Saturday, December 15, 2018

கலைஞர் சிலை

மரணம் மாவீரனுக்கு தரப்படும் மலர்செண்டு.. கலைஞர் .. தமிழர்களின் தவம் .. இந்த நூற்றாண்டின் சிறந்த தலைவர்களில் ஒருவர் .. சிறந்த மனிதர்களில் முதன்மையானவர் .. தான் வாழும்காலம் வரை போராடி .. மரணத்திலும் போராட்டத்தை கைவிடாதவர் .. எளிதில் கிடைக்கும் எதுவும் சுவைக்காது நிலைக்காதென்று உணர்த்தி எதையும் போராடி பெறு என்ற வாழ்வியல் தத்துவத்தை வாழ்ந்துகாட்டி சென்றார் .. .. அரசியல்வாதி இலக்கியவாதி படைப்பாளி பேச்சாளர்.. என பன்முக ஆளுமையாளர் ..ஒவ்வொன்றிலும் பேராளுமை என் அறிவிக்கெட்டியவரை உலகின் இவ்வளவு ஆளுமைகளை கொண்டவர் இத்தனை எளிமையாய் கண்டதில்லை .. கடைக்கோடி மனிதனை கண்டு மகிழ்வித்த மகிழ்ந்த தலைவர் யாருமில்லை அவரை சந்திக்கிறவர் எதிரியாய் இருந்தாலும் அவர் முன் கரைந்து போனதைதான் கண்டிருக்கிறோம் எந்தவொரு சிக்கலையும் தீர்க்கும் அரும் மருந்தாய் தமிழர் வாழ்வில் வந்தவர் .. இந்த தமிழ் சமூகத்திற்காக காலமெல்லாம் உழைத்தவர் .. எதையும் ஆய்ந்தறிய சொன்ன பேராசானின் துணைக்கொண்டு தொலைநோக்கு பயன் தரும் திட்டங்களை தீட்டியவர் முற்போக்கு சிந்தனை கடைக்கோடி மனிதனின் மீதான அக்கறை .. விளிம்புநிலை மக்களின் முன்னேற்றம் .. பட்டியலினத்தவரின் கௌரவம்.. ஒடுக்கபட்ட மக்களின் அரணாய் .. பிற்படுத்தபட்ட சமுகத்தின் உரிமைகளை மீட்டெடுத்தல் .. காலகாலமாய் அடிமைபட்டு கிடந்த சமூகத்தை மேம்படுத்த அயராத உழைத்த ஒப்பற்ற தலைவர் கலைஞர்.. .. சமூகநீதியை நிலைநாட்ட தன் ஆட்சி காலமெல்லாம் சிந்தித்து செயல்படுத்தியவர் .. பாபுஜெகஜீவன்ராம் தொட்ட சிலை தீட்டென்று கழுவினார்கள் அந்த பாபுஜெகஜீவன் ராமிற்கு சிலை வடித்து .. பார்பன வெங்கட்ராமனை கொண்டு திறக்க செய்தவர் ..எந்த செய்கையிலும் தீர்க்கமான பார்வையை கொண்டு புதிய சேதியை சொல்லும் பேராற்றல் ..சூத்திரனுக்கு சொர்க்கம் கிடையாதென்றவனிடம் .. சொர்க்கவாசலுக்கு வா என்கிறாயே என கேட்க வைத்து .. அறநிலையத்துறையில் அதிகளவில் சூத்திரனை அமர்த்தியவர் .. எல்லாவற்றிக்கும் ஓர் எதிர்வினை உண்டென்று உணர்த்தியவர் .. குமரியின் அடையாளமாய் விவேகானந்தர் என்ற மத அடையாளத்தை மாற்றி குமரியின் அடையாளமாய் திருவள்ளுவர் சிலை வைத்து நாட்டிற்கு தமிழனின் பெருமையை உணர்த்தியவர்.. தமிழனின் மாண்பை காத்து அவர் வாழ்வில் உயர என்பதாண்டுகாலம் உழைத்தவர் .. அவர் திட்டங்களை விவரித்தால் ஆயிரம் பக்கம் வரும் .. அனைத்துமே இந்திய ஒன்றியமே இன்று கொண்டாடி பின்பற்ற தொடங்கியிருப்பதிலிருந்தே அதன் உண்மை புரியும்.. முற்போக்கு பேசிய மாநிலங்கள் கூட பெண்களுக்கான சமஉரிமையை பேச தயங்கிய காலத்திலேயே சொத்து உரிமை என்று சட்டமியற்றி ..இந்திய தேசத்திற்கே வழிகாட்டிய பேரருளாளன் .. மங்கையரை உயர்த்திபிடிக்காமல் முன்னேற்றம் காணாமல் சமூக முன்னேற்றம் சாத்தியமில்லை என்றவர் .. .. கலைஞருக்கு சிலை குறித்த #பெரியாரின்_பார்வை.. மாண்பிமை அமைச்சர் கலைஞர் அவர்களுக்கு சென்னையில் பொதுமக்களால் சிலை வைப்பது அறிந்து பார்பனர்கள் தங்கள் சாதி வழக்கப்படி பொறாமைகாட்டி விஷம கருத்துக்களையும் சாபமிடுவதையும் அள்ளிகொட்ட ஆரம்பித்துவிட்டார்கள் .. அதனால் தனக்கு சிலைவைக்க வேண்டாம் நான் அதற்கான தகுதியை வளர்த்துக்கொள்ளவில்லையென சொல்லியிருக்கிறார் . என்னை பொறுத்தவரையில் பார்பன விசமத்திற்கு பயந்து தனக்கு சிலை வேண்டாமென்பதை கண்டிப்பதுடன் ..அவருக்கு சிலைவைக்கும் யோசனையை கைவிட வேண்டாமென சிலை கமிட்டியை கேட்டுக்கொள்கிறேன் .. அவர் சிலையை நானே வந்து திறந்து வைக்கிறேன்.. என்றார் பெரியார் விடுதலை28-05-68.. .. #கலைஞர்_பேரருளாளன் #StatueOfKalaignar .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment