Thursday, November 29, 2018

தமிழகம் காத்திருக்கிறது

டெல்டா.. இன்னும் மீண்டபாடில்லை மழையும் இடையிடையே மக்களின் மீள விடாமல் அழுத்துகிறது அரசின் உதவியை கூட இடைதரகர்கள்(அரசு ஊழியர்) கவனிப்பிற்கு பிறகே என்ற இழிநிலை .. இத்தனை கொடூரமாய் இயற்கை சீற்றத்திற்கும் பிறகும் அரசின் மெத்தனம் ஆள்வோரின் லட்சணத்தை காட்டுகிறது.. இதைவிட மோசமாக பாதிக்கபட்ட கேரளாவில் விரைந்து அவர்களால் மீண்டு வர முடிந்ததே .. ஆட்சியாளன் மக்களின் நலனை சிந்திப்பவனாக இருந்தான்.. இங்கே மக்கள் வாய் திறக்கவே முடியவில்லை .. உள்ளூர் ஆளும்கட்சிகாரன் கேள்வி கேட்கிறான் வெற்றிபெற்றவனோ ..சும்மாவா ஓட்டுபோட்ட ₹1000 ₹2000 என்று வாங்கிட்டுதானே போட்டே என எதிர்கேள்வி கேட்கிறான்.. அரசு உதவியை கூட கமிஷனுக்கு பிறகே கிடைக்கிறது.. இந்த அவலநிலைக்கு ஒருவகையில் நாமும் காரணமானோம் .. .. தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் சில இஸ்லாமிய அமைப்புகளும் திமுகவும் தன்னாலான உதவிகளை செய்த போதும் அது தற்காலிக தீர்வே தவிர நிரந்தர மீட்சிக்கு அரசாங்கத்தால் மட்டுமே தரமுடியும் அதை இந்த அரசிடம் எதிர்பார்க்கமுடியாது .. தமிழர்களின் எதிர்காலத்தை காவுகொடுக்கிற ஆட்சியாளர்களாய் நாம் விரும்பாதவர்களை நம்மை ஆள்கிற நிலையை தெரிந்தோ தெரியாமலோ நாமே ஏற்படுத்திக்கொண்டோம் ..மேகதாதுவில் அணையாகட்டும் மீத்தேன் எடுக்க அனுமதியாகட்டும்,ஸ்டர்லைட் ஆலை திறப்பு ஏன் நீட் ...தேர்வு..என எல்லாவற்றிலும் பழிவாங்கபடுகிறோம்.. தேர்வில் அரசுபள்ளி மாணவர்கள் சொற்ப எண்ணிக்கையில் 3700 பேர் தான் விண்ணப்பித்திருக்கிறார்கள் .. கலைஞர் பெருமகன் அரசு பள்ளி மாணவர்கள் பெருமளவில் மருத்துவராக வேண்டுமென்று நீட்டை கடைசிவரை வரவிடாமல் காத்தார்.. இந்த ஆர்எஸ்எஸ்காரன் மாஃபா கல்வி அமைச்சரானவுடன் ஏனென்றே கேட்காமல் கையெழுத்திட்டு தமிழக மாணவர்களின் எதிரிகாலத்தையே .. மருத்துவராக வேண்டுமென்ற நினைப்பில் மண் அள்ளிபோட்டுவிட்டார்.. இந்த ஆட்சியை தூக்கியெறிகிற வரை தமிழகம் இன்னும் பல சங்கடங்களை துயரங்களை சந்தித்து கொண்டேயிருப்போம்.. தமிழக நலன்கள் புறக்கணிக்கபடும் .. இவர்களை போல அடிமைகள் பாஜகவிற்கோ பார்பன பாசிச சக்திகளுக்கோ இனி எந்த காலத்திலும் கிடைக்காதென்று தெரிந்தும் தொடர்ந்து இந்த அரசை இயக்கிகொண்டிருப்பார்கள் .. நமக்குவாய்த்த அடிமைகள் சிறந்தவர்களென கொண்டாடுவார்கள் .. தமிழுக்கும் தமிழர்களுக்கும் கேடுவிளைப்பதே தங்களின் பெரும்பணியாய் செயல்படும் பார்பனர்கள் எப்படியேனும் இந்த அடிமைகளை காக்கவே முயற்சிப்பார்கள்.. இடைத்தேர்தல் நடத்தவிடாமல் தொடர்ந்து ஏதேதோ காரணத்தை சொல்லி தள்ளிக்கொண்டே போகிறார்கள்..தமிழர்கள் எப்போதெல்லாம் தவறிழைக்கிறார்களோ அப்போதெல்லாம் தங்களின் நலனை மட்டுமல்ல அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தையும் சேர்த்தே பலிகொடுக்கிறார்கள்.. பணத்திற்கும் பொருளுக்கும் ஆசைபட்டு வாக்குகளை விற்கிற கேடுகெட்டத்தனத்தை விட்டாலொழிய தமிழகம் தலைநிமிராது.. .. இனியேனும் நல்லதொரு விடியலுக்காக நமக்காக உழைக்கிற நல்லவரை நம்பிக்கையானவரை இன காவலனாய் நிற்கிறவரை ஓயாது உழைக்கிற அரசியலில் நேர்மையை விரும்புகிற .. புறவழியே ஆட்சி தேவையில்லையென மக்கள் தேர்வில் வரவேண்டுமென விரும்புகிற மக்களின் தளபதியை தேர்வு செய்வோம் .. திமுகவால் மட்டுமே தமிழகம் தலைநிமர செய்யமுடியும் .. .. ஆலஞ்சியார் ..

No comments:

Post a Comment