Sunday, December 16, 2018

மோடி..

#SadistPM.. மாண்பிமை பிரதமரை சாடிஸ்ட் என சொல்லலாமா என சில குடுமிகள் கதறுகின்றன திமுக தலைவர் இந்திய பிரதமர் மோடியை #சாடிஸ்ட் என்று சொல்லிவிட்டதில் நடுநிலை என்ற பெயரில் நடமாடும் பார்ப்பனர்கள்.. எல்லோரும் அதிர்ச்சியடைந்து விட்டார்களாம்..! அவர் அவ்வாறு சொன்னதில் என்ன தவறு கண்டு விட்டார்கள் காவிகள்..? ஏன் அலறுகிறார்கள்.... இந்திய ஊடகங்கள் வேறு இதை தலைப்பு செய்தியாக்கி கதறவிட்டிருக்கிறது .. Fascist Nazist .. .. மோடி குஜராத் கலவரத்திற்கு பிறகு ஆர்எஸ்எஸ் அவரை முன்னிருத்த தொடங்கியது மிகப்பெரிய பொய் பிம்பத்தை கொண்டு photoshop போட்டோஷாப் குஜராத் உலகமே வியக்கிற நிலையில் முன்னேற்றி விட்டதாக சொல்லி மாய தோற்றத்தை உருவாக்கியது .. அதற்கு தகுந்தாற்போல் 2ஜி யை பூதாகாரமாக்கி காங்கிரஸை வீழ்த்தியது .. காலம்கடந்துதான் 2ஜி யே மாபெரும் பொய்யென்று மக்கள் உணர தொடங்கினர் .. மோடி குஜராத் கலவரத்தில் நடந்துகொண்ட விதம் குறித்து அப்போதைய பிரதமர் வாஜ்பாய் "அரசதர்மத்தோடு" நடந்துக்கொள்ளுங்கள் என்றார் குஜராத் மதக்கலவரத்தில் கொல்லப்பட்ட இஸ்லாமியர்களைப் பார்த்து கார் டயரில் அடிப்பட்ட நாய்குட்டிகள் என்ற போதே சாடிஸ்ட் என்று ஊடகங்கள் அழைத்திருக்கவேண்டாமா .. தமிழகத்திற்கு தொடர்ந்து கேடுவிளைவிக்கும் செயலை செய்வதை எப்படி எடுத்துக்கொள்வது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டுமென போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நிகழ்ந்தும் கவலைக்கொள்ளாத மனிதரை எப்படி அழைப்பது கஜா புயலில் டெல்டா மாவட்டத்தையே புரட்டி போட்டும் இதுவரை பிரதமர் வந்து பார்க்கவே இல்லையே ..நடிகையின் திருமண வரவேற்பிற்கு செல்ல நேரம் ஒதுக்கமுடிகிறது கண்ணீரோடு வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மக்களை காண வர முடியவிலிலை .. .. ஒற்றை இரவில் தான்தோன்றித்தனமாக பணமதிப்பிழப்பு செய்து ஒட்டுமொத்த நாட்டுமக்களையும் நடுவீதியில் நிற்க வைத்து ரசித்ததை எப்படி ஏற்பது கறுப்புபணத்தை மீட்பதாக சொல்லி .. கறுப்புபண முதலைகளை தங்கள் பணத்தை வெள்ளையாக்க உதவியதை தவிர அதேனும் பலனுண்டா.. கால்கடுக்க வங்கி வாசலில் நிற்கிறார்களே என்ற போது எல்லையில் ராணுவ வீரன் நிற்கவில்லையா என எகத்தாளம் பேசியது எதில் சேரும் .. .. காவிரியின் கடைமடையை பாலைவனமாக்க ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு இந்த தலையாட்டிகளை கொண்டு அனுமதியளித்தும் தமிழக மாணவர்கள் மருத்துவத்தில் கோலோச்சுவதை கண்டு பொறாமைகொண்டு நீட் டை கொண்டுவந்து ஏழை மற்றும் கிராமபுற மாணவர்களில் கனவை சிதைத்ததும் எப்படி பார்பது.? சமையல் எரிவாயுவை ₹1000 கொண்டு போய்விட்டீர்களே இது தான் அரச லட்சணமா 60 ஆண்டுகள் காங்கிரஸ் ஆண்டது 60 மாதம் தாருங்களென சொல்லி .. 100 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்து சென்றது யார் .. மாட்டை விட மனித உயிர் கேவலமாக எண்ணிய ஆட்சியாளரை கொடுங்கோலன் என்று தானே அழைக்க வேண்டும் .. விற்பனைக்காக கொண்டு சென்ற மாட்டை அறுக்க கொண்டு சென்றதாக அடித்தே கொன்றவர்களை "பசு காவலர்" என புகழ்ந்த ஆட்சி உலகில் எங்குமே இல்லை .. .. மோடியை ஆளுமை என்றவர்கள் கூட அவர் வந்தால் நவீன இந்தியா செதுக்கபடுமென்றவர்கள் கூட காரி உமிழ்கிறார்களே.. முற்போக்காளர்கள் எதிர்கருத்தை சொல்பவர்கள் எழுத்தாளர்கள் கொலை செய்யபடுகிறார்களே எதிர்த்தால் மூச்சிருக்காதென்று மிரட்டிகிற ஆட்சியை எப்படி அழைப்பது ..அதைவிட கொடுமை கொலையை நியாபடுத்தி கொலையாளிகள் பாதுகாக்கபடுகிறார்கள் .. நீதிமன்றம் குற்றவாளியென்று அறிவித்த பின்பும் அரசின் முதன்மை அமைச்சர்கள் சென்று பார்த்து எப்படி தீர்ப்பை வளைத்தொடிக்கலாமென திட்டம் தீட்டியதை .. நீதி மன்றத்தில் அரசின் தலையீட்டை உச்சநீதிமன்ற நீதிபதிகளே வெளியே வந்த சொன்னதை கௌரவமாக பார்ப்பதை நல்லாட்சி என்றா அழைக்க முடியும் .. .. அரசின் எல்லா திட்டங்களிலும் மக்களுக்கானதாக இல்லை மாறாக கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப நோக்கம் மட்டுமே பிரதானமாக முன்வைக்கப் பட்டுள்ளது.. சிறுதொழில்கள் கிராமப் பொருளாதாரம் முற்றிலுமாக முடங்கிப் போயுள்ளது.. திருப்பூர் போன்ற தொழில் நகரங்கள் முதலாளியாய் வலம் வந்தவர்கள் ..கூலித்தொழிலாளியாய் நிற்கிற நிலைக்கு காரணம் இந்த மோடிதானே .. மக்களுக்கு எது வேண்டுமோ அதை கொடுக்காமல் கார்ப்பரேட்டுகளுக்கு எது தேவையோ அதை உடனே எந்தவித இடைஞ்சலுமின்றி கிடைக்கிற ஆட்சி பாசிச ஆட்சிதானே .. வங்கிகளில் குறைந்தபட்ச இருப்பு இல்லாவிட்டால் பிடித்தம் என்ற பெயரில் புதியதொரு "கொள்ளை" நடத்துவது ஏன் ஏழைகளை கொள்ளையடிக்கபடுகிறார்கள் டிஜிட்டல் இந்தியா என்ற பெயரில் .. அரசை எதிர்ப்போரை ..அரசின் திடிடத்தை செயலை எதிர்ப்போர் ஆபத்தான ரசாயண தொழில்சாலைகளை எதிர்ப்போரை தேசிய பாதுகாப்பு சட்டத்தை அடைப்பதை எப்படி அழைப்பது .. .. மதவெறியை சாதி வன்மத்தை வளர்த்து இந்திய இறையாண்மை கேள்விக்குறியாக்கபடுகிறதே பன்முகதன்மை கொண்ட இந்தியாவை ஒரே மொழி ஒரே கலாச்சாரம் ஒரு வழி என திணிக்க நினைப்பதை அது மக்களிடையே செல்லாது என அறிந்தும் திணிக்க முயல்கிற செயலை எப்படி அழைப்பது .. .. சாதிவெறியர்களுக்கும் மதவெறியர்களுக்கும் கொள்ளையடிப்பவனுக்கும் நாட்டை இந்து நாடாக மாற்ற வேண்டுமென்பவருக்கும் மோடி நல்லவராய் வல்லநராய் தெரியலாம் .. ஆனால் நாட்டுமக்களை பொறுத்தவரை.. இந்த நாட்டை நேசிக்கிற சாமானியர்கள். பன்முக கலாச்சாரத்தை நேசிக்கவர்கள் நாடு நன்றாக இருக்க வேண்டுமென எண்ணுகிறவர்கள் .. சாதிமதவேற்றுமையின்றி வாழ ஆசைபடுகிறவர்கள் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகிற இளைஞர்கள்.. சுருக்கமாக சொன்னால் பாசிசவாதிகள் பார்பனர்கள் சாதிமத வெறியர்களை தவிர எல்லோருமே வெறுக்கிறவராக மோடி தெரிகிறார் .. காரணம் பாசிசத்தின் நிழலில் நின்று ஆட்சி செய்கிறார் .. .. மோடி இந்திய அரசியல் வரலாற்றில் மிக மோசமான அத்தியாயம் .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment