Wednesday, October 31, 2018

குரளாசான்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்... .. எல்லோரும் சமமென்கிற உயர் தத்துவத்தை உலகுக்கு சொன்ன ஏற்றதாழ்வுகள் பிறப்பில் இல்லை என்ற பொது நெறியை நமக்கு தந்த குரளாசான் வள்ளுவனே.. ஒற்றுமைக்கு எடுத்துகாட்டு .. திராவிடப் பெருவுடையார் கலைஞர் சிந்தனையில் உதித்து தமிழர்களின் கட்டிட கலையோடு கூடிய அழகிய வேலைபாடுகளும் சிலையை உயிர்த்தன்மையோடு செதுக்கி வானூயர முக்கடல் சங்கமிக்கும் குமரியில் நிறுத்தியிருக்கிறார்.. இந்தியாவின் ஒற்றுமையை உலகுக்கு சொல்லும் உயிர்சிலை.. குமரியென்றாலே காவி சிந்தனையாளர் விவேகானந்தர் நினைவிற்கு வருவதை மாற்றி .. குறள் தந்த பேராசான் வள்ளுவனின் சிலையை நிறுவி தமிழர் கலை இலக்கியத்தை உலகுக்கு உணர்த்தியவர் பேரருளாளன் கலைஞர் அவர்கள்.. .. மக்களை வர்ணம் கொண்டு பிரித்து தாழ்ந்தவன் உயர்ந்தவன் என பாகுபாட்டை களையாமல் இந்திய ஒற்றுமையின் தத்துவத்தையே காவுவாங்கும் கயமைத்தனத்தை .. சாதிய நிலைபாட்டை வேரறுக்காமல் சமமான நீதியை தரமால் இந்தியாவில் ஒற்றுமை என்பதே கேலிகூத்தாகதான் இருக்கும்.. இந்தியாவை ஒருங்கிணைக்க அதிகாரம் இருந்தால் போதும் மக்களை ஒருங்கிணைக்க உயர் சிந்தனையையும் சமூகநீதியும் சமமான செயல்பாடும் ..யாரும் யாருக்குமில்லை அடிமையென்ற எண்ணமும் வேண்டும்.. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்குமென்ற என்ற உயர்நோக்கு கொண்ட எங்கள் இன பேராசான் வள்ளுவனின் சிலை ..ஒற்றுமையின் சிலை .. ஒற்றுமை என்பதே அனைவரும் சமமென்பதிலே.. எல்லோருக்கும் எல்லா உரிமைகளும் தரப்பட வேண்டுமென்பதில் ஏற்றதாழ்வற்ற சமுதாயம் படைத்திட வேண்டுமென்பதில் .. சாதி மத பேதமற்ற சமூகசூழலை உருவாக்கினாலே மக்கள் மனங்களில் ஒற்றுமை ஓங்கும்.. மக்களை பிரித்து குள்ளநரித்தனம் செய்து அடுத்தவனின் உரிமையை பறித்து.. கீழே உள்ளவனின் கல்வி வேலைவாய்ப்பை தட்டிபறித்து ஒரு குறிப்பிட்ட இனத்திற்கே வழங்குவதில் இல்லை .. சமத்துவமும் மனிதநேயமும் கொண்ட விடுதலையே ஒற்றுமைக்கான திறவுக்கோல் .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment