Thursday, November 1, 2018

மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு

திமுகவின் வெற்றி பெரியார் உருவாக்கிக் கொடுத்த அஸ்திவாரத்தில் உருவானது.. திரு.துரைமுருகன்.. .. ஆம் திமுக என்பது வெறும் கட்சியல்ல.. அது இயக்கம் moment திராவிட இயக்கத்தின் கொள்கைகள் சமூகநீதியில் பயணிக்கும் ஏற்றதாழ்வற்ற சமுதாயத்தை .. சமத்துவத்தை நடப்பிலாக்க தொடர்ந்து பயணிக்கும் பாடுபடும் ஆரிய வரவிற்கு பிறகு தமிழர்களின் மீதான கலாச்சார பண்பாட்டு தாக்குதலை சரியாக இனங்கண்டு அதை முறியடிக்க பெரியாரெனும் பேரரக்கன் நமக்கு கிட்டினார்.. இந்த சமூகத்தை மாற்றியமைக்க மறுமலர்ச்சியை கொண்டுவர நம் இனத்தின் சுவடுகளை உணர்ந்து சிதைக்கபட்ட கலாச்சாரத்தை மீட்டெடுக்க.. அடிமைபட்டுகிடந்த இந்த மானிட சமூகத்தை உணர்வூட்டி மறுமலர்ச்சி ஏற்படுத்திய புரட்சியாளர் பெரியார் பெரியாரின் அடிச்சுவட்டையொட்டியே நமது சித்தாந்தம் செயல்பாடு இயக்கம் எல்லாம் இருக்கும் .. தேர்தல் அரசியல் அதிகாரத்திற்கு நாம் வரவேண்டுமென்பதற்காக .. நம்மை ஒரு பொருட்டாகவே மதிக்காத பார்பனர்களை அதிகாரத்திலிருந்து இறக்கவேண்டும் என்பதற்காக நமக்கான உரிமையை நாமே உருவாக்கவேண்டும் நமது தேவைக்களுக்காக யாரையோ எதிர்பார்த்து கிடப்பதை விட நாமே நமக்கான சூழலை உருவாக்கிட அதிகாரம் நமக்கு தேவைபட்டது.. அதிகாரம் நமக்கு கிட்டியதால் தான் தமிழ்நாடென்று பெயர் மாற்றம் செய்தோம் .. இடஒதுக்கீடு முதல் கல்வி வேலைவாய்ப்பில் நம்மவர்கள் பெருமளவில் முன்னேற வழிவகை செய்தோம் ஒடுக்கபட்ட பிற்படுத்தபட்டவர்களின் வாழ்வில் வளமேற்ற பணிபுரிய முடிந்தது இன்றைக்கு இந்தியாவிற்கே வழிகாட்டியாக தமிழகத்தை 40 ஆண்டுகளுக்கு முன்பே நம்மால் தொலைநோக்கோடு வடிவமைத்து நடத்திகாட்ட முடிந்தது.. இதற்கெல்லாம் பெரியார் தந்த பகுத்தறிவுபாதையே காரணம் இன்றைக்கு மிடுக்கோடு மானத்தோடு கம்பீரமாக தமிழர்கள் வலம்வர பெரியாரின் பாதையில் மாறாமல் பயணித்த பெருமகன்கள் அறிஞர் அண்ணாவும் பேரருளாளன் கலைஞருமே காரணம்.. .. பெரியாரிய சிந்தனையிலிருந்து மாறி பயணித்தால் அது தமிழ் சமூகத்திற்கு கேடாகவே முடியும் .. சிறிய பின்னடைவு ஏற்பட்டதற்கே பெரிய விலை கொடுக்கவேண்டியிருந்தது .. திராவிட சிந்தாந்த்தை மாறி கடக்க நினைத்தவர்கள் வீழ்ந்து போனாலும் அவர்கள் ஏற்படுத்திய பள்ளங்களை சரி செய்ய நீண்ட காலம் தேவைபடும்.. சிறியதொரு பின்னடைவே ..ஆரியர்களுக்கு போதும் நம்மை எழ விடாமல் செய்திட.. எங்கோ இடறியது அறியாமல் போனதால் நாம் அடிமைகளிடமும் மானங்கெட்டவர்களிடமும் அதிகாரத்தை தந்துவிட்டு இன்று அவமானபடுகிறோம்.. பெரியாரை பின்தொடராமல்.. பெரியார் வகுத்த பாதையில் பயணிக்காமல் தமிழர்க்கு விடிவில்லை முன்னேற்றமில்லை திமுக சரியான பாதையில் பயணிக்கிறது மகிழ்ச்சி .. மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment