Friday, November 30, 2018

அரசியல் அறிவின்மை

மக்கள் டிவியில் கல்வியாளர்களை வைத்து நிகழ்ச்சி மாணவர்களை ஒருங்கிணைந்து நடந்தது ..அதில் சுவாரஸ்மே ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்கபட்டு பதில் தருகிறார் அன்புமணி .. முதல்வராக தன்னை எண்ணிக்கொண்டு பதிலளிக்கிறாரென்று நினைக்கிறேன் தன்னை அறிவுஜீவியைப்போல காட்ட முனைந்து தோற்றுநிற்கிறார்.. செல்வி.ஜெயலலிதாவை நடிகை எந்த துறைசார்ந்த படிப்புமில்லை பன்னீர் டீக்கடை நடத்திவந்தவர் எடப்பாடி மணல் வியாபாரம் என்ற அளவிற்கு தாழ்த்துவதால் தன்னை அதிகம் படித்தவரென்று நினைக்கிறாரென்று கருதுகிறேன் ..ஊழலைப்பற்றி பேசுகிறார் உண்மையில் யாருமே அவர்மீது ஊழல் குற்றசாட்டு இருப்பதையோ வழக்கு நிலுவையில் உள்ளதையோ மறந்து போகிறார்கள்.. ஏரி குளம் பற்றியெல்லாம் பேசுகிறவர்கள் இவர்கள் கல்லூரியை பற்றி பேசவில்லை.. .. இத்தனைகாலம் ராமதாஸ் செய்த அரசியல் சாதிய வெறியை மட்டுமே நம்பி வட மாவட்டங்களில் வளர்ந்ததென்றாலும் காலம் கடைசியில் தூக்கியெறிந்து செல்லாகாசாக்கி நிறுத்தியிருப்பதை இன்னும் உணர்ந்தபாடில்லை .. இன்றைக்கு காடுவெட்டி குரு குடும்பமே நேரடியாக குற்றம் சாட்டி ராமதாஸால் தன் குடும்பத்திற்கு ஆபத்தென்று சொல்கிற நிலை சாதியை கையில் பிடித்து ஆடியது இது திரும்ப தாக்குகிறது பாமகவின் முகசாயல் இனி எத்தனைகாலமானாலும் மாற போவதில்லை என்பதை உணராமலேயே முதல்வராகிவிட்டதைப்போல அன்புமணி விவாதங்களில் பதிலளிப்பது வேடிக்கையாக இருக்கிறது .. இதை அவர் உணர இன்னும் காலமெடுக்கும்.. .. யாருக்குமே வேண்டாதவராக ராமதாஸ் தெரிகிறார் தனித்து செயல்படுவதாக சொல்லி மொத்தமும் காலியாகி யாராவது சேர்த்துகொள்ளமாட்டார்களா என நினைப்பது அப்பன் மகன் பேச்சில் தெரிகிறது முன்பைபோல பெரிதாக கண்டுக்கொள்ளபடவில்லை திமுகவிற்கு ஒரு எம்.பி.கூட இல்லையென நக்கலடித்தவர் தன் எம்.பி.தொகுதிக்குட்பட்ட பொன்னரகத்தில் தோற்கடிக்கபட்டார் .. மிக மோசமாக தோற்றுபோனார் .. தேர்தல் தோல்வி வரும் மாறும் ஆனால் அதை கூட புரிந்துக்கொள்ளாதவராக இருந்தவர்.. முதல்வர் லெவலுக்கு தன்னை கற்பனை செய்துகொள்வது நல்ல காமெடி .. தன்னை தவிர யாருக்குமே தகுதியில்லையாம் .. அதிகம் படித்தவராம் அனைத்துதுறையிலும் அறிவுள்ளவரென அவரே சொல்லிக்கொள்கிறார் ..பாவம் உள்ளுர் அரசியல் அறியாமல் ..தானென்ற அகந்தை கொன்றவர்கள் அரசியலில் முகமிழந்து கேட்பாரற்று லெட்டர்பேட்களாக வலம் வருவதை கண்டும் ஆசைவிடவில்லை .. .. இன்றைய களநிலவரம் அறியாமல் திராவிடம் தோற்றுபோய்விட்டதாக புலம்புகிறார் முதலில் பாமக உதிரிக்கட்சி என்பதை அதுவும் சாதிகட்சி என்பதை.. அதிலும் அந்த சமுதாய மக்களாலேயே வெறுக்கபட்டவராக ராமதாஸ் வகையறா இருப்பதை உணரவே இல்லை .. தமிழகத்தில் சாதி மதம் பேசினால் கதைக்காது என்பதை உணராதவரை .. கற்பனை உலகில் சஞ்சரிக்கவேண்டியதுதான்.. அன்புமணி தன் சாதிய அடையாளத்தை துறக்காதவரை ..தமிழகத்தில் அவரால் காலூன்றவே முடியாது .. சாதிய நிலையை துறந்தால் யாரென்றே அறியபடமாட்டார் .. இதுதான் உண்மைநிலை.. தமிழக அரசியல் உண்மை நிலையை உணராதவராகவே இருப்பதிலேயே அவரது அரசியல் அறிவு தெரிகிறது .. #சூன்யம் .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment