Thursday, November 8, 2018

பகல்கொள்ளை

திரைப்படங்கள் எதோ நல்லவிடயத்தை சொல்வதைப்போலவும் ...அதில் பங்குபெரும் கலைஞர்கள் தேவதூதனைப்போலவும் இங்கே ஒருவித நாற்றமெடுத்த நம்பிக்கை விதைக்கபடுகிறது .. கருப்பு பணம் அதிகம் புழங்கும் இடமும் கணக்கில் காட்டாத அல்லது மறைக்கிற செயலும் மற்ற துறைகளை விட திரைத்துறையில் அதிகம் .. எவ்வளவு செலவு செய்தார்களென கணக்குமில்லை நடிகர்களுக்கு மறறும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு எவ்வளவென்று சரியான கணக்கை சமர்பித்ததில்லை .. கேளிக்கை வரியை சரியாக செலுத்தாத துறையும் கூட.. டிக்கட்டில் அச்சிட்ட தொகைக்கு மட்டுமே வரி செலுத்தபடுகிறது ₹100 டிக்கட் ₹2000 வரை விற்கபடுகிறதென்ற செய்திகள் வரும் போதும் வரி என்னவோ ₹100க்கு மட்டும் தான் .. ஆனால் இவர்கள் புனிதர்களைப்போல வேஷம் கட்டுகிறார்கள்.. நாட்டை தூய்மைபடுத்த வந்த தேவதூதனைப்போல அவதாரம் எடுக்கிறார்கள்.. .. புராணம் கால படங்கள் .. சரித்திரத்தை பேசிய படங்கள் தொட்டு திராவிட இயக்க கொள்கைகளை பேசிய படங்கள் ..சாதிய பெருமை பேசிய படங்களென எல்லாவற்றிலுமே கதாநாயகனை உத்தமபுத்திரனாய் சித்தரித்து ஒருவித மாய வலைப்பின்னி .. நிழலை நிஜமென நம்பவைத்த மூளைச்சலவைகள் நடந்துக்கொண்டுதானியிருக்கிறது .. திரைப்படத்தை அரங்குலேயே விட்டுவிட்டு மீண்டு வெளிவருகிற மனோநிலை நமக்குள் ஏற்படாத வரை நடிகர்கள் தங்களை ராஜாவாக எண்ணுவதை தடுத்திட முடியாது .. அதிக வரிஏய்ப்பு செய்கிறவன் ஊழலைப்பற்றி வாய்கிழிய வசனம் பேசுவான் .. ஆஹா இதோ நல்லவன் ஒருவன் நம்மிடையே வந்துவிட்டான் பார் என நாமும் மெய்மறந்து கைத்தட்டி ரசிப்போம் அதையும் வாழ்வின் உண்மையென நம்புவோம் .. திரைக்குள் இருந்து நம்மால் வெளிவர முடியாமல் சமுதாயத்தையே சீரழிப்போம்,.. .. இலவசங்களை ஒழிப்போமென சொல்கிறவர்கள் வரிச்சலுகைக்காக தமிழில் வலுகட்டாயமாக பெயர்வைத்த கதையெல்லாம் நாடறியும் .. கதை திருட்டை செய்கிற அடுத்தவன் அறிவை தனதென்று சொல்கிறவன் மகாயோக்கியனைப்போல நம்மை நம்ப சொல்வதுதான் வேடிக்கை .. கோமளவள்ளி என பெயர் வைத்து மறைந்த முதல்வர் ஜெயாவை விமர்சிக்கும் முயற்சி அவர் இருந்த போது எங்கே போனது .. அவரின் அரசியல் நிலைபாட்டின் மீது நமக்கு விமர்சனமிருக்கலாம் ஆனால் அதை அந்தந்த நேரத்தில் அல்லது எப்போதெல்லாம் நம்மை வழிகேடாக நிறுத்துகிறதோ அப்போதெல்லாம் பேசலாம் .. ஆனால் அதற்கு அரசியலை கையிலெடுக்க வேன்டும் ..ஒரு திரைப்படத்தில் விமர்சிப்பதென்பது அதுவும் இலவச திட்டங்கள் மக்களுக்கு பயன்தரதக்கதாக இருப்பின் அது எப்படி தவறென்று சொல்லமுடியும் வாக்களிக்க பணம் கொடுப்பதை விமர்சிக்கலாம் ஆனால் வறியவர்களுக்கான நலத்திட்டங்களை ஒப்பிடுவதென்து ஏற்கமுடியாதது ..கோடிக்கணக்கில் பணத்தை கடனாக பெற்று கார்ப்பரேட் முதலாளிகள் நாடுகடந்ததை விமர்சிக்காமல் கடந்து போவது கூட ஒருவகை அநீதிதான் .. மக்கள் நலத்திட்டங்களால் பயன்பெற்றோரை கேவலபடுத்துவதை போல இருக்கிறது .. .. தியேட்டர்களில் பகல்கொள்ளையடிப்பதை ஏன் யாரும் கேள்வி கேட்பதில்லை குறிப்பிட்ட அளவிற்கு மேல் டிக்கட் விலை வசூல் செய்ய அனுமதிக்க கூடாது ..பலநூறு கோடிக்கணக்கில் முதலீடு செய்வதை தவிர்த்து சில கோடிகளுக்குள் நல்ல படத்தை தந்தால் வெற்றிபெற முடியும் .. தியேட்டர்களில் அதிக வசூல் செய்வதை அரசு தடைபோட வேண்டும்,.. இரண்டே நாளில் ₹100 வசூல் என்பதெல்லாம் பகிரங்கமான கொள்ளை .. .. வரிஏய்ப்பு .. தியேட்டர் வசூலில் பித்தலாட்டம் நடிகரின் சம்பளத்தில் கருப்புபணம் இவையெல்லாம் சினிமாவின் அங்கமாகிவிட்டபிறகு .. திரையில் மகாயோக்கியனாக அவதாரமெடுப்பதை சகிக்கவில்லை .. #அரிதாரம் .. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment