Friday, December 7, 2018
வைகோ
சூப்பர்ஸ்டாரென்று பாராமல் ரஜினி தலித்தாக நடித்தார் வன்னியரசு..
காசு கொடுத்தால் யாராக வேண்டுமானாலும் நடிப்பார் .. அது அவரது தொழில் நடிப்பார் என்பதுதான் அதிலுள்ள உண்மை ..
வன்னியரசின் சமீபத்திய பேச்சுகள் elite தலித் பேச்சாக இருக்கிறது அவரை பொறுத்தவரை தங்கள் நிலைநிறுப்பிற்கானதாக எடுத்துக்கொள்ளலாம் வைகோவுடனான முரண் .. திராவிடம் தலித்களுக்கு என்ன செய்து என்ற கேள்விகள் அவரது அறியாமையை காட்டுகிறது .. தமிழகத்தில் திராவிட இயக்கங்களின் வரவிற்கு பிறகு மிடுக்காக வலம்வர முடிந்ததென்பதை உணரவேண்டும் இந்த வார்த்தை பிரயோகம்
வருத்தத்தை தருகிறது ..ஆனாலும் தொடர்ந்து பட்டியலினத்தவர்களே திராவிடம் என்ன செய்ததென கேட்கும் போது பேச வேண்டியிருக்கிறது .. இன்றைக்கும் வடமாநிலங்களில் தலித்களின் நிலையை நாம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம் .. இடஒதுக்கீடு இருக்கிறது சலுகைகள் இருக்கிறது ஆனாலும் ஒடுக்கபடுகிறார்களே ஏன் அப்படியெனில் இடஒதுக்கீட்டால் மட்டுமே அவர்களின் உரிமைகள் மீட்டெடுக்கபடவில்லை
இடஒதுக்கீடு கிடைத்தும் 30 ஆண்டுகள் எந்த முன்னேற்றத்தையும் உணரவில்லையே .. திராவிடம் ஆட்சிக்கு வந்த பிறகுதானே பெருமளவில் மாற்றம் வந்தது.. தலித்களின் உரிமைகளில் கை வைக்காமல் பார்த்துக்கொண்டது அவர்கள் மீதான தாக்குதல் நடத்தும் போதெல்லாம் அரணாக காத்திருக்கிறது ..
..
வைகோ தனது வீட்டிலும் தலித்கள் வேலை செய்தார்களென சொன்னதை அவர் தலித்களுக்கு எதிரானவராக மாற்ற முயற்சிக்கிறார்.. அவர் அதை யதார்த்தமாக சொன்னது .. எனது வீட்டில் கூட என்றது ஆதிக்க திமிரிலோ ஆண்ட திமிரிலோ வந்ததாக எண்ணவில்லை அவரின் அரசியல் நிலைபாட்டில் நிறைய கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும் அவர் சாதிகளுக்கெதிரானவர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை .. விசிகவை சேர்ந்த இரண்டாம் நிலை தலைவர்கள் தொடர்ந்து திராவிட சித்தாந்தத்திற்கெதிரே பேசி வருகிறார்கள் .. திரு.ரவிகுமார் வன்னியரசு போன்றவர்கள் ..தேர்தல் அரசியலில் எல்லா கட்சிகளுமே வெற்றியை இலக்காக்கியே பயணிக்கும் அந்தந்த காலகட்டத்தில் யாருடன் பயணித்தால் வெற்றியை எளிதாக்க முடியுமென கணக்கிடுவது இயல்பு அப்படி சிலநேரங்களில் விசிக புறக்கணித்து தேர்தலை சந்தித்திருப்பார்கள் ஆனால் அதற்காக பட்டியலின மக்களுக்கெதிரானவர்களென்ற மாயதோற்றத்தை உருவாக்குவது மடமை ..எம்ஜிஆர் காலத்தில் தலித் இன வாக்குகள் பெருவாரியாக அதிமுகவிற்கே சென்றது ஆனால் திமுக அப்போதும் கூட பட்டியலின மக்களுக்காகவே உழைத்தது ..
..
தஞ்சை மாவட்டத்தில் பௌணர்மி நாட்களில் தலித்மக்களை கட்டிவைத்து அடிக்க முடியாமல் செய்தது கலைஞர் ஆட்சிக்கு பிறகுதான் என்பதை அறிவாரா.. திமுகவை வெற்றிபெற வைத்தால் பள்ளுபறையெல்லாம் சமமாக வந்து உட்காருவானென வெளிப்படையாகவே ஊர் கூட்டங்களில் பேசிய காலமெல்லாம் உண்டு .. கும்பிடுறேன் சாமி என்ற நிலையை மாற்றியது யார் .. ஆதிதிராவிடர்களுக்கென்று தனித்துறையை உருவாக்கியது திராவிடம் .. தலித் மாணவர்களுக்கு விடுதி .. அவர்களுக்கு கல்வி செலவை குறைத்தது பின் இலவசமாக்கியது உயர்கல்வியில் முழுவதுமாக பயணடைகிறார்களா என கண்டறிந்து .. மீதமுள்ளதை பொது பிரிவிற்கு மாற்றுவதை தடுத்தது .. சொல்லிக்கொண்டே போகலாம்..
..
திரு வைகோ அவர்களின் பதிலுரை அவரின் மதிப்பை குலைக்க செய்யும் நான் பயங்கரமானவன் என்ற வார்த்தை அழகல்ல.. நான் நெருப்பு தூர நின்றால் குளிரிகாயலாம் அருகில் வந்தால் சாம்பலாகலாம் என்பதெல்லாம் இதுவரை இவர் பயணித்த அரசியல் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கும் ..எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவயபடும் பழைய தவறை மீண்டும் செய்வது அவர் இன்னும் முதிரவில்லை என்பதையே காட்டுவதாய் அமைகிறது ..
..
விசிகவும் மதிமுகவும் தமிழக அரசியலில் தவிர்க்கமுடியாதவையாக மாற வேண்டுமெனில் நிறைய கற்க வேண்டியிருக்கிறது அதீ மோகம் தவிர்ந்து தன்னிலை உணர்ந்து .. தங்களின் பலமறிந்து சிலநேரம்,நாவடக்கி செல்லும் தூரத்தை /இலக்கை உணர்ந்து பயணிக்க வேண்டும் இல்லையெனில் தமிழக அரசியலில் தங்களுக்குரிய அங்கீகாரத்தை இழந்துநிற்க வேண்டிவரும்,..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment