Wednesday, May 31, 2017

திராவிட நாடு

ஜெயலலிதாவின் 68 சொத்துகள் பறிமுதல் செய்து உத்தரவிட்டிருக்கிறது ஜெயலலிதா வழியில் நடக்கும் தமிழக அரசு.. நல்லது.. இதிலிருந்து ஜெயலலிதாவை திருடி என ஒப்புக்கொண்டு தீர்ப்பை அமலாக்குகிறது.. அப்புறம் எப்படி மக்கள் பணத்தை கொள்ளையடித்த ஜெயாவின் படம் சட்டமன்ற வளாகத்தில் திறக்க முயற்சியெடுக்கிறது.. அதுவும் பிரதமரையே அழைத்துவந்து கிரிமினல் படத்திறப்பு மிகப்பொருத்தம்.. ஆம் நாளை கோட்சே சிலையை பாராளுமன்றத்தில் நிறுவ இந்த செயல் முன்உதாரணமாக அமையும்.. .. தமிழகத்தில் ஒரு ஆட்சி நடக்கிறதா என கேட்கும் அளவிற்கு மிக மோசமான அசாதாரண சூழல் நிலவுகிறது.. மாட்டிறைச்சிக்கான மாடுகள் விற்பதற்கு ஏற்படுத்திய சட்டவடிவை தடைசெய்திருக்கிறது மதுரை உயர்நீதிமன்றம் ஆனால் ஆளும் தரப்பில் முதல்வரும் அமைச்சர் ஜெயகுமாரும் டெல்லியில் தம்பிதுரையும் கவனமாக படித்துவிட்டு கருத்து கூறுவதாக சொல்லியிருக்கிறார்கள்.. எழுத்துகூட்டி படிக்க இத்தனை நாள் வேண்டுமா.. கேரளாவில் தனி சட்டமே இயற்றியிருக்கிறார்கள்.. கொஞ்சம் கூடுதலாய் திராவிட நாடு பேச செய்திருக்கிறார்கள்..இங்கே காலில் விழுந்து கிடக்கிற சொரணையற்ற அடிமைகளாய் .. வீரம் பேசிய கவுண்டன் கவிழ்ந்து கிடக்கிறான்..வெட்கம் வெட்கம்..பதவிக்காக இத்தனை தலைக்குனிவு தேவையில்லை.. .. இங்கே மற்றொன்றை சொல்ல வேண்டும் திராவிட நாடு கோரிக்கை வந்தவுடனே அவசர அவசரமாக தாழ்ந்தவனை(செ.கு.தமிழரசன்) பிடித்து திராவிடநாடு கோரிக்கை மாயை என புதிய தலைமுறை பேசவைத்திருக்கிறது.. திராவிடம் இருக்கும் ஆரியம் இருக்கும் வரை என்பதறியாதவராய் உளறிக்கொண்டிருக்கிறார்கள்.. எதற்கும் எல்லை உண்டென்பதை உணர்ந்து திரும்ப பெற வேண்டுமென தளபதி.ஸ்டாலின் இன்றைய போராட்டத்தில் எச்சரித்திருக்கிறார்.. .. எங்கள் எதிரிகளே.. எங்களினத்தோரை கொண்டே எதிர்கருத்தை சொல்ல வைக்க முயற்சிக்கிறீர்.. ( செ.கு.த..கிருஷ்ணமூர்த்தி.. தமிழிசை..) பாவம் சிறகொடிந்தவர்கள் இயலாமையில் ஏதாவது தேறாதா என அலைகிறவர்களை கொண்டு ஏவி விடுகிறீர்.. பாவம் முனைமழுங்கிய அம்புகள் அவை.. நாங்கள் எப்படி எதை தேர்வு செய்யவேண்டுமென தீர்மானிப்பது நீங்கள் தான்.. தளபதியின் எச்சரிக்கை தொடக்கம் தான்.. சின்னபொறி அதுபோதும்.. தீக்கரையாகிவிடும் . .. #எச்சரிக்கை .. தோழர். ஆலஞ்சி

Tuesday, May 30, 2017

நல்ல தலைவன்

மு.க.ஸ்டாலின் #இந்தியஅரசியலின்_உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கிறார். டைம்ஸ் ஆப் இந்தியா... .. நிதானமாக அதைநேரம் கூர்மையாக செயல்படும் தலைவராக திரு.ஸ்டாலின் திகழ்கிறார். கலைஞரின் ஓய்வால் ... இவருக்கு தரப்பட்ட அதீத பொறுப்பை மிக சாதூர்யமாக தொலைநோக்கோடு அவசரப்பட்டு அலங்கோல அவல ஆட்சியை கலைக்காமல் அதன் போக்கிற்கே விட்டு .. தமிழகத்தின் மிகசிறந்த தலைவர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்தி இந்தியளவில் தனி கவனத்தை ஈர்த்திருக்கிறார்.. .. ஒரு இரவில் பூத்துவிடவில்லை.. நீண்டகால பயிற்சி மிசா காலந்தொட்டு கட்சிப்பணி.. ஏறக்குறைய ஐம்பதாண்டுகள் மக்களோடு இணைந்து பணியாற்றி.. கிளைக்கழகம் தொடங்கி..இன்று செயல்தலைவராக தன்னை உயர்த்தியிருக்கிறார்.. தமிழக அரசியலில் நாகரீகத்தின் உச்சத்தை தொட்டிருக்கிறார்.. இக்கட்டான நேரங்களில் கூட அமைதியாக அதேவேளை உறுதியோடு செயல்பாட்டை முன்னெடுக்கிறார்.. கலைஞர் உடல்நலிவுற்றவுடன் சிலர் முடிந்தது கதை என இறுதி அத்தியாயம் எழுத நினைத்ததும் .. மாற்றி புதிய அத்தியாயத்தை தொடங்கி எதிரிகளை தூரத்திற்கு விரட்டியடித்திருக்கிறார்.. கலைஞரைப்போல தன்னைச்சுற்றியே தமிழக அரசியலை இயங்கவைத்து ..தேசியளவில் திமுகவை முன்னெடுக்கும் உக்தியை கண்டு கலைஞரின் வழித்தடம் எவ்வளவு அருமையாக பயணிக்கிறதென அரசியல் நோக்கர்கள் உற்று ஆச்சரியத்தோடு கவனிக்கிறார்கள் .. .. திராவிடம் மிகப்பெரிய தாக்கத்தை தந்திருக்கிறது/ விதைத்திருக்கிறது.. நானிகாம் தலைமுறையை மிக வழிநடத்த சிறப்பான தலைவனை தேர்வு செய்திருக்கிறது.. தேசம் கவனிக்கிறது.. .. #நல்ல_தலைவன் .. தோழர். ஆலஞ்சி

Monday, May 29, 2017

அரைவேக்காடு

சினிமாகாரர்களின் அரசியல் பார்வை என்பது நிழலோடு காதல் கொள்வதை போன்றது.. சமுத்திரக்கனியின் அரசியல் பார்வையில் நல்லக்கண்ணு ஜோதிபாசு போன்றவர் தலைவர்களோடு உ.பி.யோகி யை ஒப்பிடும் அளவிற்குத்தான் இருக்கிறது.. சினிமாவில் அதிரடியாக செய்கிற நல்லவைகள் தலையில் தூக்கி கொண்டாடுகிறவர்கள் நிஜத்தின் வலி அறியாதவர்கள். .. இறந்த முஸ்லிம் பெண்களை தோண்டியெடுத்து உடலுறவு கொள்ளுங்கள் என சொன்ன யோகியை நல்லக்கண்ணு போன்றவரோடு சமமாக யோசிக்க முடிந்ததை நினைக்கும் போது அருவருப்பு தோன்றுகிறது.. இவை தெளிவற்றவர்களின் அல்லது மனதின் ஏதோ ஒரு மூலையில் ஜாதி/மதவெறி கொண்டவர்களாலேயே இப்படி பேச முடியும்.. குஜராத்தின் கசாப் கடைக்காரனை வானுற புகழ்ந்ததைப்போல.. .. சினிமாவில் பொதுவுடைமை பேசுகிறவனை நம்புகிற கூட்டம் இனியாவது கொஞ்சம் சிந்தித்துணரவேண்டும்.. அவரவர் அரசியல் பார்வையில் நாம் குறிக்கீடு செய்வதில்லை ஆனால் ஜோதிபாசு போன்ற தலைவர்களோடு ஆளுமைகளோடு .. கழிசடைகளை சேர்ப்பது சகிக்க கூடியதாக இல்லை தலித் மக்கள் தன்னை சந்திக்கவேண்டுமெனில் முதவில் சோப்பு போட்டு குளுத்துவிட்டு வரவேண்டுமென அதிகாரிகளை வைத்து உத்திரவிடுகிற.. பாசிச ஜாதி வெறிபிடித்தவரோடு நல்லக்கண்ணு போன்றோரை.. தவறவிட்ட பஸ்ஸூக்காக பேருந்து நிறுத்தத்திலேயே படுத்துறங்கி.. அரசியல் பயணத்தை தொடரும் அப்பழுக்கற்ற நல்ல மனிதரோடு இணைத்து பேசுவதன் மூலம் இவரது அரசியல் பார்வை என்பது சினிமாவில் வரும் கதாநாயக கம்யூனிஸ சிந்தனையை போன்றது. .. பாகுபலி 2 குறைச்சொன்னால் வீடுதேடி வந்து அடிப்பேன் எனும் அளவிற்குதான் இவரது விமர்சன பார்வை அதே அளவுதான் அரசியல் தெளிவுமிருக்கிறது..சமுத்திரக்கனி எல்லாம் தெளிவற்ற அல்லது சட்டென்று உணர்ச்சிவயப்பட்டு திமிரி எழுகிற அடிமாட்டு கூட்டத்தை சேர்ந்த ரகம்.. சினிமா தரும் கவர்ச்சியில் எதை சொன்னாலும் அது சரியாக இருக்குமென நம்பிய காலம் மலையேறிவிட்டது.. இன்றைய இளைஞர்கள் தெளிவாக பயணிக்கிறார்கள்.. தயை கூர்ந்து சமுத்திரக்கனி போன்ற அரைவேக்காடுகள் #வாய்மூடி_இருக்கவும்.. .. #Half_boiled… .. தோழர். ஆலஞ்சி

திராவிட நாடும் மாட்டுக்கறியும்

அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என 1950 பேரறிஞர் அண்ணா முழங்கினார்.. திராவிட நாடு கோரிக்கை தந்தை பெரியாரால் முன் வைத்த போது அது பிரிவினைவாதத்தை மக்களிடையே வளர்க்கிறதென்ற எதிர்ப்பும் பலமாக வந்தது.. தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு தென்மாநிலங்கள் அதன் வளர்ச்சியில் அக்கறையில்லாத அரசும்.. குறிப்பாக திராவிட இனத்தவர்களை புறந்தள்ளி அரசு அதிகாரத்தில் ஆளுமைக்கொண்டதும் .. ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் தேவை/உரிமை சார்ந்தும் திராவிட நாடு கோரிக்கையை வைத்தார்.. .. அரசியல் பங்களிப்பில் திமுக வருமென்ற நம்பிக்கையில் திராவிட நாடு கோரிக்கையை தற்காலிகமாக விடுகிறோம்.. என்றார்..ஆனால் நோக்கம்/காரணங்கள் அப்படியே இருக்கிறதென்றார்.. இதோ மீண்டும் உயிர்தெழ தொடங்கியிருக்கிறது டி.எம்.நாயர் மண்ணிலிருந்து.. இதை கேட்டவுடன் சிலர் பதட்டபடுகிறார்கள்.. மலையாளியை விட பாப்பானை நம்பலாம் என்கிறார் இதிலிருந்து பாப்பான் ஏமாற்றி வந்ததை ஒப்புக்கொள்கிறார்கள் இதுவரை வாய்மூடி இருந்தவர்கள் இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்.. தமிழிசை குரலில்/சொல்லில் பயம் தெரிகிறது பிரிவினைவாதிகளை இளைஞர்கள் நம்பவேண்டாமென்கிறார்.. பரந்த அகண்ட பாரதம் கேட்பவர்களுக்கு திராவிட நாடு கசக்கதான் செய்யும்.. .. மக்களின் உணவில் கை வைத்தவுடன்.. சாப்பிடும் தட்டை பிடிங்க நினைப்பவனின் மேல் கோவம் வருவது இயல்புதானே.. அதுதான் நடந்தது.. எம் மக்களின் உணவை வடநாட்டான் தீர்மானிக்கமுடியாதென கேரள முதல்வர் பிரணாய் விஜயனும் மாட்டுக்கறி தடையை ஏற்க முடியாதென கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் தெலுங்கானாவின் சந்திரசேகரராவும் நம்ம நாராயணசாமியும் எதிர்த்து அடிக்க தொடங்கி இருக்கிறார்கள்.. இன்னும் முழுமையாக படிக்கவில்லையென கமிழக முதல்வரும் தம்பிதுரை எம்பியும் வழக்கம் போல் அடிமைத்தனத்தை காட்டி நிற்கிறார்கள். தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறது.. பிரதான எதிர்கட்சியான திமுக 31 ந்தேதி போராட்டத்தை அறிவித்திருக்கிறது.. திராவிட நாடு முழக்கத்தை முன்மொழிந்த அண்ணாவின் இயக்கம் கையிலெடுக்கிறது.. காங்கிரஸின் மல்லிகாகிஜூன் கார்கே நாங்கள் மண்ணில் மைந்தர்கள் (திராவிடர்கள்) வந்தேறிகள் (ஆரியர்கள்) நீங்கள் என்பதை மறந்துவிட கூடாதென சொல்லியிருக்கிறார்.. நீறு பூத்த நெருப்பாய்..பெரியாரின் முழக்கம் #திராவிடநாடு ஐம்பதாண்டை கடந்தும் உயர எழுகிறது.. .. நாம் எந்த ஆயுதத்தை எடுக்கவேண்டுமென எதிரியே தீர்மானிக்கிறான்.. .. தோழர். ஆலஞ்சி

Sunday, May 28, 2017

Dravida nadu

We are the Dravidian Legacy.. திராவிட நாடு கோஷம் வலுப்பெறுகிறது.. அப்போதே எங்கள் பெருங்கிழவன் சொன்னான் திராவிட கழகம் எனும் பெயர் சூட்டிய போது பாப்பன தூசி கூட நுழைய முடியாத பெயரை சூட்டியிருக்கிறேன் இதைவிட நல்ல பெயரை சொன்னால் ஏற்றுக்கொள்கிறேன் என்றார்.. தெலுங்கனும் கைரளியனும் (மலையைாளி) கன்னடனும் திராவிடத்தை பற்றிக்கொள்ளும் காலம் வருமென்றான்.. ஆம் இப்போது (கைரளியர்கள்) மலையாளிகள் திராவிட நாடு முழக்கத்தை முன்னெடுக்கிறார்கள்.. .. நேற்று நான் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுயிருந்தேன் இப்படியே போனால் ஒருங்கிணைந்த இந்தியாவின் கடைசி பிரதமர் மோடி என வரலாறு பதிவு செய்யுமென்றேன்.. பாப்பான் மொழியை பாப்பான் உணவை ,கலாச்சாரத்தை, மதத்தை பிற இனம் மொழி கலாச்சார மக்கள் மீது திணிக்க முற்படும் போது.. பல்வேறு கலாச்சாரத்தை கொண்ட பன்முகதன்மையை சிதைத்து ஆரியத்தை முன்னெடுத்தால் நாடு சிதறுண்டே போகும்.. .. எனது உணவை நீ தீர்மானிக்க முடியாது.. நான் எதை செய்யவேண்டுமென நீ எனக்கு கட்டளையிட முடியாது.. எனது உரிமைகளை நீ பிடிங்கிக்கொண்டு என்னை அடித்தமர்த்த கூடாது ஆரிய மதத்தை அதன் கோட்பாடுகளை பிராமணர்கள் கொண்டாடுவதில் எங்களுக்கு எந்த சங்கடமுமில்லை ஆனால் பிற மத இன மொழி உணர்வுகளின் மீதும் அவர்களின் பண்பாட்டின் மீதான தாக்குதலை ஏற்கமுடியாது அது எதிர்வினாயாற்றியே தீரும்.. .. திராவிட நாடு கோரிக்கையை இப்போது கேரள கரையிலிருந்து துவக்கம் குறித்திருக்கிறது.. தெலுங்கும் கன்னடமும் இணையும் .. யாருக்கும் உதவாத சமஸ்கிருதத்தையும் திணிக்க முயல்வதும்.. பாப்பனர்களின் உணவு முறைகளை பிற சமூகத்தின் மீது வலுகட்டாயமாக திணிப்பது பிற சமூகத்தின் உணவை கேவலப்படுத்துவது.. இதெல்லாம் இந்தியா போன்ற பன்முக பேசும் நாட்டில் நடக்காது/ஏற்கமுடியாது.. திராவிடர்கென்ற நாகரீகம் கலாச்சார பண்பாடு உண்டு அது சிறப்பானதும் கூட.. இந்த மதவெறியர்களால் இந்தியா முழுமைக்குமான திராவிட முழக்கம் சென்றடையும்.. .. அப்போதே எங்கள் #பெருங்கிழவன்_பெரியார் சொன்னார்.. பாப்பான்களால்தான் நாட்டிற்கு கேடுவரும்.. எங்கள்.. #பெருங்கிழவன்_தீர்க்கதரிசி… .. #Dravidanadu.. .. தோழர். ஆலஞ்சி..

Saturday, May 27, 2017

மாட்டரசியல்

மாட்டுக்கறி சாப்பிட சொல்லி குர்ஆனில் இருக்கிறதா எச்.ராசா.. அதை விடுங்க இந்தியாவில் மாட்டுக்கறியை அதிகம் சாப்பிடுகிறவர்கள் யாரென்று NSSO சொல்கிறது.. ..//NSSO கருத்து கணிப்பின்படி தலித்துகளை உட்படுத்திய ஹிந்து சமூகத்தில் அதாவது தலித்கள் 77 % சதவீதம் பேர் மாட்டின் இறைச்சியை உண்ணுகின்றனர் . அடுத்து இடைநிலை பிற்படுத்தபட்ட சாதிகளை சார்ந்தவர்கள் 22% பேர் மாட்டின் இறைச்சியை சாப்பிடுகிறார்கள் . 7% ஏனைய உயர்சாதியினர் சாப்பிடுகின்றனர் . கிறித்துவ சமூகத்தில் 33% சதவீதமும் , முஸ்லிம்களில் 40% சதவீதமும் மாட்டிறச்சியை சாப்பிடுவதாக NSSO தெரிவிக்கிறது . ஆகவே இந்திய முஸ்லிம்களில் 13 கோடி பேர் மாட்டின் இறைச்சியை சாப்பிடவில்லை என்கிறது அதாவது மாட்டுக்கறியை தின்பவர்களில் இந்துக்களே அதிகம்.. ஆனால் இந்து வேதம் சாப்பிட சொல்லியிருப்பதாக எச்.ராசாவின் ஜகத்குரு.. பழைய கும்பகோணம் மடம் பின்ப காஞ்சி மடத்தின் அதிபதி.. சங்கராச்சாரியார் ஸ்ரீ சரஸ்வதி சுவாமிகள் புரிகிற மாதிரி சொல்லவேண்டுமெனில் காஞ்சி பெரியவர் தன் #தெய்வத்தின்_குரல்...(இரண்டாம் பாகம்) இப்படிதான் சொல்லி இருக்கிறார்.. :/தர்மத்துக்காகச் செய்யவேண்டியது எப்படியிருந்தாலும் பண்ண வேண்டும். ஹிம்சை என்றும் பார்க்கக் கூடாது. யுத்தத்தில் சத்ரு வதம் பண்ணுவதை சஹல ராஜ நீதிப் புத்தகங்களும் ஒப்புக்கொள்ளவில்லையா?.......அப்படி பசு ஹோமம் பண்ணுவதிலும் தப்பே இல்லை." "பிராமணர்கள் செய்வதில் மிகவும் உயர்ந்ததான வாஜ பேயத்துக்கும் 23 பசுக்களே கொல்லப்படுகின்றன. சக்கரவர்த்திகளே செய்கிற மிகப் பெரிய அச்வ மேதத்துக்குக் கூட 100 பசுக்கள் என சொல்லியிருக்கிறது." .. குர்ஆனில் .. பசுக்கென்று அத்தியாயமே,உள்ளது.. இறந்தவரை எப்படி உயிர்தெழுப்புவான் என்ற கேள்விக்கு விடையளிக்க .. உழவிற்கு பயன்படைதா செந்நிற பசுவை அறுத்தென்று சொல்கிறது... அப்போதெல்லாம் யூதர்கள் தெய்வமாக #மாடுகள் இருந்தது .. மாட்டை வழிபடும் பழக்கம் இந்திய கலாச்சாரத்தில் இல்லை அது யூதர்களின் வழிமுறை .. யூதர்களின் வாரிசான ஆரியர்கள் இந்தியர்கள் மீது திணித்தது.. .. மாட்டிறைச்சியை ஒரு மதத்தை சேர்ந்தவர்கள் தினிபதை போல சித்தரிக்க பாஜக முயல்கிறது.. பசு பெரும்பான்மை இந்துக்களின் புனிதமென நம்பவைக்க முயல்கிறது இரண்டுமே தவறு.. பாஜகவின் இத்திட்டம் தோல்வியில்தான் முடியும்.. இந்தியர்களின் உணவில் மிர முக்கிய பங்கு வகிப்பது மாட்டிறைச்சி.. .. #தின்னும்சோற்றில்_அரசியல்… #மக்கள்மீதான_போர் .. தோழர். ஆலஞ்சி

தலையாட்டி பொம்மைகள் ..

இந்தியாவை ஆள்வது ஆர்எஸ்எஸ் தான் திருமா.. யார் காரணம் திருமா.. தமிழகத்தில் இந்த கேடுகெட்ட ஆட்சி வருவதற்கு யார்காரணம் திருமா.. காங்கிரஸை தடுத்து மோடி வந்தால் நல்லதென இங்கே கூப்பாடு போட்டது யார் திருமா... .. திமுகவை தனிப்படுத்த எண்ணி . வலிய வந்து வாழையிலை விருந்து வைத்தது யார் .. ஜெயலலிதாவின் மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டியதை மறந்து வைகோ என்ற கேடுகெட்ட தரகனை நம்பி போனது ஏன்.. வாக்குகளை பிரித்து திமுகவின் வெற்றியை தடுக்க நினைத்து கடைசியில் இருக்கிற கோவணமும் அவிழ்ந்ததே யாரால் வந்தது இதெல்லாம் அறியாதவரா தாங்கள்... .. அரசியலில் எல்லோரும் வரலாம் வந்து பங்களிக்கலாம் மறுப்பதற்கில்லை அதை மக்கள் ஏற்கிறார்களா தங்களின் பலமென்ன என்பதை அறிந்திருக்க வேண்டாமா.. மீடியா #வெளிச்சம் வரவேண்டுமென்பதற்காக .. சேர்ந்து உண்டு சேர்ந்து திரிந்து கடைசியில் போய் சேருமிடம் தெரியாமல் தடுமாறி நிற்பதேன்.. இங்கே இன மொழி அரசியல் என்ற பெயரில் மறைமுகமாக சிவப்பு கம்பளம் விரித்து பாசிச சிந்தனையோடே வாழ்ந்த ஜெயலலிதாவை மீண்டும் வர வசதியாய் மாறி நின்றதன் விளைவு இன்று கல்கியெல்லாம் நீயும் பொம்மை நானும் பொம்மை என கிண்டல் செய்கிற நிலைக்கு தமிழக அரசியலை கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.. .. அரசியல் கட்சி இதெல்லாம் மீறி தார்மீக பொறுப்பு இல்லாமல் போனதால்..ஆரிய கூட்டம் நேரடியாக இம் மண்ணில் அதிகாரம் செலுத்த முடியாதென்பதால் அதிமுகவை சிதைத்து சின்னாபின்னமாக்கி மறைமுகமாக ஆட்டுவிக்கிறது தேசியளவில் பாஜக என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் இருப்பதைபோல .. அதிகாரத்திற்கு வராமலேயே இங்கேயும் மாமாக்களும் மாமிகளும் திமிரோடு பேசுகிறார்கள்.. உணவில் கூட அரசியல் செய்கிற கொடுமை உலகில் எங்கும் நிகழாதது.. .. தமிழகத்தில் திமுகவை தவிர்த்து எவருக்குமே ஆள தகுதி இல்லை அதுதான் உண்மையும்கூட.. சதா மீடியாக்களில் பேசி திரிவதால் எந்த மாற்றத்தையும் சீமான் வகையறாக்கள் ஏற்படுத்த போவதில்லை.. மக்களின் ஒரே நம்பிக்கை இன்றளவில் திமுக தான் .. அதை பின் துணைக்காவிட்டாலும் புறம் நின்று குத்தும்வேலையை உதிரி கட்சிகள் செய்யாமல் இருந்தால் போதும்...நாட்டிற்கு நல்லது நடக்கும்.. .. ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை பாஜகவை மதவெறி மூடர் கூட்டத்தை ஜாதிவெறி கும்பலை மதம்,மொழி,இன வெறியாளர்களை வேரோடு சாய்த்திட திமுகவால் மட்டுமே முடியும்... மாநிலத்தில் மட்டுமல்ல மத்தியிலும் மாற்றத்தை கொண்டுவர .. திமுகவால் முடியும்.. .. #நிச்சயம்_நல்லதே_நடக்கும்… .. தோழர்

Friday, May 26, 2017

மாடு... மனிதனை தின்கிறது..

கால்நடைகளை இறைச்சிக்கா விற்க தடை மத்திய அரசு.. பசு காளை ஒட்டகம் சந்தைகளில் விற்க தடை கிறுக்கன்கள் கையில் நாடு காந்தி தேசத்தை பாப்பான் தேசமாக மாற்றிவிட நினைக்கிறார்கள். நான் என்ன உணவை உண்ணவேண்டுமென தீர்மானிக்க இவர்கள் யார்.. தனி மனிதரில் உரிமை அரசு தலையிட முடியாதென்கிறது சைவர்கள் உண்ணும் உணவைதான் மற்றவர்களும் உண்ணவேண்டுமென்பது எந்த வகை நியாயம்.. .. முதலில் இது சட்டரீதியாகவே சரியில்லாதது.. பெரும்பாலான மக்களின் உணவை தடை செய்ய சிறிய கூட்டம் மதத்தை கையிலெடுத்து வெறிக்கொண்டு ஆடுகிறது.. மாட்டை வெட்டாதே என கூறி மனிதனை காவுகேட்கிறது இந்த கேனபயகூட்டம்.. கடும்சட்டத்தின் மூலம் மக்களின் பழக்கவழக்க மாற்றிவிட முடியென எண்ணுகிற நினைப்பு பேரடியாகவே திரும்பும்.. ஆட்சியாளர்களின் சர்வாதிகார செயல் நீண்டநாட்கள் நிற்காது வெளிறி ஓடவேண்டிவரும்.. .. மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு தடை விதித்தார்களா என்றால் இல்லை இறைச்சி ஏற்றுமதியாளர்கள் மாட்டிற்கெங்கே போவார்கள்.. சாதாரணமான விவசாயிகள் இனி மாடுகளை சந்தைகளில் வாங்க முடியாது விவசாயத்திற்கு வாங்கினாலும் கசாப்பிற்கென்று வழக்கு போடலாம். மாடுகள் விவசாயத்திற்கு பயன்படாமல் போகும் போது அதை என்ன செய்வது.. அதை பராமரிக்க செலவு செய்ய முடியாத நிலை வருமே.. சொற்பகாசிற்கு விற்றாலாவது வேறொரு மாட்டை வாங்க அந்த தொகை பயன்படுமே.. இதிலிருந்து மாட்டை மொத்தமாக பெரும் நிறுவனங்கள் வாங்கி அதைவெட்டி ஏற்றுமதி செய்யும்.. அதுதான் நடக்க போகிறது.. .. அடிமாடுகளை இனி என்ன செய்வது அப்படியே விட்டுவைத்தால் வியாதிதான் வரும்.. அதற்கும் செலவு செய்ய முடியாமல் ஏழை விவசாயிகள் தடுமாற போகிறார்கள்.. முட்டாள்தன முடிவுகள் ஆட்சியாளர்களை வீழ்த்தியிருக்கிறது.. ஹிட்லர் முதன்முதலில் யூதர்கள் வழிபாடு செய்ய தடை விதித்தார்.. கடைசியில் உயிர்வாழவே தடையென்றானது.. ஆனால் கடைசியில் ஹிட்லர் தான் வீழந்தார் .. ஒரு சமூகத்தின் மீதான அடித்தமர்த்தல் பன்முகதன்மை கொண்ட நாட்டில் நிலைக்காது.. நிறைய கருத்துவேறுபாடுகளை கொண்ட இந்திய தேசத்தில் ஒருசாராரின் வழிகளை பின்பற்ற சொன்னால் நாடு சிதறுண்டுபோகும்.. இப்படியே போனால்.. ஒருங்கிணைந்த இந்தியாவின் கடைசி பிரதமராக மோடி இருந்தாரென நாளை வரலாறு சொல்லும் #எச்சரிக்கை.. .. தோழர். ஆலஞ்சி

Thursday, May 25, 2017

தளபதி பொலிவு

ஜெயலலிதா இடத்தை திரு.ஸ்டாலின் பிடிக்கமுடியாது.. தெர்மாகோல் செல்லூர் ராஜூ.. .. ஏன் பிடிக்கணும்.. ஜெயலலிதாவின் இடம் யாருக்குவேண்டும்.. முதல்வராக இருக்கும் போது இரண்டுமுறை பதவிநீக்கம் செய்யப்பட்டு .. சிறைக்கெல்லாம் சென்ற .. நீதிமன்றம் நேரடியாகவே (திருடி) திருடியிருக்கிறாரென என வரலாறறில் பதிந்திருக்கிறதே .. யாருக்கு வேண்டும் இந்த பெரும்புகழ்.. சகமனிதர்களை அடிமையைப்போல் நடத்தும் அகங்காரம் .. எடுத்தேன் கவிழ்தேன் என தலைக்கனத்தோடு ஏன் திரிய வேண்டும்.. வாயை திறந்தாலே பொய்யும் மரியாதை குறைவான விசமேறிய சொற்களும் ஏன் பேசி திரியவேண்டும்.. ஜனநாயகத்தை குழித்தோண்டி புதைத்து கொலை கொள்ளையென வாழும் போதும் வாழ்ந்த பிறகும் ஏன் அசிங்கப்படவேண்டும்.. சட்டத்தின் முன் கிரிமினலாய்.. அரசியலில் கேடுகெட்டவராய் வாழ்வியலில் பூஜ்யமாய்.. ஏன் இருக்கவேண்டும்.. .. தளபதி வழி. தனித்துவம் கொண்டது.. மிக எளிமையான யதார்த்தமான அரசியலை முன்னெடுப்பது.. குறுக்குசால் ஓட்டாமல் நேர்மையாய் எதுவும் வரவேண்டுமென எண்ணுகிற உயர் குணம்.. பதவிக்காக அல்ல பணியாற்றுவதற்கான வாய்ப்பு அது என தெளிவாய் தெரிந்தவர்.. அவரது சொல்லும் செயலும் தெளிவான பாதையை கொண்டது எதிரிகள் கூட வியக்கும் ஆற்றல்மிகு சேவை.. எல்லோருக்கும் இனியவராய் வலம் வருகிறார்.. தேடிபோனதில்லை தன்னை தேடி வரவேண்டும் வாய்ப்பு என அமைதியாய் இருக்கும் மாமனிதர்.. இவரோடு ஒப்பிட ஜெயலலிதாவிற்கு தகுதியே இல்லை.. .. பதவி வந்தாலும் இதே பணியோடு தன் கடமையாற்றுவார்.. இதே எப்போதும் எதிர்க்கும் தினமணி கூட தளபதி சேவையை பாராட்டியிருக்கிறது கூடவே விமர்சனம் செய்வோரை கண்டித்திருக்கிறது.. உங்களால் முடியாவிட்டால் அமைதியாக இருங்கள்.. .. ஜெயலலிதா எனும் அழுக்கோடு.. தூய்மையை இணைத்து பேசாதீர்.. ஜெயலலிதா அடைந்தது புகழ் அல்ல அவமானம்.. அதுகூட தெரியாமல் உளறிக்கொட்டியிருக்கிறார் ராஜூ.. கிரிமினலோடு பழகி.. கிரிமினல் வேலை செய்பவர்களுக்கு.. நேர்மையான தூய்மையான மக்கள் விரும்பும் அரசியல் தெரியாது.. ஜெயலலிதா அரசியலில் ஏற்பட்ட அழுக்கு.. .. #தளபதி_பொலிவு.. #ஜெயலலிதா_பாழ்.. .. தோழர். ஆலஞ்சி

Wednesday, May 24, 2017

குமுதம்..

#குமுதம்.. எஸ்.ஏ.அண்ணாமலை செட்டியார் தன் சொந்த காசில் புரிந்து கொள்ளுங்கள் தன் சொந்த காசில் தொடங்கி நடத்தி வந்த குமுதத்தில் வேலைக்கு சேர்ந்தவர் பார்த்தசாரதி அய்யங்கார்.. நல்ல முறையில்.. ? கவனித்ததால் விசுவாசமாக இருந்ததால் அவரை மூன்றில் ஒரு பங்கு பங்குதாரராக நியமித்தார் செட்டியார்.. செட்டியார் இருக்கிற வரை அமைதியாக தான் போனது செட்டியார் மறைவிற்கு பிறகு .. ஜவகர் பழனியப்பன் ஆசிரியர் பொறுப்பை ஏற்று நடத்தினார்.. ஜவகர் வெளிநாட்டில் மருத்துவராக பணிபுரிந்ததால் குமுதத்தை நிர்வகிக்கும் பொறுப்பை வரதராஜனிடம் தந்தார்.. ₹25 கோடி முறையீடு நடந்தது அறிந்து போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார் அப்போதிருந்த கலைஞர் சுமூகமாக பேசி தீர்த்துக்கொள்ள பணித்தார் .. கலைஞர் மீது கோபம் கொண்டு நீதமன்றத்தை நாடி பின் வந்த பாப்பாத்தி ஆட்சியை பயன்படுத்தி குமுதத்தை தன் கட்டுபாட்டிற்குள் கொண்டுவந்தார் .. .. இதற்கிடையில் பார்த்தசாரதி மகன் வரதராஜன் அவரோடு இணக்கமாக போகாமல்.. பிரச்சனை வந்தபோது ரிப்போர்டரும் சிநேகிதியும் வரதுக்கென்று முடிவானது குமுதம் உள்ளிட்டவை ஜவகருக்கென்று பேசி முடிவாகி கையெழுத்தானது அப்போது திமுக ஆட்சி நடந்தது சுமூகமாக தீர்த்துக்கொள்ள கலைஞரும் ஆலோசனை வழங்கினார்.. ஆனால் திடீரென்று கையெழுத்திட்டது செல்லாதென்றும்.. ஜவகர் வெளிநாடு வாழ் இந்தியர் இந்திய பங்குகளை அவர் வைத்துக்கொள்ள முடிதென சொல்லி வழக்கு தொடர்ந்து அது தள்ளுபடியாகி.. மீண்டும் குமுதத்தை விட மறுத்தும்.. அதிமுக ஆட்சி மாற்றத்தில் நீதிமன்றத்தில் தீர்ப்பை பெற்றார் .. தொடர்ந்து மேல் முறையீட்டில் தான் உயர்நீதிமன்றம் ஜவகருக்கு சாதகமாக தீர்ப்பை தந்திருக்கிறது.. .. ஆதாயமில்லாமல் ஆத்தகட்டி இரைக்கமாட்டான் செட்டிப்பாங்க.. செட்டியார் தன்னிடம் வேலைக்கு சேர்நதவனுக்கு பங்குகளை தந்தாரெனில் ..அது அவரின் நல்ல மனம் .. திறக்கப்படாத கதவுகளே ஆயுதமாய் கொண்டவர்கள் காசே போடாமல் முதலாளியாகும் வித்தை அறிந்தவர்கள்.. .. பார்த்தசாரதி இருந்தவரை பிரச்சனை இல்லாமல் இருந்தது வரதராஜனின் வரவிற்கு பிறகுதான் பிரச்சனைகள். மொத்த சொத்தையும் ஆட்டயபோட நினைத்தார் அது கூடவில்லை.. வரதராஜன் பத்திரிக்கை நடத்தும் விதம் எல்லோரும் அறிந்தது கலைஞரையும் குஷ்புவையும் கூட இணைத்து மிக கீழ்த்தரமாக எழுதவைத்தவர் அவருக்கு தெரிந்த வழி அதுதான்.. .. இனியாவது குமுதம் பழைய கம்பீரத்தோடு.. 1947 ல் தொடங்கப்பட்ட அதே பொலிவோடு வரவேண்டும்.. வாழ்த்துகள் ஜவகர்.. .. #பாப்பானின் கையை எதிர்பார்பானையே பாப்பான் தின்னப்பார்ப்பான்.. #புரட்சிகவி_பாவேந்தர்.. .. தோழர். ஆலஞ்சி.. ..

Tuesday, May 23, 2017

அரசியல்வாதி

ஒரு அரசியல்வாதி எப்படி இருக்ககூடாதென்பதற்கு வேறெங்கேயும் விட தமிழகத்தில் நிறைய பேரை காணலாம்.. இதில் நீண்ட அரசியல் பின்ணணி கொண்டவர்கள் முதல் ஆதாயம் ஒன்றையே குறிக்கோளாய் கொண்ட சமூகஆர்வலர்கள்..? வரை தமிழகம் சீரழிகிறது.. .. யார்வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாமென்ற ஒற்றை சௌகரியத்தை வைத்துக்கொண்டும் .. எதை வேண்டுமானாலும் பேசலாமென்ற கருத்து சுதந்திரத்தை தவறாக புரிந்துக்கொண்டும் வருகிறார்கள்.. வருகிறவர்கள் முதல் அரிச்சுவடியை சரியாக படித்திருக்கிறார்கள் திமுகவை எதிர்ப்பது..ஆனால் அந்த அரிச்சுவடியை தாண்டி அவர்களால் சிந்திக்கவோ செயல்படவோ முடியவில்லை பாவம் தெரியவில்லை.. .. பொதுவாழ்விற்கு வருவதற்கான தகுதியாக ஜாதி மதம் மொழி ..இதோடு சினிமாபுகழ் இதுதானென தமிழர்களை நம்பவைக்கிற ஊடகங்களும் அதை நம்பி வாய்சவடாலுமாய் வீர வசனம் ..? கத்தி கூச்சலிட்டு ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கும் இவர்களையெல்லாம் காணும் போது கோவம் வருகிறது.. நினைவேந்தல் நிகழ்ச்சியென சொல்லி கைதுசெய்யபட்டவர்கள் 36 பேர் நாங்கள் தான் எதிரிக்கட்சியென்கிற நிலைக்கு வந்துநிற்கிறது.. தமிழகம்.. .. மொழி இன உணர்வென்பது நம்மீது திணிக்கப்படும் செயல்மீது காட்டவேண்டியதை மறந்து அவர்களையே துணைக்கழைத்து இன்னும் சொல்லப்போனால் அடிமைகளாகவே இருப்பேன் என எழுதிதந்ததைப்போல அத்தனை விசுவாசமாய் பதவிஆசை மறைக்கிறது .. இப்போது அரைகுறைகளின் கூச்சல் அதிகமாக கேட்கிறது அதிமுகவை சிதைத்து அந்த வெற்றிடத்திற்காக இங்கே பெரும்சண்டையே நடக்கிறது தினம் தினம் தொலைக்காட்சிகளில் நாடகங்கள் ஆக்ரோசமாய் ஆனால் கடைசியில் நகைப்பிற்குரியதாய் போகிறது.. .. திமுகவிற்கு யார் எதிரி என்பதில் தான் இப்போதைக்கு அவர்களிடத்தில் .. பாவம் அவர்கள் அறியவில்லை யாரை எதிரியாக தேர்வு செய்யவேண்டுமென திமுகவே தீர்மானிக்கும் என அறியாமல்.. இவரிகள் தங்களுக்குள் சண்டை போட்டுக்கொள்கிறார்கள்.. .. மத இன மொழியை சொல்லி பிழைப்போரே..உங்கள் கால்கள் முதலில் தரையில் நிற்கட்டும் பிறகு ஓட்டத்திற்கு அழைப்பதா என நாங்கள் தீர்மானிக்கிறோம்.. .. #வெற்றுகூச்சல்_காதடைக்கிறது.. .. தோழர். ஆலஞ்சி

தேசிய தலைவராகிறார்

#ஜூன்3.. வைரவிழா.. மிக முக்கியமான நாள்.. இரு காரணிகளுக்காக மிகவும் கூர்ந்து கவனிக்கிறது நாடு.. .. தமிழக அரசியலில் மிக நீண்ட அரசியல் பயணத்தில் தொடர்ந்து பல்வேறு பதவிகளிலும் அரசியல் சமூகப்பணி கலைப்பணி, பொதுசேவைகளிலும் கட்சித்தலைமையிலும்.. என்பதாண்டு அரசியலில் அறுபதாண்டு சட்டமன்ற உறுப்பினராக தோற்க்கடிக்க முடியாதவராக இருக்கும் கலைஞருக்கு நன்றி கூறும் விழா.. புகழ்பாடுதல் என்பதை கடந்து ஒரு எளிய மனிதன்.. மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து சமூக அக்கறையோடு கூடிய நெடுவாழ்வில் யாரும் தொட முடியாத இதுவரை யாருமே தொட்டிராத உச்சத்தை தொட்டமைக்கு நன்றி கூறும் நல்விழா.. இந்த சமூகத்தை சிலர் மட்டுமே ஆண்டும் மற்றவரை அடித்தமர்த்தியும் ஏற்றதாழ்வை சொல்லி ஏமாற்றி வந்த கும்பலை வேரோடு பிடிங்கியெறிய இந்த பெருமகன் பெரியாரின் பார்வையோடு ஆற்றிய அரும்பணிக்கு #நன்றி கூறும் நல்விழா.. ஐம்பதாண்டுகாலம் தன்னை சுற்றியே அரசியலை சுழலவிட்ட தான் காட்டும்/பார்க்கும் திசைநோக்கி வெளிச்சத்தை பரடவிட்ட இந்த கிழட்டு சூரியனுக்கு நன்றி கூறும் நல்விழா.. .. மற்றொரு காரணியும் உண்டு இந்த விழாவின் மூலம் நாடு சிக்குண்டு தவிக்கும் தீய மதவெறிகூட்டத்திலிருந்து மீள வழிவகைசெய்யும்/ வழிகாட்டும் புதியபாதையை நோக்கிய பயணத்தின் முதல் படியாய் எப்போதும் சமூகநீதி பேசும் தமிழ் மண்ணிலிருந்து துவக்கம் குறிக்கும் விழா இது.. தேசிய தலைவர்களை ஒருங்கிணைக்க நல்லதொரு விடியலை நாடு காத்திருக்கும் வேளையில் இந்த விழா பேருதவிபுரியும்.. தளபதி.மு.க.ஸ்டாலின் புதியதொரு பாதையை வடிவமைக்கிறார்.. நல்லதொரு முயற்சியாய் சரியான ஜனநாயக பாதையை புரிதலோடுகூடிய மக்களின் மனமறிந்து செயலாற்றும் சிறந்த வழியை பின்தொடர்கிறார்.. அது தமிழகமக்களின் நன்மதிப்பை பெறுகிறது .. தளபதி அவர்களை தமிழகம் தாண்டி தேசியளவில் எடுத்துச்செல்ல ..தளபதியின் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி நகர்த்தும் விழா இது.. .. கலைஞரைப்போல தேசிய தலைவர்களில் போற்றப்படும் ஒருவராக இந்தியா முழுவதும் பேசப்படும் நபராக தளபதியை இந்த விழா எடுத்துச்செல்லும்.. .. #நல்லகாலம்_பொறக்குது.. .. தோழர். ஆலஞ்சி

Monday, May 22, 2017

மதம் தலைக்கேறிய..விசம்

இந்துவை திருடன் என்றவர்களையே வைத்து குளங்களை தூர்வார வைத்துவிட்டான் இறைவன் ..தமிழிசை.. .. தமிழிசை அவர்கள் அரசியலில் பச்சகுழந்தைன்னு நினைச்சா மத விடயங்களிலும் பாவம்.. இந்துவை திருடன் என்று கலைஞர் கூறியதாக சொல்பவர்களுக்கு சேர்த்தே சொல்கிறோம்.. இந்து என்றால் யாரென்று என்று மகா பெரியவர் என்று நீங்கள் நம்புகிற காஞ்சி ஸ்ரீசரஸ்வதி சுவாமிகள் தன் அருளுரையில்.. வாணிபம் செய்ய வந்த அரேபியர் நமக்கிட்ட பெயர் .. அதாவது இந்து என்கிறார்.. அதாவது இந்து என்ற சொல்லே நீங்கள் இப்போதிருக்கிற அல்லது நம்புகிற இந்து மதத்தில் இல்லை என்கிறார்.. .. இந்து என்ற சொல் பார்சிய மொழியிலிருந்து வந்ததென்கிறார் இதற்கு (இந்து) விளக்கமளித்த சுப்ரமணிய அய்யர்.. அதை தான் மேற்கோள் காட்டி கலைஞர் சொன்னாரே தவிர.. இந்துவை திருடனென கலைஞர் சொல்லவில்லை.. மற்றொன்று குளங்களை தூர்வார ஆண்டவன் பணித்தான் என்கிற பொருள்பட பேசியிருக்கிறீர்.. உண்மையில் ஆண்டவன் சொல்லிதான் திமுக எதையும் செய்யும்.. தமிழகத்தை ஆண்டவன் சொல்லி தான் எதையும் திமுக செய்யும்.. .. ஒரு முறை கடவுளை ஏன் பிடிக்கவில்லை என கேட்டதற்கு கடவுள் எனக்கு பிடிக்க வேண்டுமென்பதில்லை கடவுளுக்கு பிடிக்கிறதா என்பதுதான் முக்கியமென்றார்..கலைஞர் ஆம் அவரவர் நம்பிக்கையில் தலையிடுவதில்லை .. சொல்வது என்பதுவேறு .. கடவுளைப்பற்றிய கருத்தில் உறுதியாக எதிர்ப்பதென்பது வேறு ஆனால் தடுப்பதென்பது வேறு .. ஒருமுறை சாய்பாபா கலைஞரை அவரது இல்லத்திலேயே சந்தித்தார் அப்போது அவரது அபிமானிகள் கடவுள் மறுப்பாளரை ஏன் சந்திக்கவேண்டுமென கேட்டதற்கு உங்களுக்கு கலைஞராக தான் தெரியும் அவர் ராஜராஜனின் மறுபிறவி.. மன்னரை சந்தித்தேன் என்றார்.. இதை பதிவதன் நோக்கம் மற்றவர்களின் நம்பிக்கையில் நாங்கள் தலையிடுவதில்லை என்பதற்காகவும் யாரையும் புண்படுத்குவதல்ல எங்களின் நோக்கம் என்பதற்காகவும் தான்.. .. .. தூர்வாருதல் நல்ல செயல் அதை விமர்சிப்பதில் கூட கடவுளை மதத்தை பயன்படுத்தும் #கேடுகெட்டவராக இருப்பதை எண்ணும் போது இந்த தமிழச்சி மீது கோவமே வருகிறது.. மதம் தலைக்கேறியதன் விளைவிது.. மதம் பிடித்தால் செய்தவறியாது போகும்.. .. தோழர். ஆலஞ்சி..

திமுக தெளிந்த நீரோடை

அண்ணாவிற்கு பிறகு கலைஞரை எம்ஜிஆர் முதல்வராக்கினார்.. நாவலர் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் சீமான்.. .. முதலில் இயக்க வரலாறு தெரியாமல் இதுபோல நிறைய பேர் பேசுகிறார்கள்.. அண்ணா மறைவிற்கு பிறகு தற்காலிக முதல்வராக நாவலர் பதவியேற்றார்.. திமுக செயற்குழு கூடி யார் முதல்வராக வேண்டுமென்று தீர்மானிக்கிறது..பெருவாரியான செயற்குழு/பொதுக்குழு உறுப்பினர் கலைஞர் பெயரையே முன்மொழிகிறார்கள் கலைஞர் முதலில் மறுத்தார் பிறகு எம்ஜிஆர், ப.உ.ச நாஞ்சிலார் போன்றவர்கள் கலைஞரை வற்புறுத்துகிறார்கள் அப்போது நாவலரும் மந்திரிசபையில் இடம்பெற வேண்டும் என நிபந்தனையோடு முதல்வராகிறார்.. .. அதே போல ஐம்பெருந்தலைவர்களில் கலைஞர் இல்லை என பேசுகிறார்கள்.. இந்தி எதிர்ப்பு வலுப்பெற்றிருந்த நேரம் டால்மியாபுரம் பெயரை அகற்ற கல்லக்குடியில் போராட்டத்திற்கு தலைமையேற்க அண்ணாவால் அனுப்பிவைக்கப்பட்டார் அப்போது சென்னையில் கைதானவர்கள் அண்ணா நடராஜன் நாவலர் உட்பட அப்போது தினத்தந்தி ஐம்பெரும் தலைவர்கள் கைதென்று முதல்பக்கத்தில் செய்தி வெளியிட்டது அதையே பின்வரும்நாள்களில் பேச தொடங்கினர் அன்றைய தினம் சென்னையில் இருந்திருந்தால் கலைஞரும் அந்த அட்டவணையில் வந்திருப்பார்.. .. நாவலர் என்றில்லை வேறுயாரும் கலைஞரை தவிர்த்து எம்ஜிஆர் உட்பட முதல்வராகியிருந்தால் திமுகவை #ஆழக்குழித்தோண்டி புதைத்திருப்பார்கள்.. நாவலர் சிறந்த பேச்சாளர் நல்ல திறமையான கல்வியாளர் அரசியல் அனுபவமுள்ளவர்.. அதெல்லாம் கட்சியை நிர்வகிக்க போதாது ..அரசை/ஆட்சியை நிர்வாக செய்ய பெரிய திறமையெல்லாம் தேவையில்லை ஆனால் கட்சியை தொடர்ந்து கட்டுகோப்போடு வைத்திருக்க மிகசிறந்த தலைமைப்பண்பு வேண்டும்.. இல்லையென்றால் ஆளுக்கொரு பக்கம் போய்விடுவார்கள்.. உதாரணம் தஞ்சைமாவட்டத்தில் மன்னைக்கும் கோ.சி.மணிக்கும் மாவட்ட செயலர் பதவியில் போட்டிவந்தது அப்போது தஞ்சை வந்தவர் இருவரையும் தன் காரில் அழைத்துக்கொண்டு கூட்டத்திற்கு போனார் தான் யாருக்கும் ஆதரவில்லை இருவருமே எனக்கு தேவை யாரை வேண்டுமானாலும் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்துக்கொள்ளுங்களென சொல்லாமல் சொன்னார்.. .. நாவலருக்கெல்லாம் அந்த தலைமைப்பண்பு தலைமையேற்கும் நிர்வாக திறன் இல்லை அதனால் அவரை குறைவாக மதிப்பிடுவதாக பொருளில்லை..மற்றொன்று கட்சியை தொடர்ந்து நடத்த மக்களின் செல்வாக்கும் மிக முக்கியம்..நாவலர் தனித்து நின்று களம்கண்டபோது ஆயிரத்தி சொச்சம் வாக்குகள் பெற்ற எஸ்.வி.சேகரைவிட குறைவாக வெறும் ஐநூறு வாக்குகளே பெற்றார் ..ஒரு தலைவனுக்கு மக்களின் ஆதரவு மிக முக்கியம்.. அது கலைஞருக்கு இருந்தது #கலைஞருக்கு_மட்டுமே_இருந்தது.. .. தொடர்ந்து கலைஞரை மட்டுமே குறிவைக்கிறார்கள் ஆனால் அவரின் சாதூர்யம் முன் செயலிழந்து போகிறார்கள்.. எதிரிகள் இன்று அதே அஸ்திரத்தை திரு.ஸ்டாலின் மீதும் பாய்ச்சுகிறார்கள்.. பாவம் பரிதாபகரமாய் தோற்றுக்கொண்டே.. காலம் தந்த கொடை #கலைஞரும்_தளபதியும்.. திராவிடஇயக்கம் தலைவனை தொடர்ந்து சரியாக தயார் செய்துக்கொண்டே இருக்கும் காரணம் இங்கே கொள்கையால் உணர்வால் இணாந்தவர்கள் வெற்று கூச்சலுக்கு உணர்ச்சிவயப்பட்டு சீரழிந்து சோர்ந்துபோகமாட்டார்கள்.. .. #திமுக_தெளிந்தநீரோடை.. .. தோழர். ஆலஞ்சி..

Sunday, May 21, 2017

பலியாடு

மெகா கூட்டணி.. தமிழகத்தில் மெகா கூட்டணி உருவாகிறது..பாஜக தமாகா புதியதமிழகம் அதிமுக அணி.. எனக்கு கூட ஆகா பெரிய லெவலில் கூட்டணியோ என தோன்றியது மொத்தமாவே சொந்த ஊரில் தொகுதியில் (எங்கஊர்) 10,000 வாக்கு வாங்கமுடியாத வாசனும் , ஒட்டபிடாரத்தை தாண்டி யாருக்குமே தெரியாத கிருஷ்ணசாமியும், சிதல்சிதலா போன அதிமுக ஓபிஎஸ் அணியும் #பொய்க்காலில் நடக்க முயற்சிக்கும் பாஜகவும் ரஜினியை வச்சு செய்றாங்க.. .. நல்ல முயற்சி.. இப்படி செய்வதும் திமுகவிற்கு தனிப்பெருபான்மையை பெற மிக இலகுவாகிப்போகும்..அன்புமணியை சேர்த்துக்கொள்ளலாம் பாவம் முதல்வர் கனவை ..சில ஆண்டுகள் கழித்து தொடரலாம்.. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் ஆனால் தமிழகத்தில் மட்டும் தான் நேரடியாக .. எந்த மக்கள் பணியாற்றாமல் மக்களின் அன்றாட பிரச்சனைகளைப்பற்றிய அறிவில்லாமல் .. எந்தவொரு பிரச்சனைக்காகவும் போராடாமல் முதல்வர் நாற்காலி கனவோடு வரலாம்.. .. விஜயகாந்த் எப்படி நேரடி முதல்வர் வேட்பாளரோ அதே போல ரஜினியும் கனவோடு வர.. சில்லறை கட்சியில் கைதட்டுகின்றன.. விஜயகாந்தை இல்லாதாக்கியதைப்போல ரஜினியையும் #பித்துகுளியாக்க கதை எழுதுகிறார்கள்.. பாவம் இதெல்லாம் பழைய #திரைக்கதை என்பதறியாமல்.. பாஜகவின் கதவு திறந்திருக்கிறது என்கிறார் அமிர்ஷா.. சூசகமாக மிரட்டுகிறார்.. வருமானவரி சோதனை வருமோ.. எச்.ராசா கக்கூஸில் பொறுக்குவதாக EPS ஐ சொல்கிறார்.. உண்மையில் பாஜகதான் கக்கூஸில் பொறுக்குகிறது. கதவுதிறந்திருக்கிறதென்று.. .. ரஜினிக்கு இருக்கிற ஒரே மார்க்கம் வேறுவழியின்றி இந்துத்துவா பேசும் பாஜகவோடு இணைவது அல்லது வழக்கம் போல நழுவி நழுவி செல்வது.. இல்லையெனில் இருப்பதும் போகும்.. பணம் உட்பட.. ஒரு முறை திரு.சோ.ராமசாமி இந்துத்துவாவில் உறுதியானவர் மத நம்பிக்கையில் விசுவாசமானவர் ஆனால் இப்போதைக்கு வந்தால் நிச்சயமாக தோல்வியையே தழுவுவாரென சொன்னார் இப்போதைய அதிமுகவின் வெற்றிடம் ஆசைக்கொள்ள வைத்திருக்கிறது.. பாவம் பழைய திரைக்கதையில் நடிக்க வருகிறார்.. ஓடாதென அறியாமல். .. #பலியாடு.. .. தோழர். ஆலஞ்சி

Friday, May 19, 2017

ரஜினி தலை காலி..

தமிழர்கள் ஏன் தரங்கெட்டவர்களாக நடந்துக்கொள்கிறார்கள் ரஜினி.. வலைதளங்களில் வரும் விமர்சனங்களை கண்டு ரஜினி திருவாய்மலர்ந்தது.. .. ஆம்.. தமிழனின் ரசனை தரங்கெட்டதால்தான் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் தமிழக அரசியலில் காலம் கடத்த முடிந்தது.. சினிமாகாரனை/நடிகனை அரிதாரம் பூசி ஆளை மயக்கியவனை வைக்கவேண்டிய இடத்தில் வைக்காததால் தான் .. சினிமா பார்த்துவிட்டு அதை தியேட்டரிலேயே விட்டுவிட்டு வராததால்தான்.. காசுக்காக நடிப்பவன் அரசியலிலும் நடிப்பானென அறிந்து அறியாமல் போனதால்தான்.. இன்றைக்கு ரசனை தரங்கெட்டு போனதென சினிமா வியாபாரத்திற்காக அடிக்கடி மாறி மாறி அரசியல் வேடம் கட்டும் தரங்கெட்டவர்களுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டியிருக்கிறது.. .. சினிமாவை மனதில் ஏற்றி நிழலை நிஜமென்று நம்பி .. அரிதாரத்தில் கருப்பை எவனும் பூசாததால்..வெள்ளை நிறம் தமிழனை கொள்ளைக்கொண்டதால்.. அறிவு மழுங்கி ..சொல்பவனுக்கு செயலாற்றுபவனுக்கும் வேறுபாடறியாமல்.. சினிமா வசனத்தை தெருவில் பேசினாலும் கை தட்டி ரசிக்கும் எங்கள் ரசனை கீழ்த்தரமானதுதான்..மிக்க நன்றி.. ரஜினி அவர்களே.. தமிழனுக்கு உறைக்கிறமாதிரி சொன்னதற்கு .. .. இந்த தரங்கெட்ட ரசனைகாரர்கள் தந்த பொன்னில் மின்னுகிறீர்.. இப்போது கூட இந்த தரங்கெட்டவர்களை ஏமாற்றி இருக்கும் சில பொன்களையும் பிடுங்கதான் என்பதறிந்தும்.. சகித்துக்கொண்டிருப்பவன்.. ஒரு வார்த்தைக்காக.. மன்னிப்பு கேட்கவைத்த கர்நாடகவனை விட தரம்தாழ்ந்து நிற்பதை அவனுக்கு உறைக்கிற மாதிரி சொல்லியிருக்கிறீர்.. .. என்ன செய்ய இதிலிருந்து மீண்டு வந்தாலும் மீண்டும் மீண்டும் சவக்குழியில் தள்ளிவிடுகிற கொடுமை.. அறிவுக்கொண்டு எதையும் நோக்கமால் உயர் சிந்தனையை .. பகுத்தாயும் அறிவை ..தொலைநோக்கு கூடிய செயலாற்றலை வேண்டாமென வைத்ததால் கண்ட கழிசடைகளும் நம்மை தரங்கெட்டவர்களென பேசி திரிகிறது.. .. தமிழர்களுக்கு புரிந்தால் சரி.. #அரிதாரம்_நேரமானால்கலைந்துபோகும்.. .. தோழர். ஆலஞ்சி..

பெரியார் தேசமிது

போராளி.. அதற்குண்டான மரியாதையையே போய்விட்டது திரு.ரஜினிகாந்த் அவர்களே.. சதா கூச்சலிடுபவன் போராளியா .. தினம் தினம் வெவ்வேறு கருத்தில் நின்று பேசி பிறகு மடைமாற்றி பேசும் இவர்களையெல்லாம் போராளி என்கிறீர்கள் பாருங்கள் உங்கள் அரசியல் பார்வை அபாரம்.. .. மக்களின் பிரச்சனைகளை வெகுமக்களின் ஆதரவை திரட்டி போராடுகிறார்கள் சிலர். சொற்பமேயெனினும் தங்கள் பங்கை கொள்கைபிறழ் இல்லாமல் செய்கிறார்கள்.. மக்களை ஒருங்கிணைத்து ஜனநாயகத்தின் அறவழி பிறழாமல் ஆட்சியாளர்கள் குலைநடுங்கவைப்பவர்கள் இருக்கிறார்கள்.. ஆனால் இவர்கள் ஒன்றில் உறுதியாக இருப்பார்கள் அது அவர்கள் ஏற்றுக்கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பார்கள். செயல்களில் தவறிழைப்பதும் அதனால் தோல்வியை தழுவுவதும்.. அரசியல் வாழ்வில் தடுமாற்றங்கள் தந்தபோதும் போராட்ட உணர்வு அவர்களிடமிருந்து மாறியதே இல்லை.. .. கோமாளிகளை.. கொள்கைப்பிழைகளை .. ஏமாற்றுபவர்களை.. வழிகெடுப்பவர்களை, அறிவிலிகளை.. எதற்கும் உதவாதவர்களை. எல்லாம் போராளிகளென சொல்லி அசிங்கப்படுத்தாதீர்.. .. படித்தவர் என்கிறீர்.. மனதிற்குள் வன்மத்தோடு ஜாதியை முன்னெடுக்கும் வெறிப்பிடித்தவர்களை விரட்டப்படவேண்டாமா.. அது சரி.. பெரியாரின் பாதையை தான் தேர்ந்தெடுப்பேன் என்கிறீர்.. பெரியாரை பேசாமல் அரசியல் அரிச்சுவடியை கூட எழுதமுடியாதென்பதை உணர்ந்திருக்கிறீர்.. இதை கூட ஆண்டவன்தான் சொன்னானா..? ஆண்டவனை ஆம் தமிழ் மண்ணை ஆண்டவனை (கலைஞர்) அவனின் அரசியலை படிக்காமல் பின் பற்றாமல் .. பேசாமல் ஒரு செயலும் இங்கே நடக்காது... பெரியாரின் பாதை சமூகத்தின் ஏற்றதாழ்வுகளை கலைவது.. சாதிகளை ஒழிப்பது.. மதம் கொண்டு அலைவோரை வேரோடு சாய்ப்பது.. இதெல்லாம் மதம் தலைக்கேறிய உங்களுக்கு சரிவராது ரஜினி.. .. போய் அடுத்தபடத்திற்கான தலைப்பு ரெடிசெய்யுங்கள்.. #பெரியார்தேசமிது.... .. தோழர். ஆலஞ்சி..

Thursday, May 18, 2017

இன விடுதலை..

எங்கே விழுந்தது இன விடுதலை/உரிமை போராட்டம்.. .. நீண்ட வரலாறை கொண்ட ஈழ விடுதலை போராட்டம் ஆரம்பகாலங்களில் தமிழகத்தில் தன்னெழுச்சியான வரவேற்பை ஆதரவை பெற்றிருந்தது.. மக்கள் தாமாகவே முன் வந்து பேருதவி செய்திருக்கிறார்கள்.. பல்வேறு பிரிவுகளாக .. சில அமைப்புகள் ஜனநாயகத்தின் மீதுமட்டுமே நம்பிக்கையும் சிலர் தோக்கு தீர்வுதருமென நம்பினார்கள்.. ஆனால் இருசாராரையும் தமிழகமக்கள் ஏதோயொருவகையில் பின்துணைத்தார்கள் தமிழகத்தில் காட்சிகள் மாற துவங்கியதன் பின்னணியை கொஞ்சம் ஆராயவேண்டும்.. .. 80 களில் விடுதலை போராட்டம் தீவிரமடைந்த நேரம் இங்கே அதுவரை ஈழம் பற்றிய சராசரி அறிவோ அனுபவமோ இல்லாத எம்ஜிஆர் (மகோரா) ஆட்சியிலிருந்தார்.. அப்போது பிரபாகரன் ஒரு வழக்கில் கைதாகியிருந்தார்.. அவரை வெளியே விடவேண்டுமென்று கலைஞர் வழக்கமான எதிரான கருத்தாயுதத்தை எடுத்தார் விடுதலையான பிரபா எம்ஜிஆரை சந்தித்து நன்றி சொன்னார்.. அப்போதிலிருந்து எம்ஜிஆரின் விசிறியாகவே செயல்பட்டார்.. அப்போதெல்லாம் கீழ்தஞ்சை மாவட்டங்களில் மத்திய ரிசர்வ் போலீஸின் செக்போஸ்ட் நிறைய இருக்கும் காரணம் நிறையதமிழர்கள் அகதிகளாய் வந்துக்கொண்டிருந்தார்கள் ஆயுதங்கள் பெட்ரோல் போன்ற எரிப்பொருட்கள் பேட்டரிக்கள் இங்கிருந்து அனுப்பிக்கொண்டிருந்த நேரம் .. அப்போதெல்லாம் அதிமுககாரர்களுக்கோ இன்று ஈழவேசம் போடும் நெடுமாறன் போன்றவர்கள் (காங்கிரஸில் இருந்தார்) என்ன நடக்கிறதென்றே தெரியாது யார் உதவுகிறார்கள் அகதிகளாக வந்த உறவுகளுக்கு உணவு உடை உறைவிடம் தருவதாரென்று ஆளும் எம்ஜிஆருக்கே தெரியாது நிறைய திமுகவினர் சொந்த நிலங்களில் தங்கவைத்தும் வேலைதந்தும் உறவுகளை அரவணைத்தார்கள்.. .. நடராஜன் தங்கதுரை குட்டிமணி சீறிசபா ரத்தினம் போன்றவர்கள் தனி இயக்கமாக செயல்பட்டனர் ..மார்க்சிய இயக்க கொள்கையில் ஈடுபாடு கொண்ட க.பத்மநாபன் (செல்வநாயகம் பத்மநாபன்) தனி அமைப்பை நடத்தினார் ..இன்னும் பல்வேறு சிறிய குழுக்களும் செயல்பட்டன.. யார் அதிகாரத்தில் அல்லது ஆணையிடுவதில் வழிநடத்துவதில் என்ற நோக்கம் சகோதரயுத்தத்தை உண்டாக்கி கிட்டுவின் ஆலோசனையில் பிற அமைப்பின் தலைவர்களை கொல்வதென முடிவெடுக்கப்பட்டு .. ஒவ்வொரு அமைப்பாக சிதைத்தார்கள்.. சீறிசபா பத்மநாபன் ..தொடங்கி மாத்தையா வரை.. பிரபாகரனின் அபரீத வளர்ச்சி பிற அமைப்புகளை இடம்பெயர செய்தது..புலம்பெயர்ந்தார்கள்.. .. தோக்கால் எல்லாவற்றையும் சாதித்துவிடலாமென்ற அறிவிலித்தனம்.. கடைசியில் இந்திய பிரதமராக இருந்த உலகின் மிக முக்கிய தலைவராக வலம்வந்த ராஜீவை கொல்ல திட்டமிட்டார்கள் அதில் வெற்றிப்பெற்றார்கள்.. அங்குதான் அவர்களின் .. வீழ்ச்சி ஆரம்பமானது.. சீறியையும் பத்மனையும் குட்டிமணியையும் மாத்தையும் கொன்ற போது என்ன காரணம் சொன்னார்களோ அதே காரணத்தை தான் ராஜீவ் கொலைக்கும் சொன்னார்கள்.. பாதிக்கப்பட்டவர்கள் கொன்றார்கள்.. அந்த வாதம்எடுபடவில்லை தமிழக மக்களிடம் அதுவரை இருந்த இனம்புரியாத உணர்வு வெறுப்பாய் மாறியது.. அது இன்று வரை .. கடைசியில் அது ஒரு துன்பயியல் சம்பவமென பிரபாகரனே சொல்லவேண்டி வந்தது.. .. இப்போதெல்லாம் ஈழம் வியாபார பொருளாக மாறிவிட்டது.. ஈழம் பேசுகிறவன் பங்களாக்களில் வசிக்கிறான்.. என்பதுகளில் சொந்த காசை செலவு செய்த திமுககாரன் .. பழியோடு திரிகிறான்.. இதுதான் யதார்த்தம்.. .. கிளிகொச்சி கைவிட்டுப்போன பின் விடுதலைப்புலிகள் தங்களை காப்பாற்றிக்கொள்ள நடத்தியது.. #மனிதகேடயம் அதை யாருமே கண்டிக்காமல் போனது இனத்தின் அழிவை எழுதிதந்ததுப்போல் ஆனது..கடைசியில் கரம் தூக்கி நின்றபோது இனத்தின் வீரம் வீழ்ந்தது.. விவேகத்தை முன்னெடுக்க எந்த வீரமும் தோல்வியையே தழுவும் என்பதே வரலாறு.. .. தோழர். ஆலஞ்சி

Wednesday, May 17, 2017

தூர்வாரப்படும் குளங்கள்

ஊரெங்கும் குளங்களை தூர்வாருகிறார்கள்..திமுகவினர்.. #மகிழ்ச்சி.. .. நீர்நிலைகளை தொடர்ந்து பராமரிக்க தவறியதின் விளைவு எங்கும் வறட்சியே காண்கிறோம்.. முன்பெல்லாம் குளங்கள் ஏரிகள் கோடைகால நீர் பற்றாக்குறையை சமாளித்தது.. இப்போதெல்லாம் ஆட்சியாளர்கள் என்றில்லை சாதாரணமானவர்கள் கூட ஆக்ரமிக்கிறார்கள்.. அருகில் குடிசை போடுவது கொஞ்சம் கொஞ்சமாக நீர்நிலைகளை ஆக்ரமித்து கட்டடமாகவே கட்டிக்கொள்கிறார்கள்.. நீர்வழித்தடத்தில் பாசனத்திற்கான #பட்டாவாய்க்கல் எல்லாம் காணாமல் போய்விட்டது..விளைநிலங்கள் கட்டடமான பிறகு நீர்வழித்தடங்களை அடைத்து அல்லது மூடிவிட்டார்கள் அதனால் குளங்களுக்கு சிறிய குட்டைகளுக்கு நீர்வரத்தின்றி காய்ந்து அதையும் கொஞ்சம் கொஞ்சமாக மூடிவிட்டார்கள்.. சில குளங்களை நகராட்சி,ஊராட்சிகளே குப்பை மேடாக மாற்றிவிட்டது.. .. ஒரு லட்சத்து மேலான குளங்கள் காணாமல் போனதாக புள்ளிவிவரம் சொல்கிறது இன்னும் கொஞ்சம் கூடுதலாக கூட இருக்கலாம். அரசாங்கள் செப்பனிட்டு தந்தாலும் மீண்டும் வலுத்தவன் ஆக்ரமிக்கிறான்.. சென்னை உயர்நீதிமன்றத்தில் 89 தொடரப்பட்ட வழக்கில் .. நீண்ட காலத்திற்கு பிறகு 2004 ல் என நினைக்கிறேன் நீர்நிலைகள் (குளங்கள், ஏரிகள்,நீர்வழித்தடங்கள்,வாய்கால்,கால்வாய் குட்டைகள்) மீது கட்டப்பட்ட கட்டிடங்கள் எது தனிநபருககானதாக இருந்தாலும் பொது மக்கள் பயன்பாட்டிற்கானதானாலும் #வழிபாட்டுதலங்களாக இருந்தாலும் (கோவில்,மசூதி,தேவாலயம், ) ஆனாலும் அகற்றப்படவேண்டுமென உயர்நீதிமன்றம் தீர்ப்பே வழங்கியிருக்கிறது.. ஆனால் அதை எந்த அரசும் கண்டுக்கொள்ளவில்லை.. .. அரசாங்கம் மட்டுமே எல்லாவற்றையும் செய்யவேண்டுமென்பதில்லை.. பொதுமக்களே தங்கள் ஊரில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி செம்மையாக்கலாம் .. வரும் மழைக்காலத்தில் நீரை சேமிக்க உதவும்.. இப்போது திமுகவினர் எல்லா ஊர்களிலும் குளங்களை தூர்வார பணித்திருக்கிறார் நல்ல முயற்சி .. தளபதி அவர்களோடு நாமும் சேர்வோம்.. அவரது முயற்சிக்கு துணைநிற்போம்.. பாராட்டுவோம்.. .. #நல்லதலைவன்_கிடைத்திருக்கிறான் #நம்பிக்கை_பிறக்கிறது…… .. தோழர். ஆலஞ்சி..

Tuesday, May 16, 2017

பிரதமர்.

வலைதளங்களில் பிரதமரை விமர்ச்சிப்பவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டுமென்கிறார் எச்.ராசா.. .. நாட்டின் பிரதமரை விமர்சிக்கலாமா என கேட்டால் விமர்சிக்கபடவேண்டும் அதுதான் சரியும் கூட.. அவரின் நடவடிக்கைகள் ஏதோ ஒரு சாராருக்கு மட்டுமானதாக இருப்பதும் சுயமாக சிந்தித்தோ அல்லது தன் கேபினெட் சகாக்களோடு கலந்தாலோசித்தோ முடிவெடுக்காமல் .. எங்கிருந்தோ வரும் கட்டளையை பின்பற்றுகிறவரை எப்படி விமர்சிக்காமல் இருக்கமுடியும்.. .. வாயை திறந்தால் பொய்யை சொல்லும்.. ஒரு பிரதமரை நாடு இதுவரை சந்தித்ததே இல்லையே.. அரசதர்மத்தோடு நடந்துக்கொள்ளுங்கள் என குஜராத் இனபடுகொலை நடந்தபோது வாஜ்பாய் சொன்னாரே.. அப்போதுகூட வங்க இதழொன்று குஜராத்தின் கசாப்கடைக்காரன் என தலைப்பிட்டதே .. எந்த தகுதியில் அவரை பிரதமராக்கினீர் என தொடங்கி.. இன்றுவரை பாஜக மீதும் பிரதமர் மீதும் எதிர்மறை கருத்துக்கள் தொடர்ந்து வந்துக்கொண்டுதானிருக்கிறது.. ஒரு ஜனநாயக நாட்டில் பொதுவாழ்விற்கு வந்தவர்கள் விமர்சனத்திற்குள்ளாவதை யாரும் கேள்வி கேட்க முடியாது.. நாட்டின் தலைநகரில் ..நாட்டின் குடிமகன் நிர்வாணமாக நின்ற போதும் ஏன் என கேட்கவில்லையே.. மற்றொரு நிகழ்வாய் பெண்களும் ஆடைகளை கலைந்து அம்மணமாய் நிற்கிற கொடுமை வேறு யாருடைய ஆட்சியிலாவது.. ஏன் வாஜ்பாய் ஆட்சியிலாவது நடந்ததா.... .. தமிழகத்தின் இதுவரை ஏன் ஆளுநரை நியமிக்கவில்லை.. ஏன் திரைமறைவில் ஆட்சியை நடத்திட துடிக்கிறீர் வேண்டாவதர்களை சோதனை என்ற பெயரில் அலைக்கழிப்பதும்..கடைசியில் ஒன்றுமில்லாமல் போய் கரியை பூசிக்கொள்வதையும் கேட்கவேண்டியிருக்கிறதே.. மாட்டிற்காக மனிதனை கொல்கிற அவலம் வேறெப்போதாவது நடந்ததுண்டா.. நாங்கள் வந்தால் எல்லையை மீற முடியாதென்றீர்கள் இதுவரை 258 ராணுவர் வீரர்கள் பலியாகியிருக்கிறார்களே.. ஒரு பெண்மணி பிராவை அனுப்பிவைத்திருக்கிறாரே இப்படி எந்த பிரதமராவது அசிங்கப்பட்டிருக்கிறாரேகளா.. தலித்கள் வேட்டையாட படுகிறார்கள் முஸ்லிம்கள் மீது வன்மத்தை/வெறித்தனத்தை/குரோதபோக்கை வெகு மக்களிடையே பரப்பிவருகிறார்களே அதை இந்த பிரதமர் கண்டித்ததுண்டா.. ஒரே நாளில் நாட்டுமக்களை நடுதெருவில் நிறுத்தி.. கருப்புபணத்தை ஒழிப்பதாக சொன்னாரே ஒழிந்துவிட்டதா.. நிறைய கேள்வி மீதமிருக்கிறது.. கோமாளித்தனமாய் ..ஆட்சி செய்துக்கொண்டு நாட்டை கெடுத்துகொண்டிருக்கிற பிரதமரை விமர்சிக்காமல்/கண்டனத்தை பதிவுசெய்யாமல் புகழவா முடியும் .. இந்தியா கண்ட மிக மோசமான பிரதமர்.. மோடி .. தோழர். ஆலஞ்சி

இருப்பதும் போய்விடும்

ரஜினி.. தனது திரைப்படம் வருகிற போது மட்டும் அதிகம் பேசபடுகிற நபராக இருக்கிறார்.. அவரின் அணுகுமுறைகள் அரசியலுக்கு தகுதியானதா என கேள்வி எழுகிறது.. யாரும் அரசியலுக்கு வருவதில் தவறில்லை ஆனால் அதற்கான அடிப்படை தகுதி கூட இல்லாமல் வருவதென்பது இன்னொரு விஜயகாந்தை தரும் அவ்வளவுதான்.. .. அரசியலுக்கு வருவதை ஆண்டவன் தீர்மானிப்பான் என்கிறார்.. கூடவே பணம் பதவி ஆசை உள்ளவர்கள் என்னோடு வராதீர்கள் என்கிறார் இந்த வியாபாரி.. மிக சிறந்த வியாபாரியாக அறியபடுகிறவர்.. ரசிகன் பொன்னில் நான் வளர்ந்தேன் என சொன்னவர். முற்றும் துறந்து அரசியலுக்கு வா என்கிறார்.. இந்த போலித்துறவி..அரசியலுக்கு வர எல்லோரும் ஆசைபடுகிறார்கள் அதற்கான தகுதியை திறமையை வளர்த்துக்கொண்டார்களா என்றால் இல்லை .. ஒன்று சம்பாதிக்க அல்லது சம்பாதித்ததை காப்பாற்றிக்கொள்ள என மிக தெளிவாக பிழைக்கவேண்டுமென்ற நோக்கில் தான் ரஜினியின் வருகை பார்க்கப்படும் சம்பாதித்ததை காப்பாற்றிக்கொள்ள.. .. இதுவரை மக்கள் பிரச்சனைகளுக்காக ஏதேனும் போராட்டம் நடத்தியிருக்கிறாரா.. அல்லது சிறியதாய் கண்டனமேனும் தெரிவித்திருக்கிறாரா.. தமிழகத்தின் தினம்தினம் நடக்கும் கொலை கொள்ளைகள் ஏதாவது தெரியுமா.. இன்றைய ஆட்சியாளர்களின் பலவீனம் கண்டவர்களும் முதல்வர் பதவிக்கு வர ஆசையை உண்டாக்கியிருக்கிறது.. .. ஆரம்பத்தில் தூக்கிவைத்து ஊடகங்கள் கொண்டாடும் சில நாட்களிலேயே மக்கள் முன் நிற்கிற போது கட்டிய வேட்டியை கூட உருவிவிடுவார்கள்..சிவாஜி தமிழக மக்களின் மிகவும் நேசித்த அறியப்பட்டவர்.. தான் சார்ந்த சமூகமக்கள் அதிகம் வசிக்கும் திருவையாற்றில் நின்றார்.. அப்போது கணபதிஅக்ரஹாரத்தில் ஒரு டீக்கடையில் அமர்ந்திருந்தேன்.. சில கார்களில் சிவாஜி உட்பட சிலர் வந்திறங்கி எல்லாருக்கு டீ போடு என சொல்லிவிட்டு எப்படி இருக்கு நிலைமை என்றபோது மாஸ்டர் சொன்னர் ஜெயிக்கமுடியாதுண்னே.. ஆம் தோற்றுப்போனார்.. அதற்கான காரணங்கள் வேறாக இருந்தாலும் .. சரியாக முடிவெடுக்கமுடியாததும் சரியான தொகுதியை தேர்வு செய்யாததும் காரணம் திருவையாறுகாரர்கள் சொந்த தொகுதிகாரனை தவிர யாருக்கும் ஓட்டுபோடமாட்டான் அவன் கள்ளனாக இருந்தாலும்.. .. அதிமுக காலவதியாகும் தேதி Expiry date முன்கூட்டியே குறியிட்ட நிலையில் இருப்பதால் அந்த இடத்திற்காக மதத்தை பேசி சிலரும் ஜாதியை சொல்லி சிலரும்.. சினிமா முன்னிருத்தியும் வருகிறார்கள்.. கொள்கைகள் தெரியாமல்.. பாவம் .. விடை தெரியாமல் வீழ்ந்துபோவதற்கு .. ரஜினி சிறந்த நடிகருமில்லை அவரிடம் அரசியல்வாதிக்கான தகுதியும் இல்லை ஆனால் நல்ல வியாபாரி மறுப்பதற்கில்லை ரஜினிக்கு சில கேள்விகள் தமிழகத்தின் பிரச்சனைகள் என்னவென்றாவது தெரியுமா மக்களின் தவிப்பிற்காக என்றைக்காவது குறைந்தபட்சம் குரலாவது கொடுத்திருக்கிறீர்களே .. தமிழகத்தின் பூகோள வரைபடத்தில் உள்ள பகுதியெல்லாம் தெரியுமா.. ரசிகன் என்பவன் அரிதாரம் பூசியே பார்க்க ஆசைபடுபவன்.. அவனுக்கு நிஜமறியும் போது சுடும் ஓடிவிடுவான்.. கவர்ச்சி அரசியல் 1977 ல் கவர்ச்சிக்கு மயங்கி ஆதரவு தந்தான் இப்போது 2017 ..புரிந்தால் நல்லது.. காசு சம்பாதிக்கிறவன் வேண்டாமென்கிறீர். தன்னிடம் உள்ளதை கொட்டி கொடுத்து கைதட்டி ரசிக்கிறவனை மொட்டையடிக்காதீர்.. அரசியல் அதற்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டீர்.. மற்றொன்று விடயம் தயவு செய்து தமிழர்களை முட்டாள்கள் அல்ல #இருப்பதும்_போய்விடும்_மரியாதைஉட்பட.. தோழர். ஆலஞ்சி..

Monday, May 15, 2017

இஸ்லாமிய அமைப்புகள்

சில இஸ்லாமிய அமைப்புகள் ஆர்எஸ்எஸ் கைக்கூலிகளாக செயல்படுவதாக நண்பரொருவர் சொன்னார்.. அப்படியிருக்க வாய்ப்பில்லை அடித்துகூறவோ/கடந்துபோகவோ என்னால் முடியவில்லை.. .. ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் அறிந்தவர்கள் இதை மறுக்கமுடியாமல் கடந்து செல்லவேண்டியிருக்கிறது.. ஆரியர்களின் பிரதான எதிரிகள் என அறியபடுகிற திராவிட சமூகத்தை சிதைக்க விரும்பி அவர்கள் நடத்தும் நாடகங்களும் திரைமறைவு செயல்களையும் உற்று நோக்கின் சில உண்மைகள் புலப்படும்.. இந்திய துணைக்கண்டத்தை திராவிடன் தான் ஆண்டார்கள்.. அவர்கள் மொழியால் தமிழர்களாக அறியப்பட்டாலும் அதன் கிளை மொழிகளென அறியப்படுகிற தெலுங்கு மலையாளம் துளு,கன்னடமென பல்வேறு மொழிப்பிரிவுகளாக இருந்தார்கள்.. வரலாற்றாசிரியர் திரு. இரா.பாலகிருட்ணன் ..வட்டார மொழிகளின் ஒலி அளவைகள் The size of the sound கிளை மொழிகளை தந்ததென்கிறார்.. குறிப்பாக திராவிட மொழிகள் பயன்பாட்டில் அதன் குறியீடுகள் தெரியுமென்கிறார்..குறிப்பாக இப்போது கூட மாவட்டங்கள் தோறும் உச்சரிப்பில் ஒலி அளவைகள் மாறுபடும்.. நெல்லைத்தமிழ் மதுரைத்தமிழ் .. தஞ்சைத்தமிழ் என்பதைப்போல.. ஆரியர்களுக்கு இந்திய துணைக்கண்டம் முழுவதுமாக ஆட்சியிலிருந்த திராவிடத்தை எதிர்த்தே நிற்கவேண்டிய சூழல் வந்தது.. .. விசயத்திற்கு வருவோம்.. இன்றைய சூழலில் திராவிடம் பேசுகிற கட்சிகளென்றால் அது திராவிடர்கழகமும் திமுகவும் தான்.. திராவிட கழகம் போராட்டம் கருத்தரங்கம், விழிப்புணர்வு பிரச்சாரம், வழக்கு, என்று தன்பாதையை வகுத்து செயல்படுகிறது .. அதுவரை ஆரியர்களுக்கு எந்த பிரச்சனையுமில்லை ஆனால் திமுக அதிகாரத்தையும் சேர்த்து கேட்கிறது இங்குதான் அவர்களுக்கு இடைஞ்சல் வருகிறது அதனால்தான் நாலாபக்கமும் திமுகவை தாக்க /அழிக்க முனைப்போடு செயல்படுகிறார்கள்.... .. அவர்கள் அதிகாரத்தை கேட்காதவரை அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை மாறாக அதிகாரத்தை பிடுங்குவதையோ அல்லது தன்னைவிட தாழ்ந்தவன்/கீழாவன் என்பவனிடம் தருவதை விரும்பாமல் அல்ல பொறுக்கமுடியாமல் தான் அவர்கள் திராவிடம் பேசுகிற .. திமுகவை தனிமைப்படுத்த தொடர்ந்து செயல்திட்டங்களை முன்னெடுக்கிறார்கள் நேரடியாக ஊழல் வழக்கு ஆட்சிகலைப்பு ,என செய்தாலும் மீண்டும் மீண்டும் முன்னைவிட அதிக பலத்தோடு வீறுக்கொண்டு எழுவதை அவர்கள் ஜீரணிக்கவே முடியவில்லை.. அதற்காக மற்றொரு வழியில் இறங்குகிறார்கள்.. அதாவது திமுகவை தொடர்ந்து பின்துணைப்பவர்கள்.. நம்புகிறவர்கள் அவர்களின் தோழர்கள் ..இவர்களிடையே பிரிவினையை உண்டு செய்தால் ஓரளவு பலவீனப்படுத்த முடியும் தற்காலிகமாக என செயல்படுகிறார்கள்.. குறிப்பாக வெகுஜன மக்களிடையே மதரீதியான பிரிவினையை ஏற்படுத்த முயன்று தோற்றவர்கள் ஜாதிரீதியான பிரிவினைகளை கையிலெடுப்பவர்கள்.. திமுக நண்பர்கள் என அறியபடுகிற இஸ்லாமியர்களிடையே பிரிவினையை செய்து அதன் ஒரு பிரிவினரை திமுகவிற்கெதிராக திருப்பிவிடும் செயலை மிக சாமர்த்தியமாக செய்கிறார்கள்.. .. இது ஒருவகையில் பலனையும் தருகிறது.. இதன் மூலம் பலம்பெறுவது ஆர்எஸ்எஸ் என அறியாமல் திமுகவை எதிர்ப்பதன் மூலம் மறைமுகமாக உதவுகிறார்கள் இதை தெரிந்தே தான் செய்கிறார்கள் என்பதற்கு ஜெயலலிதாவை தொடர்ந்து பின்துணைத்ததே சான்று. ஜெயலலிதா பாசிச சித்தாந்தவாதி என அறிந்தும் தொடர்ந்து ஆதரித்தார்கள்.. இஸ்லாமியர்களை பிரித்தாளும் சூழ்ச்சி ஒரு பகுதி வரை வெறறிப்பெற்றதும் இப்போது தலித்களை அவர்களுக்கு வழங்கி நிற்க பிரித்தாளும் அதே யுக்தியை கையாள்கிறார்கள்.. .. இப்போது புரிந்திருக்கும்.. கபடநாடகம்.. .. தோழர். ஆலஞ்சி..

பிச்சை கபூர்

பிச்சை கபூர்.. என் எதிர்வீட்டு அண்ணன்.. வாழ்வில் பலபடித்தரங்கள் நிறைய பாடங்களை உணர்த்திவிட்டுபோகும்.. ஒரு மனிதனின் வாழ்வியல் பக்கங்கள் மற்றவரிடம் பெரியதாக்கத்தை தந்துவிடும்..அதற்கு பிரபலமாக இருக்கவேண்டுமென்பதில்லை.. .. எப்படி வாழகூடாதென்பதும் எப்படி அதிலிருந்து மீண்டு வருவதென்பதும் சிலரை கண்டு படிக்கவேண்டும்..இளமையின் வேகத்தில் செய்கிற சின்ன சின்ன விடயங்கள் அடியோடு மாற்றிவிடும்.. அண்ணன் பலதரப்பட்ட கெட்ட நல்ல பழக்கங்களை கொண்டவர்.. அந்தகாலத்து காதல்மன்னன்.. இவர் காதல் வரம்புகள் மீறியதாக .. வழுக்கிவிடாததாக இருந்தது நிறைய பேரின் கோவமும் எதிர்ப்பும் இருந்தது ஆனாலும்,உளஉறுதியோடு இருந்தார்.. இலக்கணம் மீறிய காதல்.. .. அரசியல் பார்வை இவருக்கு இருந்தது திமுகவின் உடன்பிறப்பு இவர்.. கலைஞர் தஞ்சை வருகிறார் என்றால் எந்த வேலையாக இருந்தாலும் ,போய்விடுவார்..அதேபோல தேர்தல் வாக்குபதிவன்று அதிகாலையிலேயே கரைவேட்டி கட்டி பூத் ஏஜெண்டாக (வாக்குசாவடி முகவர்) இருப்பார்.. ஒருமுறை நாடாளுமன்ற தேர்தல் சில முகவருக்கான அட்டை மட்டுமே என்னிடம் இருந்தது வேட்பாளருக்கு ஒருவர்தான் என்ற நிலை வந்தபோது என்னிடமிருந்து திமுகவின் முகவர் அட்டையை வாங்கிக்கொண்டு போனார் நான் சுயேட்சையின் சார்பில் இருந்தேன்.. எந்த நேரத்திலும் விட்டுகொடுக்காதவர்.. திமுக மாநாடு என்றால் முதல்நாளே இரண்டு உடுப்புகளை எடுத்துக்கொண்டு போய்விடுவார்.. மாநாட்டு திடலிலேயேதான் இருப்பார்.. மாநாடு முடியும்வரை.. .. ஆன்மீகமவாதி.. எங்களுர் நான்குகொடி பிரசித்தம் ஆளுக்கொரு கொடி என போட்டிபோட்டு பிரித்துக்கொள்வார்கள் இவர் உடல்நலம் பாதிப்பிற்க்குள்ளாகும் வரை இவருக்கென்று ஒரு கொடி இருந்தது..அன்று மட்டும் மதுவை தொடகூட மாட்டார்..அவ்வளவு ..அச்சம்மிகு ஆன்மீகம் அவருடையது.. .. சாதாரண மனிதர்களிடையே தான் வாழ்வின் அர்த்தங்கள் பொதிந்துகிடக்கும்.. வாழ்வில் விழுந்தவர்கள் நம்பிக்கையோடு எழுந்திட முடியுமென்கிற பொருள் பதிந்த வாழ்கை இவருடையது.. .. இவரின் மறைவு நிறைய சேதி சொல்கிறது..

பிச்சை கபூர்

Sunday, May 14, 2017

கலைஞர்

கலைஞர் திறமைக்கு கொஞ்சம் கூட ஈடுகொடுக்கமுடியாதவர் ஸ்டாலின் .. தமிழிசை சௌந்தராஜன்.. .. உண்மைதான் தமிழிசை அவர்களே. தளபதி என்றில்லை இந்திய துணைக்கண்டத்திலேயே கலைஞரின் திறமைக்கு இணையானவர் என்று யாருமே இல்லை. அவரின் அரசியல் அறிவாற்றல் முன் நிற்கமுடியாதவர்களைதான் நாம் இதுவரை கண்டிருக்கிறோம்.. ராஜாஜி தொடங்கி இன்றுவரை கலைஞரின் சாதூர்யத்தால் விழுந்தவர்கள்தான் அதிகம்.. நான் வெற்றி தோல்விகளை சொல்லவரவில்லை ஜனநாயகத்தின் இருபக்கங்கள் அவை.. ஒரு இயக்கம் தோற்றுப்போனால் அதோடு திரைசீலை இழுத்துவிடுவார்கள்.. ஆனால் தோல்விகளில் கட்சியை கட்டுகோப்போடு நடத்துச்செல்வதென்பது இன்றைக்கும் யாராலும் முடியாமல் போகும்... .. தொடர் தாக்குதல்கள் பாசிசத்தின் கொடூரமான விசமேறிய கணைகள்.. இதோ இத்தோடு முடிந்ததென நகைத்தவர்களை வாயடைக்கவைத்த விந்தை.. வெற்றி தரும் போதெல்லாம் அது நமக்கு வழங்கப்பட்ட வாய்ப்பென கருதி இயன்றவரை இந்த சமூகத்தில் கடைகோடியில் நிற்பவனின் வாழ்வில் வசந்தத்தை கொண்டுவந்து.. அவனின் வளர்ச்சிக்கு பாடுபட்டு .. சமூகநீதியை எல்லோருக்கும் சமமான நீதியை பெரியாரின் பார்வையில் கண்டவர்.. .. விமர்சனங்களை கண்டு அஞ்சி ஓடியொளியவில்லை.. மிரட்டி வழக்கெல்லாம் தொடுத்து அடக்கிவைக்கவில்லை.. எதிர்மறை கருத்தாளனையும் மதித்து அவனுக்கு பாதுகாப்பு வழங்கிய மிகப்பெரிய ஜனநாயகவாதி .. யாரை எங்கே வைக்கவேண்டும் எந்த நேரத்தில் எதை பேசவேண்டும் என அறிந்த அரசியல்மேதை எப்போதும் பந்து தன்காலடியில் கிடக்கவைத்து.. தான் அடிக்கிற திசைநோக்கியே அரசியலை நகர்த்திய சாமர்த்தியன்.. என்பதாண்டுகள்.. அரசியலில் ஐம்பதாண்டுகள் தன்னைச்சுற்றியே சுழலவைத்த அரசியல் சாணக்கியன்.. .. எழுத்தும் சொல்லும்,செயலும் ஆளுமையோடு கூடிய அறிவார்ந்ததாய் வாய்த்தது இங்கே யாருக்குமில்லை.. இரண்டாயிரம் ஆண்டுகளில் இருவரை மட்டுமே சிறந்த தலைவர்களாக காணமுடியும் ஒன்று பெரியார் மற்றொருவர் கலைஞர் பெரியார் இந்த சமூகத்தின் ஏற்றதாழ்வை போக்க போராடினார்.. அதை செயல் வடிவில் செய்துகாட்டியவர் இந்த #பெரியாரின்நேரடிசீடன்_கலைஞர் .. இன்றைக்கு கலைஞரை கேலி செய்வோர் அடிப்படை அரசியல் தெரியாதவராக, அரைகுறை இனப்பற்றோடு ..சிலரின் உணர்ச்சிமிகு தூண்டுதலால் ஏதேதோ எழுதுகிறார்கள் .. இவர்களெல்லாம் விமர்சனம் செய்யவே தகுதியில்லாதவர்கள் அவரின் ஒற்றை திறமை முன் நின்று கதைக்க விவாதிக்க எவருக்கும் அருகதையில்லை.. .. கலைஞரின் அறிவாற்றல் முன் அரசியல் முன் நிற்பதற்கே யாராலும் முடியாது #காலம்தந்த_புதையல்..கலைஞர்.. அவரின் சிந்தனையையொட்டிதான் தளபதி நடக்கிறார்.. கலைஞர் தனிப்பெரும் தலைவர்.. #ஒப்பற்ற_ஓப்பிடமுடியாத_ஒரேதலைவன்… #கலைஞர்பெருமகன்.. .. தோழர் ஆலஞ்சி..

Saturday, May 13, 2017

மாறன்..

#மாறன்.. திராவிட இயக்க வரலாற்றில் மறுக்கவோ மறைக்கவோ முடியாத பெயர்.. கலைஞர் மருமகன் என்ற நிலையை கடந்தும் அவரின் எழுத்தும் செயலும் நிறைய செய்திருக்கிறது.. ஆனாலும் சில வரலாற்றுப்பிழைகளும் நடந்தேற காரணிகளில் ஒருவரென்பதையும் மறுப்பதற்கில்லை .. மிசா காலத்தில் சிறையிலிருந்தபோது தான் திராவிட இயக்கவரலாறு பாகம் 1 எழுதினார்.. நம் ஊனிலும் உணர்விலும் கலந்திட்ட நிகழ்வுகளின் வரலாற்று தொகுப்பு .. அவர் பத்திரிக்கைத்துறையிலும் திராவிட சிந்தனையை தூக்கிப்பிடித்து கொண்டே வந்தார் வளந்தார்.. தொலைக்காட்சி ஊடகத்தை சரியாக புரிந்துக்கொண்ட முதல்தமிழன் என்பார் ப.சிதம்பரம் .. ஆம் தொலைக்காட்சி ஊடகத்தை மிக சரியாக கணித்தவர் .. அதன் (சன்குழுமம்) வளர்ச்சியில் திமுகவின் பங்கு மிகப்பெரியது.. ஆனால் அவர்கள் புதல்வர்கள்..கலாநிதி,தயாநிதி தொடர்ந்து எடுத்துச்செல்லவில்லை.. கலைஞரின் பங்கையே திருப்பிதந்து முழுவதுமாக அவர்கள் கட்டுபாட்டிற்குள் கொண்டுவந்தார்கள்.. .. #மாறன்கள் முரசொலி மாறன் சுப்ரமணிய்யரின் மகளை திருமணம் செய்த போது.. வெளியே வராத ஆரியபகை.. முரசொலி மாறனை மீறி செயல்ப்பட முடியாமல் போனது ஒருகாரணமாக இருந்தது.. மல்லிகா தன் மூத்த மகன் கலாநிதிமாறனுக்கு குடகுவில் இருந்து காவேரியையுமம தயாநிதிக்கு பிரியாவை(thehindu குடும்பத்திலிருந்து) என இரண்டு பிரமாணப் பெண்களை மணமுடித்து தன் ஆரிய பாசத்தை வெளிப்படுத்தினார்.. அது அவர்களின் குடும்ப விசயமாக இருந்திருந்தால் நாம் பேச போவதில்லை.. காவேரி கலாநிதி சன் குழுமத்தில் நுழைந்தப் பிறகு..என்னெற்ற மாற்றங்கள் .. திராவிடச் சிந்தனையிலிருந்து. மாறி..காவிகளின் காலடியில் கொண்டுப்போய் சேர்த்திருக்கிறது.. .. ஒரு மாபெரும் தலைவனின் வைரவிழா ஊரே கொண்டாடுகிறது கட்சிபேதமின்றி பெருவிழாவாக கொண்டாடவேண்டும்.. கலைஞர் பெயரை சொல்லி வளர்ந்த சன்குழுமம் மிகப்பெரியளவில் நிகழ்ச்சிகள் கருத்தரங்குகள் ..என கொண்டாடியிருக்கவேண்டும்.. கலைஞரை தலைமேல் தூக்கிவைத்து கொண்டாடியிருக்கவேண்டும் செய்யதவறியதேன்.. கலைஞர் டிவி கூட ஏதோ என்றுதான் நிகழ்ச்சிகளை செய்கிறது... .. இவர்களின் செயல்கண்டு.. #பண்ணபழகடா_பச்சைபடுகொலை என்ற பாவேந்தர் வரிகள் நியாபகம் வருகிறது.. .. #சன்குழுமம்_மாற்றான்கையில்.. .. தோழர் ஆலஞ்சி..

Thursday, May 11, 2017

அரசியல்.. மையம் திமுக..

"அரசியல் லாபத்துக்காகவே கருணாநிதிக்கு வைரவிழா நடத்துகிறார்கள்" - பொன். ராதா கிருஷ்ணன்.. .. திமுக அரசியல் கட்சிதான் என்று யாராவது அவரிடம் சொல்லுங்கள்.. பாஜகவை அதன் பாசிச கொள்கையை வேரோடு பிடிங்கியெறிய தான் திராவிட இயக்கம் தொடர்ந்து போராடி வருகிறது.. திடீரென பாஜகவோடு கூட்டுவைத்தபோது தெரியவில்லையா என கேட்பது புரியும் .. சமூகநீதிக்கு எந்த குந்தகமும் வராது என்ற புரிந்துணர்வில் ஆதரித்தது அது வரலாற்றுப்பிழையாகியதும் அறிவோம் அதனால்தான் தொடர்ந்து பாஜகவையும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதிகளையும் வேரறுக்க தொடர்ந்து போராடிவருகிறோம்.. .. இங்கே ஒன்றை குறிப்பிட்டாகவேண்டும்.. 1967 தேர்தல் ராஜாஜியோடு கூட்டுவைத்தது திமுக அய்யா பெரியார் கூட கடுமையாக விமர்சித்தார்.. தேர்தல் முடிவு வர தொடங்கியதும் ராஜாஜி மிஸ்டர் அண்ணாதுரை முதல்வர் யாரென்று முடிவு செய்துவிடலாமே என்றார் அருகிலிருந்த கலைஞர் தனிப்பெருபான்மையோடு திமுக வெல்லும் அண்ணாதான் முதல்வர் என்றார்.. அண்ணா அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் .. வாயடைத்துப்போனார் ராஜாஜி.. அறுதிப்பெருபான்மையை திமுகவெற்றிப்பெற்றது.. நேராக பெரியாரை சென்று பார்த்தார் .. பெரியாரின் காலடியில் அண்ணாவின் கண்ணீர் துளிகள்.. அப்போது பெரியாரிடம் நிருபர்கள் கேட்டார்கள் உங்கள் மனநிலை எப்படியிருக்கிறதென்று.. புதுமணப்பெண்ணைப்போல பூரித்துநிற்கிறேன் என்றார்.. ராஜாஜி அண்ணாவை சந்தித்து எங்களை ஏமாற்றிவிட்டீர்கள் என்றார் அதற்கு அண்ணா.. காலங்காலமாய் எங்கள் இனத்தையே ஏமாற்றி வருகிறீர்களே நான் இரண்டுநாள் ஏமாற்ற கூடாதா என்றார்.. .. பாவம் அழைப்பார்களென நம்பியிருந்தார்கள்.. எங்களுக்கு அழைப்பில்லையா என கேட்டும் பார்த்தார்கள்.. மிக அழகாக தளபதி அவர்கள் பதிலளித்தார்கள்.. திராவிட இயக்கத்தை ஒழிப்போம் என்று கூறும் பாஜகவை வைரவிழா நிகழ்ச்சி மேடையில் அமர வைத்து அவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை #தளபதிஸ்டாலின்.. இப்ப புரியுதா தமிழிசை/ பொன்னார் அவர்களே.. .. இழந்த முகவரியை மீட்கவே திமுக வைரவிழா நடக்குகிறது..என்போரே.. திமுகவின் முகவரியில் தமிழக அரசியலே நடக்கிறது... இல்லாத முகவரியில் நின்று கொண்டு கதைக்கிறீர்.. என்ன கத்தினாலும் தமிழகத்தில் உங்களுக்கு #முகவரி கிடைக்காது.. #அறிந்தால்_நலம்.. .. தோழர் ஆலஞ்சி..

Wednesday, May 10, 2017

நாகரீகம் பற்றி..

அரசியல் நாகரீகம் தெரியவில்லை.. தமிழிசை.. பாஜக விற்கு அழைப்பிதழ் இல்லையென்பதற்காக சொல்லியிருக்கிறார்.. முதலில் விருந்திற்கு அழைப்பதில் இருவேறு வழிகள் உண்டு .. நேரில் சென்று வந்தாகவேண்டுமென்றழைப்பது.. சிறப்பு அழைப்பு என்று எடுத்துக்கொள்ளுங்கள்.. மற்றொன்று பத்திரிகையை தபாலில் அனுப்புவது.. தமிழசைக்கு தபாலில் வரலாம் அனுப்பலாம்.. .. அது சரி எதை நாகரீகம் என்கிறார்... சக மனிதனை மனிதனாகவே மதிக்க தெரியாமல் #சங்கரராமன் கொலை புகழ் ஜெயேந்திர் மத்திய இணையமைச்சரையே காலடியில் கைக்கட்டி அமரவைத்தபோது நாகரீகம் தெரியவில்லையா.. வாயை திறந்தாலே பொய்யை மட்டுமே பேசிவரும் பாஜகவை எதிர்ப்போரையெல்லாம் தேசதுரோகி என தொடர்ந்து சொல்லி வருகிறாரே..எச்.ராசா வர்மா அவருக்கு நாகரீகம் பற்றி ஏன் வகுப்பெடுக்கவில்லை.. நாகரீகம் பற்றி மதவெறிகும்பலுக்கு ஏதாவது தெரியுமா.. அரசியல் நாகரீகத்தை பற்றிபேச ஒரு தகுதி வேண்டாமா.. அது தமிழிசைக்கு இருக்கிறதா.. .. தொடர்ந்து திமுகவை வசைபாடியும் திமுக தலைவர் கலைஞரை ஒருமையிலும் .. தீயசக்தியென்று பேசி வந்தவர் ஜெயலலிதா அவரின் மறைவிற்கு சென்று மலர்வளையம் வைத்து கண்ணீர் சிந்திய தளபதிக்கு ..அரசியல் அரிச்சுவடி தெரியாமல் தினம் தினம் மாறி மாறி உளறிக்கொட்டு தமிழிசை கேள்விகேட்பதுதான் காலக்கொடுமை.. மதவாதம் பேசுகிற அதுவும் கொடூரமாக சிந்தனையோடு திரிகிற கூட்டத்தை அழைக்கவேண்டுமென்பது.. மற்றவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும்.. இங்கே மற்றொரு சேதியும் சொல்லவேண்டும்.. நான் திமுகவில் இல்லை ஆனால் கலைஞரின் வைரவிழாவிற்கு வருவேன் மு.க.அழகிரி..என்கிறார் ஆம் யார் வேண்டுமானாலும் வரலாம் என்பதைதானே காட்டுகிறது.. கட்சி கொள்கை, கருத்துவேறுபாடு எல்லாவற்றையும் தாண்டி.. எல்லோரும் கொண்டாடவேண்டும்.. .. ஏன் ஏற்கனவே பாஜகவோடு கூட்டுவைக்கவில்லையா என கேள்வி வரும்.. ஆம் இயக்கம் செய்த வரலாற்றுப்பிழை அது..அதை உடனே சரிசெய்து மீண்டும் பெரியாரிய பாதையில் .. சமூகநீதியெனும் அடியொற்றி பயணம் செய்கிறது.. இப்போதுகூட கலைஞரை வசைப்பாடிக்கொண்டும் திமுகவை திட்டிக்கொண்டும். தாங்கள் மட்டுமே யோக்கியர்கள் போல பேசிதிரியும் கிறுக்கர்களை அழைக்கவேண்டுமா.. எனும் கேள்வி எழத்தான் செய்யும் .. கூடவே பாஜக தவிர்த்து பிற கட்சிகளை ஒருங்கிணைக்கும் நோக்கத்தை சிதைக்க விரும்பாததாலேயே பாஜகவை தவிர்க்கிறார்கள்.. புதியதொரு தொடக்கத்தை பாசிச வெறியோடு திரிகிற அதிகாரபோதையில் வெறியாட்டம் ஆடுகிற பாஜகவை வேரோடு பிடிங்கியெறிய மீண்டுமொரு புதிய கூட்டமைப்பு .. அதற்கு அடிகோளிடவே இந்த வைரவிழா.. .. தமிழிசைகள் நாகரீகத்தை கற்றுக்கொண்டு அரசியலுக்கு வரணும்.. .. தோழர் ஆலஞ்சி ..

Tuesday, May 9, 2017

எது நீதி..

நீதி.. தள்ளாடுகிறது.. உச்சநீதிமன்றம் தன் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தவேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டிருக்கிறது.. நீதி யாருக்கு வழங்கப்படுகிறதென்று என யோசிக்கவைக்கிறது.. சட்டத்தின் முன் நிற்போரை கணக்கில் கொள்ளும் அவலநிலை .. உயர்மட்டத்தினருக்கு ஜாதிய அளவுகோலில் வழங்கப்படுகிற நீதியில் காட்டும் அவசரம்.. பிறருக்கென்கிற போது கள்ளமௌனம் காக்கிறது.. .. நீதிபதி கர்ணனின் குற்றசாட்டை ஆரம்பம் முதலே செவியேற்க மறுத்ததன் விளைவு ..அப்படியென்ன சொன்னார்.. உயர்நீதிமன்ற நீதிபதிகள் விலைபோகிறார்கள் என்ற குற்றசாட்டைதானே வைத்தார்.. அப்போது தொடங்கியது இப்போதுவரை முடிந்தபாடில்லை.. ஏறக்குறைய மெண்டல் என்கிற நிலைக்கு வந்து பரிசோதனையெல்லாம் செய்ய சொல்லியும்.. இவர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பயன்படுத்தி .. ஐந்தாண்டு ஆறுமாதம் சிறையென மாறி மாறி தீர்ப்பு சொல்லியும் நீதி காலுக்கிடையில் பந்தைப்போல.. .. இன்னமும் விடை தெரியவில்லை கர்ணனின் குற்றசாட்டிற்குபதில் என்ன..? நீதி யாருக்கு வழங்கபடுகிறது என்பது சரியா மிகசிறந்த உதாரணம் .. ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கு.. 18 ஆண்டுகளுக்கு மேலாக இழுத்தடித்து தீர்ப்பு வந்த சில நாட்களுக்குள் பிணை வழங்கியது எந்த வகை நீதி.. தன் சொந்த உறவுகள் நீதிபதியாக இருக்கும் நீதிமன்றங்கள் வாதாட கூடாது என்ற நெறிமுறையை மீறி பரசுராம் வாதாடியதும் உடன் விரைந்து விசாரிக்கவேண்டுமென்றும் மூன்று மாதகாலத்திற்குள் தீர்ப்பை வழங்கவேண்டுமென்று அவசரம் காட்டியது.. எட்டாவது படிக்கிற மாணவனுக்கு தெரிந்த கணிதப்பிழையை தந்து விடுதலை செய்ததை கண்டிக்காதது ஏன்.. மேல்முறையீட்டு விசாரணை முடிந்து விரைந்து தீர்ப்பை வழங்காமல் காலம்தாழ்த்தி ஜெயலலிதா மரணத்திற்கு பின் வழங்கியது.. பட்டவர்த்தமாக தெரிகிறதே நூலின் வாடை.. இதைல்லாம் யார் சரிசெய்வது.. .. லல்லு பிரசாத் வழக்கில் தண்டனை பெற்றவுடன் மேல் முறையீட்டை விசாரிக்க 9 மாதம் சிறையில் இருக்க நேர்ந்ததே..ஜெயலலிதாவிற்கு ஒருமாத இடைவெளியில் பிணை வழங்கியதைப்போல லல்லுவிற்கு வழங்கவில்லையே ஏன்.. உச்சநீதிமன்றத்தில் யாருடைய ஆதிக்கம் இருக்கிறதென்பது தெரிந்த விடயம் தானே.. திரு.கர்ணனின் ஏட்டிக்கு போட்டி செயல் ஏற்றுக்கொள்ள முடியாது எனினும் அவர் கூறும் காரணங்களை ..கேள்விகளை புறந்தள்ளிவிட முடியாது.. .. விமர்சனமே செய்யகூடாதென்பது கூட #அநீதிதான்.. .. #நீதிமன்றங்கள்_சமநீதியோடு_செயல்படவேண்டும்.. .. தோழர் ஆலஞ்சி..

Sunday, May 7, 2017

உண்மை வெளிபடுகிறது

ஆரஎஸ்எஸ் காலித்தனத்திற்கு பாஜக எப்படி பொறுப்பேற்கமுடியும்.. Dr. கிருஷ்ணசாமி.. அவரே அறியாமல் ஒரு உண்மையை ஒத்துக்கொண்டிருக்கிறார்.. இரத்ததில் திராவிடமும் சுயமரியாதையும் இன்னமும் துடைத்தெறியப்படாமல் இருக்கிறது போலும்.. பாஜக என்பது ஜனநாயகத்தை, மக்களை, பிறமொழி பேசுவோரை,இனத்தால் மதத்தால் சாதியால் வேறுபட்டிருப்போரை ஏமாற்றுவதற்காக என்பது இன்னமும் அறியாமல் இருக்கிறாரா.. அதை நாங்கள் நம்பவேண்டுமா.. .. பாஜக ஆர்எஸ்எஸின் அதிகாரமையத்திற்கான அமைப்பு அவ்வளவுதான் எந்த முடிவையும் பார்பனர்களை கேட்காமல் எடுக்கமுடியாது.. சங்கராச்சாரியரை விடுங்கள் ஆர்எஸ்எஸ் தலைவராக பாப்பான் அல்லாத யாராவது தலைக்கு வரமுடியுமா.. எந்த திட்டத்தையும் நடைமுறைப்படுத்தவேண்டுமெனில் ஆர்எஸ்எஸ் கடைக்கண்பார்வை இல்லாமல் பாஜகவால் நிறைவேற்ற முடியுமா.. யாரை ஏமாற்ற பார்க்கிறார்.. தமிழர்களையா அல்லது காலமெல்லாம் நம்பிய தன் பள்ளர் சமூகத்தோடா.. உயர்ஜாதியில் தங்களை இணைக்கவேண்டுமென்ற கோரிக்கை எழுப்பது அவர்களின் உரிமை .. அது அந்த ஒட்டுமொத்த சமுதாயத்தின் குரலாக இருக்கும் பட்சத்தில் மாறிவிட்டு போங்கள் .. ஏன்,இடைசாதியில் கேட்கவேண்டும் உயர்ஜாதியில் கேட்கவேண்டியதுதானே.. அப்போதுதான் தெரியும் பாஜக ஆர்எஸ்எஸின் உண்மையான முகம்.. .. அம்பேத்கரை,பெரியாரை திராவிடத்தை இன்றைக்கு விமர்சிக்கிறவர்கள் ஒன்றை புரிந்துக்கொள்ளவேண்டும்.. பெரியார் என்ற பெருமகன் இல்லாமல் போயிருந்தால்.. இப்போது பேசி திரிகிறீர்களே அந்த உரிமைகூட மறுக்கப்பட்டிருக்கும்.. சீமானை வைத்து பாப்பான் தமிழன் என்று சொல்லவைத்ததைப்போல தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு மீதான கோபம் பாஜக மீது விழுந்துவிடகூடாதென்று பேசவைத்திருக்கிறார்கள்.. #ஏச்சரிக்கை கிருஷ்ணசாமி என்னசெய்தாலும் #கிருஷ்ணசுவாமி ஆகிவிட முடியாது.. .. #சொன்னதைச்சொல்லும்_கிளிப்பிள்ளை.. .. தோழர் ஆலஞ்சி..

Saturday, May 6, 2017

தளபதி..

தமிழகத்தை காப்பாற்ற ஸ்டாலினால் மட்டுமே முடியும்! #சகாயம்_IAS.. .. அவர் சொன்னாரா இல்லையா என்பதைவிட தமிழக மக்களின் எண்ணவோட்டம் அதுவாகதானிருக்கிறது காரணம் அதிமுக ஆட்சியில் கடந்த ஜெயலலிதாஆட்சியில் இன்று வரை தொடரும் அவலங்கள்.. ஒட்டுமொத்தமாக ஸ்தம்பித்திருக்கும் அரசு நிர்வாகம்.. வெளிப்படையான கொள்ளை .. முதல்வர் முதல் அதிமுககட்சியின் வட்ட செயலாளர்வரை ஊழலில் திளைத்து நிற்கும் கொடுமை.. உச்சநீதிமன்றமே தண்டித்தும்.. நீண்ட சட்டபோராட்டத்தில் நிறைய தடைகளை மீறி ஜெயலலிதா என்ற பிம்பம் சரிந்தது கிரிமினலாக கொள்ளைக்காரியாக .. மக்கள் மனதில் உருவெடுத்திருப்பதும்.. அதிமுக என்ற பெயரளவிலான திராவிட கட்சியை பாஜகவில் அடகுவைத்துவிட்டு தங்களை காப்பாற்றிக்கொள்ள அதிமுக இரு அணிகளும் துடிப்பதும்.. நான் யோக்கியன் அவன்தான் அயோக்கியன் ..என மாறி மாறி எச்சிலை துப்பிக்கொள்வதுமாக ஒட்டுமொத்தமாக அதிமுக செய்த செய்துக்கொண்டிருக்கிற அவல ஆட்சியில் மக்கள் வெதும்பிப்போய் இருக்கிறார்கள்.. .. தமிழகத்தை பிடித்த கோரமுகத்தின் தாண்டவத்தை மக்கள் இனியும் பொறுப்பதில்லை என்ற முடிவிற்கு வந்து வெகுநாட்களாகிவிட்டது ..அவர்கள் முன் இருக்கும்,ஒரேயொரு option விருப்பம்.. திரு.ஸ்டாலின் தான்.. வெகுதூரத்திற்கு ஆட்களே கண்ணில் படவில்லை.. தூரத்தில் தெரிவதுபோல் தோன்றினாலும் அது கானலாய் ..இருக்கிறது.. மதமும் சாதியும் வெறிக்கொண்டு அலைகிறது..மக்களோ நிதானமாய் சிறியதொரு புன்சிரிப்போடு நகைக்கிறான்..திரும்பி பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாருமில்லை .. இதுதான் யதார்த்தம்.. .. #தளபதி_ஸ்டாலின் காலத்தின் கட்டாயம்.. அவர் மிகவும் பக்குவப்பட்டிருக்கிறார்.. மிக நிதானமாக ஒவ்வொரு அடியாக எடுத்துவைக்கிறார்.. தோல்விகள் அவரை சங்கடபடுத்திடவில்லை மாறாக நல்ல அனுபவத்தை தந்திருக்கிறது.. நீண்டநாட்கள் பொதுசேவையில் தன்னை பதப்படுத்திருக்கிறார்.. எதிர்க்கட்சி தலைவராக மிக சதூர்யமாக அதே நேரம் அறவழியில் நெறிபிறழாமல் பணிகளை செய்கிறார்.. இதோ அரசு தானே செய்வேண்டுமென்றில்லாமல் சைதையில் தூர்வாருகிறார்.. மக்களோடு மக்களாக இணைந்து செயலாற்றுகிறார்.. .. மிக சிறந்த நல்ல தலைவனை காலம் தந்திருக்கிறது.. தமிழகமக்கள் பற்றிப்பிடித்துக்கொள்ளவேண்டும்.. ஆம் #ஸ்டாலின்_கரத்தை_பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள் #நலம்பெறுவீர்_நாடும்_நலம்பெறும்.. .. தோழர் ஆலஞ்சி..

Thursday, May 4, 2017

நூலகம்..

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பயன்படுத்த அதிகாலை முதலே வரிசை! .. bbc செய்தி வெளியிட்டிருக்கிறது.. ஆம் .. திமுக ஆட்சியில் கலைஞர் பெருமகனின் பெரும் முயற்சியில் அண்ணா நூற்றாண்டு நூலகம் கொண்டுவரப்பட்டதென்பதற்காக அதை சிதைக்க பாப்பாத்தி ஜெயலலிதா பெரும் முயற்சியெடுத்தார்.. நீதிமன்ற தலையீட்டு அதை மக்களின் பயன்பாட்டிற்காக திறந்துவிட உத்தரவிட்டது .. திராவிட இயக்கம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தபிறகு நிறைய சேவைகள் திட்டங்களென பொதுநலன் சார்ந்து நடந்திருந்தாலும் அதெல்லாம் வாக்கு அரசியலுக்காக என எதிராளிகளால் பேச முடியும் ஆனால் இந்த நூலக விடயத்தில் அதெல்லாம் எடுபடாது என்றறிந்தே ஜெயலலிதா அதை கல்யாணத்திற்கு வாடகைக்கெல்லாம் விட்டு அதை இல்லாதாக்க வேண்டுமென நினைத்தார் காரணம் காலம் கடந்தும் திமுகவின் பெயரை கலைஞரின் பெயரை அது சொல்லும்.. மற்றொரு காரணமும் உண்டு.. ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகம் என்பதும் இங்கே எல்லாவிதமான நூல்களும் கிடைக்கும் தொடர்ந்து திராவிடவிய வரலாற்றை ஆய்வு செய்ய மாணவர்கள் அதிகளவில் வந்ததும் ஜெயலலிதாவை உறுத்தியது.. .. ஒரு நாட்டின் ஒருஇனத்தின் கலாச்சாரத்தை அழிக்கவேண்டுமெனில் அங்குள்ள நூலகத்தை அழிக்கவேண்டும் எரிக்கவேண்டுமென்பார்.. ஆம் தமிழினத்தின் கலாச்சாரத்தை சிதைத்திடவே கிரிமினல் ஜெயலலிதா முயன்றார்..ஆனால் காலம் நமக்கு மீட்டு தந்தது.. இதோ அதிகாலையிலேயே மாணவர்கள் நூலகத்திற்கு வருகிறார்கள்.. போட்டி தேர்வெழுதும் மாணவர்கள் ஆய்வை மேற்கொள்போரென கூட்டம் அதிகம் வருவதால் இரவு 9 மணிவரை நூலகம் திறந்திருக்குமென அறிவித்திருக்கிறார்கள்.. நல்ல செய்தி.. .. நூலகத்தோடு தொடர்ப்பில் இருப்பவர்களை கவனியுங்கள் அவர்கள் அறிவில் மிளிர்வார்கள் தன்னம்பிக்கையோடு செயல்படுவார்கள்.. எதையும் ஆழ்ந்தறிந்து ஏற்றுக்கொள்பவர்களாக இருப்பார்கள்.. மடமையை இருந்து விலகி இருப்பார்கள் .. .. ஆசியாவிலேயே மிக சிறந்த நூலகமாக விளங்கி தமிழர் பெருமையை உலகுக்கு உணர்த்திய #யாழ்ப்பாணம் நூலகத்தை எதிரிகள் தீயிக்கிரையாக்கினர்.. அப்போதிலிருந்தே கலைஞர் தமிழகத்தின் தமிழனின் வரலாற்றை, பெருமையை கலாச்சார பண்பாட்டை வரும் தலைமுறையினரும் அறிந்துக்கொள்ளும்வகையில் மிகசிறந்த நூலகத்தை .. ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாக கட்டிதந்தார் .. #திராவிடபெருந்தலைவர்_கலைஞருக்கு_நன்றி.. .. திராவிடம் என்ன செய்தது என்போரே.. திராவிடம் படிக்க சொன்னது.. .. தோழர் ஆலஞ்சி..

அம்பேத்கருக்கு நன்றி!

அம்பேத்கர் தவறிழைத்துவிட்டார் இடஒதுக்கீட்டை சட்டமாக்கி.. என கிருஷ்ணசாமி கருத்து தெரிவித்திருக்கிறார்.. நல்லது.. #அம்பேத்கருக்கு நன்றி.. எங்கோ கிடந்தவனை பொருளாதாரத்திலும்..சமூகத்திலும் புறக்கணிக்கப்பட்டவனை,தண்ணீரை கூட குடிக்க முடியாமல் தள்ளிநின்று கையேந்தி குடித்தவனை.. பொது குளத்தில்கூட குளிக்க முடியாதவனை.. கும்பிடுறேன் சாமியென சக மனிதர்கள் முன் கூனிநின்று கதைத்தவனை.. இந்த சமூகத்தில் மருத்துவராகவும் .. தோன்றியதை பேசி திரியவும் .. பேச்சுரிமையும்.. ஒதுக்கீடும் பெற்று தந்ததற்கு நன்றி! #அண்ணலே.. .. இதோ ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு மனிதனை கடிக்க வந்தாகிவிட்டது இது தான் பாசிசத்தின் மூளைச்சலவை.. ஒரே ஒரு எம்பி சீட் போதும் மீண்டும் மீண்டும் சாணியை எடுத்து தம் மீதே பூசிக்கொள்ள.. இன்னும் வரும் சாதீய ரீதியாகவோ மதரீதியாகவோ இடஒதுக்கீடு தேவையில்லை பொருளாதார ரீதிதான் சரி ஏழைக்களுக்கு தான் வழங்கப்படவேண்டும்.. என சொல்வார்கள் நிறைய முறைய பதில் சொன்ன கேள்வி இது பொருளாதார அளவுகோல் என்பது மாறும்தன்மை கொண்டவை.. இன்று ஏழையாக தெரிகிறவர் நாளை பொருளாதாரத்தில் வலு பெறலாம் .. மீண்டும் கூட நலிவாகலாம் அதனால் தான் .. சாதிரீதியான ஒதுக்கீடு .. ஏழைகள் புறக்கணிக்கப்பட கூடாதென்பதற்காகதான் நிறைய சலுகைகள் வழங்க திட்டங்களை அரசு கொண்டுவருகிறது..முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி கூட ஏழை மாணவர்களை கருத்தில் கொண்டுதான்..இந்தியாவில் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்குதான் சலுகைகள் சேரவேண்டும் ஆனால் அப்படி நடக்கிறதா என்பது கேள்விகுறிதான்.. .. இடஒதுக்கீடு மட்டும் இல்லையென்றால் கிருஷ்ணசாமி போன்றோர் மருத்துவராக முடியுமா..இப்போது கூட உயர்பதவிகளில் ,நீதிபதி அரசுத்துறை செயலர்.. என அனைத்து அதிகாரமையங்களிலும் அவாள்களே இருக்கிறார்களே ஏன் அதை #பகிர்ந்தளிக்கவில்லையென கிருஷ்ணசாமி கேட்டதுண்டா..அவாளை தவிர மற்ற எவருமே திறமையில்லாதவர்களா...உயர்பதவிகளில் இடஒதுக்கீட்டு முறையை தொடர்ந்து பேசி வருகிறோமே அதுகுறித்து இவரின் கருத்தென்ன.. தான் பொருளாதாரத்தில் மெச்சதகுந்த நிலையை எட்டிவிட்ட பிறகு பின்னால் நிற்கிற சமூகத்தை தூக்கிவிடாமல் போனாலும் பள்ளத்தில் தள்ளி மண் அள்ளிபோடுவது சரியா.. கல்வி வேலைவாய்ப்பில் இன்னமும் நிரம்ப்படாத இடங்களுக்காக போராடியதுண்டா.. சுயநலமாய் மட்டும் சிந்திக்கும் இவரை போன்றோரிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் .. கவனம் #உள்ளொன்றும்_புறமொன்றும்_பேசிதிரிவோர் .. தோழர் ஆலஞ்சி

Tuesday, May 2, 2017

எச்சரிக்கை

#எச்சரிக்கை.. மிக கவனமாக தமிழகத்தில் இந்துத்துவா காலூன்ற தேவையான முயற்சிகளை எடுத்துவருகிறார்கள்.. சமீபத்திய பாஜகவினரின் உளறல்களை விளையாட்டாக கொண்டதால் பெரியதொரு தாக்கம் நமக்கில்லை.. ஆனால் மிக சாதூர்யமாக காய் நகர்த்தல் நடத்துவருகிறது.. பெரியளவில் வெற்றிப்பெற முடியாதென்று அறிந்தும் விசவிதைகளை தூவிக்கொண்டே இருக்கிறார்கள்.. குறிப்பாக சாதீய தலைவர்களை கைக்குள் கொண்டுவந்திருக்கிறார்கள்.. தலித்களின் ஒருபிரிவின் தலைவராக அறியப்பட்ட கிருஷ்ணசாமியை வளைத்திருக்கிறார்கள்.. மற்றொரு சாதிவெறியர் ராமதாஸையும் .. நாம் தமிழர் கட்சி சீமான்.. போன்ற உதவாகரைகளை ஒன்றிணைக்கிறார்கள்.. .. கிருஷ்ணமூர்த்தியை கொண்டே எங்களுக்கு தாழ்த்தப்பட்டவருக்கான இடஒதுக்கீடு வேண்டாமென சொல்லவைத்திருக்கிறார்கள்.. அந்த சமூகத்தின் நீண்டநாட்களாகவே ஆர்எஸ்எஸ் குருமூர்த்தியெல்லாம் உள்ளே புகுந்து பட்டியலினத்திலிருந்து பிரிந்து வரசெய்யும் வேலையை தொடங்கிவிட்டார்கள்.. உண்மையில் அப்படி பட்டியலினத்திலிருந்து பிரிந்து வந்தால் obc யில் உள்ள இடஒதுக்கீட்டில் தர சம்மதிப்பார்களா.. அதுவும் காலகாலமாக தள்ளிவைத்தே பழக்கப்பட்டவர்களோடு ..இதன் மூலம் இடைசாதிகாரர்களின் ஒதுக்கீட்டையும் கேள்விக்குறியாக்கும் வேலையை மிக கச்சிதமாக செய்திருக்கிறார்கள் .. அதிமுகவை சிதைத்தது கூட அவர்கள் நேரடியாக அதிகாரத்தில் எத்த முடியாதென்று அறிந்து மறைமுக ஆட்சியை நடத்தி சங்பரிவாரின் அமைப்புகளை நிறுவிட முயற்சிக்கிறார்கள்.. நிறைய ஆர்எஸ்எஸ் பயிறிசி வகுப்புகள் நடத்தப்படுகின்றன..பதினைந்து வருடங்களுக்கு பிறகு ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்தப்பட்டது நாம் அறிந்ததுதான்.. மத்திய அரசை விமர்சிக்காமல் ஆட்சி நடத்த எடப்பாடி பணிவு.. பாஜகவிற்கு அடிமைசாசனம் எழுதிக்கொடுத்தை ஒப்புக்கொண்டதை காட்டுகிறது.. இதற்கெல்லாம் முடிவுகாண வேண்டுமெனில் திமுக அதிகாரத்திற்கு வரவேண்டும் அதுவும் மிக விரைவில்.. .. குடியரசுத்தலைவர் தேர்தலுக்கு பிறகு அதிரடி நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் ஆரம்பத்திலேயே கிள்ளியெறிய வேண்டும்.. பொன்னர் தமிழிசை போன்றோரின் பேச்சையெல்லாம் கேட்கவே சகிக்கவில்லை.. #கவனம்.. காலம்தாழ்த்துவது கூட பெரும் சிரமத்தை தரலாம் .. தோழர் ஆலஞ்சி..

Monday, May 1, 2017

தலித்.. அரசியல்

விசிக ரவிக்குமார் தலித்துக்களை விலக்கி வைத்த திராவிட அரசியல் என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார் நண்பர் அன்சாரி முஹம்மது அதை அனுப்பியிருந்தார்.. .. ரவிக்குமார் எப்போது நிறைய கருத்துகளை கோர்வையாக்கி சொல்லவந்த விடயத்தின் வீரியத்தை நீர்த்துபோக செய்வார் அல்லது மடைமாற்றிவிடுவார்.. ஐம்பதாண்டுகால திராவிட கட்சிகள் ஆட்சியென்பதே முதலில் ஏற்றுக்கொள்ள முடியாது ம.கோ.ரா.வின் தலைமையிலான அதிமுக ஆட்சியும் ஜெயலலிதாவின் ஆட்சியும் ஏறக்குறைய திராவிட எதிர்மறை கொள்கையைதான் கொண்டிருந்தது திராவிடர் ஆட்சியென்ற முகமூடியோடு.. .. திமுக ஆட்சிக்குவந்த பின்தான் பிராமணர்கள் அதிகாரத்தில் அதிகளவில் வந்ததாக சொல்வது அபத்தம்.. மாறாக மொழிப்போரில் பங்கெடுத்தவர்களை அதிகாரவரம்பிற்குள் கொண்டுவந்தது திமுகதான்.. தலித்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டதைப்போல கட்டுரையில் சொல்கிறார்.. தலித் சமூகம் தொடர்ந்து எம்ஜிஆரை தாங்கிப்பிடித்தது அதன் எதிர்மறையாக இடைச்சாதியினர் பெருமளவில் திமுகவின்பக்கம் இருந்தார்கள் என்ற தோற்றம்கூட ஒரு பகுதிவரை சரியென்றே நினைக்கிறேன்.. திமுக ஆட்சி அதிகாரத்தில் கட்சி அதிகாரத்தில் சரியான வாய்ப்பு வழங்கவில்லை என்பதை சட்டென்று கடந்து போக முடியாதென்றாலும். ..ராசா போன்றவர்கள் மத்திய அமைச்சராக்கியும் பெரும் தடங்கலுக்கிடையே அருந்ததியினர் உள்ஒதுக்கீட்டையும் மறந்து போனார்.. அதிமுக ஆட்சியில் தலித்களுக்கென்று தனி கவனமோ சிறப்பு திட்டங்களோ அவர்கள் மேம்பாட்டிற்கான செயல்திட்டங்களோ இல்லை..மாறாக திமுக ஆட்சியில் தலித்கள் மேம்பாட்டிற்கான திட்டங்களை/செயல்களை அவரே பட்டியலிட்டிருக்கிறார்.. அவை வருமாறு.. .. //திமுக ஆட்சியிலிருந்த சுமார் 22 ஆண்டுகளில் தலித் மக்களின் கல்வியறிவை மேம்படுத்த பள்ளிகளை உருவாக்குதல், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் அளித்தல், குடிசைமாற்று வாரியத்தின் மூலம் வீடுகளை கட்டித் தருதல், உயர்கல்வி பெறுவதற்கு லோன் ஸ்காலர்ஷிப், போட்டித் தேர்வுகளில் பங்கேற்க சிறப்புப் பயிற்சி - எனப் பல்வேறுவிதமான நலத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன என்பது உண்மைதான். அந்த நலத் திட்டங்கள் தலித் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்குப் பயன்பட்டன என்பதையும் மறுக்கமுடியாது. ஆனால் தலித் மக்களை அரசியல்ரீதியாக அதிகாரப்படுத்துவதில் திமுக போதுமான அளவுக்குக் கவனம் செலுத்தவில்லை.//.. .. மொத்தத்தில் பொத்தாம் பொதுவாக திராவிட அரசியலை பழிச்சொல்லும் நோக்கமும் அதன் மூலம் தேசீயகட்சிகளை குறிப்பாக பாசிசத்தை நோக்கி திசை திருப்ப பயன்படும்.. தலித் விரோத அரசியல் திராவிடம் ஆளும் தமிழகத்தில் தான் குறைவென்பதும்.. பாஜக ஆளும் மாநிலங்களில் ருத்ரதாண்டவம் ஆடுவதும் கட்டுரையாளர் மறந்து போனார்.. திராவிட கட்சி ஆட்சியென்றால் அதில் திமுகவை மட்டுமே கணக்கில் கொள்ளவேண்டும்..திமுக ஆட்சியில் தலித்கள் புறக்கணிக்கப்படவில்லை.. இன்னும் கொஞ்சம் கூடுதலாய் செய்திருக்கலாமென்பதை மறுப்பதற்கில்லை.. .. தோழர் ஆலஞ்சி..