Wednesday, December 26, 2018

கோழை ஜெயலலிதா

திமுக தொடர்ந்த வழக்கால் மன உளைச்சலுக்கு ஆளாகி மரித்தே போனார் ஜெயலலிதா // தம்பிதுரை.. .. நினைத்துப்பாரக்கிறேன் .. கலைஞரை எத்தனை வலிகளை வேதனைகளை கடுஞ்சொல்லை .. பொய்பிரச்சாரங்களை கூடயிருந்தே குழிபறித்த துரோகங்களை .. வழக்குகளை நண்பனாய் நடித்து முதுகில் குத்திய தழும்புகளோடு இவரால் எப்படி இயல்பாக நீண்டநாள் வாழ முடிந்தது .. அறம் வெல்லும் என உறுதியோடு இருந்தாரே .. சிறிய சலசலப்பிற்கே அஞ்சி குடிலுக்குள் ஒதுங்கி கிடக்கிறவர்களை எண்ணுகிற போது .. இந்த மனிதனை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.. திருட்டு ரயிலேறி வந்ததாக குடிபோதையில் எழுதிவிட்டு .. அவர் மீது மானநஷ்ட ஈடு வழக்கை சென்னை சைதை கோர்ட்டில் தொடர்ந்து .. நேரில் நின்று மன்னிப்பு கோரியும் .. நீதிபதி ஏற்க மறுத்தபோது விடுங்கள் நஷ்டஈடெல்லாம் வேண்டாமென பெரியமனதோடு சொல்ல முடிந்ததே .. (அன்றைக்கு வழக்கறிஞராக இருந்த கோகுலகிருஷ்ணன் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர் பதிவு செய்திருக்கிறார்) .. .. கொண்டுவந்து சேர்த்துவிட்டவரை மார்டன் தியேட்டர்ஸில் மந்திரிகுமாரிக்காக தாவகட்டையில் குழி இருக்கிறதென சுந்தரம் முதலாளி வேண்டாமென்க.. தாடி ஒட்டிக்கொள்ளலாமென சொல்லி வாழ்வின் வசந்தத்தின் திறவுகோலாய் நின்றவரை.. பாசிச சக்திகளின் தூண்டுதலால் துரோகம் இழைத்த போதும் கடைசிவரை நண்பரென்றே விழித்த பெருந்தன்மையாளர்.. ஊழலென்று சொல்லி கட்சியை சின்னாபின்னமாக்கி..இதோடு முடிந்தது திராவிட இயக்கம் என்று கொக்கரித்த பார்பன கும்பலுக்கு முன் எழுந்து நின்று எந்த கொம்பனாலும் திராவிடத்தை வீழ்த்த முடியாதென கம்பீரமாய் வழிநடத்தினாரே.. .. எத்தனை விதமான விமர்சனங்கள் .. மிரட்டல்கள் ஊடகத்தின் தொடர் தாக்குதல்கள் பொய்யென்றும் அறிந்தும் திரும்ப திரும்ப சொல்லி மக்களை குழப்பத்திலாக்கி சரிவை தந்தபோதும் .. என்றைக்கும் "அறமே வெல்லுமெனறு " உறுதியோடு இருந்தவர் .. திமுகவை வீழ்த்த சூழ்ச்சிவலைப்பின்னி.. ஒருலட்சத்து எழுபதாயிரம் கோடியென மாயகணக்கை சொல்லி .. இந்த முறை வீழ்த்திவிடலாமென்று கொக்கரித்தவர்கள் 2ஜி வழக்கில் மகளை சிறைக்கனுப்பிய போதும் தளராமல் வழக்கை சந்தித்து .. மனோதிடத்தோடு எதிர்கொண்டு வெற்றிப்பெற்றவர்.. .. அப்பப்பா .. எத்தனை சூழ்ச்சிகள் நயவஞ்சம் துரோகங்கள்.. வாழ்நாள் முழுவதுமே போராடி போராடி ..எதையும் எதிர்கொள்ளும் மனவலிமை .. வழக்கென்று வந்ததும் காலைபிடித்து நக்கி சேவகம் செய்யாது .. துணிச்சலோடு எதிர்கொண்டு வென்று வந்த மாவீரர் கலைஞர் .. வழக்கு மனஉளைச்சலை தந்தததாம் இறந்துபோனாராம் ..அவருக்கு பெயர் இரும்புமனுஷியாம் .. உண்மையில் கோழை பொய்யாய் ஊடகங்களும் பார்பனியரும் கட்டமைத்தது இவரை விட்டால் யாரும் பார்பனரில் அதிகாரத்திற்கு வரமுடியாதென்று தெரிந்து..தீர்ப்பை கூட மாற்றி கடைசியில் கணக்குப்பிழை காட்டிகொடுத்து .. கடைசியில் ஒன்றுமே முடியாமல் போனபிறகு தாமதபடுத்தி .. கடைசிவரை தீர்ப்பை பெற பயந்து நடுங்கி இறந்தே போனார் .. #உண்மையை வெல்ல முடியாதென்று அறியாமலேயே மண்ணுக்குள் புதைந்தார் .. அறம் வெல்லும் என்று அறியாமல் போன அறிவிலி ஜெயலலிதா .. மடியில்கனம் இருந்தால் வழியில் பயம் வரத்தானே செய்யும் .. .. #கோழை .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment