Wednesday, May 10, 2017
நாகரீகம் பற்றி..
அரசியல் நாகரீகம் தெரியவில்லை.. தமிழிசை..
பாஜக விற்கு அழைப்பிதழ் இல்லையென்பதற்காக சொல்லியிருக்கிறார்.. முதலில் விருந்திற்கு அழைப்பதில் இருவேறு வழிகள் உண்டு .. நேரில் சென்று வந்தாகவேண்டுமென்றழைப்பது.. சிறப்பு அழைப்பு என்று எடுத்துக்கொள்ளுங்கள்.. மற்றொன்று பத்திரிகையை தபாலில் அனுப்புவது..
தமிழசைக்கு தபாலில் வரலாம் அனுப்பலாம்..
..
அது சரி எதை நாகரீகம் என்கிறார்... சக மனிதனை மனிதனாகவே மதிக்க தெரியாமல் #சங்கரராமன் கொலை புகழ் ஜெயேந்திர் மத்திய இணையமைச்சரையே காலடியில் கைக்கட்டி அமரவைத்தபோது நாகரீகம் தெரியவில்லையா.. வாயை திறந்தாலே பொய்யை மட்டுமே பேசிவரும் பாஜகவை எதிர்ப்போரையெல்லாம் தேசதுரோகி என தொடர்ந்து சொல்லி வருகிறாரே..எச்.ராசா வர்மா அவருக்கு நாகரீகம் பற்றி ஏன் வகுப்பெடுக்கவில்லை.. நாகரீகம் பற்றி மதவெறிகும்பலுக்கு ஏதாவது தெரியுமா.. அரசியல் நாகரீகத்தை பற்றிபேச ஒரு தகுதி வேண்டாமா.. அது தமிழிசைக்கு இருக்கிறதா..
..
தொடர்ந்து திமுகவை வசைபாடியும் திமுக தலைவர் கலைஞரை ஒருமையிலும் .. தீயசக்தியென்று பேசி வந்தவர் ஜெயலலிதா அவரின் மறைவிற்கு சென்று மலர்வளையம் வைத்து கண்ணீர் சிந்திய தளபதிக்கு ..அரசியல் அரிச்சுவடி தெரியாமல் தினம் தினம் மாறி மாறி உளறிக்கொட்டு தமிழிசை கேள்விகேட்பதுதான் காலக்கொடுமை..
மதவாதம் பேசுகிற அதுவும் கொடூரமாக சிந்தனையோடு திரிகிற கூட்டத்தை அழைக்கவேண்டுமென்பது.. மற்றவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும்.. இங்கே மற்றொரு சேதியும் சொல்லவேண்டும்.. நான் திமுகவில் இல்லை ஆனால் கலைஞரின் வைரவிழாவிற்கு வருவேன் மு.க.அழகிரி..என்கிறார் ஆம் யார் வேண்டுமானாலும் வரலாம் என்பதைதானே காட்டுகிறது.. கட்சி கொள்கை, கருத்துவேறுபாடு எல்லாவற்றையும் தாண்டி.. எல்லோரும் கொண்டாடவேண்டும்..
..
ஏன் ஏற்கனவே பாஜகவோடு கூட்டுவைக்கவில்லையா என கேள்வி வரும்.. ஆம் இயக்கம் செய்த வரலாற்றுப்பிழை அது..அதை உடனே சரிசெய்து மீண்டும் பெரியாரிய பாதையில் .. சமூகநீதியெனும் அடியொற்றி பயணம் செய்கிறது..
இப்போதுகூட கலைஞரை வசைப்பாடிக்கொண்டும் திமுகவை திட்டிக்கொண்டும். தாங்கள் மட்டுமே யோக்கியர்கள் போல பேசிதிரியும் கிறுக்கர்களை அழைக்கவேண்டுமா.. எனும் கேள்வி எழத்தான் செய்யும் .. கூடவே
பாஜக தவிர்த்து பிற கட்சிகளை ஒருங்கிணைக்கும் நோக்கத்தை சிதைக்க விரும்பாததாலேயே பாஜகவை தவிர்க்கிறார்கள்.. புதியதொரு தொடக்கத்தை பாசிச வெறியோடு திரிகிற அதிகாரபோதையில் வெறியாட்டம் ஆடுகிற பாஜகவை வேரோடு பிடிங்கியெறிய மீண்டுமொரு புதிய கூட்டமைப்பு .. அதற்கு அடிகோளிடவே இந்த வைரவிழா..
..
தமிழிசைகள் நாகரீகத்தை கற்றுக்கொண்டு அரசியலுக்கு வரணும்..
..
தோழர் ஆலஞ்சி ..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment