Friday, December 14, 2018

தளபதி ..தலைவர்

செந்தில் பாலாஜி திமுகவிற்கு வந்ததை சிலர் விமர்சித்தும் வரவேற்றும் எழுதுகின்றனர் .. சில ஊடகங்கள் ஏதோ செய்ய கூடாததை செய்துவிட்டதைப்போல கூவுகின்றன .. பிரபலமானவர்கள் திமுகவை விட்டு போனால் வரவேற்பதையும் அது சரியான செயல்பாடு என்பதும் அதிமுகவிலிருந்து யாராவது வந்தால் அதிகம் கவலைக் கொள்வதும் பதறுவதும் ஊடகங்கள் தொடர்ந்து செய்கின்றன திமுகவிலிருந்து யாராவது வெளியேறினால் கொண்டாடியிருக்கிறார்கள் .. ஈ.வி.க.சம்பத் கண்ணதாசன் போன்றோர் வெளியேறிபோது திமுகவே தடுமாறுவதைப் போல தலையங்கம் தீட்டியவர்கள் தாம் இவர்கள் .. திரு.ஸ்டாலின் அவர்களின் அபாரமான செயல்பாடு எதிரிகளுக்கு இப்போதுதான் புரிய தொடங்குகிறது நிதானமான காய் நகர்த்தல் இயக்கத்தை வலுசேர்க்க எப்படிபட்ட நகர்வுகளை செய்தால் பலன் அளிக்குமென ஆய்ந்து செயல்படுகிறார் .. தோழமைகளோடு கருத்தொற்றி மிகப்பெரிய வெற்றியை ஈட்ட இப்போதிலிருந்தே அடித்தளம் அமைப்பது நல்ல பலனை தரும் .. கொங்கு மாவட்டத்தில் திமுக பலவீனமாக இருப்பதைப்போல ஒரு தோற்றம் அது ஏறத்குறைய சரியும் கூட அதை சரிசெய்வதற்கு பிரித்தாளும் ராஜ தந்திரம் அவசியம் தேவை ..இன்னும் சிலர் பிற மாவட்டங்களிலிருந்து வரகூடுமென தகவல் சொல்கிறது .. ஏற்கனவே திமுகவில் இருந்தவர்கள் தான் காலசூழற்சியில் பிரிந்து சென்றவர்கள் வழிதவறியவர்கள் திரும்பவும் வருகிறார்கள் வருவார்கள் ... .. தொண்டர்களை அரவணைத்து செல்லும் தலைவர் என்கிறார் செந்தில்பாலாஜி ..ஆம் "மாவட்டங்களில்" இருந்த திமுகவை உடைத்து தனித்தனியே வட்ட, ஒன்றிய கிளை கழகத்தவர்களை சந்தித்து கருத்து கேட்டு அவர்களின் கருத்தில்/குறைகளில் உள்ள உண்மையை அறிந்து மெல்ல சீர்செய்யபடுமென்று வாக்குறுதி தந்தவர் சிலரை அதிரடியாக மாற்றி இங்கே புதியதொரு தடயத்தை தோற்றுவித்திருக்கிறார்.. கலைஞரைப் போல அல்ல நான் எல்லாவற்றையும் மன்னித்தருள என்று எச்சரிக்கை செய்தவர் .. பொதுவாழ்வில் நேர்மை மக்களின் ஆதரவோடே அதிகாரம் வரவேண்டுமென்ற உறுதியான நிலைப்பாடு வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம் அடிமட்ட தொண்டனை சந்திந்து கலந்துரையாடுவது .. அனைவரையும் அணுசரித்து செல்லும் கலைஞரின் பாணி .. பாதை தேர்வு செய்து அதில் திடமான நின்று களம்காணும் உறுதி.. ஐம்பதாண்டு கால அரசியல் அனுபவம் தளபதியை செம்மைபடுத்தியிருக்கிறது .. கலைஞரிடம் கற்ற அரசியல் அறிவும், ஓய்வறியா உழைப்பும் தலைமைப் பண்பும் நல்லதொரு எதிர்காலத்தை தரும்.. திமுகவின் எதிர்காலத்தில் தான் இனத்தின் மொழியின் மண்ணின் நலன் அடங்கியிருக்கிறது .. .. #தலைவர்_தளபதி

No comments:

Post a Comment