Thursday, December 20, 2018

தலித்..

பா.ரஞ்சித் ஒரு மசாலா பட இயக்குனர் அவ்வளவுதான் அவரின் தகுதி.. பட்டியலின மக்களுக்கா களத்தில் என்ன செய்தார் அவரை போன்ற பாஜக கைகூலிகளுடன் மோதுவது எங்களை போன்ற சனாதன கோட்பாடுகளை எதிர்க்கும் போர்வாள்களுக்கு அசிங்கம் ..என்கிறார் விசிகவின் வன்னி அரசு .. அவர் சொல்வதை முழுவதுமாக தள்ளிகளைய முடியாது .. களப்பணியில் பெரியளவில் பங்காற்றவில்லை என்பதை ஏற்கவேண்டும் .. ஆனால் அவருக்கு இருக்கிற சினிமா வெளிச்சம் வன்னி அரசை விட வேகமாக மக்களிடம் கொண்டு சேர்த்தது என்பதை மறுக்கமுடியாது சினிமாவோடு வாழ்வியலை பின்னிபிணைந்து வாழும் தமிழனின் நிலைகண்டு வேறென்ன சொல்ல முடியும் .. எம்ஜிஆருக்கு சினிமா கவர்ச்சி தானே கடைசிவரை கைகொடுத்தது .. குறிப்பாக தலித் சமூகமக்களின் பேராதரவு கடைசிவரை அவருக்கு இருந்ததே .. அவரால் எந்த கொள்கை சார்ந்த பலனுமில்லை என்ற போதும் .. தங்களின் விடுதலைக்கு உரிமைக்காக சிறிதாய் கூட செயல்படவில்லையென்ற போதும் மாய அழகில் மயங்கிநின்றவர்கள் தானே.. தமிழகத்தை பொறுத்தவரை தலித் சமூகம் பெற்ற எல்லா நலன்களும் திமுக ஆட்சியில் கிட்டியதுதான் .. பெரியாரின் அடியொற்றி ஆண்ட திமுக ஆட்சியில் குறிப்பாக கலைஞர் பெருமகனாரின் சிந்தனையில் செயலில் உதித்த திட்டங்கள் .. அவர்களுக்கான உரிமைகளை வழங்குவதில் காட்டிய முனைப்பு, அக்கறை வேறெப்போதுமில்லை .. .. இன்றைக்கு அம்பேத்கரை தூக்கிபிடிக்கிற தலித் சமூகத்தினர் பெரியாரையும் சம நோக்கோடு காண்பதில்லை என்பது வேதனை தரும் விடயம் .. தமிழகத்தை பொறுத்தவரை பெரியாரின் சேவையை இவர்களுக்காக உழைத்ததை எவராலும் குறைத்து மதிப்பிட முடியாது ..உணர்வை தூண்டி மரியாதையோடு வாழ நம்பிக்கையை விதைத்தவர் பெரியாரால் திராவிட இயக்கத்தால் தான் பெரும் பயனை அடைந்தார்களே தவிர .. பெரியார் இல்லையெனில் .. வடமாநிலங்களை போல வேட்டையாடபட்டிருப்பார்கள் இந்த உண்மையை உணர்வதே இல்லை .. இன்றைக்கு களப்பணியாற்றுவதாக சொல்வதை .. பிற சமுகமக்களோடான பகையை வளர்ப்பதிலோ பஞ்சாயத்து செய்வதிலோ இல்லை என்பதை உணரவில்லை .. இன்றைக்கு கல்வி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டால் பலன் பெறாத சமுகமாக பிற்படுத்த மிகவும் பிற்படுத்த சமூகமே இருக்கிறது அவர்களுக்காவும் போராட வேண்டியது அவசியம் .. இன்றைக்கு பிற்படுத்தபட்டவர்களின் இடஒதுக்கீட்டை தான் தொடர்ந்து பாசிசம் எதிர்க்கிறது அவர்களின் உரிமைகளை பறிக்க பலமுனைதாக்குதலை செய்கிறது .. (நீட் தேர்வு ஒன்றே போதும்) .. தமிழகத்தை பொறுத்தவரை தலித்களுக்கான அடையாளம் ..பா.ரஞ்சித்தாலோ வன்னியரசாலோ கிடைத்ததில்லை திராவிட இயக்க வரலாற்றில் பெரும்பகுதியை .. ஏன் பெரும்பலனை பெற்றது பட்டியலின சமூகம்தான் .. இன்றைக்கும் சில அசம்பாவிதங்கள் நடப்பதும் அதை தொடர்ந்து இருசமூக மக்களின் உணர்ச்சியை தூண்டி குளிர்காய்வதும் .. எல்லா அரசியல்கட்சிகளும் சாதி மோதலை ஒரு குறிப்பிட்ட வரையறை வரை ரசிப்பதும் வெட்ககேடானது .. தலித் மக்களுக்காக அவர்கள் மேம்பாட்டிற்காக தலித்களிடையே பிரிவினையை செய்து பல்வேறு குழுக்களாக கட்சிகளாக பிரிந்து கிடக்கிறார்கள் ‍.. .. இன்னும் கூட நிறைய தலித் இயக்கங்கள் அமைப்புகள் உருவாகலாம் .. அவரவர் தேவைக்கேற்ப பணியாற்றலாம் தொடர்ந்து சாதீய சிந்தனை வெறியாக்கி குளிர்காயலாம் எல்லாவற்றையும் காலம் புறந்தள்ளும் .. தலித் தான் உயர்ந்த பிறகு தன் சமுகத்தை கண்டுக்கொள்வதில்லை என்பதே கள யதார்த்தம் .. அப்படி வந்தால் தன் நலனை புகழை விரும்புகிறவராகவே இருப்பார் .. இங்கே திராவிடத்தை தவிர்த்து புதிய கோஷத்தை கையிலெடுத்தாலும் சில காலம் கழித்து பாசிசத்தால் வீழ்த்தபடுவது.. அடிமைபடுத்தபடுவது உறுதி.. .. தலித்களுக்கென்றில்லை பிற்படுத்த/ மிகவும்பிற்படுத்தபட்ட மற்றும் சிறுபான்மையினருக்கு என்றும் காவலாய் நிற்பது திராவிடம்தான் அதனால் தான் திராவிடத்தை வீழ்த்த பலமுனைகளிலிருந்து போர்தொடுக்கிறது ஆரியம் .. நம் கையை கொண்டே கண்ணை கொத்தும் வேலை மிக சரியாக செய்கிறது அதில் ஒன்று தான் பா.ரஞ்சித் .. அதைதான் வன்னி அரசு சொல்லியிருக்கிறார் .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment