Saturday, December 1, 2018
தளபதி படை தரணி ஆளும்
திமுக கூட்டணியில் அங்கீகரிக்கப்பட்ட சின்னம் இல்லாத கட்சிகள், #உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வலியுறுத்துவோம். ஏற்பதும் மறுப்பதும் அவர்கள் விருப்பம்!..
பாமக தேமுதிகவை கூட்டணிக்கு அழைப்பது சுயமரியாதைக்கு இழுக்கு..
#திமுககொள்கைபரப்புச் செயலாளர்
மானமிகு ராசா
..
எப்போதுமே எதிராளிகளை கண்டு அஞ்சியதில்லை திமுக கொள்கை சார்ந்து பயணிக்கிற போது தேர்தல் மக்கள் பணி செய்ய அங்கீகாரம் என்பதில் தெளிவோடு செயல்படுகிற மக்களுக்கான இயக்கம் எப்போதெல்லாம் திமுகவை புறக்கணிக்கிறார்களோ அப்போதெல்லாம் பாதிப்பை மக்கள் உணருகிறார்கள் சிலர் திமுகவின் வெற்றியை தடுக்க அல்ல தடைபோட பெரும் முயற்சி எடுப்பதும் அதன் பலனை அவர்கள் அனுபவிப்பதும் காலம் உணர்த்தியிருக்கிறது .. சென்ற சட்டமன்ற தேர்தலில் தந்த காயம் இன்னும் ஆறியபாடில்லை ஆனால் சமூகநலன் கருதி இணைத்துக் கொள்ள தயார் ஆனால் வீம்பு பேசி திரிவதும் தான்தோன்றித்தனமாக தொகுதியை அவர்களே அறிவித்துக்கொள்வதையும் ஏற்க முடியாது .. தொல்.திருமா சிதம்பரத்தில் நிற்க போவதாக சொன்னது அவரது விருப்பம் ஆனால் திமுக கூட்டணியில் என்று சொன்னது அதிகபிரசிங்கித்தனம் அதனால் தான் பொருளாளர் துரைமுருகன் கூட்டணியெல்லாம் இல்லை என சொல்ல நேர்ந்தது .. அதேபோலதான் தன்னை சந்திக்கிறவர்களிடம் மதிமுக நான்கு இடங்களை கேட்குமென சொன்னதும் திமுக சாட்டை வீச வேண்டியிருந்தது .. முதலில் இவர்களின் பலமென்ன என்பதும் இப்போதைய சூழலில் இவர்களின் நிலை என்ன என்பதையும் உணரவேண்டும் ..
பாமக தேமுதிகவை யாருமே சட்டைசெய்வதில்லை பாலில் விழவேண்டிய பழம் .. சகதியில் விழுந்துகிடக்கிறது.. தகுதி தெரியாமல் ஆடியதால் காலுடைந்த நிலையில் பாமக.. அதிகம் பேசி முகமிழந்து நிற்பவர்களை .. திமுகவை தொடர்ந்து நையாண்டி செய்து அதன் மூலம் தங்களை நிலைநிறுத்தலாமென்கிறவர்களை நாம் சேர்க்க தேவையில்லை ..காலம் இவர்களை மறந்துவிடும்..
..
மக்களின் எதிர்பார்ப்பும் ஏக்கமும் திமுக ஆட்சி அமையாதா என்கிறவேளையில் உதிரிகளை பூமாலையாக்க வேண்டுமா என கேள்வி எழும் ..எதிரிகளை இருக்குமிடமே தெரியாமல் ஆழ புதைக்க உதவகூடும் என்பதாலேயே அனுசரிக்கவேண்டியிருக்கிறது ..ஆனால் அதற்காக அவர்கள் ஆடும் ஆட்டத்திற்கு இசைபாடவோ இசைபடவோ தேவையில்லை .. அதைவிட திமுக பலம் அதிகாரபூர்வமாக அதிகரிப்பது அவசியமும் கூட .. உதயசூரியன் உச்சத்தை தொட வேண்டி சில காய்நகர்த்தல்கள் அவசியமாகிறபோது அங்கரீக்கபடாத கட்சிகளை உயர்த்திபிடிக்காமல் திமுக சின்னத்தில் நிற்க சொல்வதில் தவறில்லை ..
அதைதான் திமுகவின் குரலாக மானமிகு ராசா சொல்லியிருக்கிறார்
..
தளபதியை வரவேற்க தமிழகம் தயாராகிக்கொண்டிருக்கிறது .. மக்கள் சொல்லண்ணாதுயரத்தில் கிடக்கிறார்கள் மத்தியில் ஆள்வோரும்.. மாநிலத்தை ஆள்வோர் மத்திய ஆள்வோரின் அடிமையாய் இருப்பதும் தமிழக நலனை திட்டமிட்டே புறக்கணித்து வஞ்சிக்கிறார்கள் .. இனியும் பொறுக்க முடியாதென்கிற நிலை .. தமிழகம் ஏக்கத்தோடு தளபதியின் வருகைக்காக காத்திருக்கிறது ..கடந்தகால தவறுகளிலிருந்து கற்றபாடம் இனி திமுகவை தவிர எந்தகட்சியாலும் பலனில்லை என்பதை உணர்ந்து நேர்மையும் நன்னெறியும் நிதானமும்
கொண்ட தலைவராய் திகழ்கிற தளபதியை அறியணை ஏற்ற தயாராகிறார்கள்..
..
தளபதிபடை தரணி ஆளும்
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment