Tuesday, December 11, 2018
அச்சா தீன் ..கனிமொழி
பிரதமரால் அடிக்கடி உச்சரிக்கபட்ட "அச்சா தீன்" நல்ல நாள் இது .. என்ற கனிமொழியின் ட்வீட் கலைஞரை ஞாபகபடுத்தியது ..
..
ஆம்
உண்மையில் கொண்டாடபட வேண்டிய தினம் தான் .. அதிகார போதையில் மக்களின் ஒற்றுமையை சிதைத்து .. தான்தோன்றித்தனமாக ஆட்சி நடத்தி மக்களின் உணர்வுகளை மதிக்காமல் மதவெறியை முன்னெடுத்து .. இந்த நாட்டையே நாலரை ஆண்டுகளாக நாசம் செய்த பாஜக ..
ஒரே இரவில் மக்களின் கையிருப்பை செல்லாதாக்கி .. வலுத்தவனின் பணம் கருப்புபணம் சேமிப்பாய் வங்கிக்கே வந்ததும் ..செலவிற்கு சேர்த்துவைத்ததை எடுக்கவிடாமல் டிஜிட்டல் இந்தியாவில் தெருவில் விடியவிடிய நிற்க வைத்து கோமாளிகள் கிறுக்கன்கள் ரசிகனை வைத்து புதிய இந்தியா பிறந்ததென சொல்லவைத்து இதோ கறுப்புபணத்தை மீட்டுவிட்டேனென புகழ்பாடி.. மக்கள் கதறுவதை ரசித்த கூட்டம் இது .. மாட்டிற்காக மனிதனை அடித்துக் கொள்ளும் கொலைகாரர்களை பசுகாவலர்களென புகழ்ந்து .. தலித்களை நிர்வாணமாய் ஓடவிட்டு ..சின்னஞ்சிறு மலர்களை வன்புணர்வு செய்து அதை நியாயபடுத்தி .. ஜெய்ஹிந்த் சொன்னால் காமகொடூரனும் தேசபக்தனாகலாமென்று நியாயபடுத்தி.. அய்யகோ ..நான்கரை ஆண்டில் நாட்டை நாசபடுத்தி.. எதாவது சொன்னால் பாஜகவின் வீழ்ச்சியை பாகிஸ்தான் ரசிக்கிறதென சப்பைகட்டி.. நாட்டின் பொருளாதாரத்தை சிதைத்து..குறுப்பிட்ட வர்க்கத்திற்கே எல்லா சலுகைகளும் கிடைக்க வழிசெய்து .. இந்தியா கண்ட ஆட்சிகளிலேயே மிக மோசமான "நவீன துக்ளக்" ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கும் மோடி மற்றும் ஆர்எஸ்எஸ்க்கு மக்கள் சரியான பாடத்தை தந்து இதுதான் அச்சா தீன் என சொல்லியிருக்கிறார்கள்..
..
வடமாநிலங்களில் தொடர்ந்து மக்கள் பாஜகவை மோடியை வெறுக்க தொடங்கியிருப்பதின் ஆரம்பம் இது .. மின்னணு இயந்திரத்தை கடத்தியும் ஹோட்டல்களில் வைத்தும் அராஜகம் செய்தும் பெருவாரியான வெற்றியை தடுத்தாலும் அதையெல்லாம் மீறி காங்கிரஸை வெற்றியடைய செய்திருக்கிறார்கள் என்றால் .. பாஜகவை துடைத்தெறிய வேண்டுமென்று நினைத்து வாக்களித்திருப்பது தெரிகிறது வாக்குபதிவு இயந்திரம் இல்லாமல் வாக்கு சீட்டாக இருந்திருந்தால் மொத்தமாக துடைத்தெறிந்திருக்கலாம் .. இந்த நிலையில் சந்திரசேகரராவ் வின் வெற்றியை பாராட்டி ஆகவேண்டும் .. பொது தேர்தலோடு சேர்ந்து நடத்தியிருந்தால் அலையில் காணாமல் போய்விடுமோ என அஞ்சி முன்கூட்டியே ராஜினாமா செய்து தேர்தலை சந்தித்த வீயூகம் நல்ல பலனை தந்திருக்கிறது அங்கே முஸ்லிம்களின் வாக்குகளை இடஒதுக்கீட்டை சொல்லி பெற்றிருப்பதும் பெரிய வெற்றியை சாதாகமாக்கியிருக்கிறது .. பாஜகவை தென்னிந்தியாவில் தடுத்தது ஆறுதல் அளிக்கிறது
..
இனி மிக கவனமாக ராகுல் செயல்படவேண்டும் எதிர்கட்சிகளின் ஒருங்கிணைப்பில் கவனம் செலுத்தி நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தால் பாஜகவின் தோல்வி உறுதியாகும் .. இந்த தேசம் பன்முக கலாச்சாரத்தை கொண்டதென்பதை மறந்து ஒரே இந்தியா பிராமண கலாச்சாரத்தை கொண்ட இந்தியாவாக மாற்ற நினைத்து பல்வேறு இனங்களை அடித்தமர்த்தி .. ஒரே மொழியென்று ஹிந்தியை வளர்த்தெடுக்க எண்ணி பிறமொழிகளின் மீதான தாக்குதலை மெல்ல செய்து .. ஒருவித சர்வாதிகார நிலையை இந்த நாட்டில் நிலவ முயற்சித்தார்கள் .. இந்தியாவை இந்துநாடாக்க முயற்சித்து யாரென்றே தெரியாதவனெல்லாம் மக்கள் செல்வாக்கில்லாதவனெல்லாம் உரக்க பேசி மிரட்டுகிற கேடுகெட்ட நிலை .. இதோ மக்கள் தெளிவாக இந்த இந்திய ஒன்றியத்திற்கு தேவை சர்வாதிகாரம் அல்ல ஒற்றை கலாச்சாரமோ ஒற்றை பண்பாடோ மதமோ அல்ல அவரவர் நிலைபாட்டில் கொள்கையில் வழிபாட்டில் உணவுமுறையில் அவரவர் விருப்பம் போல வாழ தடுக்கிற கட்சி தேவையில்லையென தீர்ப்பெழுதி இருக்கிறார்கள் ..
ஒருவரின் தோல்வியை நாடே கொண்டாடுகிறது
இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம்
..
நல்லநாள்
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment