Monday, May 29, 2017

அரைவேக்காடு

சினிமாகாரர்களின் அரசியல் பார்வை என்பது நிழலோடு காதல் கொள்வதை போன்றது.. சமுத்திரக்கனியின் அரசியல் பார்வையில் நல்லக்கண்ணு ஜோதிபாசு போன்றவர் தலைவர்களோடு உ.பி.யோகி யை ஒப்பிடும் அளவிற்குத்தான் இருக்கிறது.. சினிமாவில் அதிரடியாக செய்கிற நல்லவைகள் தலையில் தூக்கி கொண்டாடுகிறவர்கள் நிஜத்தின் வலி அறியாதவர்கள். .. இறந்த முஸ்லிம் பெண்களை தோண்டியெடுத்து உடலுறவு கொள்ளுங்கள் என சொன்ன யோகியை நல்லக்கண்ணு போன்றவரோடு சமமாக யோசிக்க முடிந்ததை நினைக்கும் போது அருவருப்பு தோன்றுகிறது.. இவை தெளிவற்றவர்களின் அல்லது மனதின் ஏதோ ஒரு மூலையில் ஜாதி/மதவெறி கொண்டவர்களாலேயே இப்படி பேச முடியும்.. குஜராத்தின் கசாப் கடைக்காரனை வானுற புகழ்ந்ததைப்போல.. .. சினிமாவில் பொதுவுடைமை பேசுகிறவனை நம்புகிற கூட்டம் இனியாவது கொஞ்சம் சிந்தித்துணரவேண்டும்.. அவரவர் அரசியல் பார்வையில் நாம் குறிக்கீடு செய்வதில்லை ஆனால் ஜோதிபாசு போன்ற தலைவர்களோடு ஆளுமைகளோடு .. கழிசடைகளை சேர்ப்பது சகிக்க கூடியதாக இல்லை தலித் மக்கள் தன்னை சந்திக்கவேண்டுமெனில் முதவில் சோப்பு போட்டு குளுத்துவிட்டு வரவேண்டுமென அதிகாரிகளை வைத்து உத்திரவிடுகிற.. பாசிச ஜாதி வெறிபிடித்தவரோடு நல்லக்கண்ணு போன்றோரை.. தவறவிட்ட பஸ்ஸூக்காக பேருந்து நிறுத்தத்திலேயே படுத்துறங்கி.. அரசியல் பயணத்தை தொடரும் அப்பழுக்கற்ற நல்ல மனிதரோடு இணைத்து பேசுவதன் மூலம் இவரது அரசியல் பார்வை என்பது சினிமாவில் வரும் கதாநாயக கம்யூனிஸ சிந்தனையை போன்றது. .. பாகுபலி 2 குறைச்சொன்னால் வீடுதேடி வந்து அடிப்பேன் எனும் அளவிற்குதான் இவரது விமர்சன பார்வை அதே அளவுதான் அரசியல் தெளிவுமிருக்கிறது..சமுத்திரக்கனி எல்லாம் தெளிவற்ற அல்லது சட்டென்று உணர்ச்சிவயப்பட்டு திமிரி எழுகிற அடிமாட்டு கூட்டத்தை சேர்ந்த ரகம்.. சினிமா தரும் கவர்ச்சியில் எதை சொன்னாலும் அது சரியாக இருக்குமென நம்பிய காலம் மலையேறிவிட்டது.. இன்றைய இளைஞர்கள் தெளிவாக பயணிக்கிறார்கள்.. தயை கூர்ந்து சமுத்திரக்கனி போன்ற அரைவேக்காடுகள் #வாய்மூடி_இருக்கவும்.. .. #Half_boiled… .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment