Sunday, December 9, 2018

தலித் அரசியல்

அமைப்பாய் திரள்வோம் திருமா ஜாதியாய் திரள்வோம் ரஞ்சித் பட்டியலின மக்களின் ஒற்றுமை என்பது இஸ்லாமியர்களின் ஒற்றுமையை போல எப்போதும் சாத்தியபடாத ஒன்றாகவே இருக்கிறது .. .. பா.ரஞ்சித்தின் சமீபத்திய பேச்சுகள் "ஜெய்பீம்" அம்பேத்கர் ஒருவர் மட்டுமே போதும் எங்கள் வாழ்வியல் மேம்பாட்டிற்கு எங்களின் அரசியல் வழிகாட்டுதலுக்கென நம்புகிறார் அது அவரின் அரசியல் அறியாமை என்றே கருதவேண்டியிருக்கிறது அவரென்று இல்லை பட்டியலின மக்களிடையே இதே கருத்து இருப்பதை காண முடிகிறது ஆனால் அம்பேத்கரை முன்னெடுப்பதில் தவறில்லை அது மட்டுமே போதாதென்பதுதான் உண்மை .. தலித் மக்கள் தலித் தொகுதியில் மட்டுமே வாக்களித்தால் போதும் .. மற்ற தொகுதிகளில் வாழும் தலித்கள் புறக்கணிக்க வேண்டும் .. தலித்கள் ஒருங்கிணைந்து ஒதுக்கபட்ட தொகுதியில் ஒருவரை நிறுத்தி வெற்றிபெற செய்தால் போதும் .. எந்த கட்சியிலும் நிற்க கூடாதென கூறுகிறார் .. தலித் வாக்குகள் மட்டுமே வெற்றியை தீர்மானித்துவிடாதென்ற உண்மை விளங்கவில்லை .. சரி பட்டியலினத்தில் யாரை நிறுத்துவீர்கள் .. அதில் எத்தனை சாதிகள் .. பள்ளர்கள் பறையர்களை ஏற்பார்களா .. அவர்கள் தங்களை தேவேந்திர குலமென்றும் பட்டியலின மக்களாக அதாவது தாழ்த்தபட்டவர்களாக கருத கூடாதென சொல்கிறார்கள் .. ஏன் பறையர்கள் அருந்ததியினரை அருகிலேயே சேர்ப்பதில்லையே .. முதலில் இந்த சாதிய கட்டமைப்பை உடைக்க எதை செய்யவேண்டும்.. இதை உருவாக்கியவர்களின் நோக்கம் சாதியம் சொல்லி பிரிந்து கிடப்பதே என்பதை உணராத வரை சனாதனவாதிகளின் கை ஓங்கியே நிற்கும்,.. பஞ்சமியரையும் சூத்தரனையும் மோதவிட்டு வர்ணாசரம அடுக்கை சொல்லி தங்களை உயர்ந்தவராக காட்டிநிற்கிற நிலைக்கெதிரே திரும்பாதவரை ..ரஞ்சித் போன்றவர்களால் ஒரு அடி கூட நகர முடியாது .. .. திருமா தெளிவாக பதிலுரை வழங்கியிருக்கிறார் .. இருபத்தைந்தாண்டுகால அனுபவம் தெரிகிறது தலித் மக்களை ஒருங்கிணைப்பை தொடர்ந்து வலியுறுத்தியும் அது நடக்காதென்ற உண்மை உணர்ந்தவர் .. சாதியை கையிலெடுத்தால் அல்லது முன்னிலைப்படுத்தி அரசியல் செய்தால் பாமகவை போல தனிமைபடுத்தபட நேரிடும் என அறிந்து ஒன்றுபடுவோம் அமைப்பாய் திரள்வோம் என்கிறார் .. நீண்டகாலமாக ஆதிதிராவிடர்களின் பங்களிப்பு குறிப்பிடதக்க அளவில் உண்டென்றாலும் அது போதியதாக இல்லை என்பதை ஏற்றுதான் ஆகவேண்டும் இது எல்லா சமுதாய மக்களுக்கும் இருக்கிற குறை இது .. தேர்தல் அரசியலில் தவிர்க்கமுடியாதது .. எண்ணிக்கையை பிரதானமாக கொண்ட ஆங்கிலேய தேர்வு முறையில் இந்த நிலைதான் வரும் .. பெற்ற வாக்குகளின் அடிப்படையில் உறுப்பினர் தேர்வென்றால் மட்டுமே அந்தந்த சமுதாயத்திற்கு உரிய பிரத்தித்துவம் கிடைக்கும் இதை கலைஞர் பலகாலமாக வலியுறுத்தியும் இருக்கிறார் .. ஆனால் அதை அதிபர் முறை தேர்தல் என புறக்கணித்திருக்கிறது இந்திய ஜனநாயகம் .. .. சாதிய ரீதியாகவோ மத ரீதியாகவோ ஒருவர் பேசுகிறாரெனில் நிச்சயமாக அவரின் பின்புலத்தில் பாசிசத்தின் கரம் இருக்குமென்பதை அறிக .. சாதிமத பேதமற்ற முற்போக்கு சிந்தனையும் சமூகநீதியும் சமத்துவமுமே இந்த மண்ணிற்கு தேவை .. தமிழகத்தின் பாசிசத்தையோ .. பாசிசத்தின் நிழலாய் வருகிற சாதிய அமைப்பையோ,மக்கள் ஏற்க மாட்டார்கள் .. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment