Thursday, December 13, 2018

அரசியல்..

சில முலாம்பூசபட்ட போலிகள் உள்ளன.. அமுமுக உயர்மின் அழுத்தம் கொண்டதென்று டிடிவி தினகரன் சொல்கிறார் .. பதறுவது தெரிகிறது .. கூட இருப்பவர்கள் கொள்கைக்காக இருப்பதாக சொல்வது அபத்தம் அதிமுகவில் யாருமே கொள்கைக்காக இருந்ததில்லை அதெல்லாம் அவர்களுக்கு தெரியாது எம்ஜிஆரெனும் கவர்ச்சி அவர்களை அரசியலுக்கு கொண்டுவந்தது .. பின் ஜெயலலிதாவும் அதிமுகவை காசு சம்பாதிக்கிற வழியாக மாற்றிட அரசியலை பொதுசேவை என்பதை மாற்றி பிழைப்பதற்கான இடமாக தேர்வுசெய்தனர் அதிகாரமிருந்தால் செய்கிற தப்புகளில் இருந்து தப்பிக்கலாமென்ற எண்ணம் வலுபெற தவறுக்குமேல் தவறு அதை கடக்கமுடியாமல் வழக்கு தண்டனை சிறை என்று அரசியலில் வாழ்விழந்து போனபின்னும் .. இருக்கிற காசை வைத்து எப்படியும் திரும்ப அரசியலில் தன்னை தக்கவைத்துக்கொள்ள போராடுகிற சூழல் .. தம்மால் வளர்த்துவிட்டவர்கள் .. யாரை நம்பி ஆட்சி அதிகாரத்தை தந்தோமோ அவர்களே புறடியைப்பிடித்து தள்ளியதும் செய்வதறியாது இருக்கிறவர்களை காக்க முயன்று கடைசியில் கூடாரம் காலி ஆகிவிடுமோ என்கிற நிலை .. உயர் அழுத்த மின்சாரம் .. டிரான்ஸ்பார்மரே பழுதான நிலையில் மின்சாரம் துண்டிக்கபடுகிற சூழலில் உளறல் வருகிறது.. .. அதிமுக என்பதே அடிமைத்தனம் ஊறிப்போன அறிவிலிகளின் கூடாராமாய் மாறிபோய் வெகுகாலமாகிவிட்டது .. இப்போது கூட மேற்குவங்க நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக் ஒ ப்ரையன் நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடக்க விடாமலும் கேள்விகள் பதிலளிக்கமாலும் இருப்பதற்காக அதிமுக மூலம் பாஜக தொடர்ந்து அமளி செய்கிறது என்கிறார் .. ஆம் ஆக்கபூர்வமான விவாதமெல்லாம் செய்ய அதிமுகவினருக்கு தெரியாது .. காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீரென்று பாடதான் தெரியும் இப்படி பட்ட தகரத்தை தான் ஜெயலலிதா தேர்வு செய்தார் .. ஜெயலலிதாவே தகரமென்பது வேறுவிடயம் இதில் எங்கே மூலாம் பூசுவது .. மத்தியில் பாஜக ஆட்சி இருக்கிறவரை தமிழகத்தில் அவர்கள் சொல்படி ஆடுகிற "ஆடுறாராமா" தேவைபடுவதால் அதிமேதாவித்தனம்..? எல்லாம் ஆட்சி செய்கிறது ரெய்டு வழக்கு தண்டனை சிறை என பயந்து எடப்பாடியோடு இருக்கிற யாரும் தினகரன் பக்கம் வர மறுக்கிறார்கள் ..தினகரனும் எங்கே தமக்கும் சிறை செல்ல நேரிடுமோ என அஞ்சி கேட்காமலேயே பாஜகவிற்கு ஆதரவை தருகிறார் இவர்கள் கொள்கையாளர்களாம் .. இன்னும் சில மாதங்களில் கூடாரம் காலி ஆகலாம் என்ற பயத்தில் பதறுவதை தான் தினகரனின் அறிக்கை சொல்கிறது .. .. தினகரன் கூட இருப்பவர்கள் என்றில்லை அதிகாரம் போனால் எடப்பாடி பின்னால் நிற்பவர்கள் கூட கூடு மாறலாம் கொள்கை ஈர்ப்பினால் வருபவர்களில்லை ஆனாலும் தேர்தல் அரசியலில் பலம் காட்ட வேண்டியதும் வாக்குகளை சிதறவிடாமல் ஒருங்கிணைப்பதும் கூட மிக அவசியமான ஒன்று .. எண்ணிக்கை அடிப்படை ஜனநாயகத்தில் "மாய எண்" மிக முக்கியம் .. அதிகாரமிருந்தால் தான் எதையும் நிலைநாட்ட முடியும் இல்லையெனில் தொடர்ந்து தமிழக நலன் புறக்கணிக்கபடும்.. சமூக நலன் நீதி சமத்துவம் நமது உரிமைகள் எல்லாம் இந்த அடிமைகளால் பலிகொடுக்கபடுகிறது நம் குழந்தைகளின் கல்வியில் கூட கைவைத்துவிட்டார்கள் இனியும் இவர்களை அனுமதித்தால் தமிழகம் பின்தங்கியநிலைக்கு சென்றுவிடும் .. மீட்டெடுக்கவேண்டிய பெரும் பொறுப்பு நமக்குண்டு.. சின்ன சின்ன விடயங்களில் கூட கவனமாய் காய் நகர்த்தி அரசியலில் மாபெரும் வெற்றியை பெற அரவணைப்போம் வருவோரை வரவேற்போம்.. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment