Wednesday, November 28, 2018

அம்பாள் எந்த காலத்திலடா பேசினாள் அறிவுக்கெட்டவனே.. 65 ஆண்டுகள் கழித்தும் கலைஞர் பெருமகனின் எழுத்து பாசிசத்தை அலறவிடுகிறதென்றால் எத்தனை கூர்மையான வாளாய் அறுத்திருக்கும் .. மீண்டுமொருமுறை சொல்லி பாருங்கள் அம்பாள் எந்தகாலத்திலடா.. பேசினாள் பொதுவாக நம்மவர்கள் அம்மன் என்றுதான் அழைப்பார்கள் ஆளாளுக்கொரு அம்மனை கொண்டுவந்து குலவழிபாட்டின் தொடர்ச்சியாய் நிற்பான் .. ஆனால் பார்பனர்கள் தான் அம்பாள் ஆண்டாளென கடவுளைகூட உயர்சாதியாக பார்பார்கள் .. அதை கூட நுணுக்கமாக எழுத்தில் கொண்டுவந்திருப்பார் .. சட்டென்று புரியாது இதெல்லாம் இன்றைக்கு மதம் பேசி திரிகிறவர்களுக்கு நாம் தான் விளக்க வேண்டியிருக்கிறது .. கோவிலில் குழப்பம் விளைவித்தேன் கோவில் கூடாதென்பதற்காக அல்ல அது கொடியவரின் கூடாரமாய் ஆகிவிட கூடாதே என்பதற்காக.. பூசாரியை தாக்கினேன் பக்தி வேண்டாமென்பதற்காக அல்ல பக்தி பகல்வேஷமாய் மாறிவிட கூடாதே என்பதற்காக.. அந்த கொடியவரின் கூடாரமாய் ஆகிவிட கூடாதென்பதற்காக தான் .. பார்பனர்கள் பிடியில் இருந்த கோவில் சொத்துகள் அறநிலையத்துறையின் கீழ் வந்ததற்கு காரணம்.. .. கலைஞர் பராசக்தியில் படத்தில் பிச்சைகாரர்கள் நலவாரியமென்பார் .. ஆட்சிக்கு வந்ததும் செய்துகாட்டியவர் .. திரைபடங்களில் சொல்லபடுகிற முற்போக்கான விடயங்களை தன் ஆட்சிகாலத்தில் அதை சட்டவடிவமாக்கியவர் .. அழகு தமிழை அறிமுகபடுத்தி.. தமிழனின் ரசனையை அறிவின்பால் கொண்டுவந்தவர் அவரது வசனத்தை மனபாடம் செய்தான் தமிழன் .. அதை அலசி ஆராய தொடங்கினான் இவ்வளவு விசயமா இதில் என வியந்தான் .. சமஸ்கிருதம் கலந்த தமிழை வீழ்த்தி தேன்தமிழை தமிழர்கள் நாவில் கொண்டுவந்து பேசவைத்தவர் கலைஞர் .. சுவாமி நாதா என்ற அடிமைத்தனத்தை பேசிகொண்டிருந்ததை மாற்றி குணசேகரன் என பெண்ணை அழைக்கவைத்து பெண்ணுரிமை பேச வைத்தவர் .. அவரின் முற்போக்கு, சமஉரிமை சமூகநீதி பேசும் எழுத்துக்களை இத்தனை காலம் கடந்தும் பாசிசவாதிகள் கண்டு அஞ்சுகிறார்களென்றால் கலைஞரின் எழுத்து எந்தளவு கதறவிட்டிருக்கிறது.... .. கலைஞரின் எழுத்தில் குறைகளே காண முடியாது காலம் கடந்தும் பேசும்.. தொலைநோக்கு சிந்தனையை பகுத்தறிவை தான் கொண்ட கொள்கையை யாருமே சட்டென்று தெரிந்துகொள்ளாதவகையில் ஏற்றியிருப்பார் .. மந்திரிகுமாரியில் அண்ணா நீங்கள் தான் தளபதி என வசனம் வரும்.. ஒருமுறை பழம்பெரும் இயக்குனர் கிருஷ்ணன் பஞ்சு தன் நினைவுகளை இப்படி பகிர்ந்துகொண்டார் .. அண்ணாவின் வசனத்தில் கூட நீளம் கருதி சில வசனங்களை நீக்கிவிட்டு படத்தை திரையிட்டுவிட முடியும் கலைஞர் வசனத்தில் ஒரு வார்த்தை வெட்டிவிட்டால் கூட அந்த காட்சியின் பொருளே மாறிவிடும்.. திரைக்கதை போக்கையே மாற்றிவிடும் என்றார் .. கூர்மையான நுணுக்கமான விடயங்களை பேசும் அவரது எழுத்தும் பேச்சும்.. அவரது எழுத்து நூற்றாண்டு பின்னிட்டாலும் பேசபடும் கதறவிடும் .. #கலைஞர் .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment