Wednesday, December 19, 2018

தமிழக மக்கள் வாக்களித்து..பாஜக வரவில்லை

தமிழக மக்கள் ஓட்டுபோட்டு மோடி ஆட்சிக்கு வரவில்லை .. சரியாகதான் சொல்லியிருக்கிறார் இங்கே யாரும் மோடியை வேண்டாமென விரட்டுகிற போது பாவம் அவர் என்ன செய்வார் .. பொன்னர் வெற்றிபெற வைத்த நாகர்கோவில் மக்கள் இதை உணரவேண்டும்.. .. வாக்களித்தவனுக்கும் எதிர்த்தவனுக்கும் வேண்டாமென்று வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்துதான் ஆட்சி செய்கிறோமென்பதை மறந்த அறிவிலி.. ஜனநாயக மாண்பையெல்லாம் இந்த மடையரிடம் எதிர்பார்க்கமுடியாது .. பாஜகவினரின் பேச்சுக்களை தொடர்ந்து கவனியுங்கள் படுமுட்டாள்தனமாக தான் இருக்கும் .. இதோ மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே .. ஒவ்வொருவர் அக்கவுண்டிலும் ₹15 போடுவோம் ஒரே தவணையில் அல்ல மெல்ல மெல்ல.. ஆபிஐ தர மறுக்கிறது ஏதோ தொழில்நுட்ப கோளாறு என்கிறார்கள்.. என்னவொரு புத்திசாலித்தனம்.. இதுதான் அவர்களின் கையிருப்பு அதிகம் கேள்வி கேட்டால் தேசவிரோதி ஆன்டி இந்தியன் ..என்ற பதில்தான் வரும் .. எந்தவொரு கேள்வியை கேட்டாலும் நேரடியாக பதில் சொல்ல தெரியாது முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் செய்த தவறு என்று மடைமாற்றுவார்கள் .. நாடாளுமன்ற அவையில் பதிலளிக்க பயந்து ஓடியொளிகிற பிரதமரை பெற்றிருக்கிறோம் .. மேடை பேச்சைப்போல ஏற்ற இறக்கத்தோடு பேசிவிட்டு தப்பிக்கிற நிலை விவாதத்தில் பங்கேற்க வேண்டுமென்றால் அதற்கு திறமையும் அறிவும் வாய்மையும் வேண்டும் அதெல்லாம் பாசிச கோஷ்டிக்கு கிடையாது .. .. எச்.ராசா எதையாவது உளறுவதும் பிறகு மாட்டிக்கொண்டால் மன்னிப்பு கேட்பதுமாகவே அரசியல் செய்கிறார் .. மன்னிப்பு கேட்பது அவர்கள் குல வழக்கம் ஆனால் முத்திப்போய் அலைவதை இனியும் கண்டுக்கொள்ளாமல் இருக்கவேண்டுமா என்ன? .. இவரை தொடர்ந்து பேசவிடுவோம் அப்போதுதான் இன்னும் கூட தமிழக மக்கள் பாஜக மீது வெறுப்புகொள்வார்கள் .. கிறுக்குத்தனமாக பேசிதிரிகிறவர் தேசிய செயலாளர் .. தமிழகத்தில் இனி தவறிகூட தாமரை மலராதவாறு பார்த்துக்கொள்ள பொன்.ராதாவும் தமிழிசையும் எச்.ராசாவும் போதும் .. இவர்களின் பேச்சில் காட்டும் வன்மம், குரோதமனபான்மை, பொய், இவை போதும் தமிழகத்தில் எக்காலத்திலும் தலைதூக்கமுடியாமல் செய்வதற்கு ... ஐந்துமாநில தோல்விகள் பாஜக ஆசையை தகர்த்தெறிந்திருக்கிறது அடித்தளத்தையே அசைத்திருக்கிறது இனி நிறைய உளறலும் கோபகணைகளும் .. கொடுஞ்சொல்லும்.. பித்தலாட்டமும் வரும் .. .. தமிழகத்தில் இவர்களின் கதறல்களை காதோர்க்க யாரும் தயாரில்லை மதம் சாதியை தலையில் தூக்கிக்கொண்டு நடக்கிற பாசிச சக்திகளின் வேரில் வெண்ணீரை ஊற்றும் நிலைதான் உள்ளது ..கொஞ்சம் விட்டால் போதும் பார்பன கும்பல் தலையில் மிதிக்கும் என்பதற்கு இந்த அடிமைகளை வைத்து இவர்கள் செய்யும் அட்டகாசங்களே சாட்சியாய் நிற்கிறது .. எந்தநிலையிலும் பாசிசத்தை எதிர்ப்போமென தமிழக மக்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டுதானிருக்கிறார்கள்.. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment