Friday, November 23, 2018

சபரிமலை யுத்தகளமாக இருக்கிறது .. கோவையை சிங்கபூராக மாற்றிக்காட்டுவோம்.. பொன்னர்.. இதற்குமுன்பு தமிழகம் வந்த மோடியை எதிர்க்கட்சிகள் வரவிடாமல் துரத்தி மனதை நோகடித்துவிட்டனர் ..அதனால் தான் கஜா புயல் சேதத்தை பார்க்க வரவில்லை கிருஷ்ணசாமி .. .. கஜாபுயலால் பாதிக்கப்பட்ட மக்கள் மனநோயாளி ஆகிவிட்டனர் ..அமைச்சர் ஓ.எஸ்.மணியன்.. நான் ஒரே தொகுதியில் ஒன்பதுமுறை சட்டமன்ற உறுப்பினர்.. பழநிசாமி.. .. உண்மையில் இவர்கள் பைத்தியகாரர்களா அல்லது கிறுக்குத்தனமா நடிக்கிறார்களா ..பாஜகவோடு சேர்ந்த பிறகு பொய்யும் பித்தலாட்டமும் கிறுக்குத்தனமும் இவர்களோடும் சேர்ந்துவிட்டதா.. .. கோவையை சிங்கபூராக மாற்றாமல் விடாமல் ஓயமாட்டோம் என்று ஏசி அறையில் காலி சேர்களோடு கூட்டம் போடுகிறவர்கள் சொல்கிறார்கள் கோவையையும் குமரியையும் கலவரபூமியாக மாற்ற நீண்டநாட்களாக முயற்சிப்பதும் அது நடக்காமல் போவதும் இவர்களின் பேச்சில் தெரிகிறது .. குமரியில் பொன்னருக்கு ஆதரவாக கேரள போலீஸ் தடுத்து நிறுத்தியதற்காக.. இங்கே பந்த் .. யாருமே சட்டைசெய்யவில்லை .. தேசபக்தர்கள் யாருமே ஏன்யா மலைக்கு போனே டெல்டாவே இயற்கையின் கோரபிடியில் சிக்கி சீரழிந்து உறைவிடமின்றி தெருக்களில் மக்கள் நிற்கிறார்களே அதை கவனிக்காம அங்கே என்ன ..வேலைன்னு கேட்கல.. அதுவும்சரிதான் அங்கபோனா தமிழிசையை விரட்டியபோல இவருக்கும் நடந்திருக்கும் தமிழக மக்கள் மோடியையே விரட்டியவர்கள்.. .. வேதாரண்ய மக்கள் அமைச்சரென்று பாராது விரட்டி விரட்டி வெளுத்ததும் .. சுவரேறி குதித்து ஓடியவர் .. புயலால் மக்கள் மனநலம் பாதிக்கபட்டிருப்பதாக சொல்வதிலிருந்தே மனநல பாதிப்பு யாருக்கு ஏற்பட்டிருக்கிறதென்று புரிகிறது .. சசிகலாவின் வீட்டுவேலையை கூட செய்து கொடுத்து ( வீட்டுலநடக்கிற தேவை திருநாளில் ஆன வாளிய தூக்கிட்டு திரிஞ்சவர்: தினகரன்) சட்டமன்ற உறுப்பினராகி சசிகலா சிறைக்கு போனதும் இன்றைக்கு வீரவசனம் பேசி திரிகிறவர் .. வாக்களித்த மக்கள் ஏண்டா வரலா என கேட்டால் பைத்தியமென்பாராம் .. இனி எக்காலத்திலும் தொகுதி பக்கமே போக முடியாதவாறு மக்கள் செய்துவிட்டார்கள் .. ஆறுமுறை நின்று நான்கு முறை மட்டுமே வென்றவர் .. மறந்து மாறி பேசுவதில் வியப்பொன்றுமில்லை .. சேக்கிழாரின் ராமயணத்தை ஏற்றுக் கொண்ட நாம் இதையும் ஏற்போம் ..ஜெயலலிதா நான்கு முறை முதல்வரானவர் ஆறுமுறை என்ற போதும் அதை ஊடகங்கள் ஊளையிட்ட போதும் வியந்து பார்த்தவர்தாமே நாம் .. பொய்களை சொல்பவனையோ.. அதை திரும்ப திரும்ப பறைபவனையோ நாம் ஏன் என்று கேட்காதவரை பொய்களால் மட்டுமே நாம் சூழபடுவோம்.. எஸ் ஆர் எம் கல்லூரியில் பெண் லெப்டில் பாலியல் தொல்லைக்குள்ளாகிறார் ..எந்த ஊடகமும் வாய்திறக்கவில்லை .. தமிழக அரசு கூட தலையிடாது எம்ஜிஆர் ஆட்சிக்கு முன்பு வரை யாரென்றெ தெரியாத பச்சைமுத்து இந்தியாவின் மிகப்பெரிய கல்வி கொள்ளையர் எப்படி வளர்ந்தது என... எத்தனை நீர்நிலைகள் ஆக்கரமித்து பகல் கொள்ளையாய் கல்வி கூவி விற்படுவது தெரிந்தும் நாம் கேட்பதில்லை ..அரசோ எந்த தனியார் நிர்வாகமோ எதை செய்தாலும் நாம் பாதிக்காதவரை மௌனமாய் இருந்தே பழகிவிட்டோம் ..நாம் பொன்னரின் மதவெறியையோ அறிவுகெட்ட செயலையோ .. தமிழக அமைச்சர்களின் கிறுக்குதனத்தையோ நாம் கேள்வி கேட்க மாட்டோம்.. ஆனால் திமுககாரன் குசுவிட்டால் கூட ஒலிபெருக்கியை வைத்து சத்தம் போடுவோம் .. .. எப்போதெல்லாம் திமுகவை வேண்டாமென்று வைக்கிறோமோ அப்போதெல்லாம் நாட்டை பின்னோக்கி இழுத்துச் செல்கிறோம்.. இனியும் காசிற்கு ஆசைபட்டு இதே தவறை செய்தால் கேட்க ஆளின்றி தெருவில் வீசபடுவோம் .. இனி திமுக ஒன்றே அறிவுடை சமுதாயத்தை நல்ல முன்னேற்றம் கொண்ட நாட்டை நல்லதொரு விடியலை தரமுடியும் .. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment