமடைந்த நேரம் இங்கே அதுவரை ஈழம் பற்றிய சராசரி அறிவோ அனுபவமோ இல்லாத எம்ஜிஆர் (மகோரா) ஆட்சியிலிருந்தார்.. அப்போது பிரபாகரன் ஒரு வழக்கில் கைதாகியிருந்தார்.. அவரை வெளியே விடவேண்டுமென்று கலைஞர் வழக்கமான எதிரான கருத்தாயுதத்தை எடுத்தார் விடுதலையான பிரபா எம்ஜிஆரை சந்தித்து நன்றி சொன்னார்.. அப்போதிலிருந்து எம்ஜிஆரின் விசிறியாகவே செயல்பட்டார்.. அப்போதெல்லாம் கீழ்தஞ்சை மாவட்டங்களில் மத்திய ரிசர்வ் போலீஸின் செக்போஸ்ட் நிறைய இருக்கும் காரணம் நிறையதமிழர்கள் அகதிகளாய் வந்துக்கொண்டிருந்தார்கள் ஆயுதங்கள் பெட்ரோல் போன்ற எரிப்பொருட்கள் பேட்டரிக்கள் இங்கிருந்து அனுப்பிக்கொண்டிருந்த நேரம் .. அப்போதெல்லாம் அதிமுககாரர்களுக்கோ இன்று ஈழவேசம் போடும் நெடுமாறன் போன்றவர்கள் (காங்கிரஸில் இருந்தார்) என்ன நடக்கிறதென்றே தெரியாது யார் உதவுகிறார்கள் அகதிகளாக வந்த உறவுகளுக்கு உணவு உடை உறைவிடம் தருவதாரென்று ஆளும் எம்ஜிஆருக்கே தெரியாது நிறைய திமுகவினர் சொந்த நிலங்களில் தங்கவைத்தும் வேலைதந்தும் உறவுகளை அரவணைத்தார்கள்..
..
நடராஜன் தங்கதுரை குட்டிமணி சீறிசபா ரத்தினம் போன்றவர்கள் தனி இயக்கமாக செயல்பட்டனர் ..மார்க்சிய இயக்க கொள்கையில் ஈடுபாடு கொண்ட க.பத்மநாபன் (செல்வநாயகம் பத்மநாபன்) தனி அமைப்பை நடத்தினார் ..இன்னும் பல்வேறு சிறிய குழுக்களும் செயல்பட்டன.. யார் அதிகாரத்தில் அல்லது ஆணையிடுவதில் வழிநடத்துவதில் என்ற நோக்கம் சகோதரயுத்தத்தை உண்டாக்கி கிட்டுவின் ஆலோசனையில் பிற அமைப்பின் தலைவர்களை கொல்வதென முடிவெடுக்கப்பட்டு .. ஒவ்வொரு அமைப்பாக சிதைத்தார்கள்.. சீறிசபா பத்மநாபன் ..தொடங்கி மாத்தையா வரை.. பிரபாகரனின் அபரீத வளர்ச்சி பிற அமைப்புகளை இடம்பெயர செய்தது..புலம்பெயர்ந்தார்கள்..
..
தோக்கால் எல்லாவற்றையும் சாதித்துவிடலாமென்ற அறிவிலித்தனம்.. கடைசியில் இந்திய பிரதமராக இருந்த உலகின் மிக முக்கிய தலைவராக வலம்வந்த ராஜீவை கொல்ல திட்டமிட்டார்கள் அதில் வெற்றிப்பெற்றார்கள்.. அங்குதான் அவர்களின் .. வீழ்ச்சி ஆரம்பமானது..
சீறியையும் பத்மனையும் குட்டிமணியையும் மாத்தையும் கொன்ற போது என்ன காரணம் சொன்னார்களோ அதே காரணத்தை தான் ராஜீவ் கொலைக்கும் சொன்னார்கள்.. பாதிக்கப்பட்டவர்கள் கொன்றார்கள்..
அந்த வாதம்எடுபடவில்லை தமிழக மக்களிடம் அதுவரை இருந்த இனம்புரியாத உணர்வு வெறுப்பாய் மாறியது.. அது இன்று வரை .. கடைசியில் அது ஒரு துன்பயியல் சம்பவமென பிரபாகரனே சொல்லவேண்டி வந்தது..
..
இப்போதெல்லாம் ஈழம் வியாபார பொருளாக மாறிவிட்டது.. ஈழம் பேசுகிறவன் பங்களாக்களில் வசிக்கிறான்.. என்பதுகளில் சொந்த காசை செலவு செய்த திமுககாரன் .. பழியோடு திரிகிறான்..
இதுதான் யதார்த்தம்..
..
கிளிகொச்சி கைவிட்டுப்போன பின் விடுதலைப்புலிகள் தங்களை காப்பாற்றிக்கொள்ள நடத்தியது.. #மனிதகேடயம்
அதை யாருமே கண்டிக்காமல் போனது இனத்தின் அழிவை எழுதிதந்ததுப்போல் ஆனது..கடைசியில் கரம் தூக்கி நின்றபோது இனத்தின் வீரம் வீழ்ந்தது..
விவேகத்தை முன்னெடுக்க எந்த வீரமும் தோல்வியையே தழுவும் என்பதே வரலாறு..
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment