Tuesday, May 2, 2017

எச்சரிக்கை

#எச்சரிக்கை.. மிக கவனமாக தமிழகத்தில் இந்துத்துவா காலூன்ற தேவையான முயற்சிகளை எடுத்துவருகிறார்கள்.. சமீபத்திய பாஜகவினரின் உளறல்களை விளையாட்டாக கொண்டதால் பெரியதொரு தாக்கம் நமக்கில்லை.. ஆனால் மிக சாதூர்யமாக காய் நகர்த்தல் நடத்துவருகிறது.. பெரியளவில் வெற்றிப்பெற முடியாதென்று அறிந்தும் விசவிதைகளை தூவிக்கொண்டே இருக்கிறார்கள்.. குறிப்பாக சாதீய தலைவர்களை கைக்குள் கொண்டுவந்திருக்கிறார்கள்.. தலித்களின் ஒருபிரிவின் தலைவராக அறியப்பட்ட கிருஷ்ணசாமியை வளைத்திருக்கிறார்கள்.. மற்றொரு சாதிவெறியர் ராமதாஸையும் .. நாம் தமிழர் கட்சி சீமான்.. போன்ற உதவாகரைகளை ஒன்றிணைக்கிறார்கள்.. .. கிருஷ்ணமூர்த்தியை கொண்டே எங்களுக்கு தாழ்த்தப்பட்டவருக்கான இடஒதுக்கீடு வேண்டாமென சொல்லவைத்திருக்கிறார்கள்.. அந்த சமூகத்தின் நீண்டநாட்களாகவே ஆர்எஸ்எஸ் குருமூர்த்தியெல்லாம் உள்ளே புகுந்து பட்டியலினத்திலிருந்து பிரிந்து வரசெய்யும் வேலையை தொடங்கிவிட்டார்கள்.. உண்மையில் அப்படி பட்டியலினத்திலிருந்து பிரிந்து வந்தால் obc யில் உள்ள இடஒதுக்கீட்டில் தர சம்மதிப்பார்களா.. அதுவும் காலகாலமாக தள்ளிவைத்தே பழக்கப்பட்டவர்களோடு ..இதன் மூலம் இடைசாதிகாரர்களின் ஒதுக்கீட்டையும் கேள்விக்குறியாக்கும் வேலையை மிக கச்சிதமாக செய்திருக்கிறார்கள் .. அதிமுகவை சிதைத்தது கூட அவர்கள் நேரடியாக அதிகாரத்தில் எத்த முடியாதென்று அறிந்து மறைமுக ஆட்சியை நடத்தி சங்பரிவாரின் அமைப்புகளை நிறுவிட முயற்சிக்கிறார்கள்.. நிறைய ஆர்எஸ்எஸ் பயிறிசி வகுப்புகள் நடத்தப்படுகின்றன..பதினைந்து வருடங்களுக்கு பிறகு ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்தப்பட்டது நாம் அறிந்ததுதான்.. மத்திய அரசை விமர்சிக்காமல் ஆட்சி நடத்த எடப்பாடி பணிவு.. பாஜகவிற்கு அடிமைசாசனம் எழுதிக்கொடுத்தை ஒப்புக்கொண்டதை காட்டுகிறது.. இதற்கெல்லாம் முடிவுகாண வேண்டுமெனில் திமுக அதிகாரத்திற்கு வரவேண்டும் அதுவும் மிக விரைவில்.. .. குடியரசுத்தலைவர் தேர்தலுக்கு பிறகு அதிரடி நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் ஆரம்பத்திலேயே கிள்ளியெறிய வேண்டும்.. பொன்னர் தமிழிசை போன்றோரின் பேச்சையெல்லாம் கேட்கவே சகிக்கவில்லை.. #கவனம்.. காலம்தாழ்த்துவது கூட பெரும் சிரமத்தை தரலாம் .. தோழர் ஆலஞ்சி..

No comments:

Post a Comment