Wednesday, December 5, 2018
ஜெ.ஜெ...
செல்வி.ஜெ.ஜெயலலிதா ..
இரண்டாம் ஆண்டு நினைவில்.. தமிழகத்தில் ஒரு பெண் தலைவர் அதிகாரத்திற்கு வருவதென்பது மிக கடினமான சூழலில் வந்த வழி புறவழியெனினும் எல்லாநிலைகளையும் கடந்து நின்றவர் ..ஒரு பார்பன குடும்பத்தில் பிறந்தவர் என்ற ஒற்றை காரணத்திற்காக இந்திய ஒன்றிய அரசு இவருக்கு காட்டிய சலுகைகள் அதன் பலன்களை அனுபவித்தவர் .. 1996ல் ஆனந்த விகடன் .. இனியும் இவருக்கு வாக்களித்தால் நாட்டிற்கு தமிழக மக்கள் செய்கிற துரோகமென்று தலையங்கம் தீட்டியது .. இதே கருத்தை தினமணியும் சொன்னது .. ஆனால் காலபோக்கில் வராது வந்த மாமணியென (ராஜாஜிக்கு பிறகு) பார்பன சமூகம் கொண்டாட தொடங்கியது இறுதி தேர்தல் கூட உடல்நலம் தளர்ந்த நிலையிலும் சோ மேடையேறி இவருக்கு வாக்கு கேட்டார் .. காரணம் ஊழல் பகல்கொள்ளை வாக்கிற்கு பணம் என்ற எல்லா ஜனநாயக மரபுகளையும் மீறி இவர் செயல்படுகிறாரென்று அறிந்தும் இவரை விட்டால் பிராமண சமூகத்திலிருந்து ஒரு தலைவரை தமிழ்நாடு ஏற்காதென்ற உண்மையை உணர்ந்திருந்தார்கள் .. அதனால் தான் அவரின் தவறுகள் கூட கண்டுகொள்ளாத நிலையை கடந்து போற்றபடுகிற பொய்யான கட்டமைப்பை ஏற்படுத்தினார்கள் ..
..
ஊழல் குற்றசாட்டில் நிரூபிக்கபட்ட ஒருவர் அதிகாரத்தில் வர நீதிமன்றமே மறைமுகமாக உதவியது வேறெங்கும் காணமுடியாது .. மத்திய அரசின் தூதுவர்களாக தண்டனை பெற்றிருந்தபோது கூட மத்திய அமைச்சரே சந்தித்தை எந்த ஊடகமும் கேள்வி எழுப்பவே இல்லை இதே வேறொருவராக இருந்திருந்தால் மொத்த ஊடகமும் கொந்தளித்திருக்கும்.. தீர்ப்பை காலதாமதப்படுத்தி ஜெயலலிதா ஆட்சியில் தொடர அனுமதித்தது நீதித்துறையின் மீதான பாசிசத்தின் பிடியை தமிழக மக்கள் உணர்ந்ததோடு நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையும் போனது நீதி வல்லவனுக்கானது மட்டுமல்ல மநுநீதிக்கானதென்பதையும் உணர்ந்தார்கள்..
..
ஜெயலலிதாவை இரும்பு பெண்மணியென ஒருவகை மாயபிம்பத்தை உருவாக்கியிருந்தார்கள் .. உண்மையில் மிகப்பெரிய கோழை ..தன் வழக்கை கூட தைரியத்தோடு எதிர்கொள்ள அஞ்சியவர் .. தீர்ப்பை விலைக்கு வாங்க நிறைய பேரம் பேசியும் உயர்நீதிமன்றத்தில் அப்பட்டமாக அத்துமீறியும் .. கடைசியில் அதை நினைத்து நினைத்து கவலைக்கொண்டவராகவே இருந்தார்.. தீர்ப்பிற்கு முன்பு எனக்கு நீரழிவு நோய் இருக்கிறது தண்டனையை குறைக்க சொன்னார்..
அவருடன் 40 ஆண்டுகள் வாழ்ந்த ராஜம்மாள் ஜெயலலிதா தன் வாழ்நாளில் அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளின் முடிவுகள் குறித்து மிகவும் அச்சம் உள்ளவராக வாழ்ந்தார். இதனால் அவர் நிம்மதியை இழந்து டென்ஷனுடன் தான் வாழ்ந்தார். அதன் காரணமாகவே அவர் சுகவீனமுற்றார். அவர் தனது தீர்ப்பு குறித்தும் அதன் பின்னர் சிறைவாசம் குறித்து மிகவும் அச்சம் அடைந்தார் என்கிறார்
உண்மையும் கூட சிறைவாசம் அவ்வளவு ரசகரமானதில்லை ஜெயலலிதா தன்னை தைரியமானவராக காட்டிக்கொண்டபோதும் தீர்ப்பு குறித்த பயம் அவரை பலவீனமடைய செய்தது தீர்ப்பு தனக்கு பாதகமாக வருமென்றே அஞ்சினார்.. கூடா நட்பு ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரது வாழ்வில் திசை திருப்பியிருக்கிறது.. சினிமா தொழில் இல்லறவாழ்வு என அவர் விரும்பியது ஏதுமே கிடைக்காமல் முரணான மனநிலையை ஏற்படுத்தியது. ஆணாதிக்கத்தின் மீதான வெறுப்பு அடிமைபடுத்திட தூண்டியது .. உறவின்முறை கூட தூய்மையாக இருந்ததில்லை என்று அவரே கூறியிருக்கிறார்
தூய்மையான நட்பை நான் வாழ்நாளில் சந்தித்தே இல்லை என்றார்.. கடைசியில் மர்மமான முறையில் யாருக்குமே விடைதெரியாத மரணமாய் போனது ..
..
சமூகத்திற்கு எதை செய்தோம் என்பதில்தான் இருக்கிறது ஒருவரின்
இறவாப்புகழும் இறவா பழியும் ..
...
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment