Tuesday, December 11, 2018

பெரியாரெனும் பேராசான்

நன்றி எங்கள் அறிவாசானே.. .. தந்தை பெரியார் மட்டும் இந்த மண்ணை, இனத்தை செம்மைபடுத்தியிருக்காவிட்டால்.. அறிவின் நிழலில் நின்று இனஉணர்வை நம்மிடையே ஊட்டியிருக்காவிட்டால் இந்நேரம் தமிழகம் கேட்பாரற்று போயிருக்கும்.. ஒருமுறை அல்ல இரண்டுமுறை தெளிவில்லாமல் ஏதேதோ காரணங்களுக்காக சில சக்திகளின் கைகளில் அதிகாரம் போனாலும் திராவிட கொள்கையெனும் ஆணிவேரின் பலத்தோடு திருப்பியடிக்க முடிகிறது.. எத்தனை இடர்கள் சூழ்ச்சிகள் ஆரியர்களின் தகிடுதித்தோம் வேலைகள் இவையாவும் முறியடிக்கபடுகிற ஒவ்வொரு முறையும்.. தமிழ் மண்ணின் சுயமரியாதை வீறிற்று வெளிவருவதை காணமுடிகிறது.. .. பெரியாரின் பெருந்தொண்டே இன்றும் தமிழக மண்ணில் .. இலைமறைவு கயமைத்தனத்தை வென்று நம்மால் நிலைத்து நின்றாட முடிகிறது.. கொஞ்சம் பின்னோக்கி பார்க்கிறேன் அண்ணாவின் மறைவிற்கு பிறகு நாவலரோ எம்ஜிஆரோ பொறுப்பேற்றுயிருப்பார்களேயானாலும் மிக சுலபமாக நம்மை வீழ்த்தி மீண்டும் ஆரிய/பாசிசவாதிகள் நேரடியாகவே ஆட்சி செலுத்தியிருப்பார்கள்.. ஆனால் மேதகு கலைஞர் பெருமகன் ஆட்சியதிகாரத்திற்கு வந்ததால்தான் இங்கே திராவிடத்தை யாராலும் வீழ்த்த முடியாமல் போனது.. நுண் வேர் கெட்டுவிடாமல் நம்மை காத்துநின்றார்.. .. இப்போது நடக்கும் இலைமறைவு நகர்வுகள் இரண்டு காரணிகளுக்காக நாம் கவனிக்கவேண்டியிருக்கிறது.. அதிமுகவின் அடுத்தநகர்வை யாரெல்லாம் வடிவமைக்கிறார்கள் அதில் பாசிசத்தின் ஆளும் அரசின் பங்கென்ன என்பதையெல்லாம் கருத்திக்கொண்டே நாம் செயல்படவேண்டியிருக்கிறது .. திமுகவை எப்படியேனும் வீழ்த்திட வேண்டுமென்ற ஒற்றை இலக்கை தவிர வேறேதுமில்லை பாசிசவாதிகளுக்கு தெரியும் அதிமுகவை எப்படி வேண்டுமானாலும் கையாளலாம் கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம் திமுகவை அப்படி செய்ய இயலாது அடிமட்ட தொண்டன் கூட தவைமையை பொதுவெளியில் சமூகதளத்தில் கேள்வி கேட்பான் ஒவ்வொரு அசைவும் சமூகநீதி சார்ந்தே செயல்பட வேண்டிவரும் .. திமுக மட்டும் பெரியாரிய பாதையை பின்பற்றும்,.. சில நேர தவறான முடிவெடுத்தாலோ அல்லது காலதாமபடுத்தினாலோ உடனே சுட்டிகாட்ட இங்கே நிறைய பேர் இருக்கிறார்கள் .. ஆரியத்திற்கு எதிரான ஒரே கட்சி திமுகதான் ...அதனால் தான் திமுகவை கண்டு அஞ்சுகிறார்கள் வெற்றியை தடுக்க தீவிரமாய் செயல்படுகிறார்கள் .. .. பெரியாரிய கொள்கையை / பாதையை மறந்தால் மீறினால் தமிழகத்திலிருந்து காலபோக்கில் மறக்கடிக்கபடுவார்கள் கொள்கை தெளிவில்லாமல் பாசிசத்தின் கையின் கைபாவையாக இருந்தவர்களை மக்களென்றில்லை நாளடைவில் அவரை சார்ந்தோரே மறந்துபோவார்கள் (மகோரா)எம்ஜிஆரை ஜெயலலிதா மறந்தார் இப்போது ஜெயலலிதாவை இவர்கள் காலபோக்கில் மறந்தே போவார்கள்.. கொள்கை உறுதியும் சரியாக தலைமையை தயார்செய்து தொடர செய்தால் வரலாற்றில் இடம் பெறுவார்கள்.. பெரியார்..அண்ணா..கலைஞர் ..... .. பெருங்கிழவன் நம்மை செதுக்கியிருக்கிறான்.. கூர்மையாக.. #அறிவுக்கொண்டு.. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment