Tuesday, November 6, 2018
கருநாடகம் சொல்லும் சேதி
கர்நாடகம் சொல்லும் சேதி..
ஒருங்கிணைந்தால் பாசிசத்தை விரட்டலாம் பாஜக என்ற பார்பன நலனுக்கான அரசை வீழ்த்துவது அவ்வளவொன்றும் கடினமில்லை தொடர்ந்து எதிர்க்கட்சிகளை பிரித்து அதில் குளிர்காய்கிற செயலை ஆர்எஸ்எஸ் திட்டமிட்டு செய்கிறது நோக்கம் பாஜக என்ற ஆர்எஸ்எஸின் அரசியல் கட்சியை ஆட்சியில் வைத்திருந்தால்தான் ஐம்பதாண்டுகளுக்கு முன்பிருந்த சூழலுக்கு கொண்டு போகலாம் ..
1960 களின் இறுதிவரை இரயில்வேத்துறையில் அய்யங்கார்களே அதிகமிருந்தார்கள் ஆனால் இன்றைய நிலை எல்லாரும் பணி செய்ய வாய்ப்பை வேலை உறுதியை தொடர்ந்து படிபடியாக காங்கிரஸ் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகினும் செய்தது ..இது ஒரு உதாரணம் தான் இப்போது கல்வியில் கை வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள் நீட் என்று புதிய வடிவத்தை கையில் தூக்கி சாமானியனுக்கு உயர்க்கல்வி கிடைக்காமல் செய்யவேண்டும் ..
வசதி உள்ளவனுக்கே இங்கே கல்வி வேலைவாய்ப்பை ஏற்படுத்த மற்றவர்களெல்லாம் பக்கோடா விற்று பிழைத்துக் கொள்ள அரசே சொல்லும் ..
..
உண்மையில் எதிர்க்கட்சிகள் தற்சார்ப்போடே அணுகுகின்றன கர்நாடகாவில் காங்கிரஸும் மதசார்ப்பற்ற ஜனதாதளமும் பலமான கட்சிகள் ஆனால் சில மாநிலங்களில் காங்கிரஸ் இருக்குமிடமே தெரியாமல் இருக்கிறது தமிழகத்தின் நிலை வேறு .. வெறும் லெட்டர்பேட் கட்சி அளவிற்கு சுருங்கிவிட்டது இங்கே நிறைய கட்சிகள் சாதியை மதத்தை சொல்லி பிரிக்கிற செயலை மிக கச்சிதமாக செய்யும் .. உதிரிகள் ஆனால் பூமாலையாக தொடுக்க முடியாது காரணம் குறிப்பிட்ட பகுதிகளில் சில ஆயிரங்களை பெறும் அதுவும் வெகுசொற்பமான வாக்குவங்கியை வைத்துக்கொண்டு அகில இந்தியளவில் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் சமூகத்தின் மீதான அக்கறையில்லாத சுயசார்ப்புடையவர்கள் ..
..
ஊடகங்கள் இப்போதே திமுகவிற்கு 25 என ஆருடம் சொல்கிறது காங்கிரஸிக்கு ஒற்றை இலக்கமே அதிகமென செய்திவெளியிடுகிறது .. பிற உதிரிகட்சிகள் ஆளுக்கொன்றென பேரம் நடத்துவதாக மிக முக்கிய ஊடகங்கள் செய்தி வெளியிடுகிறது உண்மையில் திமுக அதிமுக தவிர்த்து பிற கட்சிகளின் செல்வாக்கு ஒரிரு விழுக்காடு கூட இல்லை என்பதுதான் உண்மை காங்கிரஸ் வாக்கு வங்கியெல்லாம் ஜாதி அமைப்பிற்கும் மத சமுதாய அமைப்பிலும் சேர்ந்துவிட்டது ஆனாலும் சிறியதொரு ஆதரவையும் அரவணைத்து செல்லவேண்டும் ஆனால் அதிகளவு இடங்களில் திமுக நிற்கவேண்டியது கட்டாயம் ..
..
பிற மாநிலங்களில் ஆந்திராவில் சந்திரபாபும் மேற்குவங்கத்தில் மம்தாவும் உ.பி.யில் அகிலேஷ் மாயவதி என கூட்டு சேர்ந்தால் பாஜகவிற்கு மரண அடி தரலாம் அதை நோக்கிதான் ராகுலின் நகர்வு இருப்பதாக அனுமானிக்கிறேன் .. பிரதமர் வேட்பாளர் மீதான பார்வையை அவர் மாற்றி வைத்திருக்கிறார் நாட்டு நலன் மக்கள் படும் அவதி நாட்டை சுரண்டு கார்ப்பரேட் கும்பல்.. வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சி மதத்கை தவிர வேறெதும்,தெரியாத பாஜகவிடம் நாட்டை தந்ததால் மாட்டுக்கு கிடைக்கிற மருத்துவம் பச்சிங்குழந்தைக்கு கிடைக்க மறுக்கிற அவலம் .. பொய்யையும் போட்டோ சாப்பையும் காட்டி பெருமை பேசி திரிகிற கூட்டத்தை விரட்டவேண்டியது அவசியம் .. மேக்இன் இந்தியா என்று சொல்லி சீனாவிடம் சிலை செய்கிற கும்பலிடம் போட்டோவிற்கு போஸ் காட்டி நிற்கிற தலைமையிடம் நாடு சிக்கி சீரழிவதை தடுத்து .. அறிவுடையோரிடம் ஆக்கபூர்வமான செயல்பாட்டாளர்களிடம் மனிதனை தேசத்தை நேசிக்கிறவரிடம் ஆட்சியை தருவோம்,..
ஒருங்கிணைவோம் ..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment