Tuesday, December 18, 2018
ஜெயலலிதா ..மர்மம்
ஜெயலலிதா மரணத்தின் சந்தேகங்களும் வியப்புகளும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது .. மரணம் இயற்கையானதா என்ற கேள்விக்கான விடைதேடலில் பலத்த ஐயம் நமக்கு எழதான் செய்தது .. ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் சிகிச்சை பெறும் மருத்துவமனையில் அதுவும் உயர்தர மருத்துவமனையென "வெளிநாடுகளில் "கூட பேசபடுகிற பிரபலமான மருத்துவமனையில்
சிசிடிவி இயங்கவில்லை என்பது எத்தனை அபத்தம் .. இவர்களே பதிவை வேண்டாமென கேமராவை செயலிழக்க வைத்துவிட்டார்களா .. மாநிலத்தின் முதல்வர் சிகிச்சை பெறுகிறார் என்கிற போது கூடுதல் பாதுகாப்பு என்பது இயல்பாக எழுமே.. கூடுதல் கேமராக்கள் வைத்திருக்க வேண்டும் ஏன் செய்யவில்லையில் தொடங்கி .. இப்போது விசாரணை கமிஷனில் ஒவ்வொருவரும் சொல்லும் தகவல்கள் அதிகம் கவலையளிப்பதாக உள்ளது .. இடைத்தேர்தலின் போது அவரிடம் கைநாட்டு பெற்ற மருத்துவர் சிவகுமார் .. நானே சென்று நேரில் கைநாட்டு பெற்றேன் என்றவர்.. விசாரணை கமிஷனில் அந்த அறைக்கு (ஜெயலலிதாவிடம்) செல்லவில்லை எங்கெல்லாம் கைநாட்டு வேண்டுமென சொன்னேன் அங்கெல்லாம் கைநாட்டு வாங்கி தந்தார்களென வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் .. அவர் மீது தனியாக வழக்கு தொடர்ந்து சிறைக்கு அனுப்பலாம் இந்திய தேர்தல் ஆணையத்தையே ஏமாற்றியிருக்கிறார்..
..
நான் நேரில் பார்த்தேன் நன்றாக இருக்கிறார் இட்லி தின்றார் என்றெல்லாம் கதைவிட்ட அமைச்சர்களை விடுங்கள் அவர்கள் தங்கள் தலைவியைப் பற்றி மக்கள் கவலை ..? கொள்ளாமல் இருக்கவேண்டுமென்பதற்காக சொல்லியிருக்கலாம் ஆனால் கவர்னர் சென்று பார்த்துவிட்டு கையை அசைத்தார் கட்டைவிரலை உயர்த்தினாரென்றாரே ..அதற்கெல்லாம் எப்போது விடைகிடைக்கும் .. ஜெயலலிதா மனதளவில் தளர்ந்துபோயிருந்தாரென்பது அவரின் உதவியாளர் ராஜம்மாளின் செய்தி நமக்கு உணர்த்தியது வழக்கின் முடிவு தமக்கு எதிராக வந்து தண்டனைப் பெற்று சிறை செல்லநேர்ந்ததும் ..
"ஊழல் தலைவராக"
வரலாறு தம்மை பதிந்துவிட்டதே என்ற வருத்தமும் அவரை பெரியளவில் தளர்வை தந்தது .. அதிலிருந்து மீள முடியாமல் மன அழுத்ததிற்கு ஆளானதாக அவரின் உதவியாளர் பெண்மணி ராஜம்மாளின் சொல் நமக்கு உணர்த்தும் ..
..
ஜெயலலிதாவின் மருத்துவ செலவு கூட நம்மை பிரமிக்கவைக்கிறது .. அதில் உணவுசெலவு ₹1.7 கோடி என்பதை யாருமே எதிர்பார்க்கவில்லை அதைவிட எப்படி இவ்வளவு செலவென்று கேட்க தொடங்கியிருக்கிறார்கள் .. அவரது மரணம் எப்படி நிகழ்ந்தது எப்போது நிகழ்ந்தென்பதில் கூட இன்னமும் விடைதெரியவில்லை கூட மருத்துவசெலவு தலைசுற்றுகிறது ராஜவைத்தியம்..? உணவிற்கென்ற இவ்வளவு வருமா என்ற கேள்வி 7 நட்சத்திர ஹோட்டலில் கூட இவ்வளவு வராதென்கிறார்கள் .. அரசின் பணத்தை எடுத்து மனாவாரியாக செலவு செய்தது ஏன் .. அரசு மருத்துமனையில் சேர்ந்திருக்கலாம் .. முரசொலி மாறன் செலவு அதிகமானபோது .. அதை தாங்களே செலுத்துகிறோமென அவரது குடும்பம் ஒப்புக்கொண்டு செலுத்தியது அதைப்போல ஜெயலலிதாவிற்கான செலவில் குறிப்பிட்ட தொகையை அவரது சொத்திலிருந்து எடுத்து கொடுக்கலாம் .. தண்டிக்க குற்றவாளியாய் நீதிமன்ற தாமதத்தால் அரசின் உயர் செலவில் மருத்துவம் பெற்றார் இல்லையெனில் சிறையில் தரமான மருத்துவம் அவருக்கு கிடைத்திருக்கும் ஒருவேளை பிழைத்திருப்பார் .. இந்த மருத்துவ கொள்ளையர்களை விசாரணை வளையத்தில் கொண்டுவரவேண்டும் ...
..
புகழ் பெற்றிருந்த ஒருவரின் மரணம் அதிகாரத்தில் இருந்த போது நிகழ்ந்ததில்
அரசுக்கே தெரியாமல் இத்தனை குளறுபடிகள்.. சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனை விசாரிக்க வேண்டும் .. வெங்கட்ராமனின் பேரன் இவர் .. அரசின் சுகாதாரத்துறை செயலருக்கு தெரியாமல் இருந்தால் அந்த பதவிக்கு லாயக்கில்லாதவர் .. தெரிந்திருந்தால் ஏன் உண்மையை மக்களுக்கு சொல்லவில்லை அவரை அப்போது தடுத்தது யார் என்ற கேள்வியெல்லாம் நிச்சயமாக திமுக ஆட்ச்க்கு வந்தவுடன் விடை கிடைக்கும் .. இன்றைக்கு ஓடியொளிகிற .. பொய்சொல்லி திரிகிறவர்கள் பதில் சொல்லும் காலம் வரும் .. கேட்க ஆளில்லாத நிலையில் தான் ஜெயலலிதா தன் சொந்தங்களை தவிர்த்து
மாய கும்பலிடத்தில் சிக்கி கரைபடிந்தவராய் வரலாற்றில் என்றுமே மாற்ற முடியாத #ஊழல்க்காக_தண்டனைபெற்றவர் என்ற பெயரோடு ...இந்தியாவில் அதிகாரத்தில் இருக்கும்போதே தண்டிக்கப்பட்ட குற்றவாளியாய் வரலாறு பதிவு செய்திருக்கிறது..
corruption leader
..
#மர்மகதை...
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment