Wednesday, December 12, 2018

சாதி..மதம்

சாதி.. இதன் கட்டமைப்பிற்குள் இருக்கும் குரோத அரசியலை நாம் அதிகம் யோசிப்பதில்லை.. இதன் பின்னில் நின்றாடும் பார்பனத்தின் துவேசத்தை நாம் அதிகம் கவனிப்பதில்லை.. சாதிய நிலைபாடே வேரறுக்கப்படவேண்டும் என்பதில் பெரியார் காட்டிய முனைப்பை அவரின் வழிதோன்றல்கள் சரியாக முன்னெடுக்காததும்... வாக்கு அரசியலுக்காக அதில் தூபம் போட்டதும் சாதிவெறியர்கள் சங்கங்களை கலைத்துவிட்டு நேரடி அரசியலில் ஈடுபட்டவர்களை ஆதரித்து வளர்த்துவிட்டதும்..இன்றைய அவலங்களுக்கு காரணம்.. இதில் திமுக உட்பட திராவிட கட்சிகளின் பங்கை நான் மறைக்கவோ மறுக்கவோ முயலவில்லை... .. எங்கு தடுக்கிவிழுந்தது என்பதை நாம் கவனிக்க தவறியபோது .. ஆரியம் சரியாக காய் நகர்த்தி மக்கள் மனதில் ஆண்டபரம்பரை என்கிற விஷ எண்ணத்தை விதைத்தது.. அது அந்தந்த வட்டாரங்களில் தங்கள் சமூகமக்களை மூளைச்சலவைக்கு உட்படுத்தி ஒருவித போதையோடே இருக்க செய்தார்கள்.. தர்மபுரி இளவரசனாகட்டும் உடுமலைப்பேட்டை சங்கராகட்டும் ..வெளியில் வராத கௌரவம் பேசும் கொலைகள் நடந்துக்கொண்டிருக்கின்றன.. .. சாதிய அமைப்புகளை வள்ர்த்துவிடுவதோ அல்லது அக்கறை காட்டுவதோ இனி திராவிட கட்சிகள் செய்யகூடாது தேவையில்லாமல் தூபம் போடுகிற செயல் சாதிவெறியை வளர்க்கவே செய்யும்.. மதத்தை கையிலெடுப்பவனும் இதைதான் செய்கிறான் கோவை பாரூக் என்ற இளைஞன் கழுத்தறுத்து கொல்லபட்டதை மறக்கமுடியுமா .. மதம் தலைக்கேறியவனின் கொடூர செயல் .. மதத்தை சொல்லி ஆட்சி அமைத்தால் நாடு சுடுகாடாய் போகுமென்பதற்கு இன்றைய பாஜக அரசின் லட்சணமே சாட்சி.. சாதி மத கொலைகளுக்கெதிராக அரசியல் கட்சிகள் பேசுவதில்லை பேசினாலும் அது சம்பரதாயமாகவே இருக்கிறது சட்டத்தின் முன் வலுவிழக்கிற நிலை தான் இப்போதும்.. சாதியை வீட்டுக்குள் வைத்துக்கொள்ளாமல் வெளியில் பெருமை பேசிதிரிகிற கூட்டம் ஆட்சி அதிகாரத்திற்கு ஆசைபடுவது பேராபத்தை விளைவிக்கும் .. மதத்தை முன்னெடுத்த பாஜக இந்திய ஒருமைபாட்டை சிதைத்ததும் மதவெறிக் கொண்டு ஆடியதும் நான்காண்டில் அதன் கொடூர முகத்தை கிழித்தெறிய தொடங்கியிருக்கிறார்கள்.. ஆம் சாதியம் பேசிய பாமகவை எப்படி துடைந்தெறிந்தார்களோ அதைப்போல மதவெறியோடு ஆடிய பாஜகவை கிழித்திருக்கிறார்கள் .. இனி சாதி மதம் என குறுகிய வட்டத்திற்குள் வாக்கு அரசியலை தவிர்த்து இந்த சமூக மேம்பாட்டிற்கான சமத்துவ சமுதாயம் மலர அரசியல்கட்சிகள் பங்காற்ற வேண்டும் விளிம்புநிலை மக்களின் மேம்பாடும் ஒடுக்கபட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி வேலைவாய்ப்பு தொழில் பாதுகாப்பென உறுதி செய்பவருக்கே வாக்களிக்கும் மனப்பான்மையை மக்கள் பெறவேண்டும் .. .. நல்லதொரு தொடக்கத்தை குறிப்போம் .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment