Monday, December 31, 2018

வேறென்ன வேண்டும்

வேண்டும்..வேண்டும்.. 2019 ----------------------- மனம் எனும்.. மாய பிசாசை அடக்கி ஆள வேண்டும். என்னுள் மிருகம் எழுந்திடாது காத்தல் வேண்டும் ..மன.. அமைதி வேண்டும்.. அறிவெனும் ஊற்று .. வற்றாது வேண்டும். தமிழ் மீது பற்று...என்றும்.. ஊற்றாக வேண்டும்.. என்னுள்.. ஊற்றாக வேண்டும்.. என்.. கயமை ஒழிய வேண்டும்.. காமமும் களவும் .. அளவோடு வேண்டும். அளவிலா..கற்றல் வேண்டும்.. என் தேடல் பணி தீராது வேண்டும்.. அழகான ..பொய்யும்.. அளவிலா மெய்யும் வேண்டும்... முகம் மூடா.. அகம் மூடா. . அறம் தவறா.. நெறி பிறழா.. வாழ்வு வேண்டும். மதி கெடா.. மடமை தேடா .. வழி வேண்டும்.. அன்பு வேண்டும் அடக்கம் வேண்டும் கொஞ்சம்..ஆணவம்.. கொஞசம்அகங்காரம் வேண்டும்.. அமுதாய்..என் தமிழ் ஆறாய் பெருக்கெடுத்து .. என் நெஞ்சில்..வேண்டும்.. மூடம் காண முழுமதி (அறிவு)வேண்டும் .. அகத்தில் தூய்மையும்.. புறத்தில் புன்சிரிப்பும்.. போலித்தனமில்லாமல்.. வேண்டும்.. புதிது..புதிதாய் .. அறிவு .. நாள்தோறும் வேண்டும்.. சான்றோர் சொல் கேட்க வேண்டும் .. .. தினம் தினம் .. ஒரு புத்தகம் .. ஒரு..பக்கம் .. அல்லது ஒரு வரியாவது.. புதிதாய்.. நான் அறிதல் வேண்டும் என்னை.. நானே..எடை போட எதிரி வேண்டும்.. எதிரி.. பலமானவனாய்.. இருத்தல் நலம்.. சுயம் நான் தெளிய வேண்டும். சுயமரியாதை ..வேண்டும் சரியென்று பட்டதை செய்யும் ஆற்றல் வேண்டும்.. காதலும் காமமும் கலந்தே வேண்டும்.. காதல் வேண்டும்.. அதுவும் கனிந்தே வேண்டும்.. அறிவுடையோர் நட்பும்.. அவர்தம் அறிவுரையும் .. வேண்டும்.... எதையும் போராடி பெறும் ஆற்றல் வேண்டும் .. .. பொய் குறைத்து .. மெய் பேசும் நிலை வேண்டும் .. புறம் பேசா .. அடுத்தவரை.. பழி பேசா .. மனம் வேண்டும் .. .. கோபம்.. ஆத்திரம்.. அடங்காமை. அதிக திமிர்.. இவையெல்லாம் .. கொஞ்சமாவது .. குறைய..வேண்டும்.. நான்.. குறைக்க வேண்டும்.. அறிவு.. எதையும்.. பகுத்தாயும்.. அறிவு..வேண்டும்.. .. பண்பாளர்.. பகுத்தறிவாளர்.. அறம் பேசுவோர்.. ஆன்றோர்..நல் சான்றோர்... நட்பு வேண்டும்.. உள்ளொன்று வைத்து. புறமொன்று பேசாத.. நல்உள்ளம் வேண்டும். எப்போதும் ..வேண்டும் .. .. என்றும்..நான்.. நான் .. நானாக வேண்டும்.. .. வேறென்ன கேட்டுவிடபோகிறேன்.... .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment