Sunday, December 30, 2018
சாதி..தீ
காதல் திருமணங்கள் மூலம் சாதியை ஒழிக்க முடியாது.. இயக்குனர் ரஞ்சித்
முடியாதுதான் ..காலகாலமாய் மனதில் ஊறிப்போன சாதீய வன்மம் ஒற்றை சம்பவத்தால் மாறிவிடுமென நம்ப முட்டாள்களா என்ன.. சாதீய அடுக்கை கலையாமல் தீர்வு வரும் என எண்ணுவது எவ்வளவு மடமை .. இந்த கட்டமைப்பு திட்டமிட்டு தன்னைவிட தாழ்ந்தவனாக ஒருவன் இருக்கவேண்டுமென எண்ணுகிற பார்பனீய சித்தாந்தம் வேரருக்கபடாமல் தீர்வுகிடைக்காது ..
..
#பெரியார்140 நிகழ்வில்
மானமிகு கனிமொழி இதைதான் சொன்னார் .. தனக்கு கீழே ஒரு சாதி இருக்கிறது அதை காலில் போட்டு மிதிப்போமென்கிற சிந்தனை மாறாமல் விடிவு இல்லை .. ஆதிக்க சாதியினரால் தாங்கள் தொடர்ந்து ஒடுக்கபடுகிறோமென சொல்லும் ரஞ்சித் .. தன் சாதிக்கு கீழே அருந்ததியரும் சக்கிலியரையும் எந்த கண்ணோட்டத்தில் அவரது சாதி பார்க்கிறதென்பதை சொல்வாரா ..
இந்த சாதீய அடுக்கே .. இடைசாதி கடைசாதியினரிடையே மோதலை உண்டாக்கி தங்களின் நிலையை காத்துகொள்ள வேண்டுமென்பதற்காகவே தவிர ..வேறொரு காரணம் இருக்கிறதா ...இடைசாதியினரிடையே கூட ...ஒரே சாதியென்று இருமாப்போடு சொல்கிறவர்கள் கூட உள்பிரிவினரிடையே காட்டுமே வெறுப்பை கிராமங்களில் இன்னமும் காணலாம் ... சாதிய ஒழிப்பைப் பற்றி நீண்ட விவாதம் தேவைபடுகிறது மக்கள் மனங்களில் மாற்றத்தை உண்டாக்க மிகப்பெரிய பணியை தொடங்கவேண்டும் .. அரசியல் கட்சிகளும் சாதி தலைவர்களும் இதற்கு பேரிடைஞ்சலாக இருப்பார்கள் ..
..
அப்படியெனில் சாதி மறுப்பு திருமணமே கூடாதா என கேள்வி கேட்க கூடாது .. அது ஒரு தொடக்கப்புள்ளியாக இருக்கும் சாதியற்றவர்கள் என்ற நிலையை அரசு அங்கீகரிக்க வேண்டும் சாதி மறுப்பாளர்களின் குழந்தைகளை தகப்பனின் சாதியில் பதியும் நிலை மாறவேண்டும் சாதியற்றவர்கள் என்ற பிரிவில் சேர்த்து அவர்களுக்கான உரிமைகளை தர முன்வரவேண்டும் .. அதற்கான தொடக்கமாக இதை உணரவேண்டும் .. அங்கொன்று இங்கொன்றாய் நிகழும் சாதி மறுப்பு திருமணங்கள் காலபோக்கில் மத சாதி மறுப்பு திருமணங்கள் அதிகளவில் நடைபெறும் வரும் தலைமுறையினரிடம் சாதிய கெடுதிகளை எடுத்து சொல்லி .. மதமோ சாதியோ மனிதத்தை கொன்றுபோடுமென சொல்லி வளர்த்தால் .. சாதியை சொல்லி பிழைக்கும் சிலர் கேள்வி கேட்க முடியாத நிலை வரும்..
..
அறிவுபடைத்த மனித சமுதாயத்தில் உலகத்தில் எங்குமில்லாத காட்டுமிராண்டிதனம் இந்தியாவில் தான் இருக்கிறது ..
இங்கிலாந்தில் இல்லாத "பாப்பான்"
ஜெர்மனியில் இல்லாத "பறையன்"
அமெரிக்காவில் இல்லாத "சூத்திரன்"
மதத்தின் பெயரால் கடவுளின் பெயரால் சாஸ்திரத்தின் பெயரால்
இங்கு தான் இருக்கிறான் ..என்றார் #பெரியார் ..
..
சமத்துவம் மலர வேண்டும் ..
சாதி மத பேய்களை விரட்டி
புதியதொரு சமுதாயம் படைக்க
வரும் தலைமுறை தயாராகும்
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment