Monday, December 31, 2018
வேறென்ன வேண்டும்
வேண்டும்..வேண்டும்..
2019
-----------------------
மனம் எனும்..
மாய பிசாசை
அடக்கி ஆள வேண்டும்.
என்னுள் மிருகம்
எழுந்திடாது காத்தல் வேண்டும் ..மன..
அமைதி வேண்டும்..
அறிவெனும் ஊற்று ..
வற்றாது வேண்டும்.
தமிழ் மீது பற்று...என்றும்..
ஊற்றாக வேண்டும்..
என்னுள்..
ஊற்றாக வேண்டும்..
என்..
கயமை ஒழிய வேண்டும்..
காமமும் களவும் ..
அளவோடு வேண்டும்.
அளவிலா..கற்றல் வேண்டும்..
என் தேடல் பணி தீராது வேண்டும்..
அழகான ..பொய்யும்..
அளவிலா மெய்யும் வேண்டும்...
முகம் மூடா..
அகம் மூடா. .
அறம் தவறா..
நெறி பிறழா..
வாழ்வு வேண்டும்.
மதி கெடா..
மடமை தேடா ..
வழி வேண்டும்..
அன்பு வேண்டும்
அடக்கம் வேண்டும்
கொஞ்சம்..ஆணவம்..
கொஞசம்அகங்காரம்
வேண்டும்..
அமுதாய்..என் தமிழ்
ஆறாய் பெருக்கெடுத்து ..
என் நெஞ்சில்..வேண்டும்..
மூடம் காண முழுமதி
(அறிவு)வேண்டும் ..
அகத்தில் தூய்மையும்..
புறத்தில் புன்சிரிப்பும்..
போலித்தனமில்லாமல்..
வேண்டும்..
புதிது..புதிதாய் ..
அறிவு ..
நாள்தோறும் வேண்டும்..
சான்றோர் சொல்
கேட்க வேண்டும் ..
..
தினம் தினம் ..
ஒரு புத்தகம் ..
ஒரு..பக்கம் ..
அல்லது ஒரு வரியாவது..
புதிதாய்..
நான் அறிதல் வேண்டும்
என்னை..
நானே..எடை போட
எதிரி வேண்டும்..
எதிரி..
பலமானவனாய்..
இருத்தல் நலம்..
சுயம் நான் தெளிய வேண்டும்.
சுயமரியாதை ..வேண்டும்
சரியென்று பட்டதை
செய்யும் ஆற்றல் வேண்டும்..
காதலும் காமமும்
கலந்தே வேண்டும்..
காதல் வேண்டும்..
அதுவும்
கனிந்தே வேண்டும்..
அறிவுடையோர் நட்பும்..
அவர்தம் அறிவுரையும் ..
வேண்டும்....
எதையும் போராடி
பெறும் ஆற்றல் வேண்டும் ..
..
பொய் குறைத்து ..
மெய் பேசும் நிலை வேண்டும் ..
புறம் பேசா ..
அடுத்தவரை..
பழி பேசா ..
மனம் வேண்டும் ..
..
கோபம்..
ஆத்திரம்..
அடங்காமை.
அதிக திமிர்..
இவையெல்லாம் ..
கொஞ்சமாவது ..
குறைய..வேண்டும்..
நான்..
குறைக்க வேண்டும்..
அறிவு..
எதையும்..
பகுத்தாயும்..
அறிவு..வேண்டும்..
..
பண்பாளர்..
பகுத்தறிவாளர்..
அறம் பேசுவோர்..
ஆன்றோர்..நல்
சான்றோர்...
நட்பு வேண்டும்..
உள்ளொன்று வைத்து.
புறமொன்று பேசாத..
நல்உள்ளம் வேண்டும்.
எப்போதும் ..வேண்டும் ..
..
என்றும்..நான்..
நான் ..
நானாக வேண்டும்..
..
வேறென்ன கேட்டுவிடபோகிறேன்....
..
ஆலஞ்சியார்
Sunday, December 30, 2018
சாதி..தீ
காதல் திருமணங்கள் மூலம் சாதியை ஒழிக்க முடியாது.. இயக்குனர் ரஞ்சித்
முடியாதுதான் ..காலகாலமாய் மனதில் ஊறிப்போன சாதீய வன்மம் ஒற்றை சம்பவத்தால் மாறிவிடுமென நம்ப முட்டாள்களா என்ன.. சாதீய அடுக்கை கலையாமல் தீர்வு வரும் என எண்ணுவது எவ்வளவு மடமை .. இந்த கட்டமைப்பு திட்டமிட்டு தன்னைவிட தாழ்ந்தவனாக ஒருவன் இருக்கவேண்டுமென எண்ணுகிற பார்பனீய சித்தாந்தம் வேரருக்கபடாமல் தீர்வுகிடைக்காது ..
..
#பெரியார்140 நிகழ்வில்
மானமிகு கனிமொழி இதைதான் சொன்னார் .. தனக்கு கீழே ஒரு சாதி இருக்கிறது அதை காலில் போட்டு மிதிப்போமென்கிற சிந்தனை மாறாமல் விடிவு இல்லை .. ஆதிக்க சாதியினரால் தாங்கள் தொடர்ந்து ஒடுக்கபடுகிறோமென சொல்லும் ரஞ்சித் .. தன் சாதிக்கு கீழே அருந்ததியரும் சக்கிலியரையும் எந்த கண்ணோட்டத்தில் அவரது சாதி பார்க்கிறதென்பதை சொல்வாரா ..
இந்த சாதீய அடுக்கே .. இடைசாதி கடைசாதியினரிடையே மோதலை உண்டாக்கி தங்களின் நிலையை காத்துகொள்ள வேண்டுமென்பதற்காகவே தவிர ..வேறொரு காரணம் இருக்கிறதா ...இடைசாதியினரிடையே கூட ...ஒரே சாதியென்று இருமாப்போடு சொல்கிறவர்கள் கூட உள்பிரிவினரிடையே காட்டுமே வெறுப்பை கிராமங்களில் இன்னமும் காணலாம் ... சாதிய ஒழிப்பைப் பற்றி நீண்ட விவாதம் தேவைபடுகிறது மக்கள் மனங்களில் மாற்றத்தை உண்டாக்க மிகப்பெரிய பணியை தொடங்கவேண்டும் .. அரசியல் கட்சிகளும் சாதி தலைவர்களும் இதற்கு பேரிடைஞ்சலாக இருப்பார்கள் ..
..
அப்படியெனில் சாதி மறுப்பு திருமணமே கூடாதா என கேள்வி கேட்க கூடாது .. அது ஒரு தொடக்கப்புள்ளியாக இருக்கும் சாதியற்றவர்கள் என்ற நிலையை அரசு அங்கீகரிக்க வேண்டும் சாதி மறுப்பாளர்களின் குழந்தைகளை தகப்பனின் சாதியில் பதியும் நிலை மாறவேண்டும் சாதியற்றவர்கள் என்ற பிரிவில் சேர்த்து அவர்களுக்கான உரிமைகளை தர முன்வரவேண்டும் .. அதற்கான தொடக்கமாக இதை உணரவேண்டும் .. அங்கொன்று இங்கொன்றாய் நிகழும் சாதி மறுப்பு திருமணங்கள் காலபோக்கில் மத சாதி மறுப்பு திருமணங்கள் அதிகளவில் நடைபெறும் வரும் தலைமுறையினரிடம் சாதிய கெடுதிகளை எடுத்து சொல்லி .. மதமோ சாதியோ மனிதத்தை கொன்றுபோடுமென சொல்லி வளர்த்தால் .. சாதியை சொல்லி பிழைக்கும் சிலர் கேள்வி கேட்க முடியாத நிலை வரும்..
..
அறிவுபடைத்த மனித சமுதாயத்தில் உலகத்தில் எங்குமில்லாத காட்டுமிராண்டிதனம் இந்தியாவில் தான் இருக்கிறது ..
இங்கிலாந்தில் இல்லாத "பாப்பான்"
ஜெர்மனியில் இல்லாத "பறையன்"
அமெரிக்காவில் இல்லாத "சூத்திரன்"
மதத்தின் பெயரால் கடவுளின் பெயரால் சாஸ்திரத்தின் பெயரால்
இங்கு தான் இருக்கிறான் ..என்றார் #பெரியார் ..
..
சமத்துவம் மலர வேண்டும் ..
சாதி மத பேய்களை விரட்டி
புதியதொரு சமுதாயம் படைக்க
வரும் தலைமுறை தயாராகும்
..
ஆலஞ்சியார்
Saturday, December 29, 2018
பாண்டே..
சின்னதம்பி பாட ஆரம்பிச்சுட்டான்..
..
பாண்டே "அண்ணன்" மோடியை பற்றி புகழ்ந்து தள்ளியிருக்கிறார் .. இதில் வியக்க ஒன்றுமில்லை பார்பனர்கள் பாஜகவின் முகமாய்தான் எப்போதுமிருப்பார்கள் .. தேசநலன் நடுநிலை தேசபக்தி என்பதெல்லாம் அவர்களை பொறுத்தவரை ஆரியர்நலன் பச்சையாக சொல்ல வேண்டுமெனில் பார்பனர்நலன் .. அவ்வளவுதான் ..
இத்தனை ஆண்டுகள் காத்திருந்து நேரடியாக அதிகாரத்தில் தலையிடும் அல்லது நடத்துகிற வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள் ..அதை இழக்க அவர்களென்ன மடையர்களா என்ன..?
பொய்யை ஆயுதமாக கொண்டு செயல்படுவதும் அதை பெரியளவில் விளம்பரம் மார்கெட்டிங் செய்வதும் ...இல்லாத ஒன்றை இருப்பது போல் காட்டுவதும் நாம் பார்க்காததா..
..
2ஜி என்ற ஒன்றை அது சட்டத்தின் முன் நிற்காதென அறிந்தும் ஒரு மாய எண்ணை மக்களிடம் சொல்லி தொடர்ந்து வலைப்பின்னி ..மார்கெட்டிங் செய்து ஆட்சிக்கு வந்தனர் .. இதோ குஜராத் போல இந்தியாவை மாற்றுவிடுவார் "அண்ணன் மோடி" என ஓயாமல் சொல்லி கடைசியில் குஜராத் பழைய வண்ணாரபேட்டை லெவலுக்கு இருப்பதை கண்டு நாம் அதிர்ச்சியடைந்ததுதான் மிச்சம் ..
நாற்பதாண்டு செய்யாததை செய்தாராம் .. பொய் சொல்வதென்று முடிவெடுத்துவிட்ட பிறகு அடித்துவிட வேண்டியதுதானே என்ன செய்தாரென்று கேட்டால் காங்கிரஸ் மீதம் வைத்ததை முடிந்துவிட்டு மறக்காமல் போட்டோ எடுத்து வலைத்தளங்களில் "புரமோட்" செய்தால் அது மோடி ஆட்சி..
..
மோடி பதவியேற்ற ஐந்தாண்டுகளில் இதுவரை உயர்பதவிகளில் .. பார்பனர்களை தவிர மற்றவர்கள் 2% விழுக்காடு கூட நிரப்பபடவில்லை .. அனுசரனையாக இருப்பவர்களுக்கு கவர்னர் பதவி கூட கிடைக்கும் .. துணைவேந்தர் பதவிகளில் இந்த நான்காண்டில் நாடு முழுவதும் பார்பனர்களே நியமிக்கபட்டிருக்கிறார்கள் இதில் அவர்களை விட தகுதியும் அறிவும் படிப்பும் இருந்தவர்கள் வரிசைபடி பின்னில் இருந்தவர்களுக்கு வழங்கபட்டிருக்கிறது .. இப்போது சொல்லுங்கள் பாண்டே "அண்ணன் மோடி" என்று விளிப்பதில் தவறிருக்கிறதா என்ன..?
ஆர்எஸ்எஸ் என்பது பார்பனர்களுக்காக அவர்களின் மேம்பாட்டிற்காக உருவாக்கபட்டதே தவிர நாட்டிலுள்ள பிற இந்துக்கள் என சொல்லபடுகிறவர்களுக்காக அல்ல அதன் தலைமைக்கு பார்பனரை தவிர யாரும் வரமுடியாது என்பது தான் உண்மை .. இந்திய அரசியலில் தொடர்ந்து தீர்மானிக்கிற சக்தியாக இருந்தவர்கள் காங்கிரஸ் ஆட்சியின் போது கூட
திரு.வி.பி.சிங் அவர்கள் தான் கொஞ்சமேனும் மறுதலித்தார் .. மண்டல் கமிஷன் பரிந்துரையை நடப்பிலாக்க கூடாதென மாணவரை தூண்டி தீக்குளிக்க செய்தபோதும் உறுதியோடு 29% விழுக்காடு பிற்படுத்தபட்ட ஏனைய சமூகமக்களுக்கு கிடைத்தது .. உடனே அவரை ஆட்சியிலிருந்து அகற்றினார்கள் .. பார்பன விரோத போக்கை எந்த அரசு கொண்டிருந்தாலும் அது நீடிக்காமல் பார்த்துக்கொள்வார்கள் .. நீண்டநாட்களுக்கு அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் வாய்ப்பு கிட்டியதும் முன்னெப்போதுமில்லாத அளவில் ஆடுகிறார்கள் ..நேரடியாகவே 97% விழுக்காடு மக்கள் பாதிக்கபடுவதும் .. குறிப்பிட்ட வர்க்கம் மட்டுமே கோலோச்சுவதும் நாம் கண்டுவருகிறோம் .. சில விவரமறியாதவர்கள் பதவி பணத்திற்கு பேராசை கொண்டு ஒத்தூதுகிறார்கள் ..
..
இந்த நான்காட்டில் நாடு பின்னோக்கி சென்றதாக பொருளாதாரம் அறிந்தோர் முற்போக்காளர்கள் நாட்டின் மீது இன்னமும் நம்பிக்கை வைத்திருப்போர் இந்திய ஜனநாயகத்தின் மீது மதிப்புடையோர் கருதுகிறார்கள் .. பாண்டே போன்ற சொம்புகள் தான் இன்னமும் பாஜகவை மோசியை தூக்கிபிடிக்கிறார்கள் .. மக்கள் வெறுக்க தொடங்கிய ஒரு ஆட்சி பைத்தியக்காரத்தனமாக ஒரே இரவில் மக்களை நடுத்தெருவில் நிறுத்தி .. இருந்ததையும் பிடிங்கி கொண்டு அலையவிட்ட அனுபவம் .. ₹2000 கோடி செலவில் உலகம் சுற்றி போட்டோவிற்கு போஸ் கொடுத்த பிரதமர் ..இன்னும் ..
மதகலவரமே நடக்கவில்லையென்ற "புளங்காதிம்" அடைகிறார் இதிலிருந்தே கலவரத்தை யார் நடத்துகிறார்களென புரிந்துகொள்ளலாம் .. அதிகாரபோதையில் மாட்டிற்காக மனிதனை அடித்தே கொல்கிற அவலநிலை .. மருத்துவமனைகளில் மனிதனை விட மாட்டிற்கே "விஷேச" கரிசனையோடு கவனிப்பும் நடந்தது அறுபதாண்டுகளில் இல்லைதானே..
..
இன்னும் ஐந்தாண்டு வாய்ப்பை கொடுத்தால் நூறாண்டு பின்னோக்கி நம்மை கொண்டு செல்வார்கள் .. மக்கள் வெறுக்க தொடங்கியவுடன் தங்கள் நடுநிலையென்ற முகமூடியை கழட்டிவைத்துவிட்டு பதற தொடங்கியிருக்கிறார்கள்
அவர்களுக்கு தெரியும் இருக்கிற வாய்ப்பை நழுவவிட்டால் இழப்பு அவர்களுக்குதானென்று ..அது பாண்டேவின் பேச்சில் தெரிகிறது ...
..
பதறுங்கள் கதறுங்கள் பாண்டே..
தூக்கியெறி தயாராகிவிட்டது இந்தியா
..
ஆலஞ்சியார்
Friday, December 28, 2018
வருகிறது அறுவடை காலம்
வேர் என்பது புகழை வெறுக்கும் ஒரு மலர்தான்
என்றார் லெபனானின் பெருங்கவி கலீல் கிப்ரான்..
..
ஆம் .. திராவிட இயக்கத்தின் வளர்ச்சியில் இன்றைக்கும் தன் உழைப்பை தந்து கொண்ட கொள்கையில் உறுதியாய் தான் ஏற்றுக்கொண்ட கட்சி ஆட்சியில் ஏறவேண்டும் .. தான் நேசிக்கிற தலைவன் அறியணையில் அமரவேண்டுமென எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இருக்கிறவன் அவன் தான் இந்த இயக்கத்தின் பெரும் பலம் .. இயக்கத்தின் வேர்
உண்மையில் திராவிட இயக்கம் இப்படிபட்ட வேர்களால் ஆனது சொந்த காசை செலவுசெய்து தெருமுனை கூட்டங்கள் நடத்தியும் துண்டுபிரசுரம் செய்தும் .. முச்சந்தியில் நின்று கொள்கை முழக்கம் செய்தும் இயக்கத்தை வளர்ப்பவன் ..
அத்தகைய வேர்களை தான் பேராசான் பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் பேரருளாளன் கலைஞரும் காத்து வந்திருக்கிறார்கள் .. இவர்கள் இட்ட விதைகள் தான் மண்ணில் நீண்டு தன் வேரை செலுத்தி "வைரம்பாய்ந்த" மரமாய் இயக்கத்தை நிலைநிறுத்தியிருக்கிறது ..
..
திராவிட இயக்கம் இந்தளவு வேரூன்றி ..மக்கள் மனதில் நம்பிக்கையை விதைத்து பாசிச சக்திகளை நுழையவிடாமல் தடுக்கும் அரணாய்
விளங்குவதும்.. சமூகநீதி செயல்பாடுகள் இந்தியளவில் தமிழகம் முன்மாதிரியாய் திகழ்வதிலும் விரும்பதகாத சாதிய மோதல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நிகழ்ந்தபோதும் உடனே பெருவாரியான மக்கள் எதிர்ப்பை பதிவு செய்து சாதிவெறியர்களின் செயல்பாட்டை செயலிழக்க செய்கிறார்களென்றால் திராவிட இயக்கத்தின் வேர்கள் இந்த மண்ணில் அத்தனை ஆழமாய் ஊடுறுவி எதற்கும் அசைந்துவிடாமல் கொடுங்காற்றிலும் வீழ்ந்துவிடாமல் காத்துநிற்கிறது .. மதவெறியர்கள் தங்கள் "சாணக்கியத்தை" எவ்வளவு இறக்கியும் இங்கே "காமெடிகளாகவே" பார்க்கபடுகிறார்களே என்றால் .. இந்த புகழை விருப்பாத மலர்கள்(வேர்கள்) தான் காரணம்..
..
இதோ இந்த நாடு பாசிசத்தின் கையில் சிக்கி சீரழிந்து கிடக்கிறது .. திராவிடத்தின் துணைக்கொண்டு இந்திய தேசத்தை மீட்டெடுக்க நாட்டை நேசிக்கிற நல்லவர் ஒன்று கூடுகிறார்கள் .. திமுகவின் வெற்றி மிக முக்கியமானதாக இந்திய தேசம் கணக்கில் கொள்கிறது .. நம் தளபதியின் கையில் தீர்மானிக்கும் சக்தியை நாம் தரவேண்டும் .. அதற்கு இப்போதிலிருந்தே பயணிப்போம் வெற்றியை நோக்கி .. ஆம் அறுவடையை நோக்கி..
..
கலீல் கிப்ரானின் கவிதையோடு முடிக்கிறேன்
..
"வருகிறது
அறுவடைக் காலம் !
பரிதியின் விழிகள்
பக்குவமாக்கும் பயிர்களை !
காசினி விளைத்திடும்
கனிகளைக்
கண்காணித்து வருவோம்"..
..
ஆம் முழுவதும் அறுவடை செய்ய..
நாடும் நமதே நாற்பதும் நமதே
..
ஆலஞ்சியார்
Thursday, December 27, 2018
மூன்றாவது..அணி
மூன்றாவது அணி..
முட்டாள்தனமான செயல் அதற்கு பாஜகவோடு கூட்டணி வைத்து போட்டியிட்டுவிடலாம் .. மோடியை வீழ்த்தவேண்டுமென்று எண்ணுகிறவர்கள் இந்த நாட்டை பின்னோட்டு இழுத்து செல்லும் பாசிச பாஜகவை அப்புறபடுத்த வேண்டுமெனில் சில விட்டுவீழ்ச்சைகளை ஏற்கவேண்டும் ..
உ.பி.யில் அகிலேஷ் மாயவதியும் இணைந்து போட்டியிட்டாலும் சிறிய வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கும் தொகுதிகளின் எண்ணிக்கை கணிசமாக இருக்கும் அதன் பலனை பாஜக கொண்டுபோகும் .. அதேவேளை காங்கிரஸோடு இணைந்து போட்டியிட்டால் பாஜகவை ஏறக்குறைய துடைத்தெறியலாமென அரசியல் விமர்சகர்களும் உன்னிப்பாக கவனிப்பவர்களும் சொல்கிறார்கள் ..
..
தெலுங்கானா முதல்வர் பாஜகவின் சிலிப்பராக செயல்பட துவங்கியிருக்கிறார் அவர் மம்தா மாயவதி அகிலேஷ் என அந்தந்த மாநில செல்வாக்குள்ளவர்களை .. காங்கிரஸோடு இணையாமல் தடுக்கும் முயற்சியாக செயல்படுகிறார் .. மோடிக்கு பாலில் பழம் விழுந்த கதையாக போகும் .. இன்றைய சூழலில் காங்கிரஸா பாஜகவா என்றால் நாட்டை நேசிக்கிறவர்கள் இந்த ஆட்சி செய்த கொடுமைகளை கண்டவர்கள் மனிதனை விட மாட்டை போற்றும் மதிகெட்டவர்களை விரட்டவேண்டுமென நினைப்பவர்கள் .. ஒரே இரவில் தான்தோன்றித்தனமாக செயல்பட்டு மக்களை வழிகேட்டில் நிறுத்தியதை கண்டு சினங்கொண்டவர்கள்.. நாட்டை சில முதலாளிக்கு தாரைவார்த்ததை கண்டு கோபம் கொண்டவர்கள்.. தமிழகத்தில் மட்டும் 35 லட்சம் சிறுதொழில்கள் நசுங்கி போனதை கண்டு துயரபட்டவர்கள்.. நாட்டை முன்னோட்டு கொண்டுசெல்வதாக கூறி .. 100 வருடம் பின்னோக்கி செலுத்தியவர்களை விரட்ட வேண்டுமென நினைப்பவர்கள் .. காங்கிரஸைதான் ஆட்சியில் அமர்த்த வேண்டுமென எண்ணுவார்கள் ..
..
நாட்டிற்கு மிகப்பெரிய கேடு மூன்றாவது அணி..
இருப்பதையும் இழந்து தெருவில் நிற்கிற நிலை வரும் இந்தியா சர்வாதிகார பிடியில் சிக்கி கடைசியில் சிதறுண்டுபோகும் ..
இந்த மூன்றாவது என்பதே இயற்கைக்கு மாறானது.. நன்மை தீமை .. சரி தவறு ..
ஆதரவு எதிர்ப்பு.. இரண்டை ஒரே நேர்கோட்டில் வைக்கிறோமென்று நாங்கள் நடுநிலையானவர்கள் என்று சொன்னால் குறித்துக்கொள்ளுங்கள் அவர்கள் மிகப்பெரிய பொய்யர்கள் அயோக்கியர்கள் நாட்டின் கெடுதிகள் ..
..
எச்சரிக்கை
..
ஆலஞ்சியார்
Wednesday, December 26, 2018
கோழை ஜெயலலிதா
திமுக தொடர்ந்த வழக்கால் மன உளைச்சலுக்கு ஆளாகி மரித்தே போனார் ஜெயலலிதா // தம்பிதுரை..
..
நினைத்துப்பாரக்கிறேன் .. கலைஞரை
எத்தனை வலிகளை வேதனைகளை கடுஞ்சொல்லை .. பொய்பிரச்சாரங்களை கூடயிருந்தே குழிபறித்த துரோகங்களை ..
வழக்குகளை நண்பனாய் நடித்து முதுகில் குத்திய தழும்புகளோடு இவரால் எப்படி இயல்பாக நீண்டநாள் வாழ முடிந்தது ..
அறம் வெல்லும் என உறுதியோடு இருந்தாரே ..
சிறிய சலசலப்பிற்கே அஞ்சி குடிலுக்குள் ஒதுங்கி கிடக்கிறவர்களை எண்ணுகிற போது .. இந்த மனிதனை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.. திருட்டு ரயிலேறி வந்ததாக குடிபோதையில் எழுதிவிட்டு .. அவர் மீது மானநஷ்ட ஈடு வழக்கை சென்னை சைதை கோர்ட்டில் தொடர்ந்து .. நேரில் நின்று மன்னிப்பு கோரியும் .. நீதிபதி ஏற்க மறுத்தபோது விடுங்கள் நஷ்டஈடெல்லாம் வேண்டாமென பெரியமனதோடு சொல்ல முடிந்ததே .. (அன்றைக்கு வழக்கறிஞராக இருந்த கோகுலகிருஷ்ணன் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர் பதிவு செய்திருக்கிறார்) ..
..
கொண்டுவந்து சேர்த்துவிட்டவரை மார்டன் தியேட்டர்ஸில் மந்திரிகுமாரிக்காக தாவகட்டையில் குழி இருக்கிறதென சுந்தரம் முதலாளி வேண்டாமென்க.. தாடி ஒட்டிக்கொள்ளலாமென சொல்லி வாழ்வின் வசந்தத்தின் திறவுகோலாய் நின்றவரை.. பாசிச சக்திகளின் தூண்டுதலால் துரோகம் இழைத்த போதும் கடைசிவரை நண்பரென்றே விழித்த பெருந்தன்மையாளர்.. ஊழலென்று சொல்லி கட்சியை சின்னாபின்னமாக்கி..இதோடு முடிந்தது திராவிட இயக்கம் என்று கொக்கரித்த பார்பன கும்பலுக்கு முன் எழுந்து நின்று எந்த கொம்பனாலும் திராவிடத்தை வீழ்த்த முடியாதென கம்பீரமாய் வழிநடத்தினாரே..
..
எத்தனை விதமான விமர்சனங்கள் .. மிரட்டல்கள் ஊடகத்தின் தொடர் தாக்குதல்கள் பொய்யென்றும் அறிந்தும் திரும்ப திரும்ப சொல்லி மக்களை குழப்பத்திலாக்கி சரிவை தந்தபோதும் .. என்றைக்கும் "அறமே வெல்லுமெனறு " உறுதியோடு இருந்தவர் .. திமுகவை வீழ்த்த சூழ்ச்சிவலைப்பின்னி.. ஒருலட்சத்து எழுபதாயிரம் கோடியென மாயகணக்கை சொல்லி .. இந்த முறை வீழ்த்திவிடலாமென்று கொக்கரித்தவர்கள்
2ஜி வழக்கில் மகளை சிறைக்கனுப்பிய போதும் தளராமல் வழக்கை சந்தித்து .. மனோதிடத்தோடு எதிர்கொண்டு வெற்றிப்பெற்றவர்..
..
அப்பப்பா ..
எத்தனை சூழ்ச்சிகள் நயவஞ்சம் துரோகங்கள்..
வாழ்நாள் முழுவதுமே போராடி போராடி ..எதையும் எதிர்கொள்ளும் மனவலிமை .. வழக்கென்று வந்ததும் காலைபிடித்து நக்கி சேவகம் செய்யாது .. துணிச்சலோடு எதிர்கொண்டு வென்று வந்த மாவீரர் கலைஞர்
..
வழக்கு மனஉளைச்சலை தந்தததாம் இறந்துபோனாராம் ..அவருக்கு பெயர் இரும்புமனுஷியாம் .. உண்மையில் கோழை பொய்யாய் ஊடகங்களும் பார்பனியரும் கட்டமைத்தது இவரை விட்டால் யாரும் பார்பனரில் அதிகாரத்திற்கு வரமுடியாதென்று தெரிந்து..தீர்ப்பை கூட மாற்றி கடைசியில் கணக்குப்பிழை காட்டிகொடுத்து .. கடைசியில் ஒன்றுமே முடியாமல் போனபிறகு தாமதபடுத்தி .. கடைசிவரை தீர்ப்பை பெற பயந்து நடுங்கி இறந்தே போனார் ..
#உண்மையை வெல்ல முடியாதென்று அறியாமலேயே மண்ணுக்குள் புதைந்தார் ..
அறம் வெல்லும் என்று அறியாமல் போன அறிவிலி ஜெயலலிதா ..
மடியில்கனம் இருந்தால் வழியில் பயம் வரத்தானே செய்யும் ..
..
#கோழை
..
ஆலஞ்சியார்
Tuesday, December 25, 2018
வேறென்ன ..செய்துவிட்டேன்
என்ன..செய்துவிட்டேன்..
ஆண்டொன்று போனது..
அவ்வளவுதான் ..
..
கொஞ்சம் ஆணவம்,
கொஞ்சம் அகங்காரம் ..
கொஞ்சம் அன்பு..
சொன்ன சேதிகள்..கொஞ்சம்
சொல்லாததோ..
நிறைய எஞ்சும் ..
பகுத்தறிவு..
தமிழர் நாகரீகம்..
தமிழர் அரசியல்
தமிழன் பண்பாடு..
திமிர்.. வீரம்
விளையாட்டு கோபம்
எல்லாம் பந்தியில் வைத்தேன்
..
கொஞ்சம்
திராவிடம் பேசினேன்..
பெரியாரை..
எங்கள் பெருவுடையார்
பேரருளாளரை..
புகழ்ந்தே பாடினேன்
ஆம் திராவிடம் பேசினேன்
திராவிடத்தை எதிர்ப்போரின்
முகம் கிழித்தேன்
எதற்கும் அஞ்சா திமிரோடு..
கோவம் கொண்டேன்..
தமிழ்குல பகைவர் மீது
கருணைக்கொண்டேன்..
வாடி நின்ற வறியவர்மீது..
எல்லாம் நேர் நின்றே செய்தேன்..
புறம் நின்று தாக்குதல்
தமிழன் மரபில்லை என்பதால்..
..
கொஞ்சம் காதல்.
கொஞ்சம் காமம்..
கொஞ்சம் கலவி..சொன்னேன்..
பெண்கள் தம்மை கேலி பேசும்
நிலைக்கண்டால்
பெரியாரின் தடியெடுத்தேன்
எல்லாம்..
சுயமரியாதை நிழலில்
நின்றே செய்தேன்..
..
படித்ததை ..
எம் பாட்டன் பறைந்ததை
பக்கத்துவீட்டுக்காரன்
என்
செவிக்கருகில் நின்று கதைத்ததை
சொல்ல வழியின்றி
மொழியின்றி நின்றவனின்
வாய்மையை
சொன்ன சொல் மாறாமல் தந்தேன்
திண்ணையில் அமர்ந்து
சொக்கட்டான் ஆடி மகிழ்ந்து
பெருசுகள் ..
பேச்சினுடே சொன்ன சேதிகள்
கிணற்றில் தண்ணீர் இறைத்துக்கொண்டே
கிழடுகள் சொல்லிய சங்கதியை
ரசம் சொட்ட சொட்ட
இறக்கிவைத்தேன்
..
நான்..
சிறகுள்ள பறவை
எல்லா மரக்கிளையிலும் அமர்வேன்
ஆன்றோர் சபை..
சான்றோர் சபை..
அறிவிக்கொவ்வா
ஆன்மீகம் பேசுவோர் சபை
நல்லதை சொல்லும்
நாத்திகர் சபையென
அடிக்கடி அமர்வேன்..
அறிவின் சுடரில்
அமுதம் சுவைப்பேன்..
நான் ரசித்தவை
அறிவேற்றதை..
அவைக்கு வைப்பேன்..
அவ்வளவு தான்..
..
வேறென்ன.. செய்துவிட்டேன்..
..
ஆலஞ்சியார்
Monday, December 24, 2018
மக்களிடம் செல்வோம் மக்கள் மனதை வெல்வோம்
மக்களிடம் செல்வோம் மக்களிடம் செல்வோம்
மக்கள் மனதை வெல்வோம்..
..
மிகச் சரியான பாதை ..ஜனநாயகத்தின் அடித்தளமே மக்களின் பேரன்பை பெறுவது அவர்களின் கட்டளை என்ன என்பதை அறிந்து செயல்படுவது .. மக்களின் தேவையென்ன .. எதையெல்லாம் மக்கள் வெறுக்கிறார்கள் எது அவர்களுக்கு தேவை என்பதை அறிந்து செயலாற்றுவது சிறந்த ஜனநாயக போக்காகும்,
..
இந்தியாவில் மிகச் சிறந்த ஜனநாயகவாதியாக கலைஞர் இருந்தார் மக்கள் வெற்றியை தந்தபோதும் தோல்வியை தந்தபோதும் அவர்களிடமே சென்றார் அவர்களுக்கு எது தேவை எது அவசர தேவை என்பதை அறிந்தவராக இருந்தார் .. தொலைநோக்கோடு ஒருதாயின் பரிவோடு இருந்தது அவரது செயல்களும் திட்டங்களும் .. கொண்ட கொள்கையிலிருந்து சிறுதும் மாறுபடாது இந்த மண்ணின் நிறம் மாறாமல் பார்த்துக்கொண்டு செயலாற்றிய விதம் .. இன்று ஊரே மெச்சுகிறது
இந்திய ஜனநாயகத்தின் மீது அவர் கொண்ட கருத்தொற்றுமை வேற்றுமை இருந்தபோதும் மக்கள்பணியில் சிறுதும் தொய்வின்றி அவரால் இயங்கமுடிந்தது காரணம் அவர் மக்களை நேசித்தார் மக்களுக்காக உழைப்பதுதான் சிறந்த அரசியல் என்பதில் கவனமாக செயல்பட்டார்
..
இன்றைக்கு தளபதியின் புதிய முழக்கம் திமுகவை சரியான பாதையில் செலுத்தும் என்பதில் ஐயமில்லை மிகச் சிறந்த தலைவராக அதிலும் சிறந்த ஜனநாயகவாதியாக வரலாறு பதிவு செய்யும் .. நிறைய வாய்ப்புகள் வந்தும் கொஞ்சம் "கள்ளக்களி" ஆடினால் அதிகாரத்திற்கு வந்துவிட முடியுமென தெரிந்திருந்தும் கொஞ்சம் அடித்தாடினால் .. எதிரிகளின் கூடாரத்தையே கதிகலங்க செய்துவிட முடியுமென தெரிந்திருந்தும் நேர்மையோடு மக்கள் அங்கீகாரத்தோடு வென்று வரவேண்டுமென காத்திருந்தவர்
எதையும் நேர்வழியில் பெறவேண்டுமென்ற வேட்கையோடு களப்பணியாற்றுகிறவர் .. தோல்வி வெற்றி என எல்லா நிலையிலும் மக்களை சந்தித்து அவர்களோடு இரண்டறகலந்து செயல்படுகிறவர்.. மிகப்பெரிய இயக்கத்தின் தலைமை பொறுப்பேற்றிருந்தும் எளிமையாக நடந்துகொள்கிறார் .. நிச்சயமாக மக்கள் நேசிக்கிற தலைவராக வலம் வருவார் .. மக்கள் நல்லதொரு தொடக்கத்தை விரும்புகிறார்கள் .. மிக மோசமான ஆட்சியாளர்களால் (மத்திய மாநிலஅரசு) கடுமையாக பாதிக்கபட்டிருக்கிறார்கள் தங்கள் உரிமைகள் பாதிக்கபட்டும் ...உணர்வுகளை சிதைத்தும் இந்த பாசிச மற்றும் பாசிச அடிமை அரசை தூக்கியெறிய தயாராகியிருக்கிறார்கள் ..
..
மிக சிறந்த ஜனநாயக இயக்கத்தின் மிக சிறந்க ஜனநாயக தலைவரின் .. ஆக சிறந்த ஜனநாயகம் ..
மக்களிடம் செல்வோம் மக்கள் மனதை வெல்வோம்
..
ஆலஞ்சியார்
Sunday, December 23, 2018
பெரியார்
#டிசம்பர்24..
..
பெரியார்..
யாரிந்த ஈரோட்டு கிழவன்.
கூன் விழுந்த என் அப்பனை
தூக்கி நிறுத்தியவன்..
கக்கத்தில் வைத்திருந்த துண்டை
தோளில் போட்டு அழகுபார்த்தவன்..
கடவுள் மறுப்பல்ல என் கொள்கை
ஏற்றதாழ்வை சரிசெய்தலே என்றான்
கடவுள் பெயரில் பிரித்துவைத்ததால்
அந்த கடவுளையே எதிர்க்கிறேன் என்றவன்..
..
எல்லோரும் வந்தார்..
மதவாதிகள்..
மார்க்கம் பேசியவர்..
இலக்கணம் வடித்தவர்
இன்ப இலக்கியம் சொன்னவர்
அறிவை.. ஆய்ந்து
திறம்பட சொன்னவர்..
திறமையாளர்கள்..
ஆன்மீக பேசியவர்..
அரசியல், நிர்வாகம்
மடமை மூடம்..
முதிர்ந்த சொல்..
விவேகம் ,வீரம்.
சமூகசிந்தனை சமுதாய நலன்
வாழ்வியல் சொன்னவர்..
என வந்தார்கள் ..
சான்றோர்கள் பலர்..
எல்லோரும் ..
தான் சொல்வதை மட்டுமே சரியென்றார்கள்..
ஆனால்..
இந்த பெருங்கிழவன் மட்டுமே..
யார் சொன்னாலும்
எதைப்பற்றியென்றாலும்
எப்படி சொன்னாலும்..
ஏன் நானே சொன்னாலும்..
உன் அறிவேற்காததை ஏற்காதே என்றான்..
அதனால் இன்னமும் நிலைத்து நிற்கிறான்..
..
எல்லாவற்றிக்கும் தீர்வை
சமூகநீதியின் அளவுகோலில் பார்த்த
பேரறிவாளன்
ஆண்குழந்தையை
படிக்கவைக்காவிட்டாலும்
பெண்குழந்தையை
படிக்கவையுங்கள்
வெளியூர் சென்று கூலி வேலை செய்தாவது
படிக்கவைக்க சொன்ன தொலைக்காளன்
எல்லாவற்றிலும் முற்போக்கு
எழுத்தில் பேச்சில் எப்போதும்
இருந்ததில்லை பிற்போக்கு..
..
பாசிசம் பேசுவோர்
பகைமை காட்டுவோர்
வேரோடு எமை வீழ்த்த
கங்கணம் கட்டி செயல்படுவோர்
தமிழனின் வாழ்வியலை
கலையை கலாச்சாரத்தை
இடைசொருகல் மூலம்
சிதைக்க நினைப்போர் ..
அஞ்சுகிற சொல்லொன்று உண்டு
அது திராவிடம்..
பதறுகிற பெயரொன்றுண்டு..
அது பெரியார்
..
தமிழ் மண்ணையும்
தமிழனையும்
எப்போதும்
காத்துநிற்கும்.. ஆயுதம்..
ஆம்..
பெரியார்..
பகைவர் குலைநடுங்கும்
எங்கள் #பேராயுதம்..
..
#பெரியார்நினைவில்45
கலைஞரின் வரிகளோடு முடிக்கிறேன்
பம்பரமும் சுற்றிய பின் ஓய்ந்துவிடும்
படுகிழமாய் ஆனப்பின்பும் பம்பரம் போல்
சுற்றுகிறார்..
#எம்_பெரியார்..
..
ஆலஞ்சியார்
Thursday, December 20, 2018
தலித்..
பா.ரஞ்சித் ஒரு மசாலா பட இயக்குனர் அவ்வளவுதான் அவரின் தகுதி..
பட்டியலின மக்களுக்கா களத்தில் என்ன செய்தார் அவரை போன்ற பாஜக கைகூலிகளுடன் மோதுவது எங்களை போன்ற சனாதன கோட்பாடுகளை எதிர்க்கும் போர்வாள்களுக்கு அசிங்கம் ..என்கிறார் விசிகவின் வன்னி அரசு
..
அவர் சொல்வதை முழுவதுமாக தள்ளிகளைய முடியாது .. களப்பணியில் பெரியளவில் பங்காற்றவில்லை என்பதை ஏற்கவேண்டும் .. ஆனால் அவருக்கு இருக்கிற சினிமா வெளிச்சம் வன்னி அரசை விட வேகமாக மக்களிடம் கொண்டு சேர்த்தது என்பதை மறுக்கமுடியாது சினிமாவோடு வாழ்வியலை பின்னிபிணைந்து வாழும் தமிழனின் நிலைகண்டு வேறென்ன சொல்ல முடியும் .. எம்ஜிஆருக்கு சினிமா கவர்ச்சி தானே
கடைசிவரை கைகொடுத்தது .. குறிப்பாக தலித் சமூகமக்களின் பேராதரவு கடைசிவரை அவருக்கு இருந்ததே .. அவரால் எந்த கொள்கை சார்ந்த பலனுமில்லை என்ற போதும் .. தங்களின் விடுதலைக்கு உரிமைக்காக சிறிதாய் கூட செயல்படவில்லையென்ற போதும் மாய அழகில் மயங்கிநின்றவர்கள் தானே.. தமிழகத்தை பொறுத்தவரை தலித் சமூகம் பெற்ற எல்லா நலன்களும் திமுக ஆட்சியில் கிட்டியதுதான் .. பெரியாரின் அடியொற்றி ஆண்ட திமுக ஆட்சியில் குறிப்பாக கலைஞர் பெருமகனாரின் சிந்தனையில் செயலில் உதித்த திட்டங்கள் .. அவர்களுக்கான உரிமைகளை வழங்குவதில் காட்டிய முனைப்பு, அக்கறை வேறெப்போதுமில்லை ..
..
இன்றைக்கு அம்பேத்கரை தூக்கிபிடிக்கிற தலித் சமூகத்தினர் பெரியாரையும் சம நோக்கோடு காண்பதில்லை என்பது வேதனை தரும் விடயம் .. தமிழகத்தை பொறுத்தவரை பெரியாரின் சேவையை இவர்களுக்காக உழைத்ததை எவராலும் குறைத்து மதிப்பிட முடியாது ..உணர்வை தூண்டி மரியாதையோடு வாழ நம்பிக்கையை விதைத்தவர் பெரியாரால் திராவிட இயக்கத்தால் தான் பெரும் பயனை அடைந்தார்களே தவிர .. பெரியார் இல்லையெனில் .. வடமாநிலங்களை போல வேட்டையாடபட்டிருப்பார்கள் இந்த உண்மையை உணர்வதே இல்லை .. இன்றைக்கு களப்பணியாற்றுவதாக சொல்வதை .. பிற சமுகமக்களோடான பகையை வளர்ப்பதிலோ பஞ்சாயத்து செய்வதிலோ இல்லை என்பதை உணரவில்லை .. இன்றைக்கு கல்வி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டால் பலன் பெறாத சமுகமாக பிற்படுத்த மிகவும் பிற்படுத்த சமூகமே இருக்கிறது அவர்களுக்காவும் போராட வேண்டியது அவசியம் .. இன்றைக்கு பிற்படுத்தபட்டவர்களின் இடஒதுக்கீட்டை தான் தொடர்ந்து பாசிசம் எதிர்க்கிறது அவர்களின் உரிமைகளை பறிக்க பலமுனைதாக்குதலை செய்கிறது ..
(நீட் தேர்வு ஒன்றே போதும்)
..
தமிழகத்தை பொறுத்தவரை தலித்களுக்கான அடையாளம் ..பா.ரஞ்சித்தாலோ வன்னியரசாலோ கிடைத்ததில்லை திராவிட இயக்க வரலாற்றில் பெரும்பகுதியை .. ஏன் பெரும்பலனை பெற்றது பட்டியலின சமூகம்தான் .. இன்றைக்கும் சில அசம்பாவிதங்கள் நடப்பதும் அதை தொடர்ந்து இருசமூக மக்களின் உணர்ச்சியை தூண்டி குளிர்காய்வதும் .. எல்லா அரசியல்கட்சிகளும் சாதி மோதலை ஒரு குறிப்பிட்ட வரையறை வரை ரசிப்பதும் வெட்ககேடானது .. தலித் மக்களுக்காக அவர்கள் மேம்பாட்டிற்காக தலித்களிடையே பிரிவினையை செய்து பல்வேறு குழுக்களாக கட்சிகளாக பிரிந்து கிடக்கிறார்கள் ..
..
இன்னும் கூட நிறைய தலித் இயக்கங்கள் அமைப்புகள் உருவாகலாம் .. அவரவர் தேவைக்கேற்ப பணியாற்றலாம் தொடர்ந்து சாதீய சிந்தனை வெறியாக்கி குளிர்காயலாம் எல்லாவற்றையும் காலம் புறந்தள்ளும் ..
தலித் தான் உயர்ந்த பிறகு தன் சமுகத்தை கண்டுக்கொள்வதில்லை என்பதே கள யதார்த்தம் .. அப்படி வந்தால் தன் நலனை புகழை விரும்புகிறவராகவே இருப்பார் ..
இங்கே திராவிடத்தை தவிர்த்து புதிய கோஷத்தை கையிலெடுத்தாலும் சில காலம் கழித்து பாசிசத்தால் வீழ்த்தபடுவது.. அடிமைபடுத்தபடுவது உறுதி..
..
தலித்களுக்கென்றில்லை பிற்படுத்த/ மிகவும்பிற்படுத்தபட்ட மற்றும் சிறுபான்மையினருக்கு என்றும் காவலாய் நிற்பது திராவிடம்தான் அதனால் தான் திராவிடத்தை வீழ்த்த பலமுனைகளிலிருந்து போர்தொடுக்கிறது ஆரியம் .. நம் கையை கொண்டே கண்ணை கொத்தும் வேலை மிக சரியாக செய்கிறது அதில் ஒன்று தான் பா.ரஞ்சித் .. அதைதான் வன்னி அரசு சொல்லியிருக்கிறார்
..
ஆலஞ்சியார்
Wednesday, December 19, 2018
தமிழக மக்கள் வாக்களித்து..பாஜக வரவில்லை
தமிழக மக்கள் ஓட்டுபோட்டு மோடி ஆட்சிக்கு வரவில்லை .. சரியாகதான் சொல்லியிருக்கிறார் இங்கே யாரும் மோடியை வேண்டாமென விரட்டுகிற போது பாவம் அவர் என்ன செய்வார் .. பொன்னர் வெற்றிபெற வைத்த நாகர்கோவில் மக்கள் இதை உணரவேண்டும்..
..
வாக்களித்தவனுக்கும் எதிர்த்தவனுக்கும் வேண்டாமென்று வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்துதான் ஆட்சி செய்கிறோமென்பதை மறந்த அறிவிலி.. ஜனநாயக மாண்பையெல்லாம் இந்த மடையரிடம் எதிர்பார்க்கமுடியாது .. பாஜகவினரின் பேச்சுக்களை தொடர்ந்து கவனியுங்கள் படுமுட்டாள்தனமாக தான் இருக்கும் .. இதோ மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே .. ஒவ்வொருவர் அக்கவுண்டிலும் ₹15 போடுவோம் ஒரே தவணையில் அல்ல மெல்ல மெல்ல.. ஆபிஐ தர மறுக்கிறது ஏதோ தொழில்நுட்ப கோளாறு என்கிறார்கள்.. என்னவொரு புத்திசாலித்தனம்.. இதுதான் அவர்களின் கையிருப்பு அதிகம் கேள்வி கேட்டால் தேசவிரோதி ஆன்டி இந்தியன் ..என்ற பதில்தான் வரும் .. எந்தவொரு கேள்வியை கேட்டாலும் நேரடியாக பதில் சொல்ல தெரியாது முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் செய்த தவறு என்று மடைமாற்றுவார்கள் .. நாடாளுமன்ற அவையில் பதிலளிக்க பயந்து ஓடியொளிகிற பிரதமரை பெற்றிருக்கிறோம் .. மேடை பேச்சைப்போல ஏற்ற இறக்கத்தோடு பேசிவிட்டு தப்பிக்கிற நிலை விவாதத்தில் பங்கேற்க வேண்டுமென்றால் அதற்கு திறமையும் அறிவும் வாய்மையும் வேண்டும் அதெல்லாம் பாசிச கோஷ்டிக்கு கிடையாது ..
..
எச்.ராசா எதையாவது உளறுவதும் பிறகு மாட்டிக்கொண்டால் மன்னிப்பு கேட்பதுமாகவே அரசியல் செய்கிறார் .. மன்னிப்பு கேட்பது அவர்கள் குல வழக்கம் ஆனால் முத்திப்போய் அலைவதை இனியும் கண்டுக்கொள்ளாமல் இருக்கவேண்டுமா என்ன? .. இவரை தொடர்ந்து பேசவிடுவோம் அப்போதுதான் இன்னும் கூட தமிழக மக்கள் பாஜக மீது வெறுப்புகொள்வார்கள் .. கிறுக்குத்தனமாக பேசிதிரிகிறவர் தேசிய செயலாளர் ..
தமிழகத்தில் இனி தவறிகூட தாமரை மலராதவாறு பார்த்துக்கொள்ள பொன்.ராதாவும் தமிழிசையும் எச்.ராசாவும் போதும் .. இவர்களின் பேச்சில் காட்டும் வன்மம், குரோதமனபான்மை, பொய், இவை போதும் தமிழகத்தில் எக்காலத்திலும் தலைதூக்கமுடியாமல் செய்வதற்கு ...
ஐந்துமாநில தோல்விகள் பாஜக ஆசையை தகர்த்தெறிந்திருக்கிறது அடித்தளத்தையே அசைத்திருக்கிறது இனி நிறைய உளறலும் கோபகணைகளும் .. கொடுஞ்சொல்லும்.. பித்தலாட்டமும் வரும் ..
..
தமிழகத்தில் இவர்களின் கதறல்களை காதோர்க்க யாரும் தயாரில்லை மதம் சாதியை தலையில் தூக்கிக்கொண்டு நடக்கிற பாசிச சக்திகளின் வேரில் வெண்ணீரை ஊற்றும் நிலைதான் உள்ளது ..கொஞ்சம் விட்டால் போதும் பார்பன கும்பல் தலையில் மிதிக்கும் என்பதற்கு இந்த அடிமைகளை வைத்து இவர்கள் செய்யும் அட்டகாசங்களே சாட்சியாய் நிற்கிறது .. எந்தநிலையிலும் பாசிசத்தை எதிர்ப்போமென தமிழக மக்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டுதானிருக்கிறார்கள்..
..
ஆலஞ்சியார்
Tuesday, December 18, 2018
ஜெயலலிதா ..மர்மம்
ஜெயலலிதா மரணத்தின் சந்தேகங்களும் வியப்புகளும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது .. மரணம் இயற்கையானதா என்ற கேள்விக்கான விடைதேடலில் பலத்த ஐயம் நமக்கு எழதான் செய்தது .. ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் சிகிச்சை பெறும் மருத்துவமனையில் அதுவும் உயர்தர மருத்துவமனையென "வெளிநாடுகளில் "கூட பேசபடுகிற பிரபலமான மருத்துவமனையில்
சிசிடிவி இயங்கவில்லை என்பது எத்தனை அபத்தம் .. இவர்களே பதிவை வேண்டாமென கேமராவை செயலிழக்க வைத்துவிட்டார்களா .. மாநிலத்தின் முதல்வர் சிகிச்சை பெறுகிறார் என்கிற போது கூடுதல் பாதுகாப்பு என்பது இயல்பாக எழுமே.. கூடுதல் கேமராக்கள் வைத்திருக்க வேண்டும் ஏன் செய்யவில்லையில் தொடங்கி .. இப்போது விசாரணை கமிஷனில் ஒவ்வொருவரும் சொல்லும் தகவல்கள் அதிகம் கவலையளிப்பதாக உள்ளது .. இடைத்தேர்தலின் போது அவரிடம் கைநாட்டு பெற்ற மருத்துவர் சிவகுமார் .. நானே சென்று நேரில் கைநாட்டு பெற்றேன் என்றவர்.. விசாரணை கமிஷனில் அந்த அறைக்கு (ஜெயலலிதாவிடம்) செல்லவில்லை எங்கெல்லாம் கைநாட்டு வேண்டுமென சொன்னேன் அங்கெல்லாம் கைநாட்டு வாங்கி தந்தார்களென வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் .. அவர் மீது தனியாக வழக்கு தொடர்ந்து சிறைக்கு அனுப்பலாம் இந்திய தேர்தல் ஆணையத்தையே ஏமாற்றியிருக்கிறார்..
..
நான் நேரில் பார்த்தேன் நன்றாக இருக்கிறார் இட்லி தின்றார் என்றெல்லாம் கதைவிட்ட அமைச்சர்களை விடுங்கள் அவர்கள் தங்கள் தலைவியைப் பற்றி மக்கள் கவலை ..? கொள்ளாமல் இருக்கவேண்டுமென்பதற்காக சொல்லியிருக்கலாம் ஆனால் கவர்னர் சென்று பார்த்துவிட்டு கையை அசைத்தார் கட்டைவிரலை உயர்த்தினாரென்றாரே ..அதற்கெல்லாம் எப்போது விடைகிடைக்கும் .. ஜெயலலிதா மனதளவில் தளர்ந்துபோயிருந்தாரென்பது அவரின் உதவியாளர் ராஜம்மாளின் செய்தி நமக்கு உணர்த்தியது வழக்கின் முடிவு தமக்கு எதிராக வந்து தண்டனைப் பெற்று சிறை செல்லநேர்ந்ததும் ..
"ஊழல் தலைவராக"
வரலாறு தம்மை பதிந்துவிட்டதே என்ற வருத்தமும் அவரை பெரியளவில் தளர்வை தந்தது .. அதிலிருந்து மீள முடியாமல் மன அழுத்ததிற்கு ஆளானதாக அவரின் உதவியாளர் பெண்மணி ராஜம்மாளின் சொல் நமக்கு உணர்த்தும் ..
..
ஜெயலலிதாவின் மருத்துவ செலவு கூட நம்மை பிரமிக்கவைக்கிறது .. அதில் உணவுசெலவு ₹1.7 கோடி என்பதை யாருமே எதிர்பார்க்கவில்லை அதைவிட எப்படி இவ்வளவு செலவென்று கேட்க தொடங்கியிருக்கிறார்கள் .. அவரது மரணம் எப்படி நிகழ்ந்தது எப்போது நிகழ்ந்தென்பதில் கூட இன்னமும் விடைதெரியவில்லை கூட மருத்துவசெலவு தலைசுற்றுகிறது ராஜவைத்தியம்..? உணவிற்கென்ற இவ்வளவு வருமா என்ற கேள்வி 7 நட்சத்திர ஹோட்டலில் கூட இவ்வளவு வராதென்கிறார்கள் .. அரசின் பணத்தை எடுத்து மனாவாரியாக செலவு செய்தது ஏன் .. அரசு மருத்துமனையில் சேர்ந்திருக்கலாம் .. முரசொலி மாறன் செலவு அதிகமானபோது .. அதை தாங்களே செலுத்துகிறோமென அவரது குடும்பம் ஒப்புக்கொண்டு செலுத்தியது அதைப்போல ஜெயலலிதாவிற்கான செலவில் குறிப்பிட்ட தொகையை அவரது சொத்திலிருந்து எடுத்து கொடுக்கலாம் .. தண்டிக்க குற்றவாளியாய் நீதிமன்ற தாமதத்தால் அரசின் உயர் செலவில் மருத்துவம் பெற்றார் இல்லையெனில் சிறையில் தரமான மருத்துவம் அவருக்கு கிடைத்திருக்கும் ஒருவேளை பிழைத்திருப்பார் .. இந்த மருத்துவ கொள்ளையர்களை விசாரணை வளையத்தில் கொண்டுவரவேண்டும் ...
..
புகழ் பெற்றிருந்த ஒருவரின் மரணம் அதிகாரத்தில் இருந்த போது நிகழ்ந்ததில்
அரசுக்கே தெரியாமல் இத்தனை குளறுபடிகள்.. சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனை விசாரிக்க வேண்டும் .. வெங்கட்ராமனின் பேரன் இவர் .. அரசின் சுகாதாரத்துறை செயலருக்கு தெரியாமல் இருந்தால் அந்த பதவிக்கு லாயக்கில்லாதவர் .. தெரிந்திருந்தால் ஏன் உண்மையை மக்களுக்கு சொல்லவில்லை அவரை அப்போது தடுத்தது யார் என்ற கேள்வியெல்லாம் நிச்சயமாக திமுக ஆட்ச்க்கு வந்தவுடன் விடை கிடைக்கும் .. இன்றைக்கு ஓடியொளிகிற .. பொய்சொல்லி திரிகிறவர்கள் பதில் சொல்லும் காலம் வரும் .. கேட்க ஆளில்லாத நிலையில் தான் ஜெயலலிதா தன் சொந்தங்களை தவிர்த்து
மாய கும்பலிடத்தில் சிக்கி கரைபடிந்தவராய் வரலாற்றில் என்றுமே மாற்ற முடியாத #ஊழல்க்காக_தண்டனைபெற்றவர் என்ற பெயரோடு ...இந்தியாவில் அதிகாரத்தில் இருக்கும்போதே தண்டிக்கப்பட்ட குற்றவாளியாய் வரலாறு பதிவு செய்திருக்கிறது..
corruption leader
..
#மர்மகதை...
..
ஆலஞ்சியார்
Sunday, December 16, 2018
மோடி..
#SadistPM..
மாண்பிமை பிரதமரை சாடிஸ்ட் என சொல்லலாமா என சில குடுமிகள் கதறுகின்றன
திமுக தலைவர் இந்திய பிரதமர் மோடியை #சாடிஸ்ட் என்று சொல்லிவிட்டதில் நடுநிலை என்ற பெயரில் நடமாடும் பார்ப்பனர்கள்.. எல்லோரும் அதிர்ச்சியடைந்து விட்டார்களாம்..! அவர் அவ்வாறு சொன்னதில் என்ன தவறு கண்டு விட்டார்கள் காவிகள்..? ஏன் அலறுகிறார்கள்.... இந்திய ஊடகங்கள் வேறு இதை தலைப்பு செய்தியாக்கி கதறவிட்டிருக்கிறது ..
Fascist Nazist ..
..
மோடி குஜராத் கலவரத்திற்கு பிறகு ஆர்எஸ்எஸ் அவரை முன்னிருத்த தொடங்கியது மிகப்பெரிய பொய் பிம்பத்தை கொண்டு photoshop போட்டோஷாப் குஜராத் உலகமே வியக்கிற நிலையில் முன்னேற்றி விட்டதாக சொல்லி மாய தோற்றத்தை உருவாக்கியது .. அதற்கு தகுந்தாற்போல் 2ஜி யை பூதாகாரமாக்கி காங்கிரஸை வீழ்த்தியது .. காலம்கடந்துதான் 2ஜி யே மாபெரும் பொய்யென்று மக்கள் உணர தொடங்கினர் .. மோடி குஜராத் கலவரத்தில் நடந்துகொண்ட விதம் குறித்து அப்போதைய பிரதமர் வாஜ்பாய் "அரசதர்மத்தோடு" நடந்துக்கொள்ளுங்கள் என்றார்
குஜராத் மதக்கலவரத்தில் கொல்லப்பட்ட இஸ்லாமியர்களைப் பார்த்து கார் டயரில் அடிப்பட்ட நாய்குட்டிகள் என்ற போதே சாடிஸ்ட் என்று ஊடகங்கள் அழைத்திருக்கவேண்டாமா ..
தமிழகத்திற்கு தொடர்ந்து கேடுவிளைவிக்கும் செயலை செய்வதை எப்படி எடுத்துக்கொள்வது
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டுமென போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நிகழ்ந்தும் கவலைக்கொள்ளாத மனிதரை எப்படி அழைப்பது கஜா புயலில் டெல்டா மாவட்டத்தையே புரட்டி போட்டும் இதுவரை பிரதமர் வந்து பார்க்கவே இல்லையே ..நடிகையின் திருமண வரவேற்பிற்கு செல்ல நேரம் ஒதுக்கமுடிகிறது கண்ணீரோடு வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மக்களை காண வர முடியவிலிலை ..
..
ஒற்றை இரவில் தான்தோன்றித்தனமாக பணமதிப்பிழப்பு செய்து ஒட்டுமொத்த நாட்டுமக்களையும் நடுவீதியில் நிற்க வைத்து ரசித்ததை எப்படி ஏற்பது கறுப்புபணத்தை மீட்பதாக சொல்லி .. கறுப்புபண முதலைகளை தங்கள் பணத்தை வெள்ளையாக்க உதவியதை தவிர அதேனும் பலனுண்டா.. கால்கடுக்க வங்கி வாசலில் நிற்கிறார்களே என்ற போது எல்லையில் ராணுவ வீரன் நிற்கவில்லையா என எகத்தாளம் பேசியது எதில் சேரும் ..
..
காவிரியின் கடைமடையை பாலைவனமாக்க ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு இந்த தலையாட்டிகளை கொண்டு அனுமதியளித்தும் தமிழக மாணவர்கள் மருத்துவத்தில் கோலோச்சுவதை கண்டு பொறாமைகொண்டு நீட் டை கொண்டுவந்து ஏழை மற்றும் கிராமபுற மாணவர்களில் கனவை சிதைத்ததும் எப்படி பார்பது.? சமையல் எரிவாயுவை ₹1000 கொண்டு போய்விட்டீர்களே இது தான் அரச லட்சணமா
60 ஆண்டுகள் காங்கிரஸ் ஆண்டது 60 மாதம் தாருங்களென சொல்லி .. 100 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்து சென்றது யார் ..
மாட்டை விட மனித உயிர் கேவலமாக எண்ணிய ஆட்சியாளரை கொடுங்கோலன் என்று தானே அழைக்க வேண்டும் .. விற்பனைக்காக கொண்டு சென்ற மாட்டை அறுக்க கொண்டு சென்றதாக அடித்தே கொன்றவர்களை "பசு காவலர்" என புகழ்ந்த ஆட்சி உலகில் எங்குமே இல்லை ..
..
மோடியை ஆளுமை என்றவர்கள் கூட அவர் வந்தால் நவீன இந்தியா செதுக்கபடுமென்றவர்கள் கூட காரி உமிழ்கிறார்களே.. முற்போக்காளர்கள் எதிர்கருத்தை சொல்பவர்கள் எழுத்தாளர்கள் கொலை செய்யபடுகிறார்களே எதிர்த்தால் மூச்சிருக்காதென்று மிரட்டிகிற ஆட்சியை எப்படி அழைப்பது ..அதைவிட கொடுமை கொலையை
நியாபடுத்தி கொலையாளிகள் பாதுகாக்கபடுகிறார்கள் .. நீதிமன்றம் குற்றவாளியென்று அறிவித்த பின்பும் அரசின் முதன்மை அமைச்சர்கள் சென்று பார்த்து எப்படி தீர்ப்பை வளைத்தொடிக்கலாமென திட்டம் தீட்டியதை .. நீதி மன்றத்தில் அரசின் தலையீட்டை உச்சநீதிமன்ற நீதிபதிகளே வெளியே வந்த சொன்னதை கௌரவமாக பார்ப்பதை நல்லாட்சி என்றா அழைக்க முடியும் ..
..
அரசின் எல்லா திட்டங்களிலும் மக்களுக்கானதாக இல்லை மாறாக
கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப நோக்கம் மட்டுமே பிரதானமாக முன்வைக்கப் பட்டுள்ளது..
சிறுதொழில்கள் கிராமப் பொருளாதாரம் முற்றிலுமாக முடங்கிப் போயுள்ளது..
திருப்பூர் போன்ற தொழில் நகரங்கள் முதலாளியாய் வலம் வந்தவர்கள் ..கூலித்தொழிலாளியாய் நிற்கிற நிலைக்கு காரணம் இந்த மோடிதானே ..
மக்களுக்கு எது வேண்டுமோ அதை கொடுக்காமல் கார்ப்பரேட்டுகளுக்கு எது தேவையோ அதை உடனே எந்தவித இடைஞ்சலுமின்றி கிடைக்கிற ஆட்சி பாசிச ஆட்சிதானே ..
வங்கிகளில் குறைந்தபட்ச இருப்பு இல்லாவிட்டால் பிடித்தம் என்ற பெயரில் புதியதொரு "கொள்ளை" நடத்துவது ஏன் ஏழைகளை கொள்ளையடிக்கபடுகிறார்கள் டிஜிட்டல் இந்தியா என்ற பெயரில் .. அரசை எதிர்ப்போரை ..அரசின் திடிடத்தை செயலை எதிர்ப்போர் ஆபத்தான ரசாயண தொழில்சாலைகளை எதிர்ப்போரை தேசிய பாதுகாப்பு சட்டத்தை அடைப்பதை எப்படி அழைப்பது ..
..
மதவெறியை சாதி வன்மத்தை வளர்த்து இந்திய இறையாண்மை கேள்விக்குறியாக்கபடுகிறதே
பன்முகதன்மை கொண்ட இந்தியாவை ஒரே மொழி ஒரே கலாச்சாரம் ஒரு வழி என திணிக்க நினைப்பதை அது மக்களிடையே செல்லாது என அறிந்தும் திணிக்க முயல்கிற செயலை எப்படி அழைப்பது ..
..
சாதிவெறியர்களுக்கும் மதவெறியர்களுக்கும் கொள்ளையடிப்பவனுக்கும் நாட்டை இந்து நாடாக மாற்ற வேண்டுமென்பவருக்கும் மோடி நல்லவராய் வல்லநராய் தெரியலாம் ..
ஆனால் நாட்டுமக்களை பொறுத்தவரை.. இந்த நாட்டை நேசிக்கிற சாமானியர்கள். பன்முக கலாச்சாரத்தை நேசிக்கவர்கள் நாடு நன்றாக இருக்க வேண்டுமென எண்ணுகிறவர்கள் .. சாதிமதவேற்றுமையின்றி வாழ ஆசைபடுகிறவர்கள் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகிற இளைஞர்கள்.. சுருக்கமாக சொன்னால் பாசிசவாதிகள் பார்பனர்கள் சாதிமத வெறியர்களை தவிர எல்லோருமே வெறுக்கிறவராக மோடி தெரிகிறார் ..
காரணம் பாசிசத்தின் நிழலில் நின்று ஆட்சி செய்கிறார் ..
..
மோடி இந்திய அரசியல் வரலாற்றில் மிக மோசமான அத்தியாயம்
..
ஆலஞ்சியார்
Saturday, December 15, 2018
கலைஞர் சிலை
மரணம் மாவீரனுக்கு தரப்படும் மலர்செண்டு..
கலைஞர் ..
தமிழர்களின் தவம் ..
இந்த நூற்றாண்டின் சிறந்த தலைவர்களில் ஒருவர் .. சிறந்த மனிதர்களில் முதன்மையானவர் .. தான் வாழும்காலம் வரை போராடி .. மரணத்திலும் போராட்டத்தை கைவிடாதவர் .. எளிதில் கிடைக்கும் எதுவும் சுவைக்காது நிலைக்காதென்று உணர்த்தி எதையும் போராடி பெறு என்ற வாழ்வியல் தத்துவத்தை வாழ்ந்துகாட்டி சென்றார் ..
..
அரசியல்வாதி இலக்கியவாதி படைப்பாளி பேச்சாளர்.. என பன்முக ஆளுமையாளர் ..ஒவ்வொன்றிலும் பேராளுமை என் அறிவிக்கெட்டியவரை உலகின் இவ்வளவு ஆளுமைகளை கொண்டவர் இத்தனை எளிமையாய் கண்டதில்லை .. கடைக்கோடி மனிதனை கண்டு மகிழ்வித்த மகிழ்ந்த தலைவர் யாருமில்லை அவரை சந்திக்கிறவர் எதிரியாய் இருந்தாலும் அவர் முன் கரைந்து போனதைதான் கண்டிருக்கிறோம் எந்தவொரு சிக்கலையும் தீர்க்கும் அரும் மருந்தாய் தமிழர் வாழ்வில் வந்தவர் .. இந்த தமிழ் சமூகத்திற்காக காலமெல்லாம் உழைத்தவர் .. எதையும் ஆய்ந்தறிய சொன்ன பேராசானின் துணைக்கொண்டு தொலைநோக்கு பயன் தரும் திட்டங்களை தீட்டியவர் முற்போக்கு சிந்தனை கடைக்கோடி மனிதனின் மீதான அக்கறை .. விளிம்புநிலை மக்களின் முன்னேற்றம் .. பட்டியலினத்தவரின் கௌரவம்.. ஒடுக்கபட்ட மக்களின் அரணாய் .. பிற்படுத்தபட்ட சமுகத்தின் உரிமைகளை மீட்டெடுத்தல் .. காலகாலமாய் அடிமைபட்டு கிடந்த சமூகத்தை மேம்படுத்த அயராத உழைத்த ஒப்பற்ற தலைவர் கலைஞர்..
..
சமூகநீதியை நிலைநாட்ட தன் ஆட்சி காலமெல்லாம் சிந்தித்து செயல்படுத்தியவர் .. பாபுஜெகஜீவன்ராம் தொட்ட சிலை தீட்டென்று கழுவினார்கள் அந்த பாபுஜெகஜீவன் ராமிற்கு சிலை வடித்து .. பார்பன வெங்கட்ராமனை கொண்டு திறக்க செய்தவர் ..எந்த செய்கையிலும் தீர்க்கமான பார்வையை கொண்டு புதிய சேதியை சொல்லும் பேராற்றல் ..சூத்திரனுக்கு சொர்க்கம் கிடையாதென்றவனிடம் .. சொர்க்கவாசலுக்கு வா என்கிறாயே என கேட்க வைத்து .. அறநிலையத்துறையில் அதிகளவில் சூத்திரனை அமர்த்தியவர் .. எல்லாவற்றிக்கும் ஓர் எதிர்வினை உண்டென்று உணர்த்தியவர் ..
குமரியின் அடையாளமாய் விவேகானந்தர் என்ற மத அடையாளத்தை மாற்றி குமரியின் அடையாளமாய் திருவள்ளுவர் சிலை வைத்து நாட்டிற்கு தமிழனின் பெருமையை உணர்த்தியவர்..
தமிழனின் மாண்பை காத்து அவர் வாழ்வில் உயர என்பதாண்டுகாலம் உழைத்தவர் .. அவர் திட்டங்களை விவரித்தால் ஆயிரம் பக்கம் வரும் .. அனைத்துமே இந்திய ஒன்றியமே இன்று கொண்டாடி பின்பற்ற தொடங்கியிருப்பதிலிருந்தே அதன் உண்மை புரியும்.. முற்போக்கு பேசிய மாநிலங்கள் கூட பெண்களுக்கான சமஉரிமையை பேச தயங்கிய காலத்திலேயே சொத்து உரிமை என்று சட்டமியற்றி ..இந்திய தேசத்திற்கே வழிகாட்டிய பேரருளாளன் .. மங்கையரை உயர்த்திபிடிக்காமல் முன்னேற்றம் காணாமல் சமூக முன்னேற்றம் சாத்தியமில்லை என்றவர் ..
..
கலைஞருக்கு சிலை குறித்த
#பெரியாரின்_பார்வை..
மாண்பிமை அமைச்சர் கலைஞர் அவர்களுக்கு சென்னையில் பொதுமக்களால் சிலை வைப்பது அறிந்து பார்பனர்கள் தங்கள் சாதி வழக்கப்படி பொறாமைகாட்டி விஷம கருத்துக்களையும் சாபமிடுவதையும் அள்ளிகொட்ட ஆரம்பித்துவிட்டார்கள் .. அதனால் தனக்கு சிலைவைக்க வேண்டாம் நான் அதற்கான தகுதியை வளர்த்துக்கொள்ளவில்லையென சொல்லியிருக்கிறார் . என்னை பொறுத்தவரையில் பார்பன விசமத்திற்கு பயந்து தனக்கு சிலை வேண்டாமென்பதை கண்டிப்பதுடன் ..அவருக்கு சிலைவைக்கும் யோசனையை கைவிட வேண்டாமென சிலை கமிட்டியை கேட்டுக்கொள்கிறேன் .. அவர் சிலையை நானே வந்து திறந்து வைக்கிறேன்.. என்றார் பெரியார் விடுதலை28-05-68..
..
#கலைஞர்_பேரருளாளன் #StatueOfKalaignar
..
ஆலஞ்சியார்
திமுக கழட்டி போட்டதுதான் ..
கழட்டிபோட்ட கோவணம்..
கோவணம் ரொம்ப முக்கியம் வேட்டியை கூட உருவி விட்டுவிடலாம் .. கழட்டி வைத்துவிட்டு கழனியில் வேலை செய்யலாம் .. ஆனால் கோவணத்தை அவிழ்த்தால் அம்மணமாகி போவீர்.. கோவணம் மானம்காப்பது என்பதை மறந்து பேசுகிறார் .. திமுக தினகரனின் கோவணத்தை உருவியிருப்பது தெரிகிறது .. யாருமே தன்னோடு வர மறுத்து அதிகாரமிருக்கும் எடப்பாடி பன்னீரிடம் நிற்கிறார்கள் .. ஸிலீப்பர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் கிடப்பதைப்போல உணர்வற்று கிடப்பதாய் நடிக்கிறார்கள் .. வழக்கு தண்டனை என மத்திய அரசு மிரட்டுகிறது கூட இருக்கிறவர்கள் கரையேற துடிக்கிறார்கள் .. சொந்தங்களிலேயே "பாறைவைக்கிற" நிலை
இருப்பதும் போய் அம்மணமாய் காட்சி தர போகிற வேளையில் பதற்றம் அதிகரித்திருக்கிறது ..
..
நாங்களும் சொல்லலாம் கலைஞர் கழட்டி போட்டதுதான் எம்ஜிஆர்.. எக்ஸ்ட்ரா என்று ..
ஏனெனில் காங்கிரஸிலிருந்த எம்ஜிஆரை திமுகவிற்கு அழைத்துவந்தவர் .. அதோடு நிற்கவில்லை மார்டன் தியேட்டர் முதலாளி சுந்தரம் அவர்கள் மந்திரிகுமாரிக்கு இவரை வேண்டாமென்ற போது .. தாவகட்டையில் பள்ளமிருக்கிறதென்ற காரணத்தை சொன்னபோதும் சிறிதாக தாடி ஒட்டிக்கொள்ளலாமென ஆலோசனை தந்திருக்காவிடில் எம்ஜிஆர் ஏது .. "திரும்பிபார்" சிவாஜி கணேசன் வெளியேறிய போது அந்த இடத்தை நிரம்ப தன் நண்பரென்று அழைத்துவந்தவர் பின்னாளில் தமக்கே துரோகம் செய்ததை மறந்தவர் கலைஞர் .. கலைஞர் தூக்கியெறிந்ததுதான் "எல்லாம்" என்பதை மறந்து பேசிகொண்டிருக்கிறார்..
..
உண்மையில் யாருமில்லாத நிலைக்கு வரகூடும் இன்னும் சிலர் வரகூடுமென பட்சிகள் சொல்கிறது ..காரணம் தெளிவற்ற நிலையில் யாருமே கூட வரமாட்டார்கள் பாசிச பாஜகவை எதிர்ப்பதாக சொல்லிக்கொண்டே அவர்கள் கேட்காமலேயே ஆதரவை தருவதும் தன்னை காத்துக்கொள்ள கூட இருப்பவர்களை பலி கொடுப்பதும் எத்தனை காலம் தான் பொறுப்பார்கள் எங்கே மீதமுள்ளவர்களும் போய்விடுவார்களோ என அஞ்சி உளற ஆரம்பித்தன் விளைவே இது.. திடீரென ஒருநாள் சசிகலா உயரத்திற்கு வர எத்தனித்ததும் .. அது வரை உறங்கிய நீதி சிறைக்கனுப்பியதும் யார் சசிகலா என யாரை உயர்த்திபிடித்தார்களோ அவர்களே கேள்வி கேட்க மெல்ல ..அப்புறபடுத்தும் சூழல் எங்கே தனக்கும் வந்துவிடுமோ என நடுங்கி நிற்பது தெரிகிறது .. அதனால் தான் தங்களுக்கு துரோகம் செய்த எடப்பாடி & பன்னீர் கூட போயிருந்தால் கூட மன்னிப்பேன் திமுகவோடு போவதா என்கிறார் .. எடப்பாடி பன்னீரை கூட மன்னிப்பேன் செந்தில் பாலாஜியை மன்னிக்க முடியாதென்கிறார் .. இதிலிருந்தே கோவணத்தை உருவி அம்மணமாய் நிறுத்தியிருப்பது தெரிகிறது ..
..
இன்னும் இருக்கிறது தினகரன் ..
இனி அம்மணமாய் தான் நிற்க வேண்டி வரும்
..
ஆலஞ்சியார்
Friday, December 14, 2018
தளபதி ..தலைவர்
செந்தில் பாலாஜி திமுகவிற்கு வந்ததை சிலர் விமர்சித்தும் வரவேற்றும் எழுதுகின்றனர் .. சில ஊடகங்கள் ஏதோ செய்ய கூடாததை செய்துவிட்டதைப்போல கூவுகின்றன ..
பிரபலமானவர்கள் திமுகவை விட்டு போனால் வரவேற்பதையும் அது சரியான செயல்பாடு என்பதும் அதிமுகவிலிருந்து யாராவது வந்தால் அதிகம் கவலைக் கொள்வதும் பதறுவதும் ஊடகங்கள் தொடர்ந்து செய்கின்றன திமுகவிலிருந்து யாராவது வெளியேறினால் கொண்டாடியிருக்கிறார்கள் .. ஈ.வி.க.சம்பத் கண்ணதாசன் போன்றோர் வெளியேறிபோது
திமுகவே தடுமாறுவதைப் போல தலையங்கம் தீட்டியவர்கள் தாம் இவர்கள்
..
திரு.ஸ்டாலின் அவர்களின் அபாரமான செயல்பாடு எதிரிகளுக்கு இப்போதுதான் புரிய தொடங்குகிறது நிதானமான காய் நகர்த்தல் இயக்கத்தை வலுசேர்க்க எப்படிபட்ட நகர்வுகளை செய்தால் பலன் அளிக்குமென ஆய்ந்து செயல்படுகிறார் .. தோழமைகளோடு கருத்தொற்றி மிகப்பெரிய வெற்றியை ஈட்ட இப்போதிலிருந்தே அடித்தளம் அமைப்பது நல்ல பலனை தரும் .. கொங்கு மாவட்டத்தில் திமுக பலவீனமாக இருப்பதைப்போல ஒரு தோற்றம் அது ஏறத்குறைய சரியும் கூட அதை சரிசெய்வதற்கு பிரித்தாளும் ராஜ தந்திரம் அவசியம் தேவை ..இன்னும் சிலர் பிற மாவட்டங்களிலிருந்து வரகூடுமென தகவல் சொல்கிறது .. ஏற்கனவே திமுகவில் இருந்தவர்கள் தான் காலசூழற்சியில் பிரிந்து சென்றவர்கள் வழிதவறியவர்கள் திரும்பவும் வருகிறார்கள் வருவார்கள் ...
..
தொண்டர்களை அரவணைத்து செல்லும் தலைவர் என்கிறார் செந்தில்பாலாஜி ..ஆம் "மாவட்டங்களில்" இருந்த திமுகவை உடைத்து தனித்தனியே வட்ட, ஒன்றிய கிளை கழகத்தவர்களை சந்தித்து கருத்து கேட்டு அவர்களின் கருத்தில்/குறைகளில் உள்ள உண்மையை அறிந்து மெல்ல சீர்செய்யபடுமென்று வாக்குறுதி தந்தவர் சிலரை அதிரடியாக மாற்றி இங்கே புதியதொரு தடயத்தை தோற்றுவித்திருக்கிறார்.. கலைஞரைப் போல அல்ல நான் எல்லாவற்றையும் மன்னித்தருள என்று எச்சரிக்கை செய்தவர் .. பொதுவாழ்வில் நேர்மை மக்களின் ஆதரவோடே அதிகாரம் வரவேண்டுமென்ற உறுதியான நிலைப்பாடு வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம் அடிமட்ட தொண்டனை சந்திந்து கலந்துரையாடுவது ..
அனைவரையும் அணுசரித்து செல்லும் கலைஞரின் பாணி .. பாதை தேர்வு செய்து அதில் திடமான நின்று களம்காணும் உறுதி..
ஐம்பதாண்டு கால அரசியல் அனுபவம் தளபதியை செம்மைபடுத்தியிருக்கிறது ..
கலைஞரிடம் கற்ற அரசியல் அறிவும், ஓய்வறியா உழைப்பும் தலைமைப் பண்பும்
நல்லதொரு எதிர்காலத்தை தரும்.. திமுகவின் எதிர்காலத்தில் தான் இனத்தின் மொழியின் மண்ணின் நலன் அடங்கியிருக்கிறது ..
..
#தலைவர்_தளபதி
Thursday, December 13, 2018
அரசியல்..
சில முலாம்பூசபட்ட போலிகள் உள்ளன.. அமுமுக உயர்மின் அழுத்தம் கொண்டதென்று டிடிவி தினகரன் சொல்கிறார் .. பதறுவது தெரிகிறது .. கூட இருப்பவர்கள் கொள்கைக்காக இருப்பதாக சொல்வது அபத்தம் அதிமுகவில் யாருமே கொள்கைக்காக இருந்ததில்லை அதெல்லாம் அவர்களுக்கு தெரியாது எம்ஜிஆரெனும் கவர்ச்சி அவர்களை அரசியலுக்கு கொண்டுவந்தது .. பின் ஜெயலலிதாவும் அதிமுகவை காசு சம்பாதிக்கிற வழியாக மாற்றிட அரசியலை பொதுசேவை என்பதை மாற்றி பிழைப்பதற்கான இடமாக தேர்வுசெய்தனர் அதிகாரமிருந்தால் செய்கிற தப்புகளில் இருந்து தப்பிக்கலாமென்ற எண்ணம் வலுபெற தவறுக்குமேல் தவறு அதை கடக்கமுடியாமல் வழக்கு தண்டனை சிறை என்று அரசியலில் வாழ்விழந்து போனபின்னும் .. இருக்கிற காசை வைத்து எப்படியும் திரும்ப அரசியலில் தன்னை தக்கவைத்துக்கொள்ள போராடுகிற சூழல் .. தம்மால் வளர்த்துவிட்டவர்கள் .. யாரை நம்பி ஆட்சி அதிகாரத்தை தந்தோமோ அவர்களே புறடியைப்பிடித்து தள்ளியதும் செய்வதறியாது இருக்கிறவர்களை காக்க முயன்று கடைசியில் கூடாரம் காலி ஆகிவிடுமோ என்கிற நிலை ..
உயர் அழுத்த மின்சாரம் .. டிரான்ஸ்பார்மரே பழுதான நிலையில் மின்சாரம் துண்டிக்கபடுகிற சூழலில் உளறல் வருகிறது..
..
அதிமுக என்பதே அடிமைத்தனம் ஊறிப்போன
அறிவிலிகளின் கூடாராமாய் மாறிபோய் வெகுகாலமாகிவிட்டது .. இப்போது கூட மேற்குவங்க நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக் ஒ ப்ரையன் நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடக்க விடாமலும் கேள்விகள் பதிலளிக்கமாலும் இருப்பதற்காக அதிமுக மூலம் பாஜக தொடர்ந்து அமளி செய்கிறது என்கிறார் .. ஆம் ஆக்கபூர்வமான விவாதமெல்லாம் செய்ய அதிமுகவினருக்கு தெரியாது .. காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீரென்று பாடதான் தெரியும் இப்படி பட்ட தகரத்தை தான் ஜெயலலிதா தேர்வு செய்தார் .. ஜெயலலிதாவே தகரமென்பது வேறுவிடயம் இதில் எங்கே மூலாம் பூசுவது ..
மத்தியில் பாஜக ஆட்சி இருக்கிறவரை தமிழகத்தில் அவர்கள் சொல்படி ஆடுகிற "ஆடுறாராமா" தேவைபடுவதால் அதிமேதாவித்தனம்..? எல்லாம் ஆட்சி செய்கிறது ரெய்டு வழக்கு தண்டனை சிறை என பயந்து எடப்பாடியோடு இருக்கிற யாரும் தினகரன் பக்கம் வர மறுக்கிறார்கள் ..தினகரனும் எங்கே தமக்கும் சிறை செல்ல நேரிடுமோ என அஞ்சி கேட்காமலேயே பாஜகவிற்கு ஆதரவை தருகிறார் இவர்கள் கொள்கையாளர்களாம் .. இன்னும் சில மாதங்களில் கூடாரம் காலி ஆகலாம் என்ற பயத்தில் பதறுவதை தான் தினகரனின் அறிக்கை சொல்கிறது ..
..
தினகரன் கூட இருப்பவர்கள் என்றில்லை அதிகாரம் போனால் எடப்பாடி பின்னால் நிற்பவர்கள் கூட கூடு மாறலாம் கொள்கை ஈர்ப்பினால் வருபவர்களில்லை ஆனாலும் தேர்தல் அரசியலில் பலம் காட்ட வேண்டியதும் வாக்குகளை சிதறவிடாமல் ஒருங்கிணைப்பதும் கூட மிக அவசியமான ஒன்று .. எண்ணிக்கை அடிப்படை ஜனநாயகத்தில் "மாய எண்" மிக முக்கியம் .. அதிகாரமிருந்தால் தான் எதையும் நிலைநாட்ட முடியும் இல்லையெனில் தொடர்ந்து தமிழக நலன் புறக்கணிக்கபடும்.. சமூக நலன் நீதி சமத்துவம் நமது உரிமைகள் எல்லாம் இந்த அடிமைகளால் பலிகொடுக்கபடுகிறது நம் குழந்தைகளின் கல்வியில் கூட கைவைத்துவிட்டார்கள் இனியும் இவர்களை அனுமதித்தால் தமிழகம் பின்தங்கியநிலைக்கு சென்றுவிடும் .. மீட்டெடுக்கவேண்டிய பெரும் பொறுப்பு நமக்குண்டு.. சின்ன சின்ன விடயங்களில் கூட கவனமாய் காய் நகர்த்தி அரசியலில் மாபெரும் வெற்றியை பெற அரவணைப்போம் வருவோரை வரவேற்போம்..
..
ஆலஞ்சியார்
Wednesday, December 12, 2018
சாதி..மதம்
சாதி..
இதன் கட்டமைப்பிற்குள் இருக்கும் குரோத அரசியலை நாம் அதிகம் யோசிப்பதில்லை.. இதன் பின்னில் நின்றாடும் பார்பனத்தின் துவேசத்தை நாம் அதிகம் கவனிப்பதில்லை.. சாதிய நிலைபாடே வேரறுக்கப்படவேண்டும் என்பதில் பெரியார் காட்டிய முனைப்பை அவரின் வழிதோன்றல்கள் சரியாக முன்னெடுக்காததும்... வாக்கு அரசியலுக்காக அதில் தூபம் போட்டதும் சாதிவெறியர்கள் சங்கங்களை கலைத்துவிட்டு நேரடி அரசியலில் ஈடுபட்டவர்களை ஆதரித்து வளர்த்துவிட்டதும்..இன்றைய அவலங்களுக்கு காரணம்.. இதில் திமுக உட்பட திராவிட கட்சிகளின் பங்கை நான் மறைக்கவோ மறுக்கவோ முயலவில்லை...
..
எங்கு தடுக்கிவிழுந்தது என்பதை நாம் கவனிக்க தவறியபோது .. ஆரியம் சரியாக காய் நகர்த்தி மக்கள் மனதில் ஆண்டபரம்பரை என்கிற விஷ எண்ணத்தை விதைத்தது.. அது அந்தந்த வட்டாரங்களில் தங்கள் சமூகமக்களை மூளைச்சலவைக்கு உட்படுத்தி ஒருவித போதையோடே இருக்க செய்தார்கள்..
தர்மபுரி இளவரசனாகட்டும் உடுமலைப்பேட்டை சங்கராகட்டும் ..வெளியில் வராத கௌரவம் பேசும் கொலைகள் நடந்துக்கொண்டிருக்கின்றன..
..
சாதிய அமைப்புகளை வள்ர்த்துவிடுவதோ அல்லது அக்கறை காட்டுவதோ இனி திராவிட கட்சிகள் செய்யகூடாது தேவையில்லாமல் தூபம் போடுகிற செயல் சாதிவெறியை வளர்க்கவே செய்யும்.. மதத்தை கையிலெடுப்பவனும் இதைதான் செய்கிறான்
கோவை பாரூக் என்ற இளைஞன் கழுத்தறுத்து கொல்லபட்டதை மறக்கமுடியுமா .. மதம் தலைக்கேறியவனின் கொடூர செயல் .. மதத்தை சொல்லி ஆட்சி அமைத்தால் நாடு சுடுகாடாய் போகுமென்பதற்கு இன்றைய பாஜக அரசின் லட்சணமே சாட்சி.. சாதி மத கொலைகளுக்கெதிராக அரசியல் கட்சிகள் பேசுவதில்லை பேசினாலும் அது சம்பரதாயமாகவே இருக்கிறது சட்டத்தின் முன் வலுவிழக்கிற நிலை தான் இப்போதும்..
சாதியை வீட்டுக்குள் வைத்துக்கொள்ளாமல் வெளியில் பெருமை பேசிதிரிகிற கூட்டம் ஆட்சி அதிகாரத்திற்கு ஆசைபடுவது பேராபத்தை விளைவிக்கும் .. மதத்தை முன்னெடுத்த பாஜக இந்திய ஒருமைபாட்டை சிதைத்ததும் மதவெறிக் கொண்டு ஆடியதும் நான்காண்டில் அதன் கொடூர முகத்தை கிழித்தெறிய தொடங்கியிருக்கிறார்கள்..
ஆம் சாதியம் பேசிய பாமகவை எப்படி துடைந்தெறிந்தார்களோ அதைப்போல மதவெறியோடு ஆடிய பாஜகவை கிழித்திருக்கிறார்கள் ..
இனி சாதி மதம் என குறுகிய வட்டத்திற்குள் வாக்கு அரசியலை தவிர்த்து இந்த சமூக மேம்பாட்டிற்கான சமத்துவ சமுதாயம் மலர அரசியல்கட்சிகள் பங்காற்ற வேண்டும் விளிம்புநிலை மக்களின் மேம்பாடும் ஒடுக்கபட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி வேலைவாய்ப்பு தொழில் பாதுகாப்பென உறுதி செய்பவருக்கே வாக்களிக்கும் மனப்பான்மையை மக்கள் பெறவேண்டும் ..
..
நல்லதொரு தொடக்கத்தை குறிப்போம்
..
ஆலஞ்சியார்
Tuesday, December 11, 2018
அச்சா தீன் ..கனிமொழி
பிரதமரால் அடிக்கடி உச்சரிக்கபட்ட "அச்சா தீன்" நல்ல நாள் இது .. என்ற கனிமொழியின் ட்வீட் கலைஞரை ஞாபகபடுத்தியது ..
..
ஆம்
உண்மையில் கொண்டாடபட வேண்டிய தினம் தான் .. அதிகார போதையில் மக்களின் ஒற்றுமையை சிதைத்து .. தான்தோன்றித்தனமாக ஆட்சி நடத்தி மக்களின் உணர்வுகளை மதிக்காமல் மதவெறியை முன்னெடுத்து .. இந்த நாட்டையே நாலரை ஆண்டுகளாக நாசம் செய்த பாஜக ..
ஒரே இரவில் மக்களின் கையிருப்பை செல்லாதாக்கி .. வலுத்தவனின் பணம் கருப்புபணம் சேமிப்பாய் வங்கிக்கே வந்ததும் ..செலவிற்கு சேர்த்துவைத்ததை எடுக்கவிடாமல் டிஜிட்டல் இந்தியாவில் தெருவில் விடியவிடிய நிற்க வைத்து கோமாளிகள் கிறுக்கன்கள் ரசிகனை வைத்து புதிய இந்தியா பிறந்ததென சொல்லவைத்து இதோ கறுப்புபணத்தை மீட்டுவிட்டேனென புகழ்பாடி.. மக்கள் கதறுவதை ரசித்த கூட்டம் இது .. மாட்டிற்காக மனிதனை அடித்துக் கொள்ளும் கொலைகாரர்களை பசுகாவலர்களென புகழ்ந்து .. தலித்களை நிர்வாணமாய் ஓடவிட்டு ..சின்னஞ்சிறு மலர்களை வன்புணர்வு செய்து அதை நியாயபடுத்தி .. ஜெய்ஹிந்த் சொன்னால் காமகொடூரனும் தேசபக்தனாகலாமென்று நியாயபடுத்தி.. அய்யகோ ..நான்கரை ஆண்டில் நாட்டை நாசபடுத்தி.. எதாவது சொன்னால் பாஜகவின் வீழ்ச்சியை பாகிஸ்தான் ரசிக்கிறதென சப்பைகட்டி.. நாட்டின் பொருளாதாரத்தை சிதைத்து..குறுப்பிட்ட வர்க்கத்திற்கே எல்லா சலுகைகளும் கிடைக்க வழிசெய்து .. இந்தியா கண்ட ஆட்சிகளிலேயே மிக மோசமான "நவீன துக்ளக்" ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கும் மோடி மற்றும் ஆர்எஸ்எஸ்க்கு மக்கள் சரியான பாடத்தை தந்து இதுதான் அச்சா தீன் என சொல்லியிருக்கிறார்கள்..
..
வடமாநிலங்களில் தொடர்ந்து மக்கள் பாஜகவை மோடியை வெறுக்க தொடங்கியிருப்பதின் ஆரம்பம் இது .. மின்னணு இயந்திரத்தை கடத்தியும் ஹோட்டல்களில் வைத்தும் அராஜகம் செய்தும் பெருவாரியான வெற்றியை தடுத்தாலும் அதையெல்லாம் மீறி காங்கிரஸை வெற்றியடைய செய்திருக்கிறார்கள் என்றால் .. பாஜகவை துடைத்தெறிய வேண்டுமென்று நினைத்து வாக்களித்திருப்பது தெரிகிறது வாக்குபதிவு இயந்திரம் இல்லாமல் வாக்கு சீட்டாக இருந்திருந்தால் மொத்தமாக துடைத்தெறிந்திருக்கலாம் .. இந்த நிலையில் சந்திரசேகரராவ் வின் வெற்றியை பாராட்டி ஆகவேண்டும் .. பொது தேர்தலோடு சேர்ந்து நடத்தியிருந்தால் அலையில் காணாமல் போய்விடுமோ என அஞ்சி முன்கூட்டியே ராஜினாமா செய்து தேர்தலை சந்தித்த வீயூகம் நல்ல பலனை தந்திருக்கிறது அங்கே முஸ்லிம்களின் வாக்குகளை இடஒதுக்கீட்டை சொல்லி பெற்றிருப்பதும் பெரிய வெற்றியை சாதாகமாக்கியிருக்கிறது .. பாஜகவை தென்னிந்தியாவில் தடுத்தது ஆறுதல் அளிக்கிறது
..
இனி மிக கவனமாக ராகுல் செயல்படவேண்டும் எதிர்கட்சிகளின் ஒருங்கிணைப்பில் கவனம் செலுத்தி நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தால் பாஜகவின் தோல்வி உறுதியாகும் .. இந்த தேசம் பன்முக கலாச்சாரத்தை கொண்டதென்பதை மறந்து ஒரே இந்தியா பிராமண கலாச்சாரத்தை கொண்ட இந்தியாவாக மாற்ற நினைத்து பல்வேறு இனங்களை அடித்தமர்த்தி .. ஒரே மொழியென்று ஹிந்தியை வளர்த்தெடுக்க எண்ணி பிறமொழிகளின் மீதான தாக்குதலை மெல்ல செய்து .. ஒருவித சர்வாதிகார நிலையை இந்த நாட்டில் நிலவ முயற்சித்தார்கள் .. இந்தியாவை இந்துநாடாக்க முயற்சித்து யாரென்றே தெரியாதவனெல்லாம் மக்கள் செல்வாக்கில்லாதவனெல்லாம் உரக்க பேசி மிரட்டுகிற கேடுகெட்ட நிலை .. இதோ மக்கள் தெளிவாக இந்த இந்திய ஒன்றியத்திற்கு தேவை சர்வாதிகாரம் அல்ல ஒற்றை கலாச்சாரமோ ஒற்றை பண்பாடோ மதமோ அல்ல அவரவர் நிலைபாட்டில் கொள்கையில் வழிபாட்டில் உணவுமுறையில் அவரவர் விருப்பம் போல வாழ தடுக்கிற கட்சி தேவையில்லையென தீர்ப்பெழுதி இருக்கிறார்கள் ..
ஒருவரின் தோல்வியை நாடே கொண்டாடுகிறது
இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம்
..
நல்லநாள்
..
ஆலஞ்சியார்
பெரியாரெனும் பேராசான்
நன்றி எங்கள் அறிவாசானே..
..
தந்தை பெரியார் மட்டும் இந்த மண்ணை, இனத்தை செம்மைபடுத்தியிருக்காவிட்டால்.. அறிவின் நிழலில் நின்று இனஉணர்வை நம்மிடையே ஊட்டியிருக்காவிட்டால் இந்நேரம் தமிழகம் கேட்பாரற்று போயிருக்கும்.. ஒருமுறை அல்ல இரண்டுமுறை தெளிவில்லாமல் ஏதேதோ காரணங்களுக்காக சில சக்திகளின் கைகளில் அதிகாரம் போனாலும் திராவிட கொள்கையெனும் ஆணிவேரின் பலத்தோடு திருப்பியடிக்க முடிகிறது..
எத்தனை இடர்கள் சூழ்ச்சிகள் ஆரியர்களின் தகிடுதித்தோம் வேலைகள் இவையாவும் முறியடிக்கபடுகிற ஒவ்வொரு முறையும்.. தமிழ் மண்ணின் சுயமரியாதை வீறிற்று வெளிவருவதை காணமுடிகிறது..
..
பெரியாரின் பெருந்தொண்டே இன்றும் தமிழக மண்ணில் ..
இலைமறைவு கயமைத்தனத்தை வென்று நம்மால் நிலைத்து நின்றாட முடிகிறது..
கொஞ்சம் பின்னோக்கி பார்க்கிறேன் அண்ணாவின் மறைவிற்கு பிறகு நாவலரோ எம்ஜிஆரோ பொறுப்பேற்றுயிருப்பார்களேயானாலும் மிக சுலபமாக நம்மை வீழ்த்தி மீண்டும் ஆரிய/பாசிசவாதிகள் நேரடியாகவே ஆட்சி செலுத்தியிருப்பார்கள்.. ஆனால் மேதகு கலைஞர் பெருமகன் ஆட்சியதிகாரத்திற்கு வந்ததால்தான் இங்கே திராவிடத்தை யாராலும் வீழ்த்த முடியாமல் போனது..
நுண் வேர் கெட்டுவிடாமல் நம்மை காத்துநின்றார்..
..
இப்போது நடக்கும் இலைமறைவு நகர்வுகள் இரண்டு காரணிகளுக்காக நாம் கவனிக்கவேண்டியிருக்கிறது.. அதிமுகவின் அடுத்தநகர்வை யாரெல்லாம் வடிவமைக்கிறார்கள் அதில் பாசிசத்தின் ஆளும் அரசின் பங்கென்ன என்பதையெல்லாம் கருத்திக்கொண்டே நாம் செயல்படவேண்டியிருக்கிறது .. திமுகவை எப்படியேனும் வீழ்த்திட வேண்டுமென்ற ஒற்றை இலக்கை தவிர வேறேதுமில்லை பாசிசவாதிகளுக்கு தெரியும் அதிமுகவை எப்படி வேண்டுமானாலும் கையாளலாம் கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம் திமுகவை அப்படி செய்ய இயலாது அடிமட்ட தொண்டன் கூட தவைமையை பொதுவெளியில் சமூகதளத்தில் கேள்வி கேட்பான் ஒவ்வொரு அசைவும் சமூகநீதி சார்ந்தே செயல்பட வேண்டிவரும் .. திமுக மட்டும் பெரியாரிய பாதையை பின்பற்றும்,.. சில நேர தவறான முடிவெடுத்தாலோ அல்லது காலதாமபடுத்தினாலோ உடனே சுட்டிகாட்ட இங்கே நிறைய பேர் இருக்கிறார்கள் .. ஆரியத்திற்கு எதிரான ஒரே கட்சி திமுகதான் ...அதனால் தான் திமுகவை கண்டு அஞ்சுகிறார்கள் வெற்றியை தடுக்க தீவிரமாய் செயல்படுகிறார்கள் ..
..
பெரியாரிய கொள்கையை / பாதையை மறந்தால் மீறினால் தமிழகத்திலிருந்து காலபோக்கில் மறக்கடிக்கபடுவார்கள்
கொள்கை தெளிவில்லாமல்
பாசிசத்தின் கையின் கைபாவையாக இருந்தவர்களை மக்களென்றில்லை நாளடைவில்
அவரை சார்ந்தோரே மறந்துபோவார்கள் (மகோரா)எம்ஜிஆரை ஜெயலலிதா மறந்தார்
இப்போது ஜெயலலிதாவை இவர்கள் காலபோக்கில் மறந்தே போவார்கள்..
கொள்கை உறுதியும் சரியாக தலைமையை தயார்செய்து தொடர செய்தால் வரலாற்றில் இடம் பெறுவார்கள்..
பெரியார்..அண்ணா..கலைஞர் .....
..
பெருங்கிழவன் நம்மை செதுக்கியிருக்கிறான்..
கூர்மையாக..
#அறிவுக்கொண்டு..
..
ஆலஞ்சியார்
Monday, December 10, 2018
சமணம்
ஐம்பெரும் காப்பியங்கள்..
சிலப்பதிகாரம்.. மணிமேகலை சீவகசிந்தாமணி.. வளையாபதி குண்டலகேசி ..
சிலப்பதிகாரம் சீவக சிந்தாமணி வளையாபதி சமணர்கள் காப்பியம்/வாழ்வியல் ..
மணிமேகலை குண்டலகேசி பௌத்தவ காப்பியம்..
..
சிலப்பதிகாரம் இரண்டாம் நூற்றாண்டில் எழுதபட்டது.. சங்கம் மருவிய காலத்தில் எழுதபட்டது குண்டலகேசி ஒன்பதாம் நூற்றாண்டில் எழுதபட்டதாக சொல்லபடுகிறது..
தமிழ் மண்ணில் சமணமும் பௌத்தமும் மட்டுமே நிலைபெற்றிருந்ததை இந்த ஐம்பெரும் காப்பியங்கள் நமக்கு உணர்த்தும்..
திருத்தக்க தேவர் என்ற சமணப் புலவர் இயற்றியுள்ள 'சீவக சிந்தாமணி', தமிழ் இலக்கியத்திலுள்ள மகா காவியங்களுள் ஐம்பெரும் காப்பியங்களுள் தலை சிறந்ததாக மதிக்கப்படுகிறது. ..
சிலப்பதிகாரம் மணிமேகலை பெரியபுராணம் மட்டுமே தமிழ் களத்தை மைய்யமாக கொண்டு எழுதபட்டது மற்றவைகள் பிற ஆதிக்கத்தை நமக்கு உணர்த்துவதாக அமைந்தது
மணிமேகலையும் குண்டலகேசியும்.. பௌத்தனத்தை தழுவியதால் அது பௌத்தத்தை பேசியதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.. அதனால்தான் தமிழர்களின் ஐப்பெரும் காப்பியங்களை முன்னமடுக்காமல் ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் அடிக்கடி பேசுகிற விவாதிக்கிற சூழலை திட்டமிட்டே செய்துவந்தனர் .. அறிவாசான் பெரியார் தமிழ் படித்தவனெல்லாம் சாமியாராக தான் போனான் என்பார்..
..
சமணர்களையும் பௌத்தவர்களையும் கொன்று கழுவேற்றிதான் பிராமண மதம் இங்கே காலூன்றியது .. பௌத்த விகாரங்களை அழித்தும் சமணர்களின் கோவில்களை இடித்தும் தான் இங்கே கோவில் வந்ததென்பதை அறிவுசார்ந்த ஆய்வுகளோடுதான் திருமா பேசினார்.. உடனே பார்பனர்கள் திருமாவிற்கெதிராக களமிறங்கினர் கோவில்களை இடிக்க சொல்கிறானென்றெல்லாம் திரித்து கூறினார் அப்போது திராவிட கழகம் தான் திருமாவிற்கு ஆதரவாக கருத்தரங்களை நடத்தியது ..மசூதிகளை இடிக்கவேண்டுமென சொல்கின்றீர்களே .. சமணர் பள்ளிகளை இடித்துதானே கோவில்கள் உருவானதென்ற உண்மையை சொன்னவுடன் தீக்குளிப்பேன் என்று சொன்ன எச்.ராசா இன்னமும் சொன்னதை செய்யவில்லை.. சமணர்கள் வழிபாட்டுதலம் குகைகள் கோவில்களாக உருமாறியிருக்கிறதே .. உச்சிபிள்ளையார் கோவில் ஸ்ரீரங்கம் காஞ்சி திருப்பதி இவையெல்லாம் சமணர் கோவில்களாகதானே இருந்தது
..
ஆம்..
ஏழாம் நூற்றாண்டில் சமணர்கள் 8000 மேற்பட்டவர்கள் கழுவேற்றினார்கள் சமணர்களையும் பௌத்தவர்களை வீழ்த்தி இங்கே ஆரியர்கள் காலூன்றினார்கள் அரசர்களின் கையிலாக்கி ஆரியர்கள் தங்களின் மதத்தை இங்கே வேகமாக பரப்பினார்கள் இதுதானே வரலாறு .. மன்னர்கள் சமணத்தை துறந்து சைவ மதத்தை பின்பற்றி போதுதான் இங்கே சைவ வைணவ கோவில்கள் வந்தது இன்றைக்கு சில கோவில்களில் சமணபடுக்கைகளை காணலாம்..
தமிழனுக்கு ஏன் இந்திய துணைகண்டத்திலேயே ஆரிய மதம் வந்துதானே தவிர அதன் பூர்வீகம் இந்த பூமியல்ல..
..
தமிழனுக்கு மதம் என்பதே ஆரியர் வரவிற்கு பிறகும் பின்.. தொடர்ந்து வந்த மொகலாய ஆங்கிலேயர் வரவிற்கு பிறகே தவிர.. அதற்கு முன்பில்லை சமண சமயத்தையும் தொடர்ந்து பௌத்தமுமே அவனை முதலில் ஆட்கொண்டது .. இப்போது கூட காஞ்சியிலும்.. மாமல்லபுரத்திலும் நிறைய சமண வரலாற்று சுவடுகளை காணலாம். சமணத்தை அழித்து சைவமும் வைணவமும் வளர்ந்தது.. சமணசமயத்தை வளர்த்த அரசர்கள் பின் மாறி ஆரியமதத்திற்கு வந்ததாகவும் அதன்பிறகு கோவில்கள் அதிகளவில் வைணவத்தை பறைசாற்றியதாக வரலாற்றாசிரியர்கள் சொல்கிறார்கள்.. இல்லை அது புனைவென்றும் ஒட்டுமொத்தமாக சைவ மதத்தை மாற மன்னர் பணித்ததை மறுத்ததால் கழுவேற்றம் நடந்ததாக சொல்லபடுகிறது.. இதிலிருந்தே சமணமே இங்கே நிலைத்திருந்தது என்பதும்
ஆரிய மதமான வைணவமும் சைவமும் வந்தேறிய மதங்களென்றும் உறுதியாகிறது..
..
இந்த மண்ணின் பூர்வகுடிகள் மதங்களை பின்பற்றிவர்களாக இல்லையென்கிறார் வரலாற்று ஆய்வாளர் இலங்கை சிவ சுப்ரமணியம் .. ஆம் தமிழனின் வாழ்வியல் இயற்கையோடு பிணைந்திருந்தது அவன் இயற்கையை போற்றியே வாழ்ந்தான் .. வணங்குதல் என்பது அவனுக்கு வரவு தான் .. இதில் சாதியும் மதமும் இடைசொருகலாய் வந்து தலையில் வைத்து கொண்டாடுகிற இழிவை எப்போது தூக்கியெறிபோகிறோம் .. சாதியென்றும் மதமென்றும் பிரிந்து நமக்குள் பகையை மட்டுமே வளர்த்திருக்கிறோம் மதம்பிடித்து அலைகிறோம்.. நமக்கு முதலில் அறிமுகமான சமண நெறி சிறந்த வாழ்வியலாக இருந்தது வாழ்வியல் பயிற்சிக்கானதாக இருந்தது ..
..
#சமணம்
..
ஆலஞ்சியார்
Sunday, December 9, 2018
தலித் அரசியல்
அமைப்பாய் திரள்வோம் திருமா
ஜாதியாய் திரள்வோம் ரஞ்சித் பட்டியலின மக்களின் ஒற்றுமை என்பது இஸ்லாமியர்களின் ஒற்றுமையை போல எப்போதும் சாத்தியபடாத ஒன்றாகவே இருக்கிறது ..
..
பா.ரஞ்சித்தின் சமீபத்திய பேச்சுகள் "ஜெய்பீம்" அம்பேத்கர் ஒருவர் மட்டுமே போதும் எங்கள் வாழ்வியல் மேம்பாட்டிற்கு எங்களின் அரசியல் வழிகாட்டுதலுக்கென நம்புகிறார் அது அவரின் அரசியல் அறியாமை என்றே கருதவேண்டியிருக்கிறது அவரென்று இல்லை பட்டியலின மக்களிடையே இதே கருத்து இருப்பதை காண முடிகிறது ஆனால் அம்பேத்கரை முன்னெடுப்பதில் தவறில்லை அது மட்டுமே போதாதென்பதுதான் உண்மை .. தலித் மக்கள் தலித் தொகுதியில் மட்டுமே வாக்களித்தால் போதும் .. மற்ற தொகுதிகளில் வாழும் தலித்கள் புறக்கணிக்க வேண்டும் .. தலித்கள் ஒருங்கிணைந்து ஒதுக்கபட்ட தொகுதியில் ஒருவரை நிறுத்தி வெற்றிபெற செய்தால் போதும் .. எந்த கட்சியிலும் நிற்க கூடாதென கூறுகிறார் .. தலித் வாக்குகள் மட்டுமே வெற்றியை தீர்மானித்துவிடாதென்ற உண்மை விளங்கவில்லை .. சரி பட்டியலினத்தில் யாரை நிறுத்துவீர்கள் .. அதில் எத்தனை சாதிகள் .. பள்ளர்கள் பறையர்களை ஏற்பார்களா .. அவர்கள் தங்களை தேவேந்திர குலமென்றும் பட்டியலின மக்களாக அதாவது தாழ்த்தபட்டவர்களாக கருத கூடாதென சொல்கிறார்கள் .. ஏன் பறையர்கள் அருந்ததியினரை அருகிலேயே சேர்ப்பதில்லையே .. முதலில் இந்த சாதிய கட்டமைப்பை உடைக்க எதை செய்யவேண்டும்.. இதை உருவாக்கியவர்களின் நோக்கம் சாதியம் சொல்லி பிரிந்து கிடப்பதே என்பதை உணராத வரை சனாதனவாதிகளின் கை ஓங்கியே நிற்கும்,.. பஞ்சமியரையும் சூத்தரனையும் மோதவிட்டு வர்ணாசரம அடுக்கை சொல்லி தங்களை உயர்ந்தவராக காட்டிநிற்கிற நிலைக்கெதிரே திரும்பாதவரை ..ரஞ்சித் போன்றவர்களால் ஒரு அடி கூட நகர முடியாது ..
..
திருமா தெளிவாக பதிலுரை வழங்கியிருக்கிறார் .. இருபத்தைந்தாண்டுகால அனுபவம் தெரிகிறது தலித் மக்களை ஒருங்கிணைப்பை தொடர்ந்து வலியுறுத்தியும் அது நடக்காதென்ற உண்மை உணர்ந்தவர் .. சாதியை கையிலெடுத்தால் அல்லது முன்னிலைப்படுத்தி அரசியல் செய்தால் பாமகவை போல தனிமைபடுத்தபட நேரிடும் என அறிந்து ஒன்றுபடுவோம் அமைப்பாய் திரள்வோம் என்கிறார் .. நீண்டகாலமாக ஆதிதிராவிடர்களின் பங்களிப்பு குறிப்பிடதக்க அளவில் உண்டென்றாலும் அது போதியதாக இல்லை என்பதை ஏற்றுதான் ஆகவேண்டும் இது எல்லா சமுதாய மக்களுக்கும் இருக்கிற குறை இது .. தேர்தல் அரசியலில் தவிர்க்கமுடியாதது .. எண்ணிக்கையை பிரதானமாக கொண்ட ஆங்கிலேய தேர்வு முறையில் இந்த நிலைதான் வரும் .. பெற்ற வாக்குகளின் அடிப்படையில் உறுப்பினர் தேர்வென்றால் மட்டுமே அந்தந்த சமுதாயத்திற்கு உரிய பிரத்தித்துவம் கிடைக்கும் இதை கலைஞர் பலகாலமாக வலியுறுத்தியும் இருக்கிறார் .. ஆனால் அதை அதிபர் முறை தேர்தல் என புறக்கணித்திருக்கிறது இந்திய ஜனநாயகம் ..
..
சாதிய ரீதியாகவோ மத ரீதியாகவோ ஒருவர் பேசுகிறாரெனில் நிச்சயமாக அவரின் பின்புலத்தில் பாசிசத்தின் கரம் இருக்குமென்பதை அறிக .. சாதிமத பேதமற்ற முற்போக்கு சிந்தனையும் சமூகநீதியும் சமத்துவமுமே இந்த மண்ணிற்கு தேவை .. தமிழகத்தின் பாசிசத்தையோ .. பாசிசத்தின் நிழலாய் வருகிற சாதிய அமைப்பையோ,மக்கள் ஏற்க மாட்டார்கள் ..
..
ஆலஞ்சியார்
Saturday, December 8, 2018
குடமுருட்டி
#குடமுருட்டி..
காவிரியிலிருந்து
திருகாட்டுப்பள்ளியில் பிரியும் ஆறு..
எங்களுர் கரையை..நனைத்து கொண்டே...செல்லும்..
குடமுருட்டி .
என் வாழ்வின் எல்லாநிலைகளிலும்..கலந்தது..
சிறுவயதில்..
நிரம்பிவழியும் ஆற்றை..பார்த்து பிரம்மிப்போடு கூடிய பயம் ..
பின்னாளில்..என்னோடு..
என்உணர்வோடு இரண்டறக்கலந்தது..
அக்கரைக்கு படகு செல்ல..காத்திருப்பது சுகமானவிடயம்..
எங்கள் பெரியதந்தையார்..அக்கரையில் கொஞ்சம் நிலம் வைத்திருந்தார் ..
அடிக்கடி படகுப்பயணம் கிடைக்கும் ..
அதெல்லாம் மலரும்நினைவாய் போனது..
குடமுருட்டி ..
என் வாழ்வில் பின்னிப்பிணைந்தது..
அக்கரைக்கு நீந்திச் செல்ல போட்டி போட்டு சென்றது,
வற்றியஆற்றுமணலில் கபடி ஆடியது ..இப்படி நிறைய..
தனிமையில் அமர்ந்து..
புத்தகம் வாசித்தது..
சின்னசின்னதாய் கவிதைகள்
யாருமறியாமல் எனக்குநானே பாடிமகிழ்ந்தது..
அந்திப்பொழுதில்,
மையிருட்டில்,
மயிலிறகால் வருடியதை,
விரல்கோர்த்து..
கவிதையாய்..
சிலவார்த்தை
பொய்யில் நனைத்து..
மொழிந்ததை..
இந்த..#ஆறு அறியும்...
உஸ்தாத்..ஹபீபுல்லாவிடம்..
சிலம்பம் பழகிய
பயிலரங்கம் இந்த ஆறு..
வாழைப்பழம்..
விற்றுக்கொண்டுவரும்
மாக்கானிடம்
குறவஞ்சியை..
பயின்றதும்..
#குடமுருட்டியில்..தான்
என் மெளனம்..
என் தனிமை..
என்..காதல், காமம்
கவிதை,
என் #அந்தரங்கம் ..
இந்த ஆறறியும்..
என் சோகம் சுகம்
அழுகை ஆணவம் திமிர்
வீரம் விளையாட்டு எல்லாமறிந்த இந்த ஆறு..
என் வாழ்வோடு..பின்னிப்பிணைந்தது...
இப்போது வறண்டு..
திட்டுத்திட்டாய்..
காட்டான் செடிகள் ஆக்ரமித்து அழகிழந்து போனாலும்..
நிரம்பியோடும்..
எனது குடமுருட்டி..
என்றும் மாறாதநினைவுகளை..
பசுமையாய் நினைவில்..
..
இன்னும் நிறைய நினைவுகளை தாங்கி..
ஓடிக்கொண்டுதான் இருக்கிறது எம் மண்ணை நனைத்துக்கொண்டே .. என்னையும்
..
#குடமுருட்டிஆறு...
..
ஆலஞ்சியார்
Friday, December 7, 2018
வைகோ
சூப்பர்ஸ்டாரென்று பாராமல் ரஜினி தலித்தாக நடித்தார் வன்னியரசு..
காசு கொடுத்தால் யாராக வேண்டுமானாலும் நடிப்பார் .. அது அவரது தொழில் நடிப்பார் என்பதுதான் அதிலுள்ள உண்மை ..
வன்னியரசின் சமீபத்திய பேச்சுகள் elite தலித் பேச்சாக இருக்கிறது அவரை பொறுத்தவரை தங்கள் நிலைநிறுப்பிற்கானதாக எடுத்துக்கொள்ளலாம் வைகோவுடனான முரண் .. திராவிடம் தலித்களுக்கு என்ன செய்து என்ற கேள்விகள் அவரது அறியாமையை காட்டுகிறது .. தமிழகத்தில் திராவிட இயக்கங்களின் வரவிற்கு பிறகு மிடுக்காக வலம்வர முடிந்ததென்பதை உணரவேண்டும் இந்த வார்த்தை பிரயோகம்
வருத்தத்தை தருகிறது ..ஆனாலும் தொடர்ந்து பட்டியலினத்தவர்களே திராவிடம் என்ன செய்ததென கேட்கும் போது பேச வேண்டியிருக்கிறது .. இன்றைக்கும் வடமாநிலங்களில் தலித்களின் நிலையை நாம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம் .. இடஒதுக்கீடு இருக்கிறது சலுகைகள் இருக்கிறது ஆனாலும் ஒடுக்கபடுகிறார்களே ஏன் அப்படியெனில் இடஒதுக்கீட்டால் மட்டுமே அவர்களின் உரிமைகள் மீட்டெடுக்கபடவில்லை
இடஒதுக்கீடு கிடைத்தும் 30 ஆண்டுகள் எந்த முன்னேற்றத்தையும் உணரவில்லையே .. திராவிடம் ஆட்சிக்கு வந்த பிறகுதானே பெருமளவில் மாற்றம் வந்தது.. தலித்களின் உரிமைகளில் கை வைக்காமல் பார்த்துக்கொண்டது அவர்கள் மீதான தாக்குதல் நடத்தும் போதெல்லாம் அரணாக காத்திருக்கிறது ..
..
வைகோ தனது வீட்டிலும் தலித்கள் வேலை செய்தார்களென சொன்னதை அவர் தலித்களுக்கு எதிரானவராக மாற்ற முயற்சிக்கிறார்.. அவர் அதை யதார்த்தமாக சொன்னது .. எனது வீட்டில் கூட என்றது ஆதிக்க திமிரிலோ ஆண்ட திமிரிலோ வந்ததாக எண்ணவில்லை அவரின் அரசியல் நிலைபாட்டில் நிறைய கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும் அவர் சாதிகளுக்கெதிரானவர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை .. விசிகவை சேர்ந்த இரண்டாம் நிலை தலைவர்கள் தொடர்ந்து திராவிட சித்தாந்தத்திற்கெதிரே பேசி வருகிறார்கள் .. திரு.ரவிகுமார் வன்னியரசு போன்றவர்கள் ..தேர்தல் அரசியலில் எல்லா கட்சிகளுமே வெற்றியை இலக்காக்கியே பயணிக்கும் அந்தந்த காலகட்டத்தில் யாருடன் பயணித்தால் வெற்றியை எளிதாக்க முடியுமென கணக்கிடுவது இயல்பு அப்படி சிலநேரங்களில் விசிக புறக்கணித்து தேர்தலை சந்தித்திருப்பார்கள் ஆனால் அதற்காக பட்டியலின மக்களுக்கெதிரானவர்களென்ற மாயதோற்றத்தை உருவாக்குவது மடமை ..எம்ஜிஆர் காலத்தில் தலித் இன வாக்குகள் பெருவாரியாக அதிமுகவிற்கே சென்றது ஆனால் திமுக அப்போதும் கூட பட்டியலின மக்களுக்காகவே உழைத்தது ..
..
தஞ்சை மாவட்டத்தில் பௌணர்மி நாட்களில் தலித்மக்களை கட்டிவைத்து அடிக்க முடியாமல் செய்தது கலைஞர் ஆட்சிக்கு பிறகுதான் என்பதை அறிவாரா.. திமுகவை வெற்றிபெற வைத்தால் பள்ளுபறையெல்லாம் சமமாக வந்து உட்காருவானென வெளிப்படையாகவே ஊர் கூட்டங்களில் பேசிய காலமெல்லாம் உண்டு .. கும்பிடுறேன் சாமி என்ற நிலையை மாற்றியது யார் .. ஆதிதிராவிடர்களுக்கென்று தனித்துறையை உருவாக்கியது திராவிடம் .. தலித் மாணவர்களுக்கு விடுதி .. அவர்களுக்கு கல்வி செலவை குறைத்தது பின் இலவசமாக்கியது உயர்கல்வியில் முழுவதுமாக பயணடைகிறார்களா என கண்டறிந்து .. மீதமுள்ளதை பொது பிரிவிற்கு மாற்றுவதை தடுத்தது .. சொல்லிக்கொண்டே போகலாம்..
..
திரு வைகோ அவர்களின் பதிலுரை அவரின் மதிப்பை குலைக்க செய்யும் நான் பயங்கரமானவன் என்ற வார்த்தை அழகல்ல.. நான் நெருப்பு தூர நின்றால் குளிரிகாயலாம் அருகில் வந்தால் சாம்பலாகலாம் என்பதெல்லாம் இதுவரை இவர் பயணித்த அரசியல் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கும் ..எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவயபடும் பழைய தவறை மீண்டும் செய்வது அவர் இன்னும் முதிரவில்லை என்பதையே காட்டுவதாய் அமைகிறது ..
..
விசிகவும் மதிமுகவும் தமிழக அரசியலில் தவிர்க்கமுடியாதவையாக மாற வேண்டுமெனில் நிறைய கற்க வேண்டியிருக்கிறது அதீ மோகம் தவிர்ந்து தன்னிலை உணர்ந்து .. தங்களின் பலமறிந்து சிலநேரம்,நாவடக்கி செல்லும் தூரத்தை /இலக்கை உணர்ந்து பயணிக்க வேண்டும் இல்லையெனில் தமிழக அரசியலில் தங்களுக்குரிய அங்கீகாரத்தை இழந்துநிற்க வேண்டிவரும்,..
..
ஆலஞ்சியார்
Wednesday, December 5, 2018
ஜெ.ஜெ...
செல்வி.ஜெ.ஜெயலலிதா ..
இரண்டாம் ஆண்டு நினைவில்.. தமிழகத்தில் ஒரு பெண் தலைவர் அதிகாரத்திற்கு வருவதென்பது மிக கடினமான சூழலில் வந்த வழி புறவழியெனினும் எல்லாநிலைகளையும் கடந்து நின்றவர் ..ஒரு பார்பன குடும்பத்தில் பிறந்தவர் என்ற ஒற்றை காரணத்திற்காக இந்திய ஒன்றிய அரசு இவருக்கு காட்டிய சலுகைகள் அதன் பலன்களை அனுபவித்தவர் .. 1996ல் ஆனந்த விகடன் .. இனியும் இவருக்கு வாக்களித்தால் நாட்டிற்கு தமிழக மக்கள் செய்கிற துரோகமென்று தலையங்கம் தீட்டியது .. இதே கருத்தை தினமணியும் சொன்னது .. ஆனால் காலபோக்கில் வராது வந்த மாமணியென (ராஜாஜிக்கு பிறகு) பார்பன சமூகம் கொண்டாட தொடங்கியது இறுதி தேர்தல் கூட உடல்நலம் தளர்ந்த நிலையிலும் சோ மேடையேறி இவருக்கு வாக்கு கேட்டார் .. காரணம் ஊழல் பகல்கொள்ளை வாக்கிற்கு பணம் என்ற எல்லா ஜனநாயக மரபுகளையும் மீறி இவர் செயல்படுகிறாரென்று அறிந்தும் இவரை விட்டால் பிராமண சமூகத்திலிருந்து ஒரு தலைவரை தமிழ்நாடு ஏற்காதென்ற உண்மையை உணர்ந்திருந்தார்கள் .. அதனால் தான் அவரின் தவறுகள் கூட கண்டுகொள்ளாத நிலையை கடந்து போற்றபடுகிற பொய்யான கட்டமைப்பை ஏற்படுத்தினார்கள் ..
..
ஊழல் குற்றசாட்டில் நிரூபிக்கபட்ட ஒருவர் அதிகாரத்தில் வர நீதிமன்றமே மறைமுகமாக உதவியது வேறெங்கும் காணமுடியாது .. மத்திய அரசின் தூதுவர்களாக தண்டனை பெற்றிருந்தபோது கூட மத்திய அமைச்சரே சந்தித்தை எந்த ஊடகமும் கேள்வி எழுப்பவே இல்லை இதே வேறொருவராக இருந்திருந்தால் மொத்த ஊடகமும் கொந்தளித்திருக்கும்.. தீர்ப்பை காலதாமதப்படுத்தி ஜெயலலிதா ஆட்சியில் தொடர அனுமதித்தது நீதித்துறையின் மீதான பாசிசத்தின் பிடியை தமிழக மக்கள் உணர்ந்ததோடு நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையும் போனது நீதி வல்லவனுக்கானது மட்டுமல்ல மநுநீதிக்கானதென்பதையும் உணர்ந்தார்கள்..
..
ஜெயலலிதாவை இரும்பு பெண்மணியென ஒருவகை மாயபிம்பத்தை உருவாக்கியிருந்தார்கள் .. உண்மையில் மிகப்பெரிய கோழை ..தன் வழக்கை கூட தைரியத்தோடு எதிர்கொள்ள அஞ்சியவர் .. தீர்ப்பை விலைக்கு வாங்க நிறைய பேரம் பேசியும் உயர்நீதிமன்றத்தில் அப்பட்டமாக அத்துமீறியும் .. கடைசியில் அதை நினைத்து நினைத்து கவலைக்கொண்டவராகவே இருந்தார்.. தீர்ப்பிற்கு முன்பு எனக்கு நீரழிவு நோய் இருக்கிறது தண்டனையை குறைக்க சொன்னார்..
அவருடன் 40 ஆண்டுகள் வாழ்ந்த ராஜம்மாள் ஜெயலலிதா தன் வாழ்நாளில் அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளின் முடிவுகள் குறித்து மிகவும் அச்சம் உள்ளவராக வாழ்ந்தார். இதனால் அவர் நிம்மதியை இழந்து டென்ஷனுடன் தான் வாழ்ந்தார். அதன் காரணமாகவே அவர் சுகவீனமுற்றார். அவர் தனது தீர்ப்பு குறித்தும் அதன் பின்னர் சிறைவாசம் குறித்து மிகவும் அச்சம் அடைந்தார் என்கிறார்
உண்மையும் கூட சிறைவாசம் அவ்வளவு ரசகரமானதில்லை ஜெயலலிதா தன்னை தைரியமானவராக காட்டிக்கொண்டபோதும் தீர்ப்பு குறித்த பயம் அவரை பலவீனமடைய செய்தது தீர்ப்பு தனக்கு பாதகமாக வருமென்றே அஞ்சினார்.. கூடா நட்பு ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரது வாழ்வில் திசை திருப்பியிருக்கிறது.. சினிமா தொழில் இல்லறவாழ்வு என அவர் விரும்பியது ஏதுமே கிடைக்காமல் முரணான மனநிலையை ஏற்படுத்தியது. ஆணாதிக்கத்தின் மீதான வெறுப்பு அடிமைபடுத்திட தூண்டியது .. உறவின்முறை கூட தூய்மையாக இருந்ததில்லை என்று அவரே கூறியிருக்கிறார்
தூய்மையான நட்பை நான் வாழ்நாளில் சந்தித்தே இல்லை என்றார்.. கடைசியில் மர்மமான முறையில் யாருக்குமே விடைதெரியாத மரணமாய் போனது ..
..
சமூகத்திற்கு எதை செய்தோம் என்பதில்தான் இருக்கிறது ஒருவரின்
இறவாப்புகழும் இறவா பழியும் ..
...
ஆலஞ்சியார்
Sunday, December 2, 2018
கோ.சி.மணி அண்ணன்..
அண்ணன் மணி..
தஞ்சையை திமுகவின் கோட்டையாக்கிய கலைஞரின் போர்வாள்.. தஞ்சை பகுதியில்
பண்ணையார்களும் நிலக்கிழார்களும் (மிராசுதார்கள்) காங்கிரஸை தூக்கிப்பிடித்துக்கொண்டிருந்த காலத்தில் தஞ்சையை திமுகவின் பக்கம் கொண்டுவர அரும்பாடுபட்டவர்.. ஓய்வில்லாத உழைப்பிற்கு சொந்தக்காரர்.. ஒவ்வொரு கிளைக்கழகத்தை சேர்ந்தவர்களையும் பெயர் சொல்லி அழைக்கும் உரிமையோடு கடிந்துக்கொள்ளும்.. அதே போல் அவர்களையும் உரிமையோடு பேச சொல்லி ரசிக்கும் திமுகவின் மாபெரும் தலைவர்..
..
ஒருமுறை எங்கள் கிராமத்திற்கு வந்து கொடி ஏற்றுவதாக ஒத்துக்கொண்டார்.. நேரமாகிக்கொண்டே போகிறது மக்கள் சலசலக்க தொடங்கிவிட்டனர்.. அமுல்ராஜ்தான் கிளைக்கழக செயலர்.. கோபமாக திட்ட ஆரம்பித்துவிட்டார்.. அவர் திட்டிக்கொண்டிருக்கும் போதே ஜீப்பில் வந்திறங்கி அமுல் கோச்சிக்காதடா வரவழியில வண்டி பஞ்சர் அதான் லேட்டாயிடுச்சு என்றவுடன் தொண்டை கிழிய கத்துகிறார் அமுல்ராஜ்.. மாவீரன் கோ.சி.மணி வாழ்க..கூட்டம் ஆர்ப்பரிக்கிறது.. கோபத்தை மறந்து உணர்ச்சி மேலிட வானம் அதிர்கிறது கரவோசத்தால்.. எந்த வித கோவமும் கொள்ளாமல் அமுல்ராஜை அணைத்துக்கொண்டே பேசுகிறார்.. கட்சியின் அடிமட்ட தொண்டனையும் அறிந்து வைத்திருந்த மாவட்ட செயலாளர் அதனால் தான் கடைசிவரை ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடிந்தது..
..
கலைஞரின் அசைவு தெரிந்து படை திரட்டும் தஞ்சை தளபதி.. கும்பகோணத்தை ஜொலிக்க செய்த வைரம்.. சில துரோகிகள் கட்சியை சொந்த கொண்டாட சில மாவட்ட செயலர்களோடு வெளியேறிய போது தஞ்சையில் பொதுக்குழுவை கூட்டி கலைஞரின் பின்னால் கழகம் என உரைக்க சொல்லியவர்.. இவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பு.. மாவட்ட செயலாளர்கள் எப்படி செயல்படவேண்டும் என்பதற்கு இவர் அகராதி..Dictionary..
..
திரு.வைகோ திமுகவிலிருந்து நீக்கபட்டபோது திமுகவிற்கு உரிமைகோரினார்.. கலைஞர் பொதுக்குழுவை கூட்ட பாதுகாப்பான இடம் தேவையென பேராசிரியர் சொன்னபோது தஞ்சையில் கூட்டலாம் என்றார் கலைஞர் .. தஞ்சையில் பலத்த பாதுகாப்பிற்கிடையில் பொதுக்குழு செயற்குழு நடைபெற்றது .. அன்று மாலை பொதுகூட்டம் .. எப்படி நடக்கிறது பார்க்கலாமென சில விஷமிகள் .. செய்தி கலைஞர் காதுக்கு வருகிறது.. என்னய்யா உன்னை நம்பிதானே வந்தேன் இப்படி கலவரம் வரும் போலயிருக்கே என்ற போது .. இரு வரேன் என சொல்லிவிட்டு வெளியில் நின்று கொண்டிருந்த எங்களிடம் வண்டிய எடுறா. . என விரைந்து பொதுக்கூட்டம் நடக்கும் மானம்புசாவடிக்கு வந்தார் ..வேட்டியை மடிச்சுகட்டிக்கிட்டு யாருடா கலாட்டா பண்ண போறதா சொன்னது எவனா இருந்தாலும் வாங்கடா என்ற போது இருக்குமிடம் தெரியாமல் ஓடியொளிந்தனர் விஷமிகள்.. திரும்ப வந்து கலைஞரிடம் இப்ப போங்க ஒரு பிரச்சனையும் வராதென்றார்.. கலைஞருக்கு ஒன்றென்றால் துடித்துபோகிறவர் .. பொதுக்குழு கூட்டங்களில் கடைசியில் அமர்ந்திருப்பார்.. உறுப்பினர்கள் பல்வேறு கருத்துகளை சொல்வார்கள் கலைஞரின் கண்கள் மணியை தேடும் .. உடனே எழுந்து கலைஞர் பார்த்துக்கொள்வார் என்பார் கூட்டம் அமைதியாகும்.. அதனால் தான் மணி இறந்தபோது .. நீ இல்லாத தஞ்சையை நினைத்துபார்க்கலே என் குலைநடுங்குகிறதே என்றார்.. ஆம் அண்ணாவால் மேக்கரிமங்களத்து போக்கிரி என புகழபட்டவர் .. தஞ்சையின் விவசாயிகளின் பிரச்சனைகளை நுணுக்கமாக அறிந்தவர் .. ஒரு மாவட்ட செயலர் எப்படி பணியாற்றவேண்டுமென கோ.சி.மணியை கண்டு படிக்கவேண்டும்..
..
#தஞ்சையின்_மாவீரன்..
#மாவீரனுக்கு_மரணமில்லை..
..
ஆலஞ்சியார்
Saturday, December 1, 2018
தளபதி படை தரணி ஆளும்
திமுக கூட்டணியில் அங்கீகரிக்கப்பட்ட சின்னம் இல்லாத கட்சிகள், #உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வலியுறுத்துவோம். ஏற்பதும் மறுப்பதும் அவர்கள் விருப்பம்!..
பாமக தேமுதிகவை கூட்டணிக்கு அழைப்பது சுயமரியாதைக்கு இழுக்கு..
#திமுககொள்கைபரப்புச் செயலாளர்
மானமிகு ராசா
..
எப்போதுமே எதிராளிகளை கண்டு அஞ்சியதில்லை திமுக கொள்கை சார்ந்து பயணிக்கிற போது தேர்தல் மக்கள் பணி செய்ய அங்கீகாரம் என்பதில் தெளிவோடு செயல்படுகிற மக்களுக்கான இயக்கம் எப்போதெல்லாம் திமுகவை புறக்கணிக்கிறார்களோ அப்போதெல்லாம் பாதிப்பை மக்கள் உணருகிறார்கள் சிலர் திமுகவின் வெற்றியை தடுக்க அல்ல தடைபோட பெரும் முயற்சி எடுப்பதும் அதன் பலனை அவர்கள் அனுபவிப்பதும் காலம் உணர்த்தியிருக்கிறது .. சென்ற சட்டமன்ற தேர்தலில் தந்த காயம் இன்னும் ஆறியபாடில்லை ஆனால் சமூகநலன் கருதி இணைத்துக் கொள்ள தயார் ஆனால் வீம்பு பேசி திரிவதும் தான்தோன்றித்தனமாக தொகுதியை அவர்களே அறிவித்துக்கொள்வதையும் ஏற்க முடியாது .. தொல்.திருமா சிதம்பரத்தில் நிற்க போவதாக சொன்னது அவரது விருப்பம் ஆனால் திமுக கூட்டணியில் என்று சொன்னது அதிகபிரசிங்கித்தனம் அதனால் தான் பொருளாளர் துரைமுருகன் கூட்டணியெல்லாம் இல்லை என சொல்ல நேர்ந்தது .. அதேபோலதான் தன்னை சந்திக்கிறவர்களிடம் மதிமுக நான்கு இடங்களை கேட்குமென சொன்னதும் திமுக சாட்டை வீச வேண்டியிருந்தது .. முதலில் இவர்களின் பலமென்ன என்பதும் இப்போதைய சூழலில் இவர்களின் நிலை என்ன என்பதையும் உணரவேண்டும் ..
பாமக தேமுதிகவை யாருமே சட்டைசெய்வதில்லை பாலில் விழவேண்டிய பழம் .. சகதியில் விழுந்துகிடக்கிறது.. தகுதி தெரியாமல் ஆடியதால் காலுடைந்த நிலையில் பாமக.. அதிகம் பேசி முகமிழந்து நிற்பவர்களை .. திமுகவை தொடர்ந்து நையாண்டி செய்து அதன் மூலம் தங்களை நிலைநிறுத்தலாமென்கிறவர்களை நாம் சேர்க்க தேவையில்லை ..காலம் இவர்களை மறந்துவிடும்..
..
மக்களின் எதிர்பார்ப்பும் ஏக்கமும் திமுக ஆட்சி அமையாதா என்கிறவேளையில் உதிரிகளை பூமாலையாக்க வேண்டுமா என கேள்வி எழும் ..எதிரிகளை இருக்குமிடமே தெரியாமல் ஆழ புதைக்க உதவகூடும் என்பதாலேயே அனுசரிக்கவேண்டியிருக்கிறது ..ஆனால் அதற்காக அவர்கள் ஆடும் ஆட்டத்திற்கு இசைபாடவோ இசைபடவோ தேவையில்லை .. அதைவிட திமுக பலம் அதிகாரபூர்வமாக அதிகரிப்பது அவசியமும் கூட .. உதயசூரியன் உச்சத்தை தொட வேண்டி சில காய்நகர்த்தல்கள் அவசியமாகிறபோது அங்கரீக்கபடாத கட்சிகளை உயர்த்திபிடிக்காமல் திமுக சின்னத்தில் நிற்க சொல்வதில் தவறில்லை ..
அதைதான் திமுகவின் குரலாக மானமிகு ராசா சொல்லியிருக்கிறார்
..
தளபதியை வரவேற்க தமிழகம் தயாராகிக்கொண்டிருக்கிறது .. மக்கள் சொல்லண்ணாதுயரத்தில் கிடக்கிறார்கள் மத்தியில் ஆள்வோரும்.. மாநிலத்தை ஆள்வோர் மத்திய ஆள்வோரின் அடிமையாய் இருப்பதும் தமிழக நலனை திட்டமிட்டே புறக்கணித்து வஞ்சிக்கிறார்கள் .. இனியும் பொறுக்க முடியாதென்கிற நிலை .. தமிழகம் ஏக்கத்தோடு தளபதியின் வருகைக்காக காத்திருக்கிறது ..கடந்தகால தவறுகளிலிருந்து கற்றபாடம் இனி திமுகவை தவிர எந்தகட்சியாலும் பலனில்லை என்பதை உணர்ந்து நேர்மையும் நன்னெறியும் நிதானமும்
கொண்ட தலைவராய் திகழ்கிற தளபதியை அறியணை ஏற்ற தயாராகிறார்கள்..
..
தளபதிபடை தரணி ஆளும்
..
ஆலஞ்சியார்
Friday, November 30, 2018
அரசியல் அறிவின்மை
மக்கள் டிவியில் கல்வியாளர்களை வைத்து நிகழ்ச்சி மாணவர்களை ஒருங்கிணைந்து நடந்தது ..அதில் சுவாரஸ்மே ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்கபட்டு பதில் தருகிறார் அன்புமணி .. முதல்வராக தன்னை எண்ணிக்கொண்டு பதிலளிக்கிறாரென்று நினைக்கிறேன் தன்னை அறிவுஜீவியைப்போல காட்ட முனைந்து தோற்றுநிற்கிறார்..
செல்வி.ஜெயலலிதாவை நடிகை எந்த துறைசார்ந்த படிப்புமில்லை பன்னீர் டீக்கடை நடத்திவந்தவர் எடப்பாடி மணல் வியாபாரம் என்ற அளவிற்கு தாழ்த்துவதால் தன்னை அதிகம் படித்தவரென்று நினைக்கிறாரென்று கருதுகிறேன் ..ஊழலைப்பற்றி பேசுகிறார் உண்மையில் யாருமே அவர்மீது ஊழல் குற்றசாட்டு இருப்பதையோ வழக்கு நிலுவையில் உள்ளதையோ மறந்து போகிறார்கள்.. ஏரி குளம் பற்றியெல்லாம் பேசுகிறவர்கள் இவர்கள் கல்லூரியை பற்றி பேசவில்லை..
..
இத்தனைகாலம் ராமதாஸ் செய்த அரசியல் சாதிய வெறியை மட்டுமே நம்பி வட மாவட்டங்களில் வளர்ந்ததென்றாலும் காலம் கடைசியில் தூக்கியெறிந்து செல்லாகாசாக்கி நிறுத்தியிருப்பதை இன்னும் உணர்ந்தபாடில்லை .. இன்றைக்கு காடுவெட்டி குரு குடும்பமே நேரடியாக குற்றம் சாட்டி ராமதாஸால் தன் குடும்பத்திற்கு ஆபத்தென்று சொல்கிற நிலை சாதியை கையில் பிடித்து ஆடியது இது திரும்ப தாக்குகிறது பாமகவின் முகசாயல் இனி எத்தனைகாலமானாலும் மாற போவதில்லை என்பதை உணராமலேயே முதல்வராகிவிட்டதைப்போல அன்புமணி விவாதங்களில் பதிலளிப்பது வேடிக்கையாக இருக்கிறது .. இதை அவர் உணர இன்னும் காலமெடுக்கும்..
..
யாருக்குமே வேண்டாதவராக ராமதாஸ் தெரிகிறார் தனித்து செயல்படுவதாக சொல்லி மொத்தமும் காலியாகி யாராவது சேர்த்துகொள்ளமாட்டார்களா என நினைப்பது அப்பன் மகன் பேச்சில் தெரிகிறது முன்பைபோல பெரிதாக கண்டுக்கொள்ளபடவில்லை திமுகவிற்கு ஒரு எம்.பி.கூட இல்லையென நக்கலடித்தவர் தன் எம்.பி.தொகுதிக்குட்பட்ட பொன்னரகத்தில் தோற்கடிக்கபட்டார் .. மிக மோசமாக தோற்றுபோனார் .. தேர்தல் தோல்வி வரும் மாறும் ஆனால் அதை கூட புரிந்துக்கொள்ளாதவராக இருந்தவர்.. முதல்வர் லெவலுக்கு தன்னை கற்பனை செய்துகொள்வது நல்ல காமெடி .. தன்னை தவிர யாருக்குமே தகுதியில்லையாம் .. அதிகம் படித்தவராம் அனைத்துதுறையிலும் அறிவுள்ளவரென அவரே சொல்லிக்கொள்கிறார் ..பாவம் உள்ளுர் அரசியல் அறியாமல் ..தானென்ற அகந்தை கொன்றவர்கள் அரசியலில் முகமிழந்து கேட்பாரற்று லெட்டர்பேட்களாக வலம் வருவதை கண்டும் ஆசைவிடவில்லை ..
..
இன்றைய களநிலவரம் அறியாமல் திராவிடம் தோற்றுபோய்விட்டதாக புலம்புகிறார் முதலில் பாமக உதிரிக்கட்சி என்பதை அதுவும் சாதிகட்சி என்பதை.. அதிலும் அந்த சமுதாய மக்களாலேயே வெறுக்கபட்டவராக ராமதாஸ் வகையறா இருப்பதை உணரவே இல்லை .. தமிழகத்தில் சாதி மதம் பேசினால் கதைக்காது என்பதை உணராதவரை .. கற்பனை உலகில் சஞ்சரிக்கவேண்டியதுதான்.. அன்புமணி தன் சாதிய அடையாளத்தை துறக்காதவரை ..தமிழகத்தில் அவரால் காலூன்றவே முடியாது .. சாதிய நிலையை துறந்தால் யாரென்றே அறியபடமாட்டார் .. இதுதான் உண்மைநிலை.. தமிழக அரசியல் உண்மை நிலையை உணராதவராகவே இருப்பதிலேயே அவரது அரசியல் அறிவு தெரிகிறது ..
#சூன்யம்
..
ஆலஞ்சியார்
Thursday, November 29, 2018
தமிழகம் காத்திருக்கிறது
டெல்டா..
இன்னும் மீண்டபாடில்லை மழையும் இடையிடையே மக்களின் மீள விடாமல் அழுத்துகிறது அரசின் உதவியை கூட இடைதரகர்கள்(அரசு ஊழியர்) கவனிப்பிற்கு பிறகே என்ற இழிநிலை .. இத்தனை கொடூரமாய் இயற்கை சீற்றத்திற்கும் பிறகும் அரசின் மெத்தனம் ஆள்வோரின் லட்சணத்தை காட்டுகிறது.. இதைவிட மோசமாக பாதிக்கபட்ட கேரளாவில் விரைந்து அவர்களால் மீண்டு வர முடிந்ததே .. ஆட்சியாளன் மக்களின் நலனை சிந்திப்பவனாக இருந்தான்.. இங்கே மக்கள் வாய் திறக்கவே முடியவில்லை .. உள்ளூர் ஆளும்கட்சிகாரன் கேள்வி கேட்கிறான் வெற்றிபெற்றவனோ ..சும்மாவா ஓட்டுபோட்ட ₹1000 ₹2000 என்று வாங்கிட்டுதானே போட்டே என எதிர்கேள்வி கேட்கிறான்.. அரசு உதவியை கூட கமிஷனுக்கு பிறகே கிடைக்கிறது.. இந்த அவலநிலைக்கு ஒருவகையில் நாமும் காரணமானோம் ..
..
தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் சில இஸ்லாமிய அமைப்புகளும் திமுகவும் தன்னாலான உதவிகளை செய்த போதும் அது தற்காலிக தீர்வே தவிர நிரந்தர மீட்சிக்கு அரசாங்கத்தால் மட்டுமே தரமுடியும் அதை இந்த அரசிடம் எதிர்பார்க்கமுடியாது .. தமிழர்களின் எதிர்காலத்தை காவுகொடுக்கிற ஆட்சியாளர்களாய் நாம் விரும்பாதவர்களை நம்மை ஆள்கிற நிலையை தெரிந்தோ தெரியாமலோ நாமே ஏற்படுத்திக்கொண்டோம் ..மேகதாதுவில் அணையாகட்டும் மீத்தேன் எடுக்க அனுமதியாகட்டும்,ஸ்டர்லைட் ஆலை திறப்பு ஏன் நீட் ...தேர்வு..என எல்லாவற்றிலும் பழிவாங்கபடுகிறோம்..
தேர்வில் அரசுபள்ளி மாணவர்கள் சொற்ப எண்ணிக்கையில் 3700 பேர் தான் விண்ணப்பித்திருக்கிறார்கள் .. கலைஞர் பெருமகன் அரசு பள்ளி மாணவர்கள் பெருமளவில் மருத்துவராக வேண்டுமென்று நீட்டை கடைசிவரை வரவிடாமல் காத்தார்.. இந்த ஆர்எஸ்எஸ்காரன் மாஃபா கல்வி அமைச்சரானவுடன் ஏனென்றே கேட்காமல் கையெழுத்திட்டு தமிழக மாணவர்களின் எதிரிகாலத்தையே .. மருத்துவராக வேண்டுமென்ற நினைப்பில் மண் அள்ளிபோட்டுவிட்டார்.. இந்த ஆட்சியை தூக்கியெறிகிற வரை தமிழகம் இன்னும் பல சங்கடங்களை துயரங்களை சந்தித்து கொண்டேயிருப்போம்.. தமிழக நலன்கள் புறக்கணிக்கபடும் .. இவர்களை போல அடிமைகள் பாஜகவிற்கோ பார்பன பாசிச சக்திகளுக்கோ இனி எந்த காலத்திலும் கிடைக்காதென்று தெரிந்தும் தொடர்ந்து இந்த அரசை இயக்கிகொண்டிருப்பார்கள் ..
நமக்குவாய்த்த அடிமைகள் சிறந்தவர்களென கொண்டாடுவார்கள் .. தமிழுக்கும் தமிழர்களுக்கும் கேடுவிளைப்பதே தங்களின் பெரும்பணியாய் செயல்படும் பார்பனர்கள் எப்படியேனும் இந்த அடிமைகளை காக்கவே முயற்சிப்பார்கள்.. இடைத்தேர்தல் நடத்தவிடாமல் தொடர்ந்து ஏதேதோ காரணத்தை சொல்லி தள்ளிக்கொண்டே போகிறார்கள்..தமிழர்கள் எப்போதெல்லாம் தவறிழைக்கிறார்களோ அப்போதெல்லாம் தங்களின் நலனை மட்டுமல்ல அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தையும் சேர்த்தே பலிகொடுக்கிறார்கள்.. பணத்திற்கும் பொருளுக்கும் ஆசைபட்டு வாக்குகளை விற்கிற கேடுகெட்டத்தனத்தை விட்டாலொழிய தமிழகம் தலைநிமிராது..
..
இனியேனும் நல்லதொரு விடியலுக்காக நமக்காக உழைக்கிற நல்லவரை நம்பிக்கையானவரை இன காவலனாய் நிற்கிறவரை ஓயாது உழைக்கிற அரசியலில் நேர்மையை விரும்புகிற .. புறவழியே ஆட்சி தேவையில்லையென மக்கள் தேர்வில் வரவேண்டுமென விரும்புகிற மக்களின் தளபதியை தேர்வு செய்வோம் ..
திமுகவால் மட்டுமே தமிழகம் தலைநிமர செய்யமுடியும் ..
..
ஆலஞ்சியார்
..
Wednesday, November 28, 2018
அம்பாள் எந்த காலத்திலடா பேசினாள் அறிவுக்கெட்டவனே..
65 ஆண்டுகள் கழித்தும் கலைஞர் பெருமகனின் எழுத்து பாசிசத்தை அலறவிடுகிறதென்றால் எத்தனை கூர்மையான வாளாய் அறுத்திருக்கும் ..
மீண்டுமொருமுறை சொல்லி பாருங்கள் அம்பாள் எந்தகாலத்திலடா.. பேசினாள்
பொதுவாக நம்மவர்கள் அம்மன் என்றுதான் அழைப்பார்கள்
ஆளாளுக்கொரு அம்மனை கொண்டுவந்து குலவழிபாட்டின் தொடர்ச்சியாய் நிற்பான் .. ஆனால் பார்பனர்கள் தான் அம்பாள் ஆண்டாளென கடவுளைகூட உயர்சாதியாக பார்பார்கள் .. அதை கூட நுணுக்கமாக எழுத்தில் கொண்டுவந்திருப்பார் .. சட்டென்று புரியாது இதெல்லாம் இன்றைக்கு மதம் பேசி திரிகிறவர்களுக்கு நாம் தான் விளக்க வேண்டியிருக்கிறது ..
கோவிலில் குழப்பம் விளைவித்தேன் கோவில் கூடாதென்பதற்காக அல்ல அது கொடியவரின் கூடாரமாய் ஆகிவிட கூடாதே என்பதற்காக..
பூசாரியை தாக்கினேன் பக்தி வேண்டாமென்பதற்காக அல்ல பக்தி பகல்வேஷமாய் மாறிவிட கூடாதே என்பதற்காக.. அந்த கொடியவரின் கூடாரமாய் ஆகிவிட கூடாதென்பதற்காக தான் .. பார்பனர்கள் பிடியில் இருந்த கோவில் சொத்துகள் அறநிலையத்துறையின் கீழ் வந்ததற்கு காரணம்..
..
கலைஞர் பராசக்தியில் படத்தில் பிச்சைகாரர்கள் நலவாரியமென்பார் .. ஆட்சிக்கு வந்ததும் செய்துகாட்டியவர் .. திரைபடங்களில் சொல்லபடுகிற முற்போக்கான விடயங்களை தன் ஆட்சிகாலத்தில் அதை சட்டவடிவமாக்கியவர் .. அழகு தமிழை அறிமுகபடுத்தி.. தமிழனின் ரசனையை அறிவின்பால் கொண்டுவந்தவர் அவரது வசனத்தை மனபாடம் செய்தான் தமிழன் .. அதை அலசி ஆராய தொடங்கினான் இவ்வளவு விசயமா இதில் என வியந்தான் .. சமஸ்கிருதம் கலந்த தமிழை வீழ்த்தி தேன்தமிழை தமிழர்கள் நாவில் கொண்டுவந்து பேசவைத்தவர் கலைஞர் .. சுவாமி நாதா என்ற அடிமைத்தனத்தை பேசிகொண்டிருந்ததை மாற்றி குணசேகரன் என பெண்ணை அழைக்கவைத்து பெண்ணுரிமை பேச வைத்தவர் .. அவரின் முற்போக்கு, சமஉரிமை சமூகநீதி பேசும் எழுத்துக்களை இத்தனை காலம் கடந்தும் பாசிசவாதிகள் கண்டு அஞ்சுகிறார்களென்றால் கலைஞரின் எழுத்து எந்தளவு கதறவிட்டிருக்கிறது....
..
கலைஞரின் எழுத்தில் குறைகளே காண முடியாது காலம் கடந்தும் பேசும்.. தொலைநோக்கு சிந்தனையை பகுத்தறிவை தான் கொண்ட கொள்கையை யாருமே சட்டென்று தெரிந்துகொள்ளாதவகையில் ஏற்றியிருப்பார் .. மந்திரிகுமாரியில் அண்ணா நீங்கள் தான் தளபதி என வசனம் வரும்.. ஒருமுறை பழம்பெரும் இயக்குனர் கிருஷ்ணன் பஞ்சு தன் நினைவுகளை இப்படி பகிர்ந்துகொண்டார் .. அண்ணாவின் வசனத்தில் கூட நீளம் கருதி சில வசனங்களை நீக்கிவிட்டு படத்தை திரையிட்டுவிட முடியும் கலைஞர் வசனத்தில் ஒரு வார்த்தை வெட்டிவிட்டால் கூட அந்த காட்சியின் பொருளே மாறிவிடும்.. திரைக்கதை போக்கையே மாற்றிவிடும் என்றார் .. கூர்மையான நுணுக்கமான விடயங்களை பேசும் அவரது எழுத்தும் பேச்சும்.. அவரது எழுத்து நூற்றாண்டு பின்னிட்டாலும் பேசபடும் கதறவிடும்
..
#கலைஞர்
..
ஆலஞ்சியார்
Sunday, November 25, 2018
என்னுடன் மோத முடியாதவர்கள் என்தாயை பழிக்கின்றனர்.. மோடி..
என்ன சொல்ல வருகிறார் தான் வகிக்கும் பதவியின் தரம் மறந்து தேர்தல் நெருங்குகிற போதெல்லாம் இதுபோன்று மட்டரகமான கருத்தை தெரிவித்து மக்களிடம் இரக்கத்தை பெற்றிடலாமென எண்ணுகிறார்.. இதுவரை யாரும் அவரின் தாயை மோசமாக பேசவில்லை தாயின் வயதோடு டாலர் விலையேற்றத்தை ஒப்பிட்டு பேசியதை ஏற்கமுடியாதுதான் மோடியின் தந்தையைப் பற்றி யாருக்காவது தெரியுமா என்ற கேள்வி கூட அவ்வளவு ரசகரமில்லைதான் .. ராகுலின் தந்தையை நாடறியும் என்பதற்காக சொல்லபட்ட சொல்லாடலாக கருதவேண்டும் .. தனிநபர் விமர்சனமென்பது சமீபத்திய அரசியலில் அதிகம் காணபடுவதும் கவலைக்குரியதுதான் .. காமராஜரை அண்டங்காக்கா என ராஜகோபாலச்சாரி சொல்லியது ஏனோ நினைவுக்கு வருகிறது ..
ஆனால் அதைவிட மிக மட்டரகமாக சோனியாவை விமர்சித்தவர்கள் தான் இவர்கள் ஏன்.. இவர்தான் தனிநபர் தாக்கு தொடர்ந்து செய்துவருகிறார்.. இளம்தலைவர் ராகுலை நாடாளுமன்றத்திலேயே பப்பு என பகடி செய்தவர் எப்போதெல்லாம் சறுக்கல் வருகிறதோ அப்போதெல்லாம் மலிவான அரசியலை கையிலெடுப்பவர்..
..
நாடு இன்றைய நிலையில் மிக மோசமான காலகட்டத்தில் கடந்து செல்கிறது அயோத்தியில் சிவசேனாவும் விஸ்வ இந்து பரிஷத்தும் தேவையில்லாத பதட்டத்தை ஏற்படுத்துகிறது அங்கு வாழும் முஸ்லிம்கள் .. ஏதேனும் அசம்பாவிதம் நடக்குமோ என அஞ்சி முதியவர் குழந்தைகளென குடும்பத்தோடு இடம்பெயர்கிறார்களென செய்திகள் வருகிறது சாமியாரின் கையில் அதிகாரமிருப்பதால் நிலவரம் அச்சம் கொள்ளவைப்பதாக சில நடுநிலை ஊடகங்கள் கவலை கொள்கின்றன இதையெல்லாம் கவனித்தில் கொள்ளாது திசைதிருப்பும் செயலை பிரதமரே செய்கிறார் என்பது கவலைதரும் விடயம்,..
..
அரசியலில் மதத்தை சாதியை தனிநபர் விருப்பத்தை காழ்ப்புணர்வை .. ஒருவித பயத்தை ஏற்படுத்தியவர்கள்.மக்களின் ஒற்றுமையை சிதைப்பதைவிட வேறொரு கெடுதல் இநத நாட்டிற்கு செய்யவேண்டியதில்லை .. மதவெறி அரசியலை கையிலெடுத்து ஒருவித பதட்டத்தோடு நாட்டை வைத்திருப்பவர்கள் இங்கே நியாயம் பேசுவதுதான் கொடுமை .. மதகலவரத்தில்.. சாதி மோதலில் இந்தியா உலக அரங்கில் முன்னணி வகிப்பது இவரின் வரவிற்கு பிறகுதான் உடனே மதவெறி மோதல்கள் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் குறைந்திருக்கிறதே எனலாம் கலவரம் செய்பவர்கள் கையில் நாடு இருக்கும் போது இதெல்லாம் நடக்காது .. ஆனால் மிரட்டல் பச்சைபடுகொலை அத்துமீறல் அடாவடித்தனம் ஜனநாயகபடுகொலை .. எல்லாம் நடக்கும் யாரும் ஏனென்று கேட்க கூடாது முடியாது மீறினால் ஊடகங்கள் மீது ரெய்ட் நடக்கும் ஊடகவியலாளர்கள் சமூகநீதி பேசுவோர் முற்போக்காளர்கள் கொலை செய்யபடுவார்கள்
இதையெல்லாம் மக்களின் எழுச்சியின் தான் சரிசெய்ய முடியும்,.....
..
திரு.மன்மோகன் சிங் சொன்னதைப்போல இந்த ஆட்சி தொடருமேயானால் இந்தியாவின் முகம் உலகளவில் வெறுக்கபடுகிற நிலை உருவாகும் பொருளாதாரம் வீழ்ந்து எழ முடியாதவாறு போகும் .. மதமும் சாதியும் பிற்போக்குத்தனமும் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாகவே இருக்கும்
..
பாசிசபாஜகவை தூக்கியெறிவோம்
..
ஆலஞ்சியார்
Friday, November 23, 2018
சபரிமலை யுத்தகளமாக இருக்கிறது ..
கோவையை சிங்கபூராக மாற்றிக்காட்டுவோம்.. பொன்னர்..
இதற்குமுன்பு தமிழகம் வந்த மோடியை எதிர்க்கட்சிகள் வரவிடாமல் துரத்தி மனதை நோகடித்துவிட்டனர் ..அதனால் தான் கஜா புயல் சேதத்தை பார்க்க வரவில்லை கிருஷ்ணசாமி ..
..
கஜாபுயலால் பாதிக்கப்பட்ட மக்கள் மனநோயாளி ஆகிவிட்டனர் ..அமைச்சர் ஓ.எஸ்.மணியன்..
நான் ஒரே தொகுதியில் ஒன்பதுமுறை சட்டமன்ற உறுப்பினர்.. பழநிசாமி..
..
உண்மையில் இவர்கள் பைத்தியகாரர்களா அல்லது கிறுக்குத்தனமா நடிக்கிறார்களா ..பாஜகவோடு சேர்ந்த பிறகு பொய்யும் பித்தலாட்டமும் கிறுக்குத்தனமும் இவர்களோடும் சேர்ந்துவிட்டதா..
..
கோவையை சிங்கபூராக மாற்றாமல் விடாமல் ஓயமாட்டோம் என்று ஏசி அறையில் காலி சேர்களோடு கூட்டம் போடுகிறவர்கள் சொல்கிறார்கள் கோவையையும் குமரியையும் கலவரபூமியாக மாற்ற நீண்டநாட்களாக முயற்சிப்பதும் அது நடக்காமல் போவதும் இவர்களின் பேச்சில் தெரிகிறது .. குமரியில் பொன்னருக்கு ஆதரவாக கேரள போலீஸ் தடுத்து நிறுத்தியதற்காக.. இங்கே பந்த் .. யாருமே சட்டைசெய்யவில்லை ..
தேசபக்தர்கள் யாருமே ஏன்யா மலைக்கு போனே டெல்டாவே இயற்கையின் கோரபிடியில் சிக்கி சீரழிந்து உறைவிடமின்றி தெருக்களில் மக்கள் நிற்கிறார்களே அதை கவனிக்காம அங்கே என்ன ..வேலைன்னு கேட்கல.. அதுவும்சரிதான் அங்கபோனா தமிழிசையை விரட்டியபோல இவருக்கும் நடந்திருக்கும் தமிழக மக்கள் மோடியையே விரட்டியவர்கள்..
..
வேதாரண்ய மக்கள் அமைச்சரென்று பாராது விரட்டி விரட்டி வெளுத்ததும் .. சுவரேறி குதித்து ஓடியவர் .. புயலால் மக்கள் மனநலம் பாதிக்கபட்டிருப்பதாக சொல்வதிலிருந்தே மனநல பாதிப்பு யாருக்கு ஏற்பட்டிருக்கிறதென்று புரிகிறது .. சசிகலாவின் வீட்டுவேலையை கூட செய்து கொடுத்து ( வீட்டுலநடக்கிற தேவை திருநாளில் ஆன வாளிய தூக்கிட்டு திரிஞ்சவர்: தினகரன்) சட்டமன்ற உறுப்பினராகி சசிகலா சிறைக்கு போனதும் இன்றைக்கு வீரவசனம் பேசி திரிகிறவர் .. வாக்களித்த மக்கள் ஏண்டா வரலா என கேட்டால் பைத்தியமென்பாராம் .. இனி எக்காலத்திலும் தொகுதி பக்கமே போக முடியாதவாறு மக்கள் செய்துவிட்டார்கள் ..
ஆறுமுறை நின்று நான்கு முறை மட்டுமே வென்றவர் .. மறந்து மாறி பேசுவதில் வியப்பொன்றுமில்லை .. சேக்கிழாரின் ராமயணத்தை ஏற்றுக் கொண்ட நாம் இதையும் ஏற்போம் ..ஜெயலலிதா நான்கு முறை முதல்வரானவர் ஆறுமுறை என்ற போதும் அதை ஊடகங்கள் ஊளையிட்ட போதும் வியந்து பார்த்தவர்தாமே நாம் .. பொய்களை சொல்பவனையோ.. அதை திரும்ப திரும்ப பறைபவனையோ நாம் ஏன் என்று கேட்காதவரை பொய்களால் மட்டுமே நாம் சூழபடுவோம்.. எஸ் ஆர் எம் கல்லூரியில் பெண் லெப்டில் பாலியல் தொல்லைக்குள்ளாகிறார் ..எந்த ஊடகமும் வாய்திறக்கவில்லை .. தமிழக அரசு கூட தலையிடாது எம்ஜிஆர் ஆட்சிக்கு முன்பு வரை யாரென்றெ தெரியாத பச்சைமுத்து இந்தியாவின் மிகப்பெரிய கல்வி கொள்ளையர் எப்படி வளர்ந்தது என... எத்தனை நீர்நிலைகள் ஆக்கரமித்து பகல் கொள்ளையாய் கல்வி கூவி விற்படுவது தெரிந்தும் நாம் கேட்பதில்லை ..அரசோ எந்த தனியார் நிர்வாகமோ எதை செய்தாலும் நாம் பாதிக்காதவரை மௌனமாய் இருந்தே பழகிவிட்டோம் ..நாம் பொன்னரின் மதவெறியையோ அறிவுகெட்ட செயலையோ ..
தமிழக அமைச்சர்களின் கிறுக்குதனத்தையோ நாம் கேள்வி கேட்க மாட்டோம்.. ஆனால் திமுககாரன் குசுவிட்டால் கூட ஒலிபெருக்கியை வைத்து சத்தம் போடுவோம் ..
..
எப்போதெல்லாம் திமுகவை வேண்டாமென்று வைக்கிறோமோ அப்போதெல்லாம் நாட்டை பின்னோக்கி இழுத்துச் செல்கிறோம்.. இனியும் காசிற்கு ஆசைபட்டு இதே தவறை செய்தால் கேட்க ஆளின்றி தெருவில் வீசபடுவோம் ..
இனி திமுக ஒன்றே அறிவுடை சமுதாயத்தை நல்ல முன்னேற்றம் கொண்ட நாட்டை நல்லதொரு விடியலை தரமுடியும் ..
..
ஆலஞ்சியார்
Thursday, November 22, 2018
தமிழ் நாட்டில் ஒரு மயான சூழல் ஏற்பட்டுளள நிலையில்.. எட்டு மாவட்டத்தில் மக்கள் எல்லாவற்றையும் இழந்து அடுத்த வேளைக்கு கையேந்துகிற பரிதாபகரமான நிற்கிறார்கள் உணவு, உடை , உறைவிடமின்றி கண்ணீரோடு நிற்கிறார்கள் இந்த நிலையிலும் சபரிமலைக்கு சென்று அரசியல் நடத்தி வருகிறார் கேடுகெட்ட மத்திய அமைச்சர்..
இந்திய ஒன்றிய அரசின் ஒரே தமிழக பிரதிநிதி
பொன்னா் சபரிமலையில் ..
சபரிமலை ஐயப்பன் கோயில் நம்பிக்கை குறித்தும் தங்கள் உரிமைகளை மீட்டெடுக்க போராடுவதும் குறித்து எந்த பிரச்சனையும் இங்கு எழவில்லை.. ஆனால் தமிழ் நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் பொறுப்புள்ள ஒரு மத்திய அமைச்சர் தனது பொறுப்பில் இருந்து முற்றிலும் வெளியே வந்து அரசியல் செய்வதை எப்படி ஏற்றுக்கொள்வது..
அதுவும் விரதமிருந்து தாடியோடு பக்திமேலிட சரணம் அய்யப்பா என்று செல்லவில்லை.. மழுமழுவென சவரம் செய்த முகத்தோடு சபரிமலைக்கு சுற்றுலா சென்றவரைபோல சென்றிருக்கிறார் ..
..
தன் மாநிலத்தின் மக்கள் .. கொடுத்தே பழக்கபட்ட டெல்டா சீரழிந்து கிடக்கிறது ..அடியோடு பிடிங்கியெறியபட்ட தென்னைகள் .. விரைந்து பலன் தருமெண்டுமென்று ஆசைகாட்டி ஐந்தாண்டில் பலனென்று சொல்லி தந்தவைகள் வலுவிழந்து பிடிங்கியெறிபட்டுகிடக்கிறது நவீன விவசாயம் இந்த மண்ணை அழித்து நிற்கிறது.. மக்கள் இருக்கமிடமின்றி குடிக்க தண்ணீரின்றி கலங்கி நிற்கிற வேளையில் அய்யப்பனை வைத்து அரசியல் செய்கிறார்.. மகா கேவலம் ..
..
அரசியலை கடந்து திமுக அனைத்து மாவட்ட நிர்வாகமும் நிவாரணப் பொருட்களை கோடிக்கணக்கில் வாரி வழங்கியிருக்கிறது .. அரசு மெத்தனமாய் செயல்பட்டாலும் அதை விரைந்து செயல்பட ஊக்கியாய் தமிழக கட்சிகள் செயல்பட வேண்டிய சூழலில் மத்திய அரசின் நிவாரணத்தை விரைந்து பெற்றிட அமைச்சராய் பெரும் பணி காத்திருக்கிற வேளையில் சுற்றுலா செல்வதைப்போல தன் ஆதரவாளர்களோடு பம்பையில் காவல் அதிகாரியோடு வம்பிற்கு நின்று கடைசியில் அசிங்கபட்டு மலையேறியதை நாடு பார்த்து சிரித்தது .. மதம் தலைக்கேறியவர்கள் அய்யப்பனின் சாபமென்றும் கோபமென்றும் கதைகட்டிவிடுகிறார்கள்.. பொன்னர் அவமானபட்டது கூட சபரிமலையானின் வேலைதானோ..
..
கேரளம் போல் எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படவில்லையென எடப்பாடி சொல்கிறார்.. கேரள அரசு இதுபோன்ற பேரிடர் காலங்களில் எதிர்க்கட்சிகளை கலந்தாலோசித்து நடவடிக்கை மேற்கொண்டது .. இன்றைய தேதியில் திமுக சில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்க்கட்சிகளின் பணி பாராட்டுக்குரியதாக இருக்கிறது .. திமுக மருத்துவஅணியின் பணி கட்சிபேதமின்றி பாராட்டுகிறார்கள் .. ஆளும்கட்சி மற்றும் அரசு இயந்திரம் மெத்தனமாய் செயல்பட்டாலும் அதற்கு போதிய நிதி ஆதாரத்தை மத்தியில் ஆளும் பாசிச அரசு தரவில்லையென்றும் சொல்படுகிறது .. இந்த நேரத்தில் மத்திய அமைச்சர் களப்பணி செய்யாமல் சபரிமலையில் ஓய்வெடுப்பது அவர் விரும்பும் சபரிமலை அய்யப்பனுக்கு கூட பிடிக்காது ..
எதில் எந்த நேரத்தில் அரசியல் செய்யவேண்டுமென்று தெரியாதவராய்.. நாகர்கோவில்காரர் ..
..
திமுக தலைவர் திரு.ஸ்டாலின் ஒவ்வொரு நொடியிலும் மக்களைப் பற்றி அக்கறை கொண்டவராக தன்னாலான எல்லா உதவிகளையும் செய்கிறார் பாதிக்கபட்ட மக்களை தரைமார்க்கமாக சென்று நேரில் சந்திந்து ஆறுதல் சொல்லி உதவிகளை செய்கிறார்.. எந்த விமர்சனத்தையும் பற்றி கவலைபடாமல் மக்கள்பணியில் தன்னை இணைத்துகொண்டு தன் கட்சியினரையும் ஈடுபடுத்தி மக்களின் காவலனாய் உயர்ந்துநிற்கிறார் தளபதி
..
ஆலஞ்சியார்
Tuesday, November 20, 2018
மதமேறிய..விஷங்கள்
இந்து மதத்தின் ஆச்சாராம் மற்றும் கலாச்சாரத்தை மதிக்காமல் நடப்பது தான் கஜா மற்றும் கேரளா வெள்ளத்தால் ஏற்பட்ட பெரிய பாதிப்பிற்கு காரணமாக அமைந்தது என்றும் நாடு முழுவதும் கலாச்சார சீரழிவு மற்றும் ஐயப்பன் கோயில் சபரிமலை தீர்ப்பு இது விவகாரங்கள் தான் இது போன்ற துயரங்கள் நடைபெற காரணமாக அமைந்தது. இன்னும் இதுபோன்ற நிகழ்வுகள் தொடரும் என்கிறார்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஜியர் ..
..
மத நம்பிக்கை என்பது வேறு..அது அவரவர் சார்ந்த சமூகத்தின் மீதான அடிப்படையை கொண்டு ஒருவித ஈர்ப்பை ..பக்தியை மெய்ஞானத்தை அது பொய்யெனினும் அதில் நிலைபெற செய்து .. அவனை சிந்திக்கவோ ஆய்ந்தறியவோ அதிலிருந்து வெளியேறவோ
விடாமல் அழுத்தி வைத்திருந்தாலும் அன்பை சகிப்புதன்மையை நிதானத்தை போதித்தது ..ஆனால் மத பெரியவர்கள் என சொல்லிக் கொண்டோர் .. தங்களின் நிலைநிறுப்பை காத்துக்கொள்ள ஒருவித பயத்தை மக்களிடையே விதைத்து .. மூடவழக்கத்தை பரப்பி பிழைத்து வந்தனர்/ வருகின்றனர்.. இதுபோன்று மூடநம்பிக்கையை வளர்ப்பது மதத்தை வைத்து பிழைப்பு நடத்துவோர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள் .. இது எல்லா மதத்திலும் நடப்பதுதான் வேடிக்கை ..
அறிவுடை சமூகம் என்று சொல்லிக்கொள்கிற கூட்டம் இதில் சட்டென்று விழுந்துவிடுவதுதான் வேடிக்கை..
..
இப்படி பேசுகிறவர்களை கூர்ந்து கவனியுங்கள் களவாணிகளாக இருப்பார்கள் காமகொடூரர்களாக பெண்பித்தனாய்.. பொய்யர்களாய் இருப்பார்கள் பாரமனை சிந்திக்க விடாமல் செய்வதிலும் .. தன்னை நம்புகிறவனை.. மதமென்ற பெயரில் மூளைச்சலவை செய்து
எதிர்கருத்தை சொல்கிறவர்களிடம் மூர்க்கத்தனமாக நடக்க வைப்பதில் வல்லவர்கள்.. அவர்களை பொம்மைகளாக்கி
தங்களை சுற்றியே சக்கரமாக சுழலவைப்பதில் வல்லவர்கள்.. இயற்கை சீற்றத்தை மதத்தோடு ஒப்பிட்டு மக்களை மடையர்களாக்க முனைவது ஏற்புடையதல்ல.. இயற்கையின் கோபம் .. மாற்றம் மனிதனின் அத்துமீறல்களால் வருகிறதென்கிற யதார்த்தத்தை உணர மறுக்கிற நாம் .. இதுபோன்ற மதமேறிய விஷங்களை நம்புகிறோம்..
..
இறைவனின் கோபம் என்பதை விடுத்து .. இயற்கையின் சீற்றமென உணர தொடங்கினாலே.. மதம் பேசி திரியும் மூடர்கள்
வாயடைத்து போவர்..
தீதும் நன்றும் பிறர்தரவாரா..
..
ஆலஞ்சியார்
Thursday, November 8, 2018
பகல்கொள்ளை
திரைப்படங்கள் எதோ நல்லவிடயத்தை சொல்வதைப்போலவும் ...அதில் பங்குபெரும் கலைஞர்கள் தேவதூதனைப்போலவும் இங்கே ஒருவித நாற்றமெடுத்த நம்பிக்கை விதைக்கபடுகிறது .. கருப்பு பணம் அதிகம் புழங்கும் இடமும் கணக்கில் காட்டாத அல்லது மறைக்கிற செயலும் மற்ற துறைகளை விட திரைத்துறையில் அதிகம் ..
எவ்வளவு செலவு செய்தார்களென கணக்குமில்லை நடிகர்களுக்கு மறறும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு எவ்வளவென்று சரியான கணக்கை சமர்பித்ததில்லை .. கேளிக்கை வரியை சரியாக செலுத்தாத துறையும் கூட.. டிக்கட்டில் அச்சிட்ட தொகைக்கு மட்டுமே வரி செலுத்தபடுகிறது ₹100 டிக்கட் ₹2000 வரை விற்கபடுகிறதென்ற செய்திகள் வரும் போதும் வரி என்னவோ ₹100க்கு மட்டும் தான் .. ஆனால் இவர்கள் புனிதர்களைப்போல வேஷம் கட்டுகிறார்கள்..
நாட்டை தூய்மைபடுத்த வந்த தேவதூதனைப்போல அவதாரம் எடுக்கிறார்கள்..
..
புராணம் கால படங்கள் .. சரித்திரத்தை பேசிய படங்கள் தொட்டு திராவிட இயக்க கொள்கைகளை பேசிய படங்கள் ..சாதிய பெருமை பேசிய படங்களென எல்லாவற்றிலுமே கதாநாயகனை உத்தமபுத்திரனாய் சித்தரித்து ஒருவித மாய வலைப்பின்னி .. நிழலை நிஜமென நம்பவைத்த மூளைச்சலவைகள் நடந்துக்கொண்டுதானியிருக்கிறது .. திரைப்படத்தை அரங்குலேயே விட்டுவிட்டு மீண்டு வெளிவருகிற மனோநிலை நமக்குள் ஏற்படாத வரை நடிகர்கள் தங்களை ராஜாவாக எண்ணுவதை தடுத்திட முடியாது ..
அதிக வரிஏய்ப்பு செய்கிறவன் ஊழலைப்பற்றி வாய்கிழிய வசனம் பேசுவான் .. ஆஹா இதோ நல்லவன் ஒருவன் நம்மிடையே வந்துவிட்டான் பார் என நாமும் மெய்மறந்து கைத்தட்டி ரசிப்போம் அதையும் வாழ்வின் உண்மையென நம்புவோம் .. திரைக்குள் இருந்து நம்மால் வெளிவர முடியாமல் சமுதாயத்தையே சீரழிப்போம்,..
..
இலவசங்களை ஒழிப்போமென சொல்கிறவர்கள் வரிச்சலுகைக்காக தமிழில் வலுகட்டாயமாக பெயர்வைத்த கதையெல்லாம் நாடறியும் .. கதை திருட்டை செய்கிற அடுத்தவன் அறிவை தனதென்று சொல்கிறவன் மகாயோக்கியனைப்போல நம்மை நம்ப சொல்வதுதான் வேடிக்கை .. கோமளவள்ளி என பெயர் வைத்து மறைந்த முதல்வர் ஜெயாவை விமர்சிக்கும் முயற்சி அவர் இருந்த போது எங்கே போனது .. அவரின் அரசியல் நிலைபாட்டின் மீது நமக்கு விமர்சனமிருக்கலாம் ஆனால் அதை அந்தந்த நேரத்தில் அல்லது எப்போதெல்லாம் நம்மை வழிகேடாக நிறுத்துகிறதோ அப்போதெல்லாம் பேசலாம் .. ஆனால் அதற்கு அரசியலை கையிலெடுக்க வேன்டும் ..ஒரு திரைப்படத்தில் விமர்சிப்பதென்பது அதுவும் இலவச திட்டங்கள் மக்களுக்கு பயன்தரதக்கதாக இருப்பின் அது எப்படி தவறென்று சொல்லமுடியும் வாக்களிக்க பணம் கொடுப்பதை விமர்சிக்கலாம் ஆனால் வறியவர்களுக்கான நலத்திட்டங்களை ஒப்பிடுவதென்து ஏற்கமுடியாதது ..கோடிக்கணக்கில் பணத்தை கடனாக பெற்று கார்ப்பரேட் முதலாளிகள் நாடுகடந்ததை விமர்சிக்காமல் கடந்து போவது கூட ஒருவகை அநீதிதான் .. மக்கள் நலத்திட்டங்களால் பயன்பெற்றோரை கேவலபடுத்துவதை போல இருக்கிறது ..
..
தியேட்டர்களில் பகல்கொள்ளையடிப்பதை ஏன் யாரும் கேள்வி கேட்பதில்லை குறிப்பிட்ட அளவிற்கு மேல் டிக்கட் விலை வசூல் செய்ய அனுமதிக்க கூடாது ..பலநூறு கோடிக்கணக்கில் முதலீடு செய்வதை தவிர்த்து சில கோடிகளுக்குள் நல்ல படத்தை தந்தால் வெற்றிபெற முடியும் .. தியேட்டர்களில் அதிக வசூல் செய்வதை அரசு தடைபோட வேண்டும்,..
இரண்டே நாளில் ₹100 வசூல் என்பதெல்லாம் பகிரங்கமான கொள்ளை ..
..
வரிஏய்ப்பு .. தியேட்டர் வசூலில் பித்தலாட்டம்
நடிகரின் சம்பளத்தில் கருப்புபணம் இவையெல்லாம் சினிமாவின் அங்கமாகிவிட்டபிறகு .. திரையில் மகாயோக்கியனாக அவதாரமெடுப்பதை சகிக்கவில்லை ..
#அரிதாரம் ..
..
ஆலஞ்சியார்
Tuesday, November 6, 2018
கருநாடகம் சொல்லும் சேதி
கர்நாடகம் சொல்லும் சேதி..
ஒருங்கிணைந்தால் பாசிசத்தை விரட்டலாம் பாஜக என்ற பார்பன நலனுக்கான அரசை வீழ்த்துவது அவ்வளவொன்றும் கடினமில்லை தொடர்ந்து எதிர்க்கட்சிகளை பிரித்து அதில் குளிர்காய்கிற செயலை ஆர்எஸ்எஸ் திட்டமிட்டு செய்கிறது நோக்கம் பாஜக என்ற ஆர்எஸ்எஸின் அரசியல் கட்சியை ஆட்சியில் வைத்திருந்தால்தான் ஐம்பதாண்டுகளுக்கு முன்பிருந்த சூழலுக்கு கொண்டு போகலாம் ..
1960 களின் இறுதிவரை இரயில்வேத்துறையில் அய்யங்கார்களே அதிகமிருந்தார்கள் ஆனால் இன்றைய நிலை எல்லாரும் பணி செய்ய வாய்ப்பை வேலை உறுதியை தொடர்ந்து படிபடியாக காங்கிரஸ் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகினும் செய்தது ..இது ஒரு உதாரணம் தான் இப்போது கல்வியில் கை வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள் நீட் என்று புதிய வடிவத்தை கையில் தூக்கி சாமானியனுக்கு உயர்க்கல்வி கிடைக்காமல் செய்யவேண்டும் ..
வசதி உள்ளவனுக்கே இங்கே கல்வி வேலைவாய்ப்பை ஏற்படுத்த மற்றவர்களெல்லாம் பக்கோடா விற்று பிழைத்துக் கொள்ள அரசே சொல்லும் ..
..
உண்மையில் எதிர்க்கட்சிகள் தற்சார்ப்போடே அணுகுகின்றன கர்நாடகாவில் காங்கிரஸும் மதசார்ப்பற்ற ஜனதாதளமும் பலமான கட்சிகள் ஆனால் சில மாநிலங்களில் காங்கிரஸ் இருக்குமிடமே தெரியாமல் இருக்கிறது தமிழகத்தின் நிலை வேறு .. வெறும் லெட்டர்பேட் கட்சி அளவிற்கு சுருங்கிவிட்டது இங்கே நிறைய கட்சிகள் சாதியை மதத்தை சொல்லி பிரிக்கிற செயலை மிக கச்சிதமாக செய்யும் .. உதிரிகள் ஆனால் பூமாலையாக தொடுக்க முடியாது காரணம் குறிப்பிட்ட பகுதிகளில் சில ஆயிரங்களை பெறும் அதுவும் வெகுசொற்பமான வாக்குவங்கியை வைத்துக்கொண்டு அகில இந்தியளவில் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் சமூகத்தின் மீதான அக்கறையில்லாத சுயசார்ப்புடையவர்கள் ..
..
ஊடகங்கள் இப்போதே திமுகவிற்கு 25 என ஆருடம் சொல்கிறது காங்கிரஸிக்கு ஒற்றை இலக்கமே அதிகமென செய்திவெளியிடுகிறது .. பிற உதிரிகட்சிகள் ஆளுக்கொன்றென பேரம் நடத்துவதாக மிக முக்கிய ஊடகங்கள் செய்தி வெளியிடுகிறது உண்மையில் திமுக அதிமுக தவிர்த்து பிற கட்சிகளின் செல்வாக்கு ஒரிரு விழுக்காடு கூட இல்லை என்பதுதான் உண்மை காங்கிரஸ் வாக்கு வங்கியெல்லாம் ஜாதி அமைப்பிற்கும் மத சமுதாய அமைப்பிலும் சேர்ந்துவிட்டது ஆனாலும் சிறியதொரு ஆதரவையும் அரவணைத்து செல்லவேண்டும் ஆனால் அதிகளவு இடங்களில் திமுக நிற்கவேண்டியது கட்டாயம் ..
..
பிற மாநிலங்களில் ஆந்திராவில் சந்திரபாபும் மேற்குவங்கத்தில் மம்தாவும் உ.பி.யில் அகிலேஷ் மாயவதி என கூட்டு சேர்ந்தால் பாஜகவிற்கு மரண அடி தரலாம் அதை நோக்கிதான் ராகுலின் நகர்வு இருப்பதாக அனுமானிக்கிறேன் .. பிரதமர் வேட்பாளர் மீதான பார்வையை அவர் மாற்றி வைத்திருக்கிறார் நாட்டு நலன் மக்கள் படும் அவதி நாட்டை சுரண்டு கார்ப்பரேட் கும்பல்.. வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சி மதத்கை தவிர வேறெதும்,தெரியாத பாஜகவிடம் நாட்டை தந்ததால் மாட்டுக்கு கிடைக்கிற மருத்துவம் பச்சிங்குழந்தைக்கு கிடைக்க மறுக்கிற அவலம் .. பொய்யையும் போட்டோ சாப்பையும் காட்டி பெருமை பேசி திரிகிற கூட்டத்தை விரட்டவேண்டியது அவசியம் .. மேக்இன் இந்தியா என்று சொல்லி சீனாவிடம் சிலை செய்கிற கும்பலிடம் போட்டோவிற்கு போஸ் காட்டி நிற்கிற தலைமையிடம் நாடு சிக்கி சீரழிவதை தடுத்து .. அறிவுடையோரிடம் ஆக்கபூர்வமான செயல்பாட்டாளர்களிடம் மனிதனை தேசத்தை நேசிக்கிறவரிடம் ஆட்சியை தருவோம்,..
ஒருங்கிணைவோம் ..
..
ஆலஞ்சியார்
Sunday, November 4, 2018
நவீன போராளிகள்
Indeed, we have to save the country. I am saying that we have to save it from Modi, Naidu and Congress," Owaisi said..
(All India Majlis-e Ittihad al-Muslimin)
( "உண்மையில் நாட்டை காப்பாற்ற வேண்டும், மோடி, நாயுடு மற்றும் காங்கிரஸில் இருந்து அதை காப்பாற்ற வேண்டும் என்று நான் சொல்கிறேன்," என்று ஒவாசி கூறினார்..)
..
பிஜேபியை ஜெயிக்க வைக்க பெரும் முயற்சி எடுப்பவர்.. உவைசி கடந்த சட்டமன்ற தேர்தலில்
உ.பி.யில் இருபதுக்கு மேற்பட்ட இடத்தில் ஓட்டை பிரித்து பாஜக வெற்றிக்கு வழி வகுத்தவர் ..கர்நாடகாவிலும் 14 இடங்களில் காங்கிரஸ் வெற்றியை தடுத்தவர் .. வடமாநிலங்களில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இவரின் கட்சி போட்டியிடும் .. அங்கெல்லாம் பாஜக வெற்றியை எளிதாக பெறும் .. உ.பியில் 21 இடத்தில் இருபதாயிரம் வரை வாக்குகளை பெற்றது இவரது கட்சி அங்கெல்லாம் பாஜக 10 முதல் 15 ஆயிரத்திற்கு குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது கர்நாடகாவில் இவரது கட்சி வாக்கை பிரிக்க சொற்ப எண்ணிக்கையில் முவாயிரம் நாலாயிரம் என வித்தியாசத்தில் பாஜக வெற்றிப்பெற்றது ..இவரது நோக்கம் இஸ்லாமியர்களுக்கு அவர்களின் மேம்பாட்டிற்காக உழைப்பதாக இல்லை மாறாக வாக்குகளை சிதறவைக்கிற செயலாகவே இருக்கிறது ..
..
ஆரிய சூழ்ச்சி அறியாமல் இஸ்லாமிய இயக்கங்கள் தொடர்ந்து சமூகநீதி பேசுகிற கட்சிகளை தோற்கடிக்க பெரும்பாடுபடுகின்றன எங்களுக்கான அங்கீகாரத்தை தரவில்லை என்ற குற்றசாட்டை முன்வைத்து திமுக உள்ளிட்ட பிற மாநில கட்சிகளை வீழ்த்த நினைக்கிறார்கள் உரிமைகள் மறுக்கபடுவதாக கூறும் குற்றசாட்டில் நியாயம் உண்டென்றாலும் அதற்கான காலம் கனியும் போது தரபட்டிருக்கிறதென்பதையும் இந்திய சமூகத்தில் சிறுபான்மையினரின் பாதுகாப்பு உட்பட பல விடயங்களில் குரல் கொடுத்திருக்கிறார்கள் .. சில வேண்டதகாத செயல்களை இளைஞர்களை கொண்டு நடத்தி வழக்கு சிறையென்று வந்த பிறகு கைகழுவிய நிலையில் இஸ்லாமிய இயக்கங்கள் நழுவிவிட.. குற்றசாட்டை மாநில கட்சிகளிடத்தில் குறிப்பாக பெரிய கட்சிகளின் துரோகமென நகர்ந்து கொள்கிறார்கள் ஒற்றுமையோடு சந்திக்க வேண்டிய விடயங்களில் கூட தனித்தனி ஆவர்த்தனம் செய்து அதை நீர்த்துப்போக செய்வதில் முன்னணி இயக்கங்கள் பெரும்பங்காற்றுகிறது ..
..
யார் எதிரி என்பதையோ எப்படி வீழ்த்தவேண்டுமென்பதிலோ அக்கறையின்றி சுயநலத்தோடு செயல்படுவதால் பலன் பாசிசத்திற்கென்ற உண்மையை விளங்காமல் இருக்கிறார்கள்.. இதில் இஸ்லாமிய இயக்கங்கள் முன்னிலை வகிக்கின்றன.. உவைசி ஆர்எஸ்எஸ் சிலீப்பர் செல் போலதான் செயல்படுகிறார் தமிழகத்தில் பிஜே செயல்பட்டதைப்போல.. எங்கே எப்போது எந்த ஆயுதத்தை எடுக்கவேண்டுமென தெரிந்தவன் மட்டுமல்ல எப்போது எடுக்க கூடாதென அறிந்தவன் தான் சிறந்த போராளி ..
மக்கள் கடமையாற்ற தகுதியானவன் ..
..
முட்டாள்கள் இருக்கும் வரை பாசிசம் துள்ளதான் செய்யும் .. மதம் பேசினாலே மதியிழந்துதான் போவர் .. ஒற்றுமையெனும் கயிறை இங்கே தன் சமுதாயத்தின் கழுத்தில் இட்டு இறுக்குகிறார்கள் நவீன சமுதாய பிணிகள்.. இன்றைய காலத்தின் கட்டாயத்தை உணராத பேச்சாகவே உவைசியின் பேச்சு அமைந்திருக்கிறது ..
..
ஆலஞ்சியார்
Thursday, November 1, 2018
மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு
திமுகவின் வெற்றி பெரியார் உருவாக்கிக் கொடுத்த அஸ்திவாரத்தில் உருவானது..
திரு.துரைமுருகன்..
..
ஆம்
திமுக என்பது வெறும் கட்சியல்ல.. அது இயக்கம் moment திராவிட இயக்கத்தின் கொள்கைகள் சமூகநீதியில் பயணிக்கும் ஏற்றதாழ்வற்ற சமுதாயத்தை .. சமத்துவத்தை நடப்பிலாக்க தொடர்ந்து பயணிக்கும் பாடுபடும்
ஆரிய வரவிற்கு பிறகு தமிழர்களின் மீதான கலாச்சார பண்பாட்டு தாக்குதலை சரியாக இனங்கண்டு அதை முறியடிக்க பெரியாரெனும்
பேரரக்கன் நமக்கு கிட்டினார்.. இந்த சமூகத்தை மாற்றியமைக்க மறுமலர்ச்சியை கொண்டுவர
நம் இனத்தின் சுவடுகளை உணர்ந்து சிதைக்கபட்ட கலாச்சாரத்தை மீட்டெடுக்க..
அடிமைபட்டுகிடந்த இந்த மானிட சமூகத்தை உணர்வூட்டி மறுமலர்ச்சி ஏற்படுத்திய புரட்சியாளர் பெரியார் பெரியாரின் அடிச்சுவட்டையொட்டியே நமது சித்தாந்தம் செயல்பாடு இயக்கம் எல்லாம் இருக்கும்
..
தேர்தல் அரசியல் அதிகாரத்திற்கு நாம் வரவேண்டுமென்பதற்காக .. நம்மை ஒரு பொருட்டாகவே மதிக்காத பார்பனர்களை அதிகாரத்திலிருந்து இறக்கவேண்டும் என்பதற்காக நமக்கான உரிமையை நாமே உருவாக்கவேண்டும் நமது தேவைக்களுக்காக யாரையோ எதிர்பார்த்து கிடப்பதை விட நாமே நமக்கான சூழலை உருவாக்கிட அதிகாரம் நமக்கு தேவைபட்டது.. அதிகாரம் நமக்கு கிட்டியதால் தான் தமிழ்நாடென்று பெயர் மாற்றம் செய்தோம் ..
இடஒதுக்கீடு முதல் கல்வி வேலைவாய்ப்பில் நம்மவர்கள் பெருமளவில் முன்னேற வழிவகை செய்தோம் ஒடுக்கபட்ட பிற்படுத்தபட்டவர்களின் வாழ்வில் வளமேற்ற பணிபுரிய முடிந்தது இன்றைக்கு இந்தியாவிற்கே வழிகாட்டியாக தமிழகத்தை 40 ஆண்டுகளுக்கு முன்பே நம்மால் தொலைநோக்கோடு வடிவமைத்து நடத்திகாட்ட முடிந்தது.. இதற்கெல்லாம் பெரியார் தந்த பகுத்தறிவுபாதையே காரணம்
இன்றைக்கு மிடுக்கோடு மானத்தோடு கம்பீரமாக தமிழர்கள் வலம்வர பெரியாரின் பாதையில் மாறாமல் பயணித்த பெருமகன்கள் அறிஞர் அண்ணாவும் பேரருளாளன் கலைஞருமே காரணம்..
..
பெரியாரிய சிந்தனையிலிருந்து மாறி பயணித்தால் அது தமிழ் சமூகத்திற்கு கேடாகவே முடியும் .. சிறிய பின்னடைவு ஏற்பட்டதற்கே பெரிய விலை கொடுக்கவேண்டியிருந்தது .. திராவிட சிந்தாந்த்தை மாறி கடக்க நினைத்தவர்கள் வீழ்ந்து போனாலும் அவர்கள் ஏற்படுத்திய பள்ளங்களை சரி செய்ய நீண்ட காலம் தேவைபடும்.. சிறியதொரு பின்னடைவே ..ஆரியர்களுக்கு போதும் நம்மை எழ விடாமல் செய்திட.. எங்கோ இடறியது அறியாமல் போனதால் நாம் அடிமைகளிடமும் மானங்கெட்டவர்களிடமும் அதிகாரத்தை தந்துவிட்டு இன்று அவமானபடுகிறோம்..
பெரியாரை பின்தொடராமல்.. பெரியார் வகுத்த பாதையில் பயணிக்காமல்
தமிழர்க்கு விடிவில்லை முன்னேற்றமில்லை
திமுக சரியான பாதையில் பயணிக்கிறது
மகிழ்ச்சி
..
மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு
..
ஆலஞ்சியார்
Wednesday, October 31, 2018
குரளாசான்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்...
..
எல்லோரும் சமமென்கிற உயர் தத்துவத்தை உலகுக்கு சொன்ன ஏற்றதாழ்வுகள் பிறப்பில் இல்லை என்ற பொது நெறியை நமக்கு தந்த குரளாசான் வள்ளுவனே.. ஒற்றுமைக்கு எடுத்துகாட்டு ..
திராவிடப் பெருவுடையார் கலைஞர் சிந்தனையில் உதித்து தமிழர்களின் கட்டிட கலையோடு கூடிய அழகிய வேலைபாடுகளும் சிலையை உயிர்த்தன்மையோடு செதுக்கி வானூயர முக்கடல் சங்கமிக்கும் குமரியில் நிறுத்தியிருக்கிறார்.. இந்தியாவின் ஒற்றுமையை உலகுக்கு சொல்லும் உயிர்சிலை.. குமரியென்றாலே காவி சிந்தனையாளர் விவேகானந்தர் நினைவிற்கு வருவதை மாற்றி .. குறள் தந்த பேராசான் வள்ளுவனின் சிலையை நிறுவி தமிழர் கலை இலக்கியத்தை உலகுக்கு உணர்த்தியவர் பேரருளாளன் கலைஞர் அவர்கள்..
..
மக்களை வர்ணம் கொண்டு பிரித்து தாழ்ந்தவன் உயர்ந்தவன் என பாகுபாட்டை களையாமல் இந்திய ஒற்றுமையின் தத்துவத்தையே காவுவாங்கும் கயமைத்தனத்தை .. சாதிய நிலைபாட்டை வேரறுக்காமல் சமமான நீதியை தரமால் இந்தியாவில் ஒற்றுமை என்பதே கேலிகூத்தாகதான் இருக்கும்.. இந்தியாவை ஒருங்கிணைக்க அதிகாரம் இருந்தால் போதும் மக்களை ஒருங்கிணைக்க உயர் சிந்தனையையும் சமூகநீதியும் சமமான செயல்பாடும் ..யாரும் யாருக்குமில்லை அடிமையென்ற எண்ணமும் வேண்டும்..
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்குமென்ற என்ற உயர்நோக்கு கொண்ட எங்கள் இன பேராசான்
வள்ளுவனின் சிலை ..ஒற்றுமையின் சிலை
..
ஒற்றுமை என்பதே அனைவரும் சமமென்பதிலே.. எல்லோருக்கும் எல்லா உரிமைகளும் தரப்பட வேண்டுமென்பதில் ஏற்றதாழ்வற்ற சமுதாயம் படைத்திட வேண்டுமென்பதில் .. சாதி மத பேதமற்ற சமூகசூழலை உருவாக்கினாலே மக்கள் மனங்களில் ஒற்றுமை ஓங்கும்.. மக்களை பிரித்து குள்ளநரித்தனம் செய்து அடுத்தவனின் உரிமையை பறித்து.. கீழே உள்ளவனின் கல்வி வேலைவாய்ப்பை தட்டிபறித்து ஒரு குறிப்பிட்ட இனத்திற்கே வழங்குவதில் இல்லை ..
சமத்துவமும் மனிதநேயமும் கொண்ட விடுதலையே ஒற்றுமைக்கான திறவுக்கோல்
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Posts (Atom)