Tuesday, November 20, 2018
மதமேறிய..விஷங்கள்
இந்து மதத்தின் ஆச்சாராம் மற்றும் கலாச்சாரத்தை மதிக்காமல் நடப்பது தான் கஜா மற்றும் கேரளா வெள்ளத்தால் ஏற்பட்ட பெரிய பாதிப்பிற்கு காரணமாக அமைந்தது என்றும் நாடு முழுவதும் கலாச்சார சீரழிவு மற்றும் ஐயப்பன் கோயில் சபரிமலை தீர்ப்பு இது விவகாரங்கள் தான் இது போன்ற துயரங்கள் நடைபெற காரணமாக அமைந்தது. இன்னும் இதுபோன்ற நிகழ்வுகள் தொடரும் என்கிறார்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஜியர் ..
..
மத நம்பிக்கை என்பது வேறு..அது அவரவர் சார்ந்த சமூகத்தின் மீதான அடிப்படையை கொண்டு ஒருவித ஈர்ப்பை ..பக்தியை மெய்ஞானத்தை அது பொய்யெனினும் அதில் நிலைபெற செய்து .. அவனை சிந்திக்கவோ ஆய்ந்தறியவோ அதிலிருந்து வெளியேறவோ
விடாமல் அழுத்தி வைத்திருந்தாலும் அன்பை சகிப்புதன்மையை நிதானத்தை போதித்தது ..ஆனால் மத பெரியவர்கள் என சொல்லிக் கொண்டோர் .. தங்களின் நிலைநிறுப்பை காத்துக்கொள்ள ஒருவித பயத்தை மக்களிடையே விதைத்து .. மூடவழக்கத்தை பரப்பி பிழைத்து வந்தனர்/ வருகின்றனர்.. இதுபோன்று மூடநம்பிக்கையை வளர்ப்பது மதத்தை வைத்து பிழைப்பு நடத்துவோர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள் .. இது எல்லா மதத்திலும் நடப்பதுதான் வேடிக்கை ..
அறிவுடை சமூகம் என்று சொல்லிக்கொள்கிற கூட்டம் இதில் சட்டென்று விழுந்துவிடுவதுதான் வேடிக்கை..
..
இப்படி பேசுகிறவர்களை கூர்ந்து கவனியுங்கள் களவாணிகளாக இருப்பார்கள் காமகொடூரர்களாக பெண்பித்தனாய்.. பொய்யர்களாய் இருப்பார்கள் பாரமனை சிந்திக்க விடாமல் செய்வதிலும் .. தன்னை நம்புகிறவனை.. மதமென்ற பெயரில் மூளைச்சலவை செய்து
எதிர்கருத்தை சொல்கிறவர்களிடம் மூர்க்கத்தனமாக நடக்க வைப்பதில் வல்லவர்கள்.. அவர்களை பொம்மைகளாக்கி
தங்களை சுற்றியே சக்கரமாக சுழலவைப்பதில் வல்லவர்கள்.. இயற்கை சீற்றத்தை மதத்தோடு ஒப்பிட்டு மக்களை மடையர்களாக்க முனைவது ஏற்புடையதல்ல.. இயற்கையின் கோபம் .. மாற்றம் மனிதனின் அத்துமீறல்களால் வருகிறதென்கிற யதார்த்தத்தை உணர மறுக்கிற நாம் .. இதுபோன்ற மதமேறிய விஷங்களை நம்புகிறோம்..
..
இறைவனின் கோபம் என்பதை விடுத்து .. இயற்கையின் சீற்றமென உணர தொடங்கினாலே.. மதம் பேசி திரியும் மூடர்கள்
வாயடைத்து போவர்..
தீதும் நன்றும் பிறர்தரவாரா..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment