Sunday, November 25, 2018

என்னுடன் மோத முடியாதவர்கள் என்தாயை பழிக்கின்றனர்.. மோடி.. என்ன சொல்ல வருகிறார் தான் வகிக்கும் பதவியின் தரம் மறந்து தேர்தல் நெருங்குகிற போதெல்லாம் இதுபோன்று மட்டரகமான கருத்தை தெரிவித்து மக்களிடம் இரக்கத்தை பெற்றிடலாமென எண்ணுகிறார்.. இதுவரை யாரும் அவரின் தாயை மோசமாக பேசவில்லை தாயின் வயதோடு டாலர் விலையேற்றத்தை ஒப்பிட்டு பேசியதை ஏற்கமுடியாதுதான் மோடியின் தந்தையைப் பற்றி யாருக்காவது தெரியுமா என்ற கேள்வி கூட அவ்வளவு ரசகரமில்லைதான் .. ராகுலின் தந்தையை நாடறியும் என்பதற்காக சொல்லபட்ட சொல்லாடலாக கருதவேண்டும் .. தனிநபர் விமர்சனமென்பது சமீபத்திய அரசியலில் அதிகம் காணபடுவதும் கவலைக்குரியதுதான் .. காமராஜரை அண்டங்காக்கா என ராஜகோபாலச்சாரி சொல்லியது ஏனோ நினைவுக்கு வருகிறது .. ஆனால் அதைவிட மிக மட்டரகமாக சோனியாவை விமர்சித்தவர்கள் தான் இவர்கள் ஏன்.. இவர்தான் தனிநபர் தாக்கு தொடர்ந்து செய்துவருகிறார்.. இளம்தலைவர் ராகுலை நாடாளுமன்றத்திலேயே பப்பு என பகடி செய்தவர் எப்போதெல்லாம் சறுக்கல் வருகிறதோ அப்போதெல்லாம் மலிவான அரசியலை கையிலெடுப்பவர்.. .. நாடு இன்றைய நிலையில் மிக மோசமான காலகட்டத்தில் கடந்து செல்கிறது அயோத்தியில் சிவசேனாவும் விஸ்வ இந்து பரிஷத்தும் தேவையில்லாத பதட்டத்தை ஏற்படுத்துகிறது அங்கு வாழும் முஸ்லிம்கள் .. ஏதேனும் அசம்பாவிதம் நடக்குமோ என அஞ்சி முதியவர் குழந்தைகளென குடும்பத்தோடு இடம்பெயர்கிறார்களென செய்திகள் வருகிறது சாமியாரின் கையில் அதிகாரமிருப்பதால் நிலவரம் அச்சம் கொள்ளவைப்பதாக சில நடுநிலை ஊடகங்கள் கவலை கொள்கின்றன இதையெல்லாம் கவனித்தில் கொள்ளாது திசைதிருப்பும் செயலை பிரதமரே செய்கிறார் என்பது கவலைதரும் விடயம்,.. .. அரசியலில் மதத்தை சாதியை தனிநபர் விருப்பத்தை காழ்ப்புணர்வை .. ஒருவித பயத்தை ஏற்படுத்தியவர்கள்.மக்களின் ஒற்றுமையை சிதைப்பதைவிட வேறொரு கெடுதல் இநத நாட்டிற்கு செய்யவேண்டியதில்லை .. மதவெறி அரசியலை கையிலெடுத்து ஒருவித பதட்டத்தோடு நாட்டை வைத்திருப்பவர்கள் இங்கே நியாயம் பேசுவதுதான் கொடுமை .. மதகலவரத்தில்.. சாதி மோதலில் இந்தியா உலக அரங்கில் முன்னணி வகிப்பது இவரின் வரவிற்கு பிறகுதான் உடனே மதவெறி மோதல்கள் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் குறைந்திருக்கிறதே எனலாம் கலவரம் செய்பவர்கள் கையில் நாடு இருக்கும் போது இதெல்லாம் நடக்காது .. ஆனால் மிரட்டல் பச்சைபடுகொலை அத்துமீறல் அடாவடித்தனம் ஜனநாயகபடுகொலை .. எல்லாம் நடக்கும் யாரும் ஏனென்று கேட்க கூடாது முடியாது மீறினால் ஊடகங்கள் மீது ரெய்ட் நடக்கும் ஊடகவியலாளர்கள் சமூகநீதி பேசுவோர் முற்போக்காளர்கள் கொலை செய்யபடுவார்கள் இதையெல்லாம் மக்களின் எழுச்சியின் தான் சரிசெய்ய முடியும்,..... .. திரு.மன்மோகன் சிங் சொன்னதைப்போல இந்த ஆட்சி தொடருமேயானால் இந்தியாவின் முகம் உலகளவில் வெறுக்கபடுகிற நிலை உருவாகும் பொருளாதாரம் வீழ்ந்து எழ முடியாதவாறு போகும் .. மதமும் சாதியும் பிற்போக்குத்தனமும் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாகவே இருக்கும் .. பாசிசபாஜகவை தூக்கியெறிவோம் .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment