Thursday, May 4, 2017

அம்பேத்கருக்கு நன்றி!

அம்பேத்கர் தவறிழைத்துவிட்டார் இடஒதுக்கீட்டை சட்டமாக்கி.. என கிருஷ்ணசாமி கருத்து தெரிவித்திருக்கிறார்.. நல்லது.. #அம்பேத்கருக்கு நன்றி.. எங்கோ கிடந்தவனை பொருளாதாரத்திலும்..சமூகத்திலும் புறக்கணிக்கப்பட்டவனை,தண்ணீரை கூட குடிக்க முடியாமல் தள்ளிநின்று கையேந்தி குடித்தவனை.. பொது குளத்தில்கூட குளிக்க முடியாதவனை.. கும்பிடுறேன் சாமியென சக மனிதர்கள் முன் கூனிநின்று கதைத்தவனை.. இந்த சமூகத்தில் மருத்துவராகவும் .. தோன்றியதை பேசி திரியவும் .. பேச்சுரிமையும்.. ஒதுக்கீடும் பெற்று தந்ததற்கு நன்றி! #அண்ணலே.. .. இதோ ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு மனிதனை கடிக்க வந்தாகிவிட்டது இது தான் பாசிசத்தின் மூளைச்சலவை.. ஒரே ஒரு எம்பி சீட் போதும் மீண்டும் மீண்டும் சாணியை எடுத்து தம் மீதே பூசிக்கொள்ள.. இன்னும் வரும் சாதீய ரீதியாகவோ மதரீதியாகவோ இடஒதுக்கீடு தேவையில்லை பொருளாதார ரீதிதான் சரி ஏழைக்களுக்கு தான் வழங்கப்படவேண்டும்.. என சொல்வார்கள் நிறைய முறைய பதில் சொன்ன கேள்வி இது பொருளாதார அளவுகோல் என்பது மாறும்தன்மை கொண்டவை.. இன்று ஏழையாக தெரிகிறவர் நாளை பொருளாதாரத்தில் வலு பெறலாம் .. மீண்டும் கூட நலிவாகலாம் அதனால் தான் .. சாதிரீதியான ஒதுக்கீடு .. ஏழைகள் புறக்கணிக்கப்பட கூடாதென்பதற்காகதான் நிறைய சலுகைகள் வழங்க திட்டங்களை அரசு கொண்டுவருகிறது..முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி கூட ஏழை மாணவர்களை கருத்தில் கொண்டுதான்..இந்தியாவில் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்குதான் சலுகைகள் சேரவேண்டும் ஆனால் அப்படி நடக்கிறதா என்பது கேள்விகுறிதான்.. .. இடஒதுக்கீடு மட்டும் இல்லையென்றால் கிருஷ்ணசாமி போன்றோர் மருத்துவராக முடியுமா..இப்போது கூட உயர்பதவிகளில் ,நீதிபதி அரசுத்துறை செயலர்.. என அனைத்து அதிகாரமையங்களிலும் அவாள்களே இருக்கிறார்களே ஏன் அதை #பகிர்ந்தளிக்கவில்லையென கிருஷ்ணசாமி கேட்டதுண்டா..அவாளை தவிர மற்ற எவருமே திறமையில்லாதவர்களா...உயர்பதவிகளில் இடஒதுக்கீட்டு முறையை தொடர்ந்து பேசி வருகிறோமே அதுகுறித்து இவரின் கருத்தென்ன.. தான் பொருளாதாரத்தில் மெச்சதகுந்த நிலையை எட்டிவிட்ட பிறகு பின்னால் நிற்கிற சமூகத்தை தூக்கிவிடாமல் போனாலும் பள்ளத்தில் தள்ளி மண் அள்ளிபோடுவது சரியா.. கல்வி வேலைவாய்ப்பில் இன்னமும் நிரம்ப்படாத இடங்களுக்காக போராடியதுண்டா.. சுயநலமாய் மட்டும் சிந்திக்கும் இவரை போன்றோரிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் .. கவனம் #உள்ளொன்றும்_புறமொன்றும்_பேசிதிரிவோர் .. தோழர் ஆலஞ்சி

No comments:

Post a Comment