Thursday, November 22, 2018

தமிழ் நாட்டில் ஒரு மயான சூழல் ஏற்பட்டுளள நிலையில்.. எட்டு மாவட்டத்தில் மக்கள் எல்லாவற்றையும் இழந்து அடுத்த வேளைக்கு கையேந்துகிற பரிதாபகரமான நிற்கிறார்கள் உணவு, உடை , உறைவிடமின்றி கண்ணீரோடு நிற்கிறார்கள் இந்த நிலையிலும் சபரிமலைக்கு சென்று அரசியல் நடத்தி வருகிறார் கேடுகெட்ட மத்திய அமைச்சர்.. இந்திய ஒன்றிய அரசின் ஒரே தமிழக பிரதிநிதி பொன்னா் சபரிமலையில் .. சபரிமலை ஐயப்பன் கோயில் நம்பிக்கை குறித்தும் தங்கள் உரிமைகளை மீட்டெடுக்க போராடுவதும் குறித்து எந்த பிரச்சனையும் இங்கு எழவில்லை.. ஆனால் தமிழ் நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் பொறுப்புள்ள ஒரு மத்திய அமைச்சர் தனது பொறுப்பில் இருந்து முற்றிலும் வெளியே வந்து அரசியல் செய்வதை எப்படி ஏற்றுக்கொள்வது.. அதுவும் விரதமிருந்து தாடியோடு பக்திமேலிட சரணம் அய்யப்பா என்று செல்லவில்லை.. மழுமழுவென சவரம் செய்த முகத்தோடு சபரிமலைக்கு சுற்றுலா சென்றவரைபோல சென்றிருக்கிறார் .. .. தன் மாநிலத்தின் மக்கள் .. கொடுத்தே பழக்கபட்ட டெல்டா சீரழிந்து கிடக்கிறது ..அடியோடு பிடிங்கியெறியபட்ட தென்னைகள் .. விரைந்து பலன் தருமெண்டுமென்று ஆசைகாட்டி ஐந்தாண்டில் பலனென்று சொல்லி தந்தவைகள் வலுவிழந்து பிடிங்கியெறிபட்டுகிடக்கிறது நவீன விவசாயம் இந்த மண்ணை அழித்து நிற்கிறது.. மக்கள் இருக்கமிடமின்றி குடிக்க தண்ணீரின்றி கலங்கி நிற்கிற வேளையில் அய்யப்பனை வைத்து அரசியல் செய்கிறார்.. மகா கேவலம் .. .. அரசியலை கடந்து திமுக அனைத்து மாவட்ட நிர்வாகமும் நிவாரணப் பொருட்களை கோடிக்கணக்கில் வாரி வழங்கியிருக்கிறது .. அரசு மெத்தனமாய் செயல்பட்டாலும் அதை விரைந்து செயல்பட ஊக்கியாய் தமிழக கட்சிகள் செயல்பட வேண்டிய சூழலில் மத்திய அரசின் நிவாரணத்தை விரைந்து பெற்றிட அமைச்சராய் பெரும் பணி காத்திருக்கிற வேளையில் சுற்றுலா செல்வதைப்போல தன் ஆதரவாளர்களோடு பம்பையில் காவல் அதிகாரியோடு வம்பிற்கு நின்று கடைசியில் அசிங்கபட்டு மலையேறியதை நாடு பார்த்து சிரித்தது .. மதம் தலைக்கேறியவர்கள் அய்யப்பனின் சாபமென்றும் கோபமென்றும் கதைகட்டிவிடுகிறார்கள்.. பொன்னர் அவமானபட்டது கூட சபரிமலையானின் வேலைதானோ.. .. கேரளம் போல் எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படவில்லையென எடப்பாடி சொல்கிறார்.. கேரள அரசு இதுபோன்ற பேரிடர் காலங்களில் எதிர்க்கட்சிகளை கலந்தாலோசித்து நடவடிக்கை மேற்கொண்டது .. இன்றைய தேதியில் திமுக சில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்க்கட்சிகளின் பணி பாராட்டுக்குரியதாக இருக்கிறது .. திமுக மருத்துவஅணியின் பணி கட்சிபேதமின்றி பாராட்டுகிறார்கள் .. ஆளும்கட்சி மற்றும் அரசு இயந்திரம் மெத்தனமாய் செயல்பட்டாலும் அதற்கு போதிய நிதி ஆதாரத்தை மத்தியில் ஆளும் பாசிச அரசு தரவில்லையென்றும் சொல்படுகிறது .. இந்த நேரத்தில் மத்திய அமைச்சர் களப்பணி செய்யாமல் சபரிமலையில் ஓய்வெடுப்பது அவர் விரும்பும் சபரிமலை அய்யப்பனுக்கு கூட பிடிக்காது .. எதில் எந்த நேரத்தில் அரசியல் செய்யவேண்டுமென்று தெரியாதவராய்.. நாகர்கோவில்காரர் .. .. திமுக தலைவர் திரு.ஸ்டாலின் ஒவ்வொரு நொடியிலும் மக்களைப் பற்றி அக்கறை கொண்டவராக தன்னாலான எல்லா உதவிகளையும் செய்கிறார் பாதிக்கபட்ட மக்களை தரைமார்க்கமாக சென்று நேரில் சந்திந்து ஆறுதல் சொல்லி உதவிகளை செய்கிறார்.. எந்த விமர்சனத்தையும் பற்றி கவலைபடாமல் மக்கள்பணியில் தன்னை இணைத்துகொண்டு தன் கட்சியினரையும் ஈடுபடுத்தி மக்களின் காவலனாய் உயர்ந்துநிற்கிறார் தளபதி .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment