Saturday, December 8, 2018
குடமுருட்டி
#குடமுருட்டி..
காவிரியிலிருந்து
திருகாட்டுப்பள்ளியில் பிரியும் ஆறு..
எங்களுர் கரையை..நனைத்து கொண்டே...செல்லும்..
குடமுருட்டி .
என் வாழ்வின் எல்லாநிலைகளிலும்..கலந்தது..
சிறுவயதில்..
நிரம்பிவழியும் ஆற்றை..பார்த்து பிரம்மிப்போடு கூடிய பயம் ..
பின்னாளில்..என்னோடு..
என்உணர்வோடு இரண்டறக்கலந்தது..
அக்கரைக்கு படகு செல்ல..காத்திருப்பது சுகமானவிடயம்..
எங்கள் பெரியதந்தையார்..அக்கரையில் கொஞ்சம் நிலம் வைத்திருந்தார் ..
அடிக்கடி படகுப்பயணம் கிடைக்கும் ..
அதெல்லாம் மலரும்நினைவாய் போனது..
குடமுருட்டி ..
என் வாழ்வில் பின்னிப்பிணைந்தது..
அக்கரைக்கு நீந்திச் செல்ல போட்டி போட்டு சென்றது,
வற்றியஆற்றுமணலில் கபடி ஆடியது ..இப்படி நிறைய..
தனிமையில் அமர்ந்து..
புத்தகம் வாசித்தது..
சின்னசின்னதாய் கவிதைகள்
யாருமறியாமல் எனக்குநானே பாடிமகிழ்ந்தது..
அந்திப்பொழுதில்,
மையிருட்டில்,
மயிலிறகால் வருடியதை,
விரல்கோர்த்து..
கவிதையாய்..
சிலவார்த்தை
பொய்யில் நனைத்து..
மொழிந்ததை..
இந்த..#ஆறு அறியும்...
உஸ்தாத்..ஹபீபுல்லாவிடம்..
சிலம்பம் பழகிய
பயிலரங்கம் இந்த ஆறு..
வாழைப்பழம்..
விற்றுக்கொண்டுவரும்
மாக்கானிடம்
குறவஞ்சியை..
பயின்றதும்..
#குடமுருட்டியில்..தான்
என் மெளனம்..
என் தனிமை..
என்..காதல், காமம்
கவிதை,
என் #அந்தரங்கம் ..
இந்த ஆறறியும்..
என் சோகம் சுகம்
அழுகை ஆணவம் திமிர்
வீரம் விளையாட்டு எல்லாமறிந்த இந்த ஆறு..
என் வாழ்வோடு..பின்னிப்பிணைந்தது...
இப்போது வறண்டு..
திட்டுத்திட்டாய்..
காட்டான் செடிகள் ஆக்ரமித்து அழகிழந்து போனாலும்..
நிரம்பியோடும்..
எனது குடமுருட்டி..
என்றும் மாறாதநினைவுகளை..
பசுமையாய் நினைவில்..
..
இன்னும் நிறைய நினைவுகளை தாங்கி..
ஓடிக்கொண்டுதான் இருக்கிறது எம் மண்ணை நனைத்துக்கொண்டே .. என்னையும்
..
#குடமுருட்டிஆறு...
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment