Friday, December 28, 2018
வருகிறது அறுவடை காலம்
வேர் என்பது புகழை வெறுக்கும் ஒரு மலர்தான்
என்றார் லெபனானின் பெருங்கவி கலீல் கிப்ரான்..
..
ஆம் .. திராவிட இயக்கத்தின் வளர்ச்சியில் இன்றைக்கும் தன் உழைப்பை தந்து கொண்ட கொள்கையில் உறுதியாய் தான் ஏற்றுக்கொண்ட கட்சி ஆட்சியில் ஏறவேண்டும் .. தான் நேசிக்கிற தலைவன் அறியணையில் அமரவேண்டுமென எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இருக்கிறவன் அவன் தான் இந்த இயக்கத்தின் பெரும் பலம் .. இயக்கத்தின் வேர்
உண்மையில் திராவிட இயக்கம் இப்படிபட்ட வேர்களால் ஆனது சொந்த காசை செலவுசெய்து தெருமுனை கூட்டங்கள் நடத்தியும் துண்டுபிரசுரம் செய்தும் .. முச்சந்தியில் நின்று கொள்கை முழக்கம் செய்தும் இயக்கத்தை வளர்ப்பவன் ..
அத்தகைய வேர்களை தான் பேராசான் பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் பேரருளாளன் கலைஞரும் காத்து வந்திருக்கிறார்கள் .. இவர்கள் இட்ட விதைகள் தான் மண்ணில் நீண்டு தன் வேரை செலுத்தி "வைரம்பாய்ந்த" மரமாய் இயக்கத்தை நிலைநிறுத்தியிருக்கிறது ..
..
திராவிட இயக்கம் இந்தளவு வேரூன்றி ..மக்கள் மனதில் நம்பிக்கையை விதைத்து பாசிச சக்திகளை நுழையவிடாமல் தடுக்கும் அரணாய்
விளங்குவதும்.. சமூகநீதி செயல்பாடுகள் இந்தியளவில் தமிழகம் முன்மாதிரியாய் திகழ்வதிலும் விரும்பதகாத சாதிய மோதல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நிகழ்ந்தபோதும் உடனே பெருவாரியான மக்கள் எதிர்ப்பை பதிவு செய்து சாதிவெறியர்களின் செயல்பாட்டை செயலிழக்க செய்கிறார்களென்றால் திராவிட இயக்கத்தின் வேர்கள் இந்த மண்ணில் அத்தனை ஆழமாய் ஊடுறுவி எதற்கும் அசைந்துவிடாமல் கொடுங்காற்றிலும் வீழ்ந்துவிடாமல் காத்துநிற்கிறது .. மதவெறியர்கள் தங்கள் "சாணக்கியத்தை" எவ்வளவு இறக்கியும் இங்கே "காமெடிகளாகவே" பார்க்கபடுகிறார்களே என்றால் .. இந்த புகழை விருப்பாத மலர்கள்(வேர்கள்) தான் காரணம்..
..
இதோ இந்த நாடு பாசிசத்தின் கையில் சிக்கி சீரழிந்து கிடக்கிறது .. திராவிடத்தின் துணைக்கொண்டு இந்திய தேசத்தை மீட்டெடுக்க நாட்டை நேசிக்கிற நல்லவர் ஒன்று கூடுகிறார்கள் .. திமுகவின் வெற்றி மிக முக்கியமானதாக இந்திய தேசம் கணக்கில் கொள்கிறது .. நம் தளபதியின் கையில் தீர்மானிக்கும் சக்தியை நாம் தரவேண்டும் .. அதற்கு இப்போதிலிருந்தே பயணிப்போம் வெற்றியை நோக்கி .. ஆம் அறுவடையை நோக்கி..
..
கலீல் கிப்ரானின் கவிதையோடு முடிக்கிறேன்
..
"வருகிறது
அறுவடைக் காலம் !
பரிதியின் விழிகள்
பக்குவமாக்கும் பயிர்களை !
காசினி விளைத்திடும்
கனிகளைக்
கண்காணித்து வருவோம்"..
..
ஆம் முழுவதும் அறுவடை செய்ய..
நாடும் நமதே நாற்பதும் நமதே
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment