Saturday, December 15, 2018

திமுக கழட்டி போட்டதுதான் ..

கழட்டிபோட்ட கோவணம்.. கோவணம் ரொம்ப முக்கியம் வேட்டியை கூட உருவி விட்டுவிடலாம் .. கழட்டி வைத்துவிட்டு கழனியில் வேலை செய்யலாம் .. ஆனால் கோவணத்தை அவிழ்த்தால் அம்மணமாகி போவீர்.. கோவணம் மானம்காப்பது என்பதை மறந்து பேசுகிறார் .. திமுக தினகரனின் கோவணத்தை உருவியிருப்பது தெரிகிறது .. யாருமே தன்னோடு வர மறுத்து அதிகாரமிருக்கும் எடப்பாடி பன்னீரிடம் நிற்கிறார்கள் .. ஸிலீப்பர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் கிடப்பதைப்போல உணர்வற்று கிடப்பதாய் நடிக்கிறார்கள் .. வழக்கு தண்டனை என மத்திய அரசு மிரட்டுகிறது கூட இருக்கிறவர்கள் கரையேற துடிக்கிறார்கள் .. சொந்தங்களிலேயே "பாறைவைக்கிற" நிலை இருப்பதும் போய் அம்மணமாய் காட்சி தர போகிற வேளையில் பதற்றம் அதிகரித்திருக்கிறது .. .. நாங்களும் சொல்லலாம் கலைஞர் கழட்டி போட்டதுதான் எம்ஜிஆர்.. எக்ஸ்ட்ரா என்று .. ஏனெனில் காங்கிரஸிலிருந்த எம்ஜிஆரை திமுகவிற்கு அழைத்துவந்தவர் .. அதோடு நிற்கவில்லை மார்டன் தியேட்டர் முதலாளி சுந்தரம் அவர்கள் மந்திரிகுமாரிக்கு இவரை வேண்டாமென்ற போது .. தாவகட்டையில் பள்ளமிருக்கிறதென்ற காரணத்தை சொன்னபோதும் சிறிதாக தாடி ஒட்டிக்கொள்ளலாமென ஆலோசனை தந்திருக்காவிடில் எம்ஜிஆர் ஏது .. "திரும்பிபார்" சிவாஜி கணேசன் வெளியேறிய போது அந்த இடத்தை நிரம்ப தன் நண்பரென்று அழைத்துவந்தவர் பின்னாளில் தமக்கே துரோகம் செய்ததை மறந்தவர் கலைஞர் .. கலைஞர் தூக்கியெறிந்ததுதான் "எல்லாம்" என்பதை மறந்து பேசிகொண்டிருக்கிறார்.. .. உண்மையில் யாருமில்லாத நிலைக்கு வரகூடும் இன்னும் சிலர் வரகூடுமென பட்சிகள் சொல்கிறது ..காரணம் தெளிவற்ற நிலையில் யாருமே கூட வரமாட்டார்கள் பாசிச பாஜகவை எதிர்ப்பதாக சொல்லிக்கொண்டே அவர்கள் கேட்காமலேயே ஆதரவை தருவதும் தன்னை காத்துக்கொள்ள கூட இருப்பவர்களை பலி கொடுப்பதும் எத்தனை காலம் தான் பொறுப்பார்கள் எங்கே மீதமுள்ளவர்களும் போய்விடுவார்களோ என அஞ்சி உளற ஆரம்பித்தன் விளைவே இது.. திடீரென ஒருநாள் சசிகலா உயரத்திற்கு வர எத்தனித்ததும் .. அது வரை உறங்கிய நீதி சிறைக்கனுப்பியதும் யார் சசிகலா என யாரை உயர்த்திபிடித்தார்களோ அவர்களே கேள்வி கேட்க மெல்ல ..அப்புறபடுத்தும் சூழல் எங்கே தனக்கும் வந்துவிடுமோ என நடுங்கி நிற்பது தெரிகிறது .. அதனால் தான் தங்களுக்கு துரோகம் செய்த எடப்பாடி & பன்னீர் கூட போயிருந்தால் கூட மன்னிப்பேன் திமுகவோடு போவதா என்கிறார் .. எடப்பாடி பன்னீரை கூட மன்னிப்பேன் செந்தில் பாலாஜியை மன்னிக்க முடியாதென்கிறார் .. இதிலிருந்தே கோவணத்தை உருவி அம்மணமாய் நிறுத்தியிருப்பது தெரிகிறது .. .. இன்னும் இருக்கிறது தினகரன் .. இனி அம்மணமாய் தான் நிற்க வேண்டி வரும் .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment