Thursday, December 22, 2022

காவி..
இந்த நிறத்திற்கென்று ஒருமரியாதை இருந்தது ஒருகாலம் .. தன்னை முழுமையாக எளிமைபடுத்தி லௌகீக ( உலகப்பற்று) வாழ்க்கை முறையிலிருந்து மீண்டு, ஞானம் தேடி கரைந்து, பசி கோவம்,அடக்கி மெய்ஞனை தேடும் தவம் அது .. இறைஞ்சி வாழும், தேவையறியாது வாழ்வில் போக்கில் அழுக்கோடு திரிந்தாலும் உள அழுக்ககற்றி உடல் மெலிந்து 
உலகாசபாசங்களை விட்டொழிந்து கருணையாய் நிற்பது 
..
காவிகள் சிலரை கண்டாலே புன்முறுவலோடும் தன்னை தாழ்த்தியும் வரவேற்று மகிழ்ந்த காலமுண்டு.. ஆனால் உழைப்பதற்கஞ்சி, குடும்பபாரத்தை விட்டொழித்து 
காடு மலையென கடந்தேறி பொய்ஞானம் பேசி கிடைத்தவரை லாபம் என "வாழ" தொடங்கியதில் தான் "காவி" எனும் சொல்  செருக்காகிப்போனது ..
..
காவி 
மதத்தின் அடையாளமாய் மாறி அது அரசியலாய் போனதால் 
லாபம் கொழிக்க நல்ல வாய்ப்பென சிலர் காவிக்குள் அடைக்கலமாகினர்.. அது அரசின் அங்கீகாரமானதும்  வாழவே தகுதியற்றதுகளின் பாதையாய் ஆனது காவி .. கொள்ளையடி, சிலைகடத்து, கொலை கூட செய் ஆனால் காவியின் நிழலில் நில் .. நீதியே தலைவணங்கும் 
..
காவி அணிந்து கலவரம் செய் ..
பிற மதத்தவரை மாட்டின் பெயரைச் சொல்லி கொல், கர்ப்பிணியை வன்புணர்வு கொள், பிறமதத்தின் நம்பிக்கையை தலையிட்டு கலாச்சாரம் சீரழிவதாக சொல்,  காக்க காவி உண்டு .. 
..
மதம் வழிபாடும் வணக்கத்திற்கே தவிர 
அடுத்தவரை இம்சிக்க அல்ல..
நீ நம்பும் கோட்பாட்டில் உறுதியாய் இரு .. அது அடுத்தவர் நம்பிக்கையில் தலையிடுவதல்ல
இணக்கமாய் வாழ தான் எல்லா சமயங்களும் சொல்கின்றன.. சிலர் சுய உயர,தாங்கள் தான் மேல் என அடுக்குகளை அமைத்து அதை திரும்ப திரும்ப சொல்லி மூளையை மழுங்கடித்ததால் .. தான் தாழ்வானவன் எனச் சொல்லும் போது கூட தன்னை விட தாழே ஒருத்தன் இருக்கிறானென மீசை முறுக்கி நிற்கும் அவலம் .. 
காவிகள் மிக அழகாய் அடுக்கிய பொய் பிம்பங்கள் அறிவைக்கொண்டு வெல்லும் நாள் வெகுவிரைவில் வரும்.. அதற்கு கல்வி ஒன்றே தெளிவு தரும் ..
..
காவி மட்டுமல்ல .. மதத்தின் நிறங்கள் ஆபத்தானவை .. அறிவை மழுங்க செய்யும் ஆயுதம், 
மெல்ல கொல்லும்,மனதை மலடாக்கும், கடிவாளமிடும்,  அதை விட்டொழி..
..
ஞானமெனும் வெளிச்சத்தில் உலகை காண் .. அது வாழ்வின் யதார்த்ததை சொல்லும்.. எளிமையையும், பிறருக்கு உதவும் மனமும், வறியவரை கண்டால் வாடுதலும்,.உயர்வில் செருக்கின்றி வாழுதலும், நன்னெறி,நற்செயலும் நாவினிக்க மொழிதலும் நன்னடக்தையும் வாழ்வின் அறம் ..
எத்தனை நாள் வாழ்வாய்..
வாழும் வரை மதம் தலைக்கேறாமல் வாழ்வோம் இனிதாய் ..
..
நிறங்கள் அழகு ..
அது .. 
அடுத்தவரை காயபடுத்தாதவரை..
..
ஆலஞ்சியார்

Sunday, December 18, 2022

எங்கள் இனமானமே..
கொள்கை குன்றே ..
திராவிடத் "தரு"வே 
..
உன் நிழல் கூட 
எமக்கு பகுத்தறிவை போதித்தது 
எக்காலத்தலும்,
எக்காரணம் கொண்டும்,
எந்நிலையிலும் 
தடமாறாத உன் பயணம் 
கொள்கை உறுதியை கற்றுதந்தது
..
கலைஞரின் இடதே ..
எங்களின் இதயமே ..
உன் கண்ணசைவை 
கலைஞர் புரிந்துக்கொள்வார் 
கலைஞரின் விழி பேசும் மொழி
உனையன்றி யாரறிவார்..
நட்பென்றால் 
என்னவென்று 
வாழ்ந்துகாட்டி 
இலக்கணம் படைத்தீர் 
கலைஞர் மறைந்த தினம் 
கோபாலபுரத்திலிருந்து 
வெளியேறி 
திரும்பிநின்று 
வீட்டை ஒருமுறை பார்த்தீரே
அதில் 
எழுபதாண்டு அரசியலில்
எண்ணற்ற முடிச்சை அவிழ்க்க
தீட்டிய திட்டமெல்லாம் 
கண்முன் வந்துபோயின 
..
பேராசிரியரே 
உம் வழிதனை 
சிரமேற்று நடத்த
பெரும்கூட்டம் உண்டு..
உன் அரசியல் தெளிவை 
பாடாமாய் கொண்டு 
பட்டைகிளப்பி பெரும்படையோட்டம் நடத்தி 
பகைமுடிப்போமென என
உன் நூற்றாண்டில் 
உறுதியேற்போம் 
..
#பேராசிரியர்..
எங்கள் இனமானம்..
கலைஞரின் 
மற்றொரு முகம்..
நட்பிற்க்கோர் இலக்கணம்
..
#நவில்தொறும் நூல் நயம்போலும்.
பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு.

படிக்க படிக்க இன்பம் தரும் நூல் போல பழக  பழக  இன்பம் தரக்கூடியது பண்புடையார் நட்பு
..
#பேராசிரியருக்கு_பிறந்தநாள்
19/12/1922..
அகவை 101
ஆர்ப்பரிக்காத
அமைதிக்கடல்
ஆழ்கடல்..
அமைதியான 
ஆழ்கடலில்தான் 
முத்து கிடைக்கும்..
..
சுயமரியாதை சுடரொளி
திராவிட இயக்க சங்கநாதம்
கொள்கையில் உறுதி..
கலைஞரின் சுருதி..
..
எங்கள் இனமானம்..
எங்கள் இனஉணர்வு...
எங்கள் பேராசிரியர்..
..
ஆலஞ்சியார்

#Perasiriyar101
#பேராசிரியர்101



Tuesday, December 13, 2022

உதயநிதியின் நல்வரவு ..
..
சிலர் ஏன் அவசரம் என  அக்கறையோடு கேட்பதைப்போல அங்கலாய்கிறார்கள் .. சிலர் நல்லநேரம் பார்த்து பதவியேற்கிறார் .. சிலர் நாங்கள் அப்போதே சொன்னோமே குடும்ப அரசியல்.. சிலர் பதைபதைப்பதும் சிலர் விமர்சிப்பதைப்போல பேசி ஏதோ ஜனநாயகத்தை காக்கவந்தவர்கள் போல கூப்பாடு போடுவதும் ஊடகங்கங்களிலும், வலைதளங்களிலும் காண முடிகிறது .. உண்மையில் இவர்கள் வெகு சிலரே .. ஜனநாயகத்தை வேரறுக்கவந்தவர்கள், அடிமைத்தனமும், பாசாங்கும், பழிகுணமும் கொண்டவர்கள் .. இவர்களை பீச்சாங்கையால் தள்ளிவிட்டு நாம் நம் வேலையை செய்வோம் ..
..
நீண்டநாள் காத்திராமல் சட்டென்று முடிவெடுத்த முதலமைச்சருக்கு நன்றி .. ஐம்பதாண்டுகள் காத்திருந்தாலும் இவர்களின் எரிச்சலும் பகையும் கூப்பாடு குறைந்துவிட போவதில்லை .. 
சரியான நேரத்தில் அமைச்சராக்குவதும் அதிகமதிகம் கற்றுக்கொள்ளவும், மக்களின் நன்மதிப்பை பெறுவதற்கு பயிற்சியாகவும் அமையும் .. சிலரின் பொறாமைகளை கணக்கில் கொள்ள தேவையில்லை ..
..
உதய்  தன் 45 வயதில் அமைச்சராகிறார் தன் தாத்தன் 44 வயதில் அமைச்சரானதைப்போல அதைப்போல் கடும் உழைப்பு தேவை .. சுற்றியிருக்கும் கையடிகளை கவனமாக கையாண்டு தூர நிறுத்தவேண்டும், "சின்னவர் " என புகழ்பாடும் "துதி"களிடம் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் .. இவர்களின் கைதட்டல்கள் பதவிக்காகவே என்பதை உணரவேண்டும் .. இன்னமும் கடுமையாய் உழைத்து அப்பன் பெயரை காப்பது மட்டுமல்ல அப்பனை மிஞ்சி உழைக்கிறான் என பெயரெடுத்தால் வரலாறு பேசும் 
..
நல்ல நேரம் பார்த்து பதவியேற்கிறார் என்பவர்களுக்கு தேய்பிறையில் அல்லவா என கேட்கமுடியும் .. சமீபத்திய பேட்டிய மிகத் தெளிவாக கடவுள் என்ற கேள்விக்கு இல்லை  என சொன்னவர் .. ஏற்கனவே ஒரு பேட்டியில் என் தாயாருக்கு பக்தி உண்டு எனக்கோ என் இணையர் கிருத்திகாவிற்கோ கடவுள் பக்தி இல்லை என்றவர் அவரை தான் நல்ல நேரத்தில் பதவியேற்பதாக சுமந்துகள் சுமக்கிறார்கள் .. நம்பிக்கை என்பது  அவரவர் விருப்பம் .. அவரின் மக்கள்பணி எப்படிபட்டதென்பதை சேப்பாக்கம் மக்கள் சொல்கிறார்கள் .. பொதுவாக தமிழக மக்களின் மனயோட்டமும் உதய் வருவதை வரவேற்பதாகவே இருக்கிறது 
..
தமிழகத்தின் நம்பிக்கை ஒளியாய் திகழ்கிறார்.. பாசிசம் பலமுனை தாக்குதலை நடத்தும் வேளையில் நாகரீகமற்ற எதிராளிகள், வீண் வதந்ததிகளை பரப்பும் விலைப்போன ஊடகங்கள்,  அதிமுகவைப்போல திமுகவையும் வருங்காலத்தில் சிதலடைய செய்ய காத்திருக்கும் வேளையில் திமுகவின் எதிர்காலமென்பது தமிழர்களின் நலனும் தமிழ்நாட்டின் தன்மானமும் சேர்ந்தது  என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும்
..
வாரிசு என கதறுபவர்கள் யாரென்று பார்த்தாலே புரியும் நமக்கு .. ராஜகோபால் (ராஜாஜி) தன் மகனை C.R.நரசிம்மனை   கிருஷ்ணகிரி எம்பி ஆக்கியபோது பேஷ் பேஷ் என்ற கூட்டம் தான் ..
அவர்கள் நோக்கம் எப்படியேனும் திமுகவை அகற்றவேண்டும் .. திமுக கட்சிதான்  நமக்கு இடையூறாக இருக்கிறது .. எந்த  திட்டம் கொண்டுவந்தாலும் வழக்கு தொடுத்தோ போராட்டம் மூலம் நடக்கவிடாமல் செய்கிறது.. அதிமுகபோல அடக்கியாள முடியவில்லை என பாசிச பார்பனீய கும்பல் முழிக்கிறது ..
..
திராவிடத்தின் தேவை இன்னமும் இந்த மண்ணுக்கு அவசியம் என்பதால் திமுகவை அடுத்தகட்டத்திற்கும் தயார் செய்யவேண்டுமென்பதால் பகுத்தறிவோடு செயல்படும் இளைஞரை இப்போதிலிருந்தே தயார் செய்வது திராவிட இயக்கத்தின் கடமை .. 
இந்த மண்ணில் சமூகநீதியும், சமத்துவமும்,சமநீதியும் நிலைத்திட முதலமைச்சரின் அடுத்த நகர்வை தமிழ்கூறும் நல்லுலகம் ஆதரித்து அரவணைக்கும் 
நல்வரவாகட்டும்..
WELCOME  Udhayanidhi Stalin 

நன்றி! 
Chief Minister of Tamil Nadu 
M. K. Stalin 
..
ஆலஞ்சியார்
பெண் என்றால் அடக்க ஒடுக்கமா இருக்கணும் என்கிற பொது புத்தி 
மேயரின் புட்போர்ட் பயணத்தை கிண்டல் செய்கிறது .. யாரும் அக்கறையோடு சொன்னதாக தெரியவில்லை .. மேயரின் தொடர் உழைப்பை,உறங்காமல் ஒவ்வொரு நொடியும் மாநகராட்சியின் பணிகளை முடுக்கிவிட்டு தானும் கொட்டும் மழையிலும் வீசும் காற்றிலும் களத்தில் பணியாற்றியதை பாராட்ட மனமில்லாதோர் "கரிசனம்"படுகிறார்கள் .. புயலை வைத்து அரசியலை செய்யலாம் தண்ணீர் தேங்கி நிற்கும் பழி சுமத்தலாம் என்ற நினைப்பில் இருந்தவர்கள் மாநகராட்சியின் "கீளின் "கண்டு சிலருக்கு ஆதங்கம் .. 
..
சின்ன பெண்ணை மேயராக்கியிருக்கிறார் என்றார்கள்.. அனுபவமில்லாதவர் சரியாக பேச தெரியவில்லை என்றவர்களுக்கு சிறிய தவறை பெரிதாக்கிறீர்கள், எட்டுவருடமாக பத்திரிக்கையாளர்களை சந்திக்காத மோடியை ஏன் கேள்வி கேட்க  பயப்படுகிறாரென , அதைப்பற்றி கேட்கவோ எழுதவோ துணிவில்லையென திருப்பி  அடித்த துணிவு கண்டு
"குறை ஒன்றுமில்லை " என்பதால் தொங்கியதை பெரிதுபடுத்துகிறார்கள் ..  
..
முதல்வர் வாகனம் சென்றவுடன் பின் தொடர்ந்து செல்வதில் காலதாமதம் ஆகலாம் என்பதால் அதிலேயே பயணம் செய்திருக்கிறார் .. அவரது பணியில் சுணக்கமோ தவறோ இருந்தால் விமர்சனம் செய்யுங்கள் அதை விடுத்து மேயர் தொங்கலாமா, என்றெல்லாம் அணை கட்டாதீர்கள் .. 
மக்கள் பணி என வந்துவிட்டால் எங்களின் செயல் விரைந்து நடக்கும் .. ஒரு உதாரணம் போது பொது மருத்துமனையில் தீ விபத்து அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து காரைவிட்டு இறங்கியவுடன் ஓடுவார் .. அதுதான் தன்னிடம் கொடுக்கபட்ட பணியை சிறப்பாக செய்யவேண்டும் .. முதல்வர் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் மாநகர மக்களின் அன்பை பெறவேண்டும் 
"வேறொன்றும் அறியேன்" என செயல்படும் 
"இரும்புமங்கை" Real Iron Lady மேயர் 
PriyaRajan DMK 
..
வேறேதுமிருந்தால் வாருங்கள் கதைப்போம் 
..
ஆலஞ்சியார்

Thursday, December 8, 2022

பாஜகவின் வெற்றியும் தோல்வியும் ..
..
நடந்து முடிந்த தேர்தல் சில உண்மைகளையும், சில கசப்பான செய்திகளையும் தருகிறது .. வீழ்த்த முடியாததென்று எதுவுமில்லை என்ற யதார்த்ததை எதிர்கட்சிகள் உணரவேண்டுமென சொல்கிறது ..
..
குஜராத் தேர்தல் நாட்டின் பிரதமரே 20 நாட்கள் அங்கேயே தங்கி தேர்தல் பணிகளை செய்ததும், தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிப்பை கூட தள்ளிவைத்து 16 ஆயிரம் கோடி நலத்திட்டங்களை அறிவிக்கும் வரை காத்திருந்ததும் வாக்குபதிவின் போது மக்களை வாக்களிக்கவிடாமல் அவர்களே வாக்குபதிவு செய்ததும், சில இடங்களில் குறிப்பாக சிறுபான்மையினர் மிரட்டபட்டதும் 
ஒருவழியாக வெற்றியை தந்திருக்கிறது .. வெற்றியை "பனியாக்கள்" நலனுக்காக இதை கூட  செய்யவில்லையென்றால் எப்படி..?  இத்தனை ஆண்டு தொடர் வெற்றியை மக்கள் தருகிறார்கள் என்றால் மக்கள் நம்பிக்கையில் இருக்கவேண்டும் அல்லது கல்வியறிவில் மிகவும் பின் தங்கியிருக்கவேண்டும் .. முதலாளிகளின் நலனில் அக்கறை கொண்ட அரசை அடிமை தொழிலாளிகள் ஆதரிக்கதான் செய்வார்கள் ..
..
காங்கிரஸ் வியூகம் இமாச்சலத்தை போல சரியாக வகுக்கபடவில்லை.. 2017 ல் காங்கிரஸ் துளிர்த்தெழுந்தது கண்டு பாஜக காங்கிரஸில் செல்வாக்குள்ள தலைவர்களை தன்பக்கம் இழுத்து மீண்டும் அவர்களுக்கே சீட் கொடுத்தது அமைச்சராக்கபடுவீர்கள் என்ற வாக்குறுதியும் தரப்பட்டு சிலர் மாறினார்கள் .. பெரும் தொகையை இரு குஜராத் முதலாளிகளிடமிருந்து பெற்று வாரி இறைக்கபட்டது .. மோடி மான பிரச்சனை என  அதிகாரிகள் பவ்யத்தோடு தங்களாலான "கடமை" யை செய்தார்கள் ..  அதிகாரிகள் "சாத்திய" விசுவாச படையல் ..
..
இமாச்சலமும் இடைத்தேர்தல்களும் சில சமிஞ்சைகளை தந்திருக்கிறது .. உங்கள் பிரதமர் கனவை துறந்துவிட்டு விரும்பியோ விருப்பமில்லாமலோ காங்கிரஸை அரவணைத்தே ஆகவேண்டும் .. ஒன்று கூடி இழுத்தால் பாஜகவை தூர எறிந்துவிடலாம் .. தேசநலன் பற்றி துளியேனும் அக்கறையிருந்தால், ஆர்எஸ்எஸ் யாருக்காக செயல்படுகிறது .. பாஜக குறிப்பிட்ட சமூகத்திற்காக பெரும்பான்மை மக்களை சுரண்டுவதும் வாழ்வாதாரத்தை கல்வியை வேலைவாய்ப்பை சுரண்டுவதும் சனாதனத்தை உயர்த்தி பிடித்து மடையர்களாக வைத்திருக்க நினைப்பதும் அறிந்து பாஜக அப்புறபடுத்தபடவேண்டிய "சக்தி" என்பதை உணர்ந்து  தங்களின் கனவுகளை ஒதுக்கிவைத்துவிட்டு பாஜகவை அதிகாரத்திலிருந்து கீழிறக்க வேண்டும் 
..
முடியாததன்று எதிவுமில்லை என்பதை இந்த தேர்தல் உணர்த்தியிருக்கிறது .. ஒற்றுமை, தொலைநோக்கு, தேசநலன், ஒருமைபாடு, எல்லாருக்கும் எல்லாம், சமநீதி, அவரவர் நம்பிக்கைக்கு பாதுகாப்பு மீது அக்கறைக் கொண்ட ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து நின்றால் பாஜகவை வெல்லலாம்..
ராகுல் அரசியல் செய்ய பழக வேண்டும் குஜராத் பாலம்  விழுந்ததை எடுத்துச் செல்வதில் கூட அக்கறைகாட்டாதவர் ..
பலர் மரணத்தில் அரசியல் செய்யவிரும்பவில்லை என்றால், கேட்க சுகமாக இருக்கும் ஆனால் பாஜகவின் தோல்வியை, அவர்களை ஊழலை வெளிகொணரவேண்டியது அவசியத்தை மறந்தார்
..
கலைஞர் சிறிய விடயத்தை கூட பேசு பொருளாக்குவார் ..
ஒருமுறை கப்பல் பேர ஊழல் என்றார் கலைஞர் உடனே எம்ஜிஆர் வாங்காத கப்பலுக்கு ஊழலா என்ற போது .. கலைஞர் கவிதை நடையில் பதில் தந்தார் ..

நீங்கள் அன்றாடம் பார்த்து மகிழும் திரைபடத்தின் மூலமே விளக்கம் தர எண்ணுகிறேன்
தன்னந்தனியாக 
ஒரு அழகி 
தாமரை முகத்தால் 
தனியே சென்றிடுவாள் 
அவரை சில முரடர்கள் வழிமறித்து கற்பை சூறையாட முனைவார்கள் 
அப்போது மரத்திலிருந்தோ, மதில் சுவற்றிலிருந்தே கதாநாயகன் பொத்தென குதிப்பான் 
பின்னர் என்ன நடக்கும் 
முரடன் ஒருவனுக்கு கால் உடையும் ஒருவனுக்கு கை உடையும்
பின் கதாநாயகியை அழைத்துச் செல்வான் 
அப்போது அடிபட்ட முரடர்கள் 
ஏனப்பா "கதாநாயகரே" 
நாங்கள் தான் அந்த பெண்ணின் 
கற்பை சூறையாடவில்லையே
ஏனப்பா அடித்தாய் என கேட்டால்  எப்படி நகைச்சுவையாக இருக்குமோ அப்படிதான் வாங்காத கப்பலுக்கு பேரமா என்பது என்பார்
கப்பல் வாங்குவதற்கு முன்தானே பேரம் பேசமுடியும் என்பதை அழகாக விளக்குவார்.. 
எதை அரசியல் செய்யவேண்டும் எப்போதும் எதிலும் ஆளும்கட்சிக்கு குடைசல் கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும் .. மேம்போக்கான அரசியல் எடுபடாது .. அரசியல்கட்சி நடத்துகிறோம் அரசியல் தானே செய்யவேண்டும் ..
..
ராகுல் கலைஞரை படிக்கவேண்டும் .. இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது .. துரோகிகளை இனங்கண்டு கட்டம்கட்டவேண்டும் .. ஒற்றை கருத்துடைய  எதிர்கட்சிகளை அரவணைத்து விட்டுகொடுத்து சாதி,மதவெறிகளை விலக்கி நல்லதொரு விடியலை தர  தொடர்ந்து முயற்சித்தால்  விடியும் பாஜக கதை முடியும் ..
முடியாததென்று எதுவுமில்லை
..
ஆலஞ்சியார்

Wednesday, December 7, 2022

ஆர்எஸ்எஸும் அர்விந்த் கெஜ்ரிவாலும் பின்னே உவைசியும் 
..
ஆர்எஸ்எஸின் கள்ளகுழந்தைகள் 
மக்களிடம் மதிப்பிழக்கிற போது 
வாக்குகள் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸிற்கு போகாமல் மடைமாற்றுவதும், பாஜக எதிர்ப்பு வாக்குகளை பிரிக்க உதவுவதும் மட்டுமே அவர்களுக்கு கொடுக்கபட்ட வேலை அதை தெளிவாக சரியாக செய்கிறார்கள் .. பஞ்சாப்பில் காங்கிரஸுக்கு காரியம் செய்ய சிந்துவை களமிறக்கிய போதே சீக்கியர்கள் பாஜகவை ஆதரிக்கமாட்டார்கள் என அறிந்து ஆம்ஆத்மிக்கு ஊடக வெளிச்சம் தந்தார்கள் .. டெல்லி பெருநகரம் கைவிட்டு போகும் என அறிந்து காங்கிரஸ் வரகூடாதென்பதில்  பாஜகவைவிட காங்கிரஸில் இருக்கும் பார்ப்பன சங்கிகள் அதிகம் கவலைக் கொள்வதும் கவனமாக இருப்பதும் வெளிப்படையாகவே தெரிந்தும் காங்கிரஸ் தலைமை களைந்தெறிய தயங்குவதுதான் வியப்படைய வைக்கிறது ..
..
காங்கிரஸ் தனிநபர் செல்வாக்கோடு மீண்டும் பழைய நிலைக்கு வருவது மிக கடினம் .. ராகுலின் "யாத்திரை" மக்களின் செல்வாக்கை வாக்குகளாக்க முடியாமல் பிரித்தாளும் சூழ்ச்சியை காங்கிரஸ் "கிழங்கள்" செய்துக் கொண்டிருக்கிறது .. சிறுபான்மையினரின் இயல்பாகவே வரும் பாஜக எதிர்ப்பை தனியாக பிரித்து பொது எதிர்ப்பிலிருந்து தனித்து காட்ட நினைத்து ஒவ்வொருமுறையும் பாஜகவிற்கு வழிவிடுவதும் இஸ்லாமியர்களை பொது சமூகத்திலிருந்து தனிமைபடுத்த தன்னாலான முயற்சியை தொடர்ந்து செய்துவருகிறார் .. கர்நாடகாவில் காங்கிரஸ் தோற்க காரணமாக இருந்தவர் இப்போதும் அதே பணியை குஜராத்திலும் செய்கிறார் உவைசி எனும் கோடாரி
..
கெஜ்ரிவால் செல்லப்பிள்ளை என்றால் உவைசி கள்ளப்பிள்ளை 
உவைசி மட்டுமல்ல நிறைய இஸ்லாமிய அமைப்புகளும் (குறிப்பாக SDPI  போன்ற ) இதையே தான் செய்கிறது இவர்கள் முஸ்லிம்களுக்கு உதவிபுரியவில்லை மாறாக கெடுதலை தெரிந்தே செய்கிறார்கள் .. இதோடு மாநிலத்திற்கு மாநிலம் பல்வேறு பிரிவுகள் தலைமை, மற்றும் புகழுக்காக வேரில் வெந்நீரை ஊற்றுகிற செயலை கொஞ்சமும் நெஞ்சில் சஞ்சலமில்லாமல் செய்கிறார்கள் 
இவர்கள் இருக்கிறவரை ஆர்எஸ்எஸையும் அதன் அரசியல் கட்சியான பாஜகவை அசைக்கமுடியாது 
..
நல்வாய்ப்பாய் தென்னகத்தில் குறிப்பாக தமிழ்நாடு, கேரளம், ஆந்திரத்தில் மக்கள் மதவெறிக்காளாமால் புரிந்து நிற்கிறார்கள் இங்கேயும் குறிப்பாக தமிழ்நாட்டில் நிறைய உவைசிகள் சமுதாயத்தின் சாபகேடாய் நின்றாலும்  தெளிவோடு மக்கள் இவர்களை பிச்சாங்கையால் புறந்தள்ளுகிறார்கள் ..
நிறைய சாதீய அமைப்புகளும் அதிலும் குறிப்பாய் பட்டியலின சங்கிகளும், பணம் புகழுக்காக ஈசலைப்போல வந்து விழுகிறவர்களும் பெருக்கெடுத்தாலும் சூரியனின் பெருநெருப்பில் பொசுங்கி போகிறார்கள் 
..
நாடு எங்கே போகிறது .. தன்னலம் பாராமல் உழைப்பவர்களை விட கார்ப்பரேட் சேவகர்களை கொண்டாடுகிறது .. மதம் தலையின் கிரீடமென நம்பி வடவர்கள் சிந்திக்கும் திறனற்று நிற்பது, சாதிய சனாதர்ம கோட்பாட்டை எதிர்க்க துணிவற்று மடமையில் ஊறி, புராண புரட்டுகளை நம்பி நாட்டை அழிவின் விளிம்பிற்கு கொண்டு செல்கிறார்கள் .. பொதுவுடமை பேசும் சிவப்புகள் இரத்ததிற்கு பிறகு காவியை பூசிதான் தொடங்கியது.. மக்கள் விழிப்படைந்து சகாக்களை புறக்கணிக்க தொடங்கியவுடன்  கெஜ்ரிவாலையும் உவைசிகளையும் வைத்து  "சூது" செய்கிறார்கள் 
..
இந்திய ஒன்றியத்திற்கு இப்போதைய தேவை பல்வேறு கட்சிகளின் ஒருங்கிணைப்பும் நல்ல தலைமையும் ..  எதிர் அணியினர் கருத்துவேறுபாடுகளை களைந்து, புற்றீசல்போல் வளர்ந்து வரும் உவைசிகளையும் கெஜ்ரிவால் போன்ற கள்ளக்குழந்தைகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு, தங்களின் பிரதமர் ஆசைகளை ஒதுக்கிவைத்துவிட்டு ராகுல் காந்தியை (காங்கிரஸை) முன்னிறுத்தி நாட்டில் மாற்றத்தை கொண்டுவரவேண்டும் .. இதைதான் போன தேர்தலிலேயே 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் சொன்னார் .. 
இப்போதாவது விழிந்தெழுங்கள்
..
ஆலஞ்சியார்

Saturday, December 3, 2022

ஆர்.எஸ்.பாரதி 
திமுகவின் அமைப்பு செயலாளர்
சில தினங்களுக்கு முன்பு அ.ஜின்னா நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசும் போது தன்னுடைய நீண்டகால பயணத்தையும் நீண்டநாள் காத்திருந்ததையும் தான் அறிமுகபடுத்தியவரெல்லாம் எம்.பி எம்எல்ஏ என வந்துவிட்டதை சொல்லி திமுகவில் புதிதாக வந்தவர்கள் ஜொலிப்பதாக கதைத்திருக்கிறார்..
..
ஆர்‍.எஸ்.பாரதிக்கு எதிர்கருத்துகூற விமர்சன செய்ய முழுதகுதியிருக்கிறது ..ஏன் திமுக உறுப்பினர்கள் கூட தன் கருத்தை கூற உரிமை உள்ளது .. எல்லாமட்டத்திலும் பயணிக்கும் யாவரும் கருத்திடலாம் எதிர்க்கலாம் ஆனால் அதை எப்போது எங்கனம் செய்யவேண்டுமென அறிதல் வேண்டும் .. பொதுவெளியில் பேசுவதால் எதிரிகளுக்கு அவுலோடு சக்கரையையும் கலந்து கொடுத்ததைப்போல வேகமாக பரப்புகிறார்கள் .. முதலில் அவர் பேசியது முழுவதையும் வெளியிடாமல் சிலதை மட்டும் வேகமாக எடுத்துச் செல்வதிலிருந்தே நோக்கம் நமக்கு புரிகிறது ..
அப்படி தவறாக எதுவும் பேசவில்லை .. மிகப்பெரிய ஜனநாயக இயக்கத்தில் தேர்தலை மைய்யபடுத்தி களம்காண வேண்டிய கட்சி சிலநேரம் சிலரை முன்னிறுத்துவதும் சிலருக்கு வாய்ப்பை காலதாமதபடுத்துவதும் இயல்பு .. அவரே பலமுறை லிஸ்டில் பெயர் இருக்கும் வாய்ப்பு தள்ளிபோகும் என்கிறார் .. கலைஞரே ஜின்னாவிற்கு ஒன்றுமே செய்ய முடியவில்லை என ஆதங்கபட்டதாகவும் சொல்வதிலிருந்தே தலைவரின்  ஆசையை கூட திமுக காலந்தாழ்த்தும் என்கிற உண்மை திமுக எத்தகைய ஜனநாயகதன்மை கொண்ட இயக்கம் என்பதை உறுதி செய்கிறது 
..
ஆர்.எஸ்.பாரதிக்கு 
1986ல் தன் 39 வயதில் நகர்மன்ற தலைவர்.
அதன்பின்  தொடர்ந்து மூன்று முறை நகர் மன்ற தலைவர்..  நீண்டநாள் அமைப்பு செயலாளர் எம்.பி என பலபதவிகளை வகித்தவர் வகித்துக்கொண்டிருப்பவர் .. அவரின் பேச்சு வைரலாக காரணம் என்ன .. மிக எதார்த்தமாக திமுகவில் நிறைய பேர் காத்திருப்பதை சொல்கிறார் .. தலைவரே காத்திருப்போருக்கு வாய்ப்புகள் வழங்கபடுமென சொன்னதுதான் .. புதிதாக வந்தவர்கள் என்ற சொற்சொடரையே ஏற்பதற்கில்லை ஏற்கனவே திமுகவில் இருந்தவர்கள்தான் பாதை மாறியவர்கள் திரும்ப வந்தாலும் எல்லோருக்கும் வாய்ப்பு தரப்படவில்லை சிலரை தேவை கருதி அவர்களின் ஊழைப்பு வெற்றி வாய்ப்பை மற்றும் பிரதான காரணங்களை கருத்தில் கொண்டு தலைவர் முடிவெடுக்கிறாரெனில் அதில "அர்த்தம்" இருக்கும் ..
..
மாற்றுக்கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு ஏதோ திமுக மட்டும்தான் வாய்ப்பை தருவதைப்போல பிம்பத்தை கட்டமைக்கிறார்கள் .. எம்ஜிஆர் ஜெயலலிதா வாய்ப்பை வழங்கியபோது வாய்பொத்தி இருந்தவர்கள் இன்று பாரதி பேசியவுடன் பார்த்தாயா அமைப்பு செயலாளரே பேசிவிட்டார் இருப்பவனுக்கு மரியாதை இல்லை என கூச்சலிடுகிறார்கள் 
..
திமுக பாரதிகளும் மணிகளும் ஆறுமுகங்களும், பெரியசாமிகளும் பெரியண்ணன்களும் தங்கபாண்டியர்களும், நிறைந்த பெருங்கூட்டம் .. எம்ஜிஆருக்கு சீட்டா  என இரவு கதவை தட்டி அண்ணாவிடமே கேட்ட கல்லூரி மாணவர் பாரதி .. எம்ஜிஆர் சமாதிக்கெல்லாம் என்னால் வரமுடியாதென கடைசிவர வரமறுத்த மணிகள் உண்டு .. பொதுக்குழுவிலேயே குரல் உயர்த்தி பேசும் ஆறுமுகங்களும், முரட்டுபக்தர்களும்,கழகத்தை விட்டு போனால் வீட்டில் மாட்டியிருக்கும்  புகைப்படத்தை வெளியே எறியும் தங்கங்களும் கொண்ட இயக்கம் .. பதவி வரும் போகும் என இடுப்பு வேட்டி இறுக கட்டும் மானமறவர்கள் நிறைந்த கட்சி .. தலைவருக்கு யாரை எப்போது எங்கே நிறுத்த வேண்டுமென தெரியும் .. வாய்ப்புகள் மறுக்கபடவில்லை காலதாழ்த்துகிறது அவ்வளவுதான்
..
திமுக மிகப்பெரிய ஜனநாயக இயக்கம் .. வாய்ப்பு கிடைப்பதென்பது அவ்வளவு எளிதல்ல சிலருக்கு நல்வாய்ப்பாய் அது சீக்கிரம் கிடைத்திருக்கும் கோடிக்கணக்கணக்கான தொண்டர்கள் கொண்ட இயக்கத்தில் தகுதியுள்ளோர் ஏராளம்  ஒவ்வொரு தொண்டனும் தகுதியுடையவன் .. 
தொண்டனின் பலமே திமுக கொள்கை உறுதியோடு செயல்படும் பெரும்படை கொண்ட கூட்டம் திமுக.. கலகம் மூட்டலாம் என்ற சிலரின் எண்ணம் ஈடேறாது
..
ஆலஞ்சியார் 

Thursday, December 1, 2022

இனப் பகைவர்கள் அரசியல் எதிரிகள் வஞ்சக சூழ்ச்சியால் வலை விரிக்க முயற்சிக்கின்றனர் 
பகை வென்று பணி தொடர அணிவகுப்போம்.. கொள்கையும் சாதனைகளும் நமக்கு வாளும் கேடயமும் ஆகும், அதை குக்கிராமம் வரை கொண்டு  சேர்க்கவேண்டும் 
மாண்பமை முதலமைச்சர் 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்
..
அரசியல் ரீதியாக எதிர்க்க முடியாதவர்கள் பொய் பிரச்சாரங்களிலும் ஈடுபடுகிறார்கள் .. நாகரீகமற்ற உரையாடல்கள் பேசவே நா கூசும் மொழிநடையில் கொஞ்சம் கூட வெட்கபடாமல் பேசுகிறார்கள் .. எதிலும் உண்மை இல்லை என்றாலும் சிலமணிநேரத்தில் அது அவிழ்ந்துவிடுமென அறிந்தும் அம்மணமாய் நிற்க வருமென தெரிந்தும் அதுவரை பரபரப்பை தருமே என விசமத்தை பரப்பிக்கொண்டே இருக்கிறார்கள் 
இனப் பகைவர் வலையில் சிக்குகிறவர்கள், சுயமிழந்தவர்கள்  
..
சோம்பேறிகள்  குற்றபின்னணி கொண்டவர்கள் சமூகத்தால் வெறுக்கபடுபவர்கள், கொலை கொள்ளை ரகளை என முத்திரையோடு திரியும் ஆபத்தானவர்கள் .. அடுத்தவரை ஏமாற்றி பிழைக்கும் எத்தர்கள் 
"சூது" தர்மமென்போர், புரட்டை புராணமென மெச்சுவோர், மதத்தை சாதியை தலையில் ஏற்றி வெறிகொண்டலையும் மூடர்கள்  உறவின்முறையை கூட கேவலமாக்கும் கயவர்கள் மொத்தத்தில் ஆபத்தான, அருவருக்கதக்கவர்களின் கூடாரமது ..
..
நம் தலைவர் மிக தெளிவாக பகைவர்கள் வஞ்சகவலை விரிக்கிறார்கள் சிலர் அதில் விழகூடும், நம் கொள்கைகளை சாதனைகளை ஊர் ஊராய் எடுத்துசென்று மக்களிடையே விளக்கிட வேண்டும் .. வரும் ஆபத்தை முன்கூட்டியே  எச்சரிப்பதும் தடுப்பதும் நம்கடமையென சொல்வதில் இருந்தே நம் கடமையை அவசியத்தை உணர்த்தும் அதேவேளை அலட்சியமாக இருந்துவிட கூடாதென அறிவுறுத்தியிருக்கிறார் ..
..
இந்திய ஒன்றியம் கையாளாகாதவர்களின் கையில் சிக்கி சீரழிகிறது .. மதவெறியை மக்கள் மூளையில் ஏற்றி சாதீய உணர்வைவூட்டி சனாதனத்தை கையிலேந்தி காட்டுதர்பார் நடத்துகிறது .. இதோ ஒரு சான்று 
வயதானோர் மூத்த குடிமக்களுக்கு ரயில் பயண சலுகையை நிறுத்தியதில் ₹1500 கோடி மிச்சம் என தகவல் அறியும் உரிமை சட்டம் சொல்கிறது .. எவ்வளவு அட்டூழியமான செயல் .. இதுதான் பாசிசம்.. இவர்கள் கார்ப்பரேட்டுகளின் கடனை தள்ளுபடி செய்ய மக்களின் வயிற்றில் அடிப்பார்கள்.. மக்களை சுரண்டி மக்களின் பொதுசொத்துகளை தனியாருக்கு தார்வார்த்து கேட்டால் பரம்பரை சொத்தையா விற்றேன் என்பார்கள் ஆபத்தான இவர்களின் ஆட்டத்திற்கு முடிவுகட்ட ஸ்டாலின் தேவைபடுகிறார் ..
..
பாஜகவில் நாகரீக அரசியல் இல்லை என்பது மட்டுமல்ல கூச்சமே இல்லாமல் தெரிந்தே பொய்யை சொல்வதையும் அரசியல் பாலபாடமே தெரியாதவன் கூட மூத்த அரசியல் தலைவர்களை கேவலமாக பேசுவதையோ ,கண்டுகொள்ளாதது மட்டுமல்லாமல் அவர்களின் தவறுகளை அவரின் படுகேவலமான, உண்மைக்கு புறப்பான செயல்களை மூடிமறைப்பதுமாக ஜனநாயகத்தின்  நான்காவது தூண் ஊடகம் செயல்படுவதை பார்க்கும் போது  அவசரகாலத்தில் ஊர்ந்து கிடந்தீர்கள் என்ற அத்வானியின் குரல் ஞாபகம் வருகிறது இப்போது வீழ்ந்து வணங்குகிறார்கள் .. ஊடக அறமற்று போய்விற்றது .. சில ஊடகங்கள்  காழ்ப்புணர்ச்சியை கக்கினாலும் சிலநேரம் நேர்மையாக இருப்பதாக காட்டிக்கொண்டிருந்தது இப்போது அதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது ..கார்ப்பரேட் முதலாளிகளின் கையில் ஊடகங்கள்.. சமூகவலைதளங்களை கூட விலைபேசும்,கட்டுபடுத்தும் அயோக்கியத்தனம்  இவையனைத்தையும் தாண்டி ஜனநாயகம் மலருமென நம்புகிறோமே அதில் தான் இந்திய அரசியலின் நம்பிக்கை இருக்கிறது 
..
மக்கள் தன்னெழுச்சியாய் பாசிச ஆட்சியாளர்கள்,மதவெறி கூட்டத்தின் மீது கோபமும் வரும் வரை இந்த பாசிச கோமாளிகளின் கூத்து தொடரதான் செய்யும் ..  இந்திய மக்கள் வெகுண்டெழுந்து  புதியதொரு ஜனநாயக பாதையை சமைக்கும் .. அதன் தொடக்கம் தெற்கிலிருந்தே தொடங்கும்..
திராவிடம் அதை செய்யும் ஏனெனில் மக்களை சமமாக மதிக்கும் பண்பும், சமநீதியாய் எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திட வேண்டும் பசித்தவனுக்கு முதலில் கிடைப்பதே நீதி பின்தங்கியவர்களை படிகளில் ஏற்றுவதே திராவிட கருத்தியல் இதுவே இன்றைய இந்தியாவிற்கு தேவை .. 
பின்நோக்கி பொய்பேசி புரட்டுகளால் தேசத்தை இழுத்துசெல்பவர்களை விரட்டி 
பகுத்தறிவோடு சமூகத்தின் அடித்தளமக்களையும் அணைத்து அழைத்துச்செல்லும் திராவிடமே இன்றைய தேவை ..
அனைவருக்கும்கல்வி வேலைவாய்ப்பு சமமாக  கிடைத்திட சமச்சீரான கல்வியை தந்த திராவிடமே இந்தியாவிற்கு இன்றைய தேவை .. கொடுவாளும் தோக்கும், அல்ல தீர்வு கல்வி அறிவும் பகுத்துண்டு வாழும் பண்பு , வேற்றுமையில்  ஒற்றுமையுமே இன்றைய தேவை ..
திராவிட சித்தாந்தமே அதற்கான தீர்வு ..
..
ஆலஞ்சியார்

Sunday, November 27, 2022

அன்பின் உதய் ..
வாழ்த்துகள் .. ❤️‍🩹
திமுகவின் நம்பிக்கையாக வலம் வர தொடங்கியிருக்கிறீர்கள் ..
"வாரிசு" என்ற சொல்லை தாண்டி உழைத்திட இன்னும் அவகாசம் உண்டு .. ஆனால் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கவேண்டும் வேறெங்கும் தேட தேவையில்லை.. கண்முன்னே தளபதியின் உழைப்பு உணர்த்தும் உன்னத வழிதனை ..
..
தொடர்ந்து கவனித்து வருகிறேன் "இவன் பாட்டனை நினைவுபடுத்தும் பேரன் " என காதுபட பேசுவதை கேட்க முடிகிறது.. எதையும் சந்திக்கும் துணிவு,நகைச்சுவையோடு கடந்துபோகும் பாங்கும், இன்றைய அரசியலில் எது தேவை என அறிந்து காய் நகர்த்துவதும் வியப்பை தருகின்றன..  சில முக்கிய பதவிகளை இவர் பரிந்துரைக்கிறாரென்றும் அப்படி பரிந்துரைத்தவர்களின் செயல்பாடுகள் மெச்சதகுந்ததாக இருப்பதாக "முக்கியதலைகள்" பேசுகின்றன .. எதிர்கருத்தே இல்லாத நிலை என்பது தொடக்கத்தில் பலமாக தோன்றும்  காலங்கடந்து அது பலவீனப்படும் என்பதையும் .. கலைஞர் என்ற பெருந்தலைவரின் சொல்லும் செயலும் வாழ்வும்,  நமக்கு தந்திருக்கிற அரசியல் பாடம் .. புரியும் என்று நினைக்கிறேன் ..
..
உதய் ..
நீண்ட பயணம் காத்திருக்கிறது 
காலம் சரியான நேரத்தில் வாய்ப்பை தரும் .. ஆனால் சினிமா பொதுவாழ்வு என்ற இரட்டைசவாரி சில வேளை சறுக்ககூடும் எச்சரிக்கை .. பொதுவாழ்விற்கு அதிகநேரம் ஒதுக்குதல் முக்கியம் 
ஏனெனில் கேளிக்கை தரும் புகழ் நிழலைப்போன்றது ..நாம் சூரியனின் வெளிச்சத்தில் களிப்பவர்கள் .. பொதுத்தொண்டொன்றே நமக்கான அங்கீகாரத்தை தரும் .. 
திராவிட இயக்கத்தின் கருத்துக்களை கொண்டு சேர்க்க "கலை" பயன்படும் ..அதுவே அளவுமீறினால் கசக்கும் ..
.. 
மக்களிடம் செல், மக்களோடு கலந்திரு, மக்களுக்காக உழை .. என்ற பேரறிஞரின் சொல் தாரக மந்திரமாய் ஒலித்தால் நம்பிக்கை கீற்று முகில் கிழிந்து வெளிவரும் கதிரவனின் ஒளிப்போல பயன்படும் .. மிக பெரிய எதிர்காலமிருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள் .. திமுகவின் தலைவர்கள் ஒட்டுமொத்தமாக சிறந்த எதிர்காலமிருப்பதாக வெளிப்படையாக பேசுகிறார்கள் ..
என் அச்சமெல்லாம்  புகழ்ச்சியில் வீழ்ந்துவிடாமல் மக்களுக்கான உழைப்பில் கவனம் செலுத்தி போற்றுபவரைவிட விமர்சிப்பவரின் கருத்தில் கவனம் கொண்டு செயல்படவேண்டும் 
..
செயல்படு .. 
ஓயாது உழை ..
கவனம் கொள்..
புகழுக்கு செவிசாய்க்காதே ..
நமக்கானதை காலம் தரும் அதுவரை  தாத்தனைப் போல 
அப்பனைப்போல உழை ..
அடித்தளம் பலமாக வேண்டும் 
ஜால்ராக்களின் புகழில் மயங்காதே 
அது வசந்தம் தேடி வரும் பறவையை போன்றது ..
வசந்தகாலம் முடிந்தால் பறந்துவிடும் 
வேரினை தேடு 
அது புகழாது
காக்கும் ..
"வேரை" அறிதல் வேண்டும் 
கிளைகளைகண்டு ஆனந்தம் கொள்ளாதே 
வேரின் சக்தியில் தான் மரம் தழைத்து நிற்கிறது 
திராவிடத் "தருவின்" வேர்களை இனம் கொள் ..  திராவிடத்தை இளம்தலைமுறையிடம் கொண்டு சேர்த்தலும் ,கொள்கை உறுதியோடு செயல்படுதலும் வாய்ப்பை தேடி வரும் வரை மக்கள் பணியில் தொய்வில்லாமல் உழைத்தலும்  உயரத்தில் கொண்டு நிறுத்தும் 
யாரும் தொட முடியாத உயரத்தில் 
பிறந்தநாள் வாழ்த்துகள் உதய்
Udhayanidhi Stalin 
..
ஆலஞ்சியார்

Thursday, November 24, 2022

பாஜக நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு 
..
கொள்ளையர்கள், ஏமாற்றுகாரர்கள், ரௌடிகள், பொய்யர்கள், போலிகள், போதைப்பொருள் கடத்துபவர்கள் நடத்தைகெட்டவர்கள், கலவரக்காரர்கள், சாதிமதவெறியர்கள், என கேடுகெட்டவர்களின் கூடாரமாக திகழ்கிறது ..
எதாவது தப்பை செய்துவிட்டு தப்பிக்க பாஜகவில் அடைக்கலமானால் போதும் எவ்வளவு அயோக்கியத்தனம் செய்தாலும் ஊரை அடித்து உலையில் போட்டாலும், அடுத்தவனை ஏய்த்து பிழைத்தாலும், நடுரோட்டில் பெண்களின்  தாலியை அறுத்தாலும், இங்கே தலைவனாகலாம்..
..
படித்த பட்டமே போலி என்றால் நீ புதிய கல்வியை வகுக்கலாம் எந்த கல்லூரியில் படித்தாய் என எவருமே அறியாமல் இருந்தால் நீ தலைமை அமைச்சனாகலாம் .. உருவாக்க வக்கில்லாமல் இருந்தாலும் உன் பாட்டன் சொத்தையா விற்றேன் என கேட்க தெரிந்தால் நிதி ஆளுமையாகலாம்.. எலுமிச்சை பழத்தை கட்டிவிட்டால் பேய் பிசாசு மட்டுமல்ல பிறநாட்டு ராணுவம் கூட நுழையாதென்ற அறிவிருந்தால் பாதுகாப்பாளனாகலாம் .. மாட்டு மூத்திரமும், பசுவிற்கு உயிர்வளி (ஆக்சிஸன்)காற்றும், கேள்வி கேட்டால் புல்டோசரும் இருந்தால் மாநிலத்தை ஆளலாம் ..
ஒரே நாளில் பணம் செல்லாதென  நடுத்தெருவில் நிறுத்தினாலும் புதிய இந்தியா பிறந்ததென புகழந்தால் நீ புனிதன் உனக்கு ரெய்டு கிடையாது .. கங்கை மூழ்கி வீணையோடு எழுந்தாரென புழுகினால் நீ நாடாளுமன்ற உறுப்பினராகலாம், மொத்தத்தில் உன் சுயம் மறந்து இழந்து மானங்கெட்டுபோய் மதி இழந்து நின்றால்  பாஜக உறுப்பினராகலாம் 
..
நாடு எங்கே செல்கிறது ..
கடும் கருத்து மோதல் இருந்தாலும் நாகரீகம் காத்த தலைவர்கள்  வாழ்ந்த நாடு .. செய்வதை தவறென்று சொன்னால் திருத்த முயன்றவர்கள் .. நாகரீக மொழியில் நயமாய் விமர்சனம் செய்தவர்கள் ..  நீதியின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் .. 
பிற மத நம்பிக்கைக்கும் மதிப்பளித்தவர்கள் .. அளவோடு பொய் சொன்னாலும் அது நிரூபணம் ஆனால் வருந்தியவர்கள் நாடாளுமன்றமோ சட்டமன்றமோ மக்களின் பிரதிநிதிகளின் சபை என்றறிந்து மக்களின் குரலாய் ஒலித்தவர்கள் 
ஆளும் கட்சியின் செயல்பாடுகளின் தவறுகளை தலையில் கொட்டிய திருத்திய வரலாறு கொண்டவர்கள்,படித்தவர்கள் பண்பாளர்கள் ஆன்றோர்கள் சான்றோர்கள் அறநெறி கொண்டவர்கள்  அலங்கரித்த சபைகள்..  இன்று பொய்யர்களும், மதவெறியர்கள் கொலைகாரர்கள் பெண்களை கற்பழித்த கயவர்கள் சிறைதண்டனை பெற்றவர்கள் பெட்ரோல் குண்டுவீசும் "திறமை" கொண்டவர்கள் போலி சான்றிதழ் போலி முகவரி போலித்தனம் கொண்டவர்களை பாஜக அழைத்துவருகிறது .. 
..
அதோடு போதைப்பொருள் கடத்த துறைமுகம் வேண்டும் அதை நம்பிக்கைக்குரியவனுக்கு வங்கிகடனோடு கொடு .. நாட்டின் சொத்தையும் சேர்த்து கொடு .. 
எல்லாவற்றையும் தனியாருக்கு கொடு எதிர்த்தால்  தேசநலனுக்காக 20 மணிநேரம் உழைக்கிறேன் என
மக்களை ஏமாற்ற உரக்க பேசு .. 
..
நேர்மையானவர்கள், தவறை சுட்டிகாட்டும் நெஞ்சுறுதி மிக்கவர்கள் சரியான வழிகாட்டும் திறமையாளர்கள் அறிவாளிகள், துறைசார்ந்த வல்லநர்கள் எல்லாம் வேண்டாம், சரித்திரம் படித்தவன் நிதி ஆளுமையாகலாம், பரதேசி வேசம் கட்டியவன் காலில் செருப்பு போடமாட்டேன் என்பவன் பெண்களை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் கிண்டல் செய்பவன் துன்புறுத்துபவன் செல்வாக்கோடு வலம் வரலாம் .. பாஜக அசிங்கங்களும் வேண்டாத குப்பைகளும் உறவுமுறைகளை கூட அசிங்கபடுத்தும் "தகாத" வர்கள் பாஜகவின் பலம் ..அதுசரி
 பத்திரிக்கையாளர்களை கண்டால் OH MY GOD என்பவர் தானே நாக்பூரின் தலைமை தலையாட்டி 
..
நீதிமன்றம், தேர்தல் ஆணையம்,விசாரணை அமைப்புகள் ஊடகம் என நடுநிலைசார்ந்தவைகளை விலைபேசும் மிரட்டும் பாசிச
பாஜக தேசத்தின் கேடு .. 
மக்கள் வெகுண்டெழுந்து முடிவுகட்டவேண்டிய காலம் ..
விழித்தெழுவோம் 
நாட்டை காப்போம் .. பைத்தியகாரன் கையில் மீண்டும் சென்றுவிடாமல் அறம்சார்ந்த நல்ல தலைவர்களின் கையில் நாடு மீள  பாசிச பாஜகவை புறக்கணிப்போம்..
..
நல்லவர்களை இனம்காண்போம் ..
..
ஆலஞ்சியார்

Saturday, November 19, 2022

எண்ணி எண்ணி வியக்கிறேன் ..
..
இசை எனும் மந்திரகோலால் மயக்கும் வித்தைகாரன்.. எம் மண்ணின் இசையால் ஆரிய கூட்டத்தையே அடிபணிய வைத்தவன் .. பார்பனர்களிடமிருந்த திரை இசையை இவன் கையிலெடுத்த போதுதான் தமிழ் மணம் வீசியது ..
வயல்காட்டில் என் "முத்தச்சி" பாடியதை எல்லாம் வடிவான இசையில் தந்து எம்மை வளைய வைத்தவன் .. இவன் இசைக்காக காத்திருந்தோர் பட்டியலில் "மேட்டுக்குடி" வாசம் வீச அது தொற்றிக்கொண்டது ..
தலையில் ஏற்றிய கர்வம் மெல்ல அரிக்க தொடங்கியதை அறியாமல் போனது தான் விந்தை 
..
என்பதுகளில் இசை நர்த்தனம் பரிந்து தன்னை சுற்றி தனி சாம்ராஜ்யமே கட்டியவர்.. இவர்  திரையிசையில் காட்டிய மாயஜாலங்கள் கண்டு "இசைவித்தகன் " என சொல்லி திரிந்தவரெல்லாம் ஒருகணம் ஆடிப்போனார்கள் .. எத்தனை எத்தனை ரீங்காரங்கள் இன்னமும் 
செவி வழியே இறங்கி மனதை துளைத்து என்னவோ செய்கிறது 
துக்கமோ, மகிழ்ச்சியோ, பரிதவிப்போ, மனம் லேசாக இந்த ராசாவை தேடியதெல்லாம் தமிழன் வாழ்வோடு கலந்த விடயம் .. 
..
அவரின் தனிப்பட்ட பக்தி மதம் கொள்கை நமக்கு தேவையில்லை ஆனால் அகங்காரம் அழிவின் தொடக்கம் என்பதை அறியாமல் போனதும் தொடர்ந்து "அரசியல்" எனும் இவர் அறியாத பாடத்தில் வகுப்பெடுத்ததும் மதம் தலைக்கேறி இசைந்து நின்றதும் வீழ்ச்சியை நோக்கியதாக இருந்தது .. 
..
துபாய்   இவரது இசை நிகழ்ச்சி இரண்டுமுறை தேதி மாற்றம் செய்யபட்டு கடைசியில் கைவிடபடுவதாக செய்திகள் வருகின்றன் .. இவரது சமீபத்திய அரசியல் மறைமுக"அரங்கேற்றம் "
பலருக்கு உகந்ததாக இல்லாமல் கோபத்திற்கு ஆளானதும் பாசிசத்தின் பாசபிடியில் மூச்சு திணறுவதும் சகிக்க முடியாத இசையானது ..
..
இசைக்க தெரிந்தவருக்கு மக்கள் மனதோடு இசைந்து பழக தெரியவில்லை .. 
மக்களிசையை தந்தவன் ..
மன்னருக்கு புகழிசை பாட பாவமாக தோன்றுகிறது..  எம் மண்ணின் இசை வேந்தன் தான் 
"இந்துஸ்தானி" யில் மயங்கி ஜால்ரா இசைக்கிறார் 
..
புதுராகம் படைத்தவன் ..
அதுவொரு கனாகாலம் ..
..
ஆலஞ்சியார்

Friday, November 18, 2022

மாமனிதன்🤣 வைகோ ..
நான் கண்ட அரசியல் தலைவர்களில் மிகவும் பலவீனமானவர் .. அரசியல் வாழ்வில் மிகச் சிறந்த உயரத்தை  தொடுவாரென என்னைப் போல பலரும் நினைத்ததுண்டு .. சிலநேரம் தலைவருக்கு பிறகான அரசியலில் "தலைமை" ஆகும் வாய்பிருக்குமென இளம்பிராயத்தில் நினைத்ததுண்டு.. 
ஆனால் கோமாளியைப்போல நாட்கள் நகருமென யாருமே எதிர்பார்க்கவில்லை 
..
எங்கே சறுக்கியதென்பதை இதுவரை உணராமல் இருப்பதுதான் இவரின் வீழ்ச்சிக்கு காரணம் .. புலிகளோடான தொடர்பும் அதை தொடர்ந்து இவரை இயக்கியவர்களின் "சொல்" கேட்டு ஆடியதும்  எல்லாம் தப்பாட்டமாய் போனது .. முடிவுகளை  உணர்ச்சிவயப்பட்டு எடுப்பதும் எடுத்த முடிவில் உறுதியாக இல்லாமல் சஞ்சலபடுவதும் வெளிப்படையாகவே தெரிந்தது.. இவரின் "கண்டு" படித்தவர்கள் கூட முகம் நேர பேசுகிறார்கள் ..
..
வீராவேசமாக பேசினால், தொண்டர்களை கட்டிபோடலாம் ..  ஆனால் விவேகம் தான் அடுத்த நிலைக்கு கொண்டு போகும் .. எல்லாவற்றையும் மறந்து சிறைசாலை வெளியே காத்திருந்த தவைவனை புறக்கணித்த அந்த "நொடி " மாபெரும் தவறை அரசியல் வரலாற்றில் செய்த தருணமாக இருந்தது .. 
கட்சியிலிருந்து நீக்கபட்ட போது 
அவரை நம்பி வந்த 9 மாவட்ட செயலாளர்கள்,  சில முன்னணி தலைவர்கள்,  அதோடு பார்ப்பன ஊடகங்கள் உருவாக்கிய பிம்பம் எல்லாம் மௌனமாய் கடந்து 
"மறுபடியும் திமுக" என மதிமுகவை 
விளித்த தலைவனின் தொலைநோக்கை கண்டு வியக்காமல் இருக்கமுடியவில்லை 
எம்ஜிஆர் பிரிந்த போது கூட வருத்தபடாதவர் "கூட இருந்தவன் " கொலைவாளை உறுகுவதைப்போல கட்சிக்கு உரிமை கொண்டாடிய போது கொஞ்சம் வருத்தபட்டாலும் 
வைகோ மீது தனி பாசம் மட்டும் குறையாமல் இருந்ததால் தான் "வருவான் " தம்பி என சிறைவாசலில் காத்திருந்தார்.. ஆனால் காலம் வலியதென்பதை உணர்த்தி கடைசியில் மெல்ல கரையும் கற்பூரக் கட்டியைப்போல மதிமுக கரைந்து கடைசியில் வையாபுரியில் நிற்கிறது .. இருக்கும் சொற்பமும் மௌனமாய் நகரும் காலம் வரும் 
..
இளைஞர்கள் யார் பின்னால் செல்வதென்று கேட்டால் திருமுருகன் பின்னால் செல்லுங்கள் என கூறுவேன் என்கிறார் .. அன்று செய்த அதே தவறை "இளைஞர்களை வழிகெடுப்பதை " இன்னமும் செய்கிறார் .. மேடையில் புகழ வேண்டுமென்பதற்காக தகுதிக்கு மீறிய வார்த்தைகளை கையாள்வது பேச்சாளர்களுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம் ஆனால் ஒரு கட்சியின் தலைவனுக்கு கொஞ்சமும் பொருந்தாத விடயம் .. 
நல்ல தலைவனாகவோ நல்ல வழிகாட்டியாகவோ நல்ல ஜனநாயகவாதியாகவோ இல்லை .. புலிகள் ஈழம் என வாழ்வின் பாதியை வீணடித்து கடைசியில் "பலனடைந்தோர்" கூட கண்டுக்கொள்ளாத நிலையில்  "இருப்பே" கேள்வி குறியாகி நிற்பதை காணும் போது .. கடந்த காலங்களில் "போர்வாளாய் " இருந்தவர் என்கிற ஆதங்கம் மட்டுமே மிஞ்சுகிறது .. 
வீரனின் கையில் இருக்கும் வரை தான் அதற்கு போர்வாள் .. காயலாங்கடையில் "எடைப்பொருள்" அவ்வளவுதான் 
..
ஆலஞ்சியார்

Thursday, November 17, 2022

பெண் ஆளுமைகள்.
எதிர்கருத்தாக்கங்களை கொண்டவர்களை கவனித்துக்கொண்டிருக்கிறேன்.. நிறைய பெண்கள் குறிப்பிட வரையறைக்குள் தங்களின் பணி அல்லது கடமை முடிந்துவிட்டதாக நினைக்கிறார்கள்.. அவர்களுக்கென்று நிறைய தடைகளை அவர்கள் குடும்ப மற்ற சமூக பின்னணியே தருவதை பார்க்கலாம்..
..
அரசியலில் பெண்கள் மிக சொற்ப எண்ணிக்கையில்தான் பங்கேற்க முடிகிறது அதிலும் சில கட்டாயத்தின் பெயரில் இடஒதுக்கீடு போன்ற நிர்பந்தங்களால் சிலர் மீது திணிக்கப்படுகிறது..
சுயமாக எழ வாய்ப்புக்கள் மறுக்கபடுவதோடு மட்டுமல்லாமல் தடையிடவும் செய்கிறது இந்த சமூகம்..
என் உறவினர் கூட தன் துணைவியாரை உள்ளாட்சியில் நிர்வாகத்தில் சுயமாக பணி செய்ய விடவே இல்லை.. பெண்களின் சுயசிந்தனைகள் பங்களிப்புகள் திறமைகள் மறுக்கபட்டு/மறைக்கபடுகின்றன என்பதுதான் உண்மை.. கடைசிவரை அந்த சகோதரியை சேர்மன் என்று யாரும் அழைக்கவில்லை
அவரது கணவரைதான் சேர்மன் என்றழைத்தார்கள்..
..
பெரிய பதவிகளை வகிக்க அல்லது பகிர்ந்துக்கொள்ள கருத்தை கேட்க அரசியல் கட்சிகள் முன்வருவதில்லை..திராவிட சிந்தனை பேசும் பெரியாரியம் பேசும் கட்சிகளில் கூட மிக மிக குறைவான பங்களிப்பையே காணமுடிகிறது என்பதை  ஒப்புக்கொள்ளதான் வேண்டும்.. பகுத்தறிவு சமநீதி சமஉரிமை பேசும் திராவிட இயக்கங்களில் கூட இன்னமும் சரியான பிரதித்துவம் பெண்களுக்கு கொடுக்கபடவில்லை.
..
அத்திபூத்ததைப்போல சிலர் மட்டுமே அரசியலில் பொதுவாழ்வில் பங்களிக்கிறார்கள்  மாற்று கருத்தை கொள்கை முரண் கொண்டவர்களை கூட அவர்களின் பங்களிப்பிற்காகவே பாராட்ட போற்றவேண்டும்..
ஜெயலலிதா மாயவதி மம்தா தொடங்கி சுஷ்மா  என பட்டியல் நீளும்.. கோபம் முரட்டு பிடிவாதம் என நிர்வாகத்தில் படுமோசமாக நடந்துக்கொண்டபோதும் அவர்களின் அர்ப்பணிப்பை குறை கூறமுடியாது
..
சிலர் ஆபூர்வமாய் வருகிறார்கள் .. தன் கருத்தை உறுதியோடு அதேவேளை நாகரீகம் கெடாமல் எதிர்கருத்தாளர்களையும் மதித்து கடமையை செம்மையாக செய்கிற சிலர் அவர்களில் #கனிமொழிகருணாநிதி வியக்கதக்க வகையில் செயலாற்றுகிறார் 
வரும்போது தன் மீது விழுந்த நிழலின் படிமம் கூட தெரியாதவகையில் செயலாற்றுகிறார்
தன்னை தடுத்துநிறுத்தி விமானநிலைய பாதுகாவலரின் செயலை எதிர்த்து #இந்திதெரியாதுபோடா என தமிழகமே சொல்ல வைத்த ஆளுமை .. உதவி என கேட்போரை அக்கறையோடு அருகில் அழைத்து கேட்கும் தாயுள்ளம்.. சமூகநீதிக்கெதிராக கூடஇருந்த பொதுவுடமைவாதி ஆதரித்தபோது நாடாளுமன்றத்தில் கடும் கண்டனதை பதிவு செய்த வீரம் .. தன் நிலைபாட்டை மாற்றிக்கொள்ளாமல் தான் நாத்திகம் பேசுபவர் தான் என சொல்லும் நேர்மை  தன் மீது சுமத்தபட்ட பெரும்பழியை சட்டத்தால் வென்று "ஜெயிச்சுட்டோம்பா" என குழந்தையைபோல குதூகலித்த போது அவரின் இயல்பு பளிச்சிட்டது .. 2ஜி எனும் இமாலய கற்பனையை சொல்லி கழகத்தை வீழ்த்திவிடலாம் தலைவரை முடக்கிவிடலாமென கங்கணம்கட்டி செயல்பட்டோருக்கு "#அப்பனைப்போல" அறம்வெல்லும் என்ற நம்பிக்கையோடு வென்று காட்டிய போராளி.. மக்களை சந்திப்பதில் எப்போதும் சுணக்கம் காட்டாமல் 
கொடுந்தொற்று காலத்திலும் சிலர் முடங்கி கிடக்கும்வேளையில் நீண்ட பயணம் காரிலேயே பயணபட்டு தன் தொகுதிமக்களின் துயரில் பங்குகொண்ட அவரின் அர்ப்பணிப்போடு கூடிய பொதுவாழ்வு .. வியக்கதக்க போராளியாய் பெண்ணியம் பேசும் தலைவராய் மிளிர்கிறார்..
..
பெண்கள் பொதுவாழ்விற்கு வரும் போது வரும் விமர்சனங்கள் பாலியல்வதந்திகள் எல்லாவற்றையும் நேர்கொண்டு தன் கடமையை சரியாய் செய்தால் பொய்கள் விழுந்து போகும் உண்மை வென்று உன்னதம் தரும் .. நிறைய பெண்கள் பொதுவாழ்விற்கு வரவேண்டும் .. அதற்கான களத்தை முற்போக்கு சமதர்மம் சமூகநீதி பேசும் கட்சிகள் அமைத்திடவேண்டும்..
..
ஆலஞ்சியார்

Wednesday, November 16, 2022

அடிமையின் உடம்பில் இரத்தம் எதற்கு ..
அதிமுகவே டெல்லிக்கு காவடி தூக்குவதற்காக தொடங்கபட்டதுதான் ..
திராவிடத்தை எதிர்க்க "அவர்களுக்கு" ஒரு ஆள் தேவைபட்டார் .. அதற்காக அவசரநிலை காலத்தில் நேபாளத்தில் இருந்த எம்ஜிஆரை "ரெய்டு" பயம்காட்டி வருமானவரி சோதனைக்கு அஞ்சி கணக்கனே கணக்கு கேட்டு கதை தான் அதிமுக .. அவரை பார்பனீயம் சரியாக பயன்படுத்திக் கொண்டது ..  இடையிடையே  ஆசாரமான "ஐந்து பைங்கிளி"களை  வைத்து வடதேசத்து அதிகாரிகளை சரிகட்டி 
வள்ளல் கரைபடியாத கரமென பிம்பத்தை தொடர்ந்து உயரபிடித்து சமாளித்தது தான் சாதனையே தவிர வேறெதும் தமிழகத்திற்கு நன்மை உண்டா என்ன.. 
..
சத்துணவு கூட நீதிகட்சி செயல்திட்டம் அதை பெரியாரின் யோசனையில் மதிய திட்டமாய் காமராஜ் கொண்டுவந்த போது 
கஜானாவிலே பணமில்லை என்ற அதிகாரிகளின் பல்லவியை அடுத்து 
பணக்காரர்களிடம் நிலகிழார்களிடம் கேட்டு கடைசியில் சிறு குறு விவசாயிகளிடம் முதல் மரக்காயை கோவிலுக்கு தருவீர்கள் 
இரண்டாவது மரக்காய்  நெல் எனக்கு தாருங்கள் பசியோடிருக்கும் குழந்தை உணவளிக்கிறேன் என்றெதல்லாம் இன்றைய அதிமுகவினருக்கு தெரிய வாய்ப்பில்லை ..
..
சமூக அநீதி தான் அதிமுக ..
தொடர்ந்து ஜெயா மரணத்திற்கு பிறகு 
அவசர அவசரமாக நீட் தேர்விற்கு அனுமதி  வழங்கியதாகட்டும்  CAA  குடியுரிமை சட்டத்திற்கு எதிர்த்து வாக்களிக்காமல் ஒளிந்துக்கொண்டதாகட்டும் ஆர்எஸ்எஸ் பயிற்சிக்கு அனுமதியாகட்டும் பார்பனன் வீட்டுக்கு பால்பாக்கட் போடுவதாகட்டும் 
ஒரு நொடி கூட தாமதிக்காமல் விரைந்து ஆதரவை தந்து பிற்படுத்த ஒடுக்கபட்ட மக்களுக்கு அநீதி செய்தவர்கள் தான் .. EWS  10%  ஒதுக்கீட்டிற்கு நாடாளுமன்றத்தில் மௌனம் எனும் ஆதரவு தந்து அநீதி அளித்தவர்கள் இன்று வேறு வழியின்றி 
நேரடியாகவே ஆதரிப்பது வெளிச்சம் போட்டு நாங்கள் "எப்போதும் அடிமை " தான் என சொல்லியிருக்கிறார்கள் ..
..
தமிழகத்தில் அதிமுக ஏன் வேண்டும் என்பதற்கு கலைஞர் மிக அழகாக சொல்வார் அந்த இடத்தை காங்கிரஸ் நிரப்பிக்கொள்ளும் அதை தவிர்க்க அதிமுக தேவை என்பார் அதன் பொருள் நேரடியாக பார்பன சக்திகள் வருவதைவிட கொஞ்சமாகவது திராவிட வேசம் கட்டியாவது இவர்கள் இருக்கட்டும் என்பது தான்..  இப்போது வெளிப்படையாகவே பாஜக பாசிச பார்பனீய ஆதரவு என்கிற போது அந்த இடத்தை நிரப்ப தமிழகத்தின் 
சமூகநீதி பேசும் கட்சிகள் முன் வரவேண்டும் .. திமுக இனி எதிரியை நேரடியாகவே சந்திக்கிற காலம் என்பதும் 
திமுக மட்டுமே தமிழகத்தின் எதிர்காலம் தமிழர் நலன் சார்ந்து சமூகநீதியை நிலைநாட்டும் என்பதை உணர்ந்து பல்வேறு பிரிவுகளாக பிரிந்து நிற்கும் நாட்டின் நலன் விரும்பிகள்  மற்றும் சிறுபான்மையினர் பிற்படுத்தபட்ட ஒடுக்கபட்ட சமூகத்தின் கருத்தில் கொண்டாலே போதும் 
தமிழ்நாடு செழுமையடையும் 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்  
நம்  நம்பிக்கை 
நமது காவல் 
நமது எதிர்காலம் 
..
ஆலஞ்சியார்
நன்றி! ..
தமிழன் மறந்துபோன உணர்வு /சொல் ..  சிலநேரம் என்ன செய்தாலும் இந்த மக்கள் ஏன் இவ்வளவு அலட்சியமாக பணமே பிரதானமாய் இருக்கிறார்கள் .. எல்லாவற்றுக்கும் ஒரு விலை பேசுகிறார்கள் என நினைப்பதுண்டு.. நன்றி என்றொன்று உறுத்துமானால் கலைஞரை இவர்கள் தொடர்ந்து அரியணையில் அல்லவா  வைத்திருக்க வேண்டும் 
..
ராஜீவ் கொலையாளிகள் நளினி உட்பட விடுதலையை நாம் மனிதாபிமானம் கொண்டு வலியுறுத்தினோமே தவிர நிரபராதி என்றல்ல .. மன்னிக்கும் மாண்பு அழிந்துவிட கூடாதென்பதும் நீண்டநாள் சிறைவாசம் தூக்கு தண்டனையைவிட கொடியதென்பதால் நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம் 
இவர்களை போராளிகளாக கருதியல்ல இவர்கள் #கூலிப்படைகள் அவ்வளவுதான் .. 
முதல் இலக்கு தவறினால் இவர்கள் அடுத்த குறியை சரியாக செய்திருப்பார்கள் .. தமிழர்கள் என்பதால் இவர்களை தியாகிகளாக கொண்டாட தேவையில்லை .. தோக்கு தான் தீர்வென்றால் இந்த பூமி கலவரமாகதான் இருக்கும் ..
..
நளினியின் தூக்கு தண்டனையை
ஆயுள் தண்டனையாக குறைத்தது கலைஞர் பெருமகன் .. அன்றைக்கு பாதிக்கபட்ட சோனியாவிற்கு எந்த ஆட்சேபனை இல்லை என்பதை சுட்டிகாட்டி அமைச்சரவையில் தீர்மானம் கொண்டுவந்து அதை கவர்னருக்கு அனுப்ப அப்போதைய கவர்னர் பாத்திமா பீவி ஆயுள்தண்டனை குறைப்பை ஏற்றுக்கொள்ள மறுத்த போது உயர்நீதிமன்றத்தை அணுகி  கேபினெட் முடிவிற்கு கவர்னர் கட்டுபட்டவரென தீர்ப்பை பெற்று தந்தவர் பேரருளாளன் கலைஞர் அவர்கள் இதெல்லாம் நன்றி "மறந்ததுகள்"அறியாமல் இல்லை 
..
ராஜீவ் கொலையுண்ட நேரத்தில் யாருமே வழக்கிற்கு ஆஜராக மறுத்த போது நளினிக்காக வாதாடியவர் துரைசாமி .. அவரை நியமித்ததில் கலைஞரின் பங்கை "சிலர்" அறிவார்கள் ..  அவரை யாரை வேண்டுமானாலும் பார்க்கட்டும் "ஈழத்தாய்" சமாதியில் அழுது புலம்பட்டும் தயைகூர்ந்து கலைஞர் நினைவிடத்தில் கால்பதித்துவிடாதீர் என்றே சொல்ல தோன்றுகிறது..
..
நன்றி உணர்வை எதிர்பார்ப்பவரில்லை கலைஞர் 
இங்கே கேடுகெட்டவர்களுக்கும் சேர்த்தே உழைத்த பெருமகன் அவர் .. நம் கடமையை செய்வோம் என்பதே அவரது இயக்கமாக  இருந்தது..
"இன்னா செய்தாரையும் ஒறுத்தல் " தான் கலைஞர் வாழ்வு ..
..
ஆலஞ்சியார்
எழுவரும் விடுதலையானது மகிழ்ச்சியளிக்கிறது.. உத்தரவு நகல் கிடைத்த உடனேயே அவர்களை விடுதலை செய்த 
காருண்யர்  #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்  அவர்களுக்கு நன்றி ..
சொன்னதை செய்யும் தந்தையின் அதே குணம் .. அதோடு நீண்டநாள் சிறைவாசம் அனுபவிக்கும் இஸ்லாமியர்கள் உள்ளிட்டோரையும் விடுதலை செய்ய முனைப்பு காட்ட வேண்டும் என்ற கோரிக்கையையும்  வைக்கிறோம்
..
நண்பர் பிலால் அலியார் Bilal Aliyar 
 மிக தெளிவாக பதிவிட்டிருக்கிறார் அதில் இஸ்லாமிய அமைப்புகள் ஒருங்கிணைந்து சட்ட போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்கிறார் அதில் உடன்படுகிறேன் ..  தெருக்களில் இறங்கி போராடுவதால் அமைப்பின் பலத்தை சமுதாய மக்களிடையே உறுதிபடுத்தலாமே தவிர வேறெந்த பயனுமில்லை .. அற்புதம்மாளின் நீண்ட சட்ட போராட்டம்  ஒருகட்டத்தில் தானாகவே நீதிமன்றமே தனிகவனம் செலுத்தியதும் மனிதநேய அமைப்புகளின் தன்னாதரவும் பல்வேறு கட்சி/ இயக்கங்களின் ஆதரவு தமிழ்நாடு அரசின் அக்கறை மற்றும் உறுதி, விடாமுயற்சியும் விடுதலையை சாத்தியமாக்கியது
..
இஸ்லாமிய அமைப்புகளின்
விவரமின்னையும், தலைவர்களாக 
தன்னை முன்னிலைபடுத்தி கொள்பவர்களின் கேடுகெட்ட பதவி ஆசையும் பல துகள்களாக சிதறி நிற்கும் சமுதாய இளந்தளிர்கள் .. சரியான வழிகாட்டல் இல்லாமல்  "எடுப்பார்கைப்பிள்ளை " போல வார்த்தை ஜாலத்தில் மயங்கி நிற்கிறார்கள் ..
..
கம்பீரமான தலைமையில் துவங்கி இயக்கம் ஆர்எஸ்எஸ் தோன்றிய அதே காலகட்டத்தில் தோன்றிய இயக்கம் வலுமையான முடிவுகளை இந்திய ஒன்றியத்தின் எடுத்தவர்கள் இன்று ஒரு "குற்றபரம்பரை" போல நடத்தபடும் அவலம் .. நன்மை பயக்கும் நல்லவைகளை விதைக்க தவறி 
மதம் தலைக்கேறியதும் தனித்தனி பிரிவாய் சிதறுண்ட தேங்காயைப்போல தேவையுள்ளவன் சட்னி அரைக்கும் அவலநிலை .. இன்னமும் நானே எல்லாம் அறிந்தவன் என சித்தம் கலங்கியவன் போல் பேசி திரிவதும் தான் சமுதாயத்தின் பின்னோக்கிற்கு காரணிகளாகும் 
..
இன்றைய தேதியில் முஸ்லிம்கள் வெகுமக்கள் ஆதரிக்கும் அதே வேளை தங்களுக்கு பாதுகாப்பானது எது என அறிந்து அந்த கட்சி/இயக்கத்தில்  பயணபட்டால் தான் எதிர்கால சந்ததியர்களுக்கு கொஞ்சமேனும் நன்மை புரிந்தவராவீர்கள் ..  
வீண்வம்பு பேசியும் வீராப்போடு திரிந்தால் சமுதாயம் இன்னும் பிளவுபடும் 
..
நீண்டநாள் சிறைவாசிகள் விடயத்தில் ஒருங்கிணைந்து சட்ட போராட்டத்தை முன்னெடுப்பு காலத்தின் அவசியம் .. பல்வேறு அமைப்புகளுக்கு பல நேரங்களில் இஸ்ஸாமிய சமுதாயம் பெரும் பொருளுதவியை செய்திருக்கிறது அதனால் பலனடைந்ததென்னவோ அமைப்புகளும் தலைவர்களும் தான் இனியாவது இந்த ஒரு விடயத்திலாவது சேர்ந்துநின்று சாதிக்க முயலுங்கள் ..
அனுசரணையான அரசு இருப்பதும் நல்ல சட்ட ஆலோசனை வழங்க திராவிட இயக்கத்தின் சட்ட வல்லுநர்களை தொடர்புகொண்டு சரியான நகர்வை செய்தால் நிச்சயம் விடுதலை சாத்தியப்படும் 
..
ஆலஞ்சியார்
வைகோ..
கலிங்கபட்டியில் வாக்களித்துவிட்டு வைகோ செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் குரலில் பழைய கம்பீரம் காணவில்லை வயது மூப்பு காரணமாக இருக்கலாம் ..ஆனாலும் அவர் தன் மகன் வையாபுரி அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை எனச் சொல்லி அதற்கான காரணத்தை சொன்னபோது எங்கே சறுக்கியதென்பதை உணர்ந்தவராக தெரிகிறார் ..55 ஆண்டு பொதுவாழ்வில் மதிமுக தலைமையேற்று 25 ஆண்டுகளில் எத்தனை பொதுகூட்டங்கள் நடைபயணங்கள் என விவரித்து நிறைய இழந்துவிட்டதைப் போல பேசினார் .. உண்மையின் வலி உணர்ந்து பேசுகிறார்..
..
எங்கே சறுக்கியதென்பதை உணர்ந்ததன் வெளிப்பாடு .. திமுக பொதுச் செயலாளர் திமுக துரோகிகளின் பட்டியலிட்டு வைகோ பெயரை குறிப்பிட்டபோது எதிர்வினையாற்றவில்லை .. திமுகவின் தலைமை பொறுப்பை அடைய விரும்பி அதற்கான காய்நகர்த்தல்கள் செய்தபோதும் .. குமரிகடற்கரையில் அடுத்து நீதான் என இதே துரைமுருகனும்,வீராசாமியும் சொன்ன போது பெரியாரைப்போல கலைஞரும் 95 வயதுவரை உயிரோடிருந்தால் என வினவ நிசப்தம் நிலவியதே அப்போதே அடிசறுக்கியதை உணராமல் போனார் ..  13 ஆண்டுகளுக்கு பிறகு  ஆட்சிவந்த உடன் கள்ளதோணியில் இலங்கை பயணம் அது எந்தளவு தலைவலியை திமுக அரசிற்கு தந்தது .. கலைஞர் உயிருக்கே ஆபத்தென RAW எச்சரித்தபோதும்  தம்பி அப்படியெல்லாம் செய்யமாட்டான் என நம்பிக்கை தந்தாரே அந்த தலைவரின் தலைமையை எதிர்த்து திமுகவை உடைத்து 9 மாவட்ட செயலாளர்களோடு நாங்கள் தான் திமுக என்றென்ற போது கலைஞர் .. அண்ணா தந்த இயக்கத்தை கட்டிகாக்க எப்படியெல்லாம் போராடினார் .. தஞ்சையில் பொதுக்குழு நடந்தால் தான் பாதுகாப்பென அண்ணன் கோ.சி.மணியிடம் சொல்ல பொதுக்குழுவும் தொடர்ந்து பொதுக்கூட்டமும் ஏற்பாடானது 980 பேர்களுக்குமேல் கலந்துக்கொண்ட பொதுக்குழு கூட்டம் கலைஞரின் குரலுக்காக காத்திருந்ததே தழுத்தழுத்த குரலில் என் தலைவன் பேசும் போது கண்ணீர்களில் நீர்வழிய கூட்டம் அமைதிகாத்ததே.. இரவு பொதுக்கூட்டத்தை எப்படி நடத்துகிறார்கள் பார்ப்போமென சிலர் கலவரத்தை ஏற்படுத்த போகிறார்கள் என அறிந்து என்ன மணி இதெல்லாம் என்ற போது இரு வருகிறேன் என புறப்பட்டு கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்து மடித்துகட்டிய வேட்டியோடு மாவீரனைப்போல கர்ஜித்தாரே அண்ணன் மணி.. யாராவது எதையாவது செய்ய நினைத்தால் நடப்பதே வேறு என எச்சரித்ததும் அதை தொடர்ந்து கலைஞர் பொதுக்கூட்டத்தில் பேசியதும் மறக்கமுடியுமா வைகோ அவர்களே.. அதே இடத்தில் எத்தனை முறை கழகத்தின் கம்பீரக்குரலாய் கலைஞரின் போர்வாளாய் முழங்கியிருப்பீர்கள்..
..
திராவிட இயக்கம் தன்னலமற்ற தொண்டர்களால் தலைமைத்துவம் கொண்ட பெருந்தலைவர்களால் ஏற்றுக்கொண்ட கொள்கை வெற்றிபெறவேண்டும் என்ற வேட்கையோடு பணியாற்றும் எண்ணற்றவர்களால் உருவானது ..காலம் தலைவனின் தீர்மானிக்கும் ஆம்.. ஒருமுறை தலைவர் கலைஞரிடம் சங்கம் ஹோட்டலில் வைத்து நண்பரோடு சேர்ந்து நேர்காணல் செய்தபோது நீண்டகால தலைமையும் ஆலமர நிழலில் எதுவும் வளராமல் போகுமே என்று சிறுப்பிள்ளைத்தனமாய் கேள்வி எழுப்பிய போது காலம் தீர்மானிக்கும் நல்ல தலைமையை உருவாக்கும்  மறைந்த போது யார் தலைவரென்று கட்சி தீர்மானித்தது அதேபோல காலம் சரியானவரை முன்னிறுத்தும் தேர்வுசெய்யும் என்றார் .. 
வைகோ தொடர்ந்து கட்சியில் இருந்திருந்தால் இன்று துரைமுருகன் இடத்தில் அவர்தான் இருந்திருப்பார் .. 
ஈழப்பயணமும் அதை தொடர்ந்து தொடர் சறுக்கலும் சிலரின் தூண்டுதலால் "மறுமலர்ச்சி "யை ஏற்படுத்தபோவதே சொல்லி கடைசியில் மறுபடியும் திமுக என்ற நிலைக்கு பலர் வந்து சேர்ந்ததும்.. அடையாளம் மறுக்கபடுகிற சூழலில் நிற்பதும் மாணவர் பருவத்திலிருந்தே வைகோவை கண்டு வளர்ந்து கட்சியில் பணியில் அலைந்துதிரிந்த காலம் நிழலாடுகிறது.. சிறந்த பார்லிமெண்டேரியனாக, நல்ல பேச்சாளராக, இளகியமனம்படைத்தவராக உலக அரசியலை உணர்ந்தவராக இருந்தவர் உள்ளூர் அரசியலை அறியாது போனதும்.. தனக்கு சற்றும் பொருந்தாத தலைமைத்துவம் மதிமுக கட்சியை பலவீனபடுத்தியதும் தான் தமிழகம் கண்டது .. தன் மகன் அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை என சொல்லும் போது பொதுவாழ்வில் காலம் தந்த கசப்பான உணர்வுகளும் வலியும் தெரிகிறது .. சிறந்த தலைவராக வரவேண்டியவர் காலமறியாது எடுத்த முடிவு பருவம் தெரியாது விதைத்தப்போல வீணாய் போனது .. தமிழக அரசியலில் தவிர்க்கமுடியாதவர்தான்.. ஆனால் துரோகம் என்ற சொல் பின்தொடர்ந்தே வரும் .. 
காலம் வலியது 
..
ஆலஞ்சியார்

Sunday, November 6, 2022

ஆர்எஸ்எஸ் பின்னணியே கலவரத்தை மையமாக கொண்டது .. நோக்கம் நாட்டை பதற்றமாக வைத்திருப்பதும் அதை வைத்து ஆரியர்கள் பலன் காண்பதும் மட்டுமே .. அவர்கள் பேசும் தேச நலன் என்பது பார்பனியர் நலன்  அவர்கள் சொல்லும் தேசபற்று பார்பனீயத்தை முன்னுறுத்துவது .. ஈராயிரமாண்டாய் மெல்ல மெல்ல இந்திய ஒன்றியத்தின் பல்வேறு குழுக்களின் பண்பாட்டில் ஊடுறுவி  மெல்ல அதை சிதைத்து பார்ப்பனீய "கலாச்சாரத்தை " புகுத்தி அதை இந்திய கலாச்சாரமாக (பண்பாடு) நிலைநிறுத்தியிருப்பது தான்  ..
அது சிதறும் என நிலை வரும் போது இதுவரை கட்டிய கோட்டை அடித்தளமே ஆட்டம்காணும் எனும் போது பதறுதல் இயல்பு அதை தான் சமீபகாலமாக காணமுடிகிறது 
..
நாடெங்கும் குறிப்பாக வடமாநிலங்களில் கூட எதிர்ப்பு பலப்படுகிறது .. இதுவரை மண்ணின் மைந்தர்களை அடிமைபடுத்தியதை உணர்ந்து இதோ தமிழ்நாட்டில் ஏற்பட்ட விழிப்புணர்வு ஏன் இதுவரை இங்கே ஏற்படாமல் போனது.. கடவுள் மதம் சாதி என்ற பெயரில் இதுவரை இவர்கள் சொன்ன "மாயை " கலைந்து மெல்ல வெளிச்சம் பரட தொடங்கியதும் அலறல் சத்தம் அதிகம் கேட்கிறது ..
அதிகாரத்தில் இருந்தும் அனைத்து  அரசு உயர்பதவிகளிலிருந்தும் நீதித்துறை ஏறக்குறைய தங்கள் கட்டுபாட்டிலிருந்தும் தங்கள் எண்ணம் ஈடேறவில்லை என கதறுகிறார்கள் .. 
..
தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு கட்டுபாடுகள் விதித்து சில கேள்விகளை இந்திய ஒன்றியத்தின் பார்வைக்கு வைத்திருக்கிறது திராவிட அரசு .. யார் நீங்கள் ,முகவரி எது, வருபவர்களின் அடையாள அட்டை  இலக்கம் என்ன..
என கேள்வி எழுப்பி
அடையாளம் இல்லாத 
"கலவரகாரர்கள்" என தேசத்திற்கு அடையாளம் காட்டி முகவரி இல்லாதோரின் முகத்திரையை கிழித்து இதோ இவர்கள் தேசத்தின் பயங்கரவாதிகள் ஒற்றுமைக்கு ஊறுவிளைவிப்பவர்கள் என எச்சரித்திருக்கிறது.
..
ஆர்எஸ்எஸ் பதிவு செய்யபடாத இயக்கம் உறுப்பினர்கள் சேர்கை விபரம் அவர்கள் இணையவழி சேர்க்கையில் கூட இல்லை அந்தந்த பகுதி பொறுப்பாளர்கள் சந்தித்து செயல்படலாம் .. இங்கே குள்ளமணி அவர்களுக்கு கூட ரசிகர்மன்றம் அதுவும் பதிவு செய்யபட்டிருக்கும் இந்திய அரசியலை தீர்மானிக்கும் இவர்கள் தங்கள் இயக்கத்தை/தங்களை பதிவு செய்யமாட்டார்கள் 
கலவரமானால் யாரிடம் இழப்பு கேட்பதென்ற கேள்விக்கு பதில் இல்லை ..ஊடகங்களில் பகிரங்கமாக பேசுவார்கள் சட்டத்தின் முன் "ஜகா" வாங்குவார்கள் .. கலவரகாரர்களுக்கு எதற்கு முகவரி 
..
திராவிட இயக்கம்/கட்சி எப்போதும் சட்டத்தின் துணைக் கொண்டே வென்றிருக்கிறது .. சட்டத்தை திருத்தியுமிருக்கிறது .. ஜனநாயகத்தின்  அடித்தளத்தில் மிக கம்பீரமாக உண்மையை கொண்டும் அறிவை கொண்டு கட்டமைக்கபட்டது.. இங்கே போலித்தனமில்லை  அவதூறை பரப்பினால் கூட அதை சட்டத்தின் முன் நின்று வென்ற வரலாறே உண்டு ..   திமுக சட்டத்துறை மிக வலுவானது திறமையாக செயல்படும்..  ஊடகங்கள் நிர்வாகத்தில் புலி/ திறமைசாலி என போற்றி புகழ்ந்த ஜெயலலிதாவையே "களி" திங்க வைத்தவர்கள் .. நீண்ட சட்டபோராட்டத்தில் கடைசியில் முதல்வராக போய் ஜெயிலுக்கு போன வரலாறு நாடறிந்தது .. 
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்
ஆர்எஸ்எஸ் எனும் பிம்பத்தை தன் சட்டத்துறையை கொண்டு கிழித்தெறிந்துவிட்டார் 
ஆம் திமுக வழக்கறிஞர் அணியின் திறமை  சட்டஅறிவு, திறமையான செயல்பாடு கொண்டு மதவெறியர்களின் நோக்கத்தை இல்லாதாக்கியிருக்கிறார் 
எச்.ராசா மிக துள்ளியமாக  கணித்தது சரிதான் 
Stalin is more dangerous than karunanidhi
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் 👏🔥❤️
..
ஆலஞ்சியார்

Wednesday, November 2, 2022

வணக்கம் சென்னை 
நலமா ..
இவன் முடிப்பான் என்று நீங்கள் நம்பியது வீண் போகவில்லை ..
வெள்ளகாடாய் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்ததெல்லாம் இனி பழங்கதையாய் பேசுவீர் ..
"பெருமழைக்காலம் " இனி வசந்தத்தோடு இணைக்கப்படும் 
நல்ல தலைவன் நமக்கு கிடைத்திருக்கிறார் .. ஓயாதுழைக்கும் தலைவனின் ஆட்சியில் சீர்மிகு சென்னை சிங்காரமாகிறது 
..
கடந்த ஆட்சியின் அவலங்கள் 
சரி செய்யவே பலகாலமாகும்.. ஆனால் இந்த போர்படைத்தலைவன் ஒவ்வொரு திட்டத்தையும் வல்லுநர்களை கொண்டு தீட்டி அதை  "போர்கால" வேகத்தில் செய்துமுடிக்கும் திறமை ..
இப்படியொரு தலைவன் தமிழ்நாட்டிற்கு கிடைத்து நாம்பெற்ற பேறு .. பெருமழையில் சென்னை மூழ்கவிட்ட "பெருமாட்டி" ஏனோ நினைவிற்கு வருகிறார்.. இரவோடிரவாக செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து கரையோர குடிகளை மூழ்கடித்ததும் .. சென்னையை கடலோடு இணைத்தும் இறுமாப்போடு கதைத்ததும் நினைவிற்கு வருகிறது ..  விடிய விடிய மழை வெள்ளகாடாகும் இன்று நம் பிழைப்பு போகும் என்றெண்ணி இருந்தவர்கள் விடிந்ததும் வடிந்ததை கண்டு வியந்து நிற்கிறார்.. அன்றாடங்காய்ச்சிகள் 
பிழைப்பு நடக்கிறது .. சென்னை மக்களுக்கு இதுவரை கண்டிராத காட்சிகள் நாடே வியக்கிறது எம் செயல் "தலைவனின்" திறமை கண்டு ..
..
தமிழ்நாடே ..
இந்த தலைவனை கரத்தை விட்டுவிடாதே ..
இன்னும் இன்னும் சிறந்து உயர..
உழைப்பால்  தமிழ்நாட்டை உயர்த்திடும் உன்னத தலைவனை நாம் கொண்டது 
காலம் நமக்கு தந்த சிறந்த அருட்கொடை ..
தங்கதமிழ் நாடே 
வணங்கி மகிழ்கிறது 
வாழ்க! தலைவர் முதலமைச்சர் 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் 
Chief Minister of Tamil Nadu 
M. K. Stalin 
..
ஆலஞ்சியார்

Monday, October 24, 2022

எங்கள்_பேராசான்_பெரியார் ..

கல்வி.. குறித்து இப்படிதான் சொன்னார்
// தமிழ்நாட்டுக்கு சரித்திரமே இல்லை இந்து தேச சரித்திரம் என்பதை எடுத்துக்கொண்டால் இராமாயண பாரதமும் அசோகன் மௌரியன் ஆட்சியும் முஸ்லிம் வெள்ளையர் ஆட்சியும் விளக்கப்படுமேயொழிய சேர சோழ பாண்டியரைப்பற்றியோ திராவிடர்கள் பற்றியோ திராவிடத் தமிழ் என்கிற ஆட்சி பற்றியோ காண்பது அரிதாகும் அவை எந்தவகுப்பிற்கும் பாடமாக இல்லை அப்படி எங்காவது இருந்தாலும் அது வெறும் பித்தலாட்டமாகவும் மோசடியாகவும் காணபடலாமே தவிர யோக்கியமாய் சரித்திர ஆதாரத்தோடு காணபது அரிது..
..
ஆகவே நமது பிள்ளைகள் நம்மைப்பற்றித்  தெரிந்துக்கொள்ள இடமும் இல்லை.. என்றார்..
..
ஆம்.. எவ்வளவு உண்மை..
இவையெல்லாம் புனையபட்டதை நமக்கு போதித்திருக்கிறார்கள்..
உண்மை மீறி வெளிச்சத்திற்கு வரும் போது #கீழடியை ..
மண்ணைக்கொண்டு மூடி விடுவார்கள்..
..
ஆம்  #தஸ்யூக்கள்  அதாவது
திராவிடர்கள் பட்டணங்களில் ஊர்களிலும்  மரத்தினால் கட்டப்பெற்ற மாடமாளிகைகளிலும் வாழ்ந்தார்கள் ரதங்கள் குதிரைகள் ஆடுமாடுகள்  என வாழ்ந்தது கண்டு ஆரியர் பொறாமை கொண்டு திராவிட நகரங்களை கொள்ளையடிக்க நினைத்ததாக #யஷூர்  வேதத்திலேயே உள்ளது..
..
வரலாற்றை மண் கொண்டு மூடலாம் ..புராணம் வேதமென  மத நம்பிக்கையை சொல்லி மனிதர்களை கட்டுபடுத்தலாம் ஆனால் காலம் உண்மையை வெகுநாட்கள் புதைத்திருக்காது
ஒரு நாள் வெளிவரும் வந்தே தீரும்..
..
மாபா.பாண்டியராஜன்  தொல்பொருள் அமைச்சர் பதவியேற்கும் போதே
தெரியும் கீழடியை புதைத்துவிடுவார்களென்று...
மீண்டும் நாம் அதிகாரத்திற்கு வரும் போது
கீழடி மட்டுமல்ல.. வரலாற்று திரிபுகளையெல்லாம் சரிச்செய்ய வேண்டும் என சொன்னோம் அதை தான்  திராவிட மாடல் ஆட்சி செய்து வருகிறது..
..
தென்னக மக்களின் வாழ்வியலை பண்பாட்டை கவனித்தாலே போதும்  அவர்கள் மிக பெரிய நாகரீகத்திற்கு சொந்தகாரரன்  என்பதும்.. கடல் அரிப்பில் சிதைந்து கடலுக்கடியில் போனதென்ற உண்மைகளை  வெளிக்கொண்டு வந்தால்..அவனின் தொன்மை கிடப்பதும் புரியும்..
நிச்சயம் ஒரு நாள் வெளிபடும் திராவிடனின் தொன்மையும்.. அவனே உலகின் மூத்தவன் என்ற வரலாறும்.. இருள் கிழித்து கதிரவனின் ஒளி வந்தே தீரும்..

புனை சுருட்டுக்கள் என மகாபாரத்தை சொன்னவுடன் குதிப்பவர்கள் நம் பெருமை வெளிவருவதை கண்டு அதெல்லாம் இந்து அடையாளமாக மாற்ற முடியாமல்  கதறுபவர்கள் .. பண்டு செய்த நரித்தனங்களை இப்போது செய்ய முடியாமல்  ராஜாக்களை அடிமையாக்கி திணித்த அடையாளங்கள் புனைவுகள் ஒவ்வொன்றாய் கிழிந்து தொங்க தொடங்கியதும் கார்டுவெல் என பதறுவது தெரிகிறது .. திருவள்ளுவரை சாயம்பூச பார்த்து முடியாமல் ஆன்மீக அடையாளமாக பிதற்றுவதெல்லாம் இங்கே வேகாது காரணம் பகுத்தறிவின் சுடரொளியில் தமிழ்நாடு விழித்திருக்கிறது.. பாவம் ராசாக்கள் அலறதான் செய்வார்கள் ..

..
#தமிழன்_மூத்தகுடி ..


..
ஆலஞ்சியார்

அண்ணாவை  முட்டாள் என்கிறானே பத்ரி என கோவபடுகிறவர்களுக்கு பாப்பான் படிப்பாளிதான் அறிவாளி கிடையாது என்பார் பெரியார் 

புராணத்தை நம்புகிறவன் 

புரோகிதம் செய்கிறவனுக்கெல்லாம் அறிவாளிகள் கண்டால் கோபம் தான் வரும் .. திராவிட இயக்கம் அதிகாரத்திற்கு வரும்வரை அவாள்கள் தான் தமிழர் என நம்பவைத்தார்கள் கடைசியில் ஆரியமாயை தந்து முகத்தை கிழித்தார் ..



Saturday, October 22, 2022

எடப்பாடி தூத்துக்குடி துப்பாக்கி சூடு பின்னே பாஜகவும் ..
..
எடப்பாடி பழனிசாமி கோமாளி வேசத்தில் ஒரு கொலைக்காரன்.. 
இவரின் ஆரம்ப அரசியலே கொலையில் தொடங்கியது பங்காளி தகராறில் கொலை செய்துவிட்டு காட்டில் ஒளிந்து வாழ்ந்தவர் பின் அன்றைய அதிமுக அரசியல் பிரபலங்கள் ஈரோடு முத்துசாமியிடம் முறையிட பஞ்சாயத்து செய்யபட்டு வெளிவந்தவர் தொடர்ந்து  சின்னசின்ன ரௌடியிசம் செய்து வளர்ந்தவர் .. காலமும் நேரமும் அவரை முதல்வராக்க தமிழகம் இழந்ததுதான் அதிகம் ..
இதோ முன்னாள் ஆளுநர் எடப்பாடி அரசை துணைவேந்தர் பதவியை விலைபேசி விற்றதாக குற்றம் சொல்கிறார் இதை உடனே விசாரிக்க வேண்டும் .. 
..
தூத்துக்குடி துப்பாக்கி சூடு தமிழகத்தை உலுக்கிய சம்பவம் ..ஆனால் ஏனோ ஊடகம் பெரிய வெளிச்சம் வராமல் பார்த்துக்கொண்டது கார்ப்பரேட் பெரும் முதலாளிகளின் காலணியில் ஊடகங்கள் சென்ற பின் அறமிழந்து போனது ..  தொலைக்காட்சி பார்த்துதான் தெரிந்துக்கொண்டேன் என எடப்பாடி சொல்லும் போதே பின்னில் யார் இருக்கிறார்கள் என தெரியும் .. விசாரணை கமிஷன் அறிக்கையில் ஒவ்வொரு வினாடியும் தகவல் முதல்வருக்கு தெரிவிக்கபட்டதாக தலைமைச் செயலாளர் கிரிஜா மற்றும் டி ஜி.பி இருவரும் வாக்கு மூலம் கொடுத்திருக்கிறார்கள்  இப்போது யார் குற்றவாளி ..
ஆனால் பாஜக அண்ணாமலை எடப்பாடி மீது தவறில்லை என்கிறார் இதிலிருந்து விசாரணை பாஜக மேலிடத்திலும் நடத்தபடவேண்டும் .. அப்பாவி மக்களை கொன்று அரசியல் நடத்துவது பாஜகவின் அடிப்படை கோட்பாடு .. கலவரம் அதைவைத்து அரசியல் என்பது தான் அவர்களின் பாலபாடம் ..
..
தாசில்தார்கள் இடைநீக்கத்தோடு முடிவதல்ல.. விசாரணையை விரிவாக்கி எடப்பாடி உட்பட அன்றைய அரசின் உயரதிகாரிகள் வரை நீதிமன்றத்தில் நிறுத்தபடவேண்டும் .. மக்கள் தான் கல்லெறிந்து கலவரம் செய்தார்கள் என செவிவழி செய்தியை கேட்டு  உரத்த குரலில் பேசி நடித்த ரஜினியும் குற்றவாளியாக்கபட வேண்டும் ..இவர்களெல்லாம் கலவரத்தில் அரசியல் செய்கிற அற்பர்கள் .. உயிர்கள் இவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல .. போராட்டக்காரர்களை தீவிரவாதிகாளாக பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் மனநோயாளிகள் ..   
பாஜகவின் ஒத்தூதிகள் .. அரைகுறை அரசியலோடு மதத்தையும் சந்தர்ப்ப சூழலையும் கையிலெடுத்து குளிர்காய நினைக்கும் கேடுகெட்டவர்கள் 
..
இந்த துப்பாக்கி சூட்டை நியாயபடுத்தும்  பாஜகவும் சந்தேகநிழலில் சேர்க்கபடவேண்டும் ஒன்றியத்தை ஆள்வோரின் வழிகாட்டல் இருந்ததா வழக்கம் போல் பின்நின்று இயக்கினார்களா என்பதை மக்கள் அறிய வேண்டியது அவசியம் .. மக்களை கேள்வி கேட்க யாருமில்லாத மிருங்களை போல சுட்டுக்கொல்லும் தைரியம் எங்கிருந்து வந்ததென மக்கள் முன் சொல்வது அரசின் கடமை அதை செய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது
..
விசாரணை நீதயாக நடந்து இவர்களெல்லாம் தண்டனை பெற வேண்டும் ..
தூத்துக்குடி துப்பாக்கி சூடு விடயத்தில் எடப்பாடி மீது விசாரணை நடத்துவது குறித்து மாண்பிமை முதலமைச்சர்
Chief Minister of Tamil Nadu  
M. K. Stalin 
முடிவெடுப்பார் 
என மானமிகு Kanimozhi Karunanidhi  அவர்கள் சொல்லியிருக்கிறார்

#ஒருத்தனையும்விடகூடாது..
..
ஆலஞ்சியார்
சேர,சோழ பாண்டிய நாயக்கர்,மன்னர்கள் முகமதியர்,காங்கிரஸ்காரர் இன்னும் எத்தனையோ பேர் ஆண்டிருக்கிறார்கள் 
ஆனால் அண்ணா போன்று சாதிவேண்டாம் மதம் வேண்டாம் சாஸ்திரம் வேண்டாம் என ஒரு பகுத்தறிவு அரசாங்கத்தை யார் அமைத்தார்கள் ..இது சாதாரண காரியமல்ல பிரமாண்ட சாதனையாகும் .. இது மக்களுக்கு புரிகிறதோ இல்லையோ எதிரிகளுக்கு புரிகிறது .. புத்தனாலும் முடியவில்லை என்னாலும் முடியவில்லை வாய் அளவில்தான் பேசினோம்.. அண்ணா ஒருவர் தான் சாதித்தார்  
பெரியார்..
(01.11.1970  பம்பாய்)..
..
ஆம் எதிரிகள் இப்போதும் கதறுகிறார்களே 
ஒன்றியத்தில் தங்களின் சொல்படி  ஆடும் "பொம்மை " ஆட்சி  இருந்தும் தமிழகத்தில் அடிமைகளை வைத்து ஆடிய ஆட்டம் முடிவுக்கு  வந்ததும் செய்வதறியாது உளறல்களும் உதறல்களும் அதிகம் சத்தத்தில் கேட்கிறது .. பெரியாரும் அண்ணாவும்,கலைஞரும் அந்தளவு செய்துவிட்டு போயிருக்கிறார்கள் ..
..
இன்னும் பத்ரிகளும் பாண்டேக்களும் ராகவன்களும் வரிசை கட்டுவார்கள் மாலன்களும் ஒத்தூதும் சமஸ்களும் வந்துக்கொண்டே தான் இருப்பார்கள் .. காரணம் அந்தளவு எழவே முடியாதளவு ஆப்பு  அடித்திருக்கிறார்கள் .. அமைதியாக இருப்பான்  திருநீறு பூசி தொழுது நிற்பான் ஆனால் தமிழகத்தில் அண்ணாவையோ பெரியாரையோ குறைகூற முயன்றாலே மண்டையிலேயே போடுவான் .. காரணம் இன்றைய வளர்ச்சியும் நிறைவும் மரியாதையும் உயர்வும் இவர்கள் உழைப்பில் வந்ததென அறிவான் .. வடக்கே பிழைக்கவே நாடுவிட வேண்டியிருக்கும் நிலையில் இங்கே நிறைகுறையெனினும் மானத்தோடும் மரியாதையோடும் வாழ முடிகிறதே .. பிற மாநிலங்களை ஒப்பிடும் போது மெச்ச தகுந்த நிலையில் இருக்கிறோமே .. கல்வி வேலைவாய்ப்பில் எவரும் தொடாத உயரத்தை நோக்கி பயணிக்கிறோமே இவையாவும்  திராவிடத் தலைவர்களால் வந்தது என அறிவான் அதனால் தான் இங்கே உயிர்போடு திராவிட இயக்கம் இருக்கிறது ..
..
தமிழகம் எப்போதும் பாசிசத்திற்கு தலைவணங்காது.  சில சோடைகள் வாழ்வாதாரத்திற்காக கூச்சல் போட்டாலும் அடித்தளம் சரியாக கட்டமைக்கபட்டதால் பாசிசத்தின், பகைவரின் எண்ணம் ஈடேறாது ..
..
ஆலஞ்சியார்

Tuesday, October 18, 2022

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை அறிக்கை ..
ஆறுமுகசாமி ஆணையம்  அறிக்கையில் சசிகலா அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜய்பாஸ்கர் துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் குற்றவாளிகளாக கருதபட்டு விசாரணை மேற்கொள்ள பரிந்துரை ..
..
திமுக ஏற்கனவே சொன்னதுதான் தொடர்ந்து கலைஞர் வலியுறுத்தியும் வந்தார் ஜெயலலிதா சிகிக்சை பெறும் புகைபடம் வேண்டும் என்ற போது "பெண் என்றும் பாராமல்" என கொதித்தவர்கள் இன்றைய விசாரணை கமிஷன் பரிந்துரையை முழுவதுமாக படிக்கவேண்டும் .. ஜெயலலிதா இறந்த தேதியில் கூட குளறுபடிகள் 
மருத்துவர்களின் பரிந்துரையை ஏற்று அறுவை சிகிச்சை செய்யபடவில்லை .. அப்பலோ எந்த நேரமும் டிஸ்சார்ஜ் செய்யபடலாமென பொய்யான தகவலை தந்திருக்கிறது .. இப்படி நிறைய முன்னுக்கு பின் முரண்.. உண்மைகள் மறைக்கபட்டிருக்கிறது..
..
சசிகலா யார் என இன்று கேட்கும் அதிமுக எடப்பாடி எல்லாம் எப்படி கைகட்டி நின்றார்கள் .. மிக கேவலமாக நடத்தபட்டார்கள்.. அங்கே சுயமரியாதை தெரியாத பணம் ஒன்றே குறிக்கோளாய் கொண்ட நேர்மையற்றவர்கள், திருடர்கள்,ஊழல் செய்வோர் சுரண்டர்காரர்கள் மட்டுமே உண்டு .. பொதுநலம் மக்கள்  வாழ்வாதாரத்திற்காக சிந்திக்க தெரியாத சினிமா பைத்தியங்கள் மட்டுமே இருந்ததால் தங்கள் தலைவி உடல்நலமில்லாமல்  மருத்துமனையில் இருந்த போது பாஜகவோடு கைகோர்த்து தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்தார்கள் நீட் தேர்வு உட்பட 
..
கொள்ளையடித்த கோடிகளை பாஜக காலில் கொட்டி தப்பித்தவர்கள், கேட்கும் தொகுதியை தாரைவார்த்து பாசிசம் காலூன்ற காரணமானார்கள் .. ஆட்சி மாற்றம் ஏற்படாமல் போயிருந்தால் இவர்கள் நல்லவர்களாக உருமாறியிருப்பார்கள்..  முறையான விசாரணைக்கு ஏதுவாக வழக்கு பதிவு செய்து துறை செயலாளர் உட்பட அனைவரையும் கைது செய்து விரைந்து விசாரிக்க வேண்டும்
..
சசிகலா அவ்வளவு சக்தி வாய்ந்தவராக அதிமுகவில் வலம் வந்தார் என சொல்வதற்கு ஆணையம் தேவையில்லை நமக்கே அறிந்தவிடயம் தான் ..அம்மாவிற்கு பிறகு நீங்கள் தான் சின்னம்மா என்று காலில் விழுந்த வரலாறு அடிமைகள் எல்லோருக்கும் உண்டு .. எய்ம்ஸ் மருத்துவக்குழுவை அனுமதிக்காத செயல் ஏன் இதுவரை பன்னீர் உட்பட வேகவேகமாக பொறுப்பேற்றுக்கொண்டவர்கள் சொல்லவில்லை 
..
ஜெயலலிதா எனும் கிரிமினல் எந்தளவிற்கு கொள்ளையில் ஊழலில் சம்பந்தபட்டிருக்கிறாரோ அதே அளவு 
சசிகலா மற்றும் இன்றைய அதிமுக தலைவர்களுக்கு பங்குண்டு அதிகாரத்தை பயன்படுத்தி மக்களை முட்டாளாக்கி இவர்கள் நடத்திய "கொள்ளை நாடகம் " ஒவ்வொன்றும் விசாரிக்கபடவேண்டும் ..
காலதாமதபடுத்தாமல் விரைவான விசாரணைக்கு உத்திரவிடவேண்டும் .. பொய்யான தகவலை தந்த அப்பலோ மருத்துமனை நிர்வாகம்
விசாரணை வளையத்தில் ஆணையம் பரிந்துரைவர்கள் மட்டுமல்ல பின்நின்று இயக்கியவர்கள்.. ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள், ஜெயலலிதா மரணமடைந்தால் யாருக்கு பயன் என்று விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்து 
"பலவீனமான" ஜெயலலிதாவின் மரணம் குறித்து உண்மையை கொண்டுவரும் பொறுப்பு திமுக அரசிற்கு இருக்கிறது 
அபலைப் பெண் ஜெயலலிதா
..
ஆலஞ்சியார்

Wednesday, October 12, 2022

ஜெயலலிதாவிற்கு உள்ள தைரியத்தில் 1% கூட ஸ்டாலினிடமில்லை ஜெயகுமார் ..
ஜெயலலிதா கண்டால் எல்லோரும் அஞ்சுவார்கள் என சிலர் .. ஜெயலலிதாவின் 
தைரியத்தை 18 ஆண்டு வழக்கை இழுத்தடித்ததிலும் தண்டனையை குறைத்துக்கொடுங்கள் என அழுததிலும் பார்த்தோம் ..
..
திமுக அடிமைகள் கூடாரமல்ல இங்கே பதவியை தோளில் போடும் துண்டாக நினைப்பவர்கள்.. கொள்கை,மானம் இவர்களுக்கு
கட்டும் வேட்டியை போன்றது.. சாலையோரத்தில் தடுப்பிற்கு அப்பால்  நின்று கொண்டு கையெடுத்து கும்பிட்டு கெஞ்சும் பழக்கம் ஜெயகுமாருக்கு இருக்கலாம் இங்கே பொதுக்குழுவில் கூட பேசும் தைரியமும் தவறை சுட்டிகாட்டி மெல்ல கொட்டும் பழக்கமும் உண்டு .. வானத்தை பார்த்து ஜெயலலிதா வரும் ஹெலிகாப்டரை கும்பிடும் கேனபயல்கள் எங்களுக்கு பாடமெடுக்க கூடாது ..
இங்கே தவறிழைக்கும்  பிள்ளையை  மென்மையாக கண்டிக்கும் தகப்பனைப்போல செயல்படுகிறார் தலைவர் ..அதற்காக தகப்பனுக்கு தைரியமில்லை என்றள்ள பொருள் .. சொல்லி திருத்தும் பாங்கு ..
..
அப்படியொன்றும் தவறிழைத்துவிடவில்லை வீட்டில் சாதாரணமாக அமர்ந்திருப்பதும் பேச்சுவாக்கில் வட்டாரமொழி பேசுவதும் விசமிகளால் தவறாக சித்தரிக்கபடுவதற்கே மனம் கலங்கி நிற்கிறாரெனில் தலைவர் எத்தனை அதிகம் மக்களை நேசிக்கிறார் என்பதை உணர வேண்டும்.. சிறிதாய் கூட ஆட்சிக்கு களங்கம் வரகூடாதென அத்தனை சிரத்தையோடு பணியாற்றுகிறார், அதெல்லாம் எவ்வளவு வேண்டுமானாலும் கொள்ளையடித்துக்கொள்ளுங்கள் எங்கள் பங்கை சரியாக தந்துவிட வேண்டுமென நிபந்தனை விதித்து
கொள்ளையடித்து சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதாவோடு ஒப்பிட கூடாது ..
அரசியலில் அண்டிபிழைத்து புறவழியே நுழைந்தவர்களோடு, ஜனநாயகத்தின் நம்பிக்கையாளர்களை மக்கள் தீர்மானித்து அதிகாரம் தரவேணேடும் எனும் தளபதியோடு ஒப்பிடகூடாது 
..
எடுத்தேன் கவிழ்தேன்  என்பதல்ல ஒவ்வொருவருக்கும் சுயமரியாதை உண்டு.. சில நிகழ்வுகளில் தவறென்றே அறியாமல் செய்துவிடுவதுண்டு .. தெரியாமல் செய்வது தவறு தெரிந்தே செய்தால் தப்பு .. இங்கே யாரும் தப்பானவர்கள் இல்லை.. தலைமைக்கு விசுவாசமானவர்கள் தவிர அடிமைகள் அல்ல..
தன் உறவுகளிடம் உரையாடுவதைப்போல தலைவர் கழகத்தினரோடு உரையாடுகிறார் 
தலைவன் தொண்டன் என்பதை தாண்டி குடும்ப உறவுகளைப்போல பிணைந்திருப்பவர்கள்.. உரிமையோடு கண்டிப்பதும் தண்டிப்பதும் 
வள்ளுவன் சொன்னதைப்போல 
"கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்"
குற்றங்கள் நிகழாமல் இருக்கக் கண்டிக்கும்போது கடுமை காட்டித், தண்டிக்கும் போது மென்மை காட்டுகிறவர்களின் செல்வாக்குதான் தொய்வின்றி நெடுநாள் நீடிக்கும்.. என
செயல்படுகிறார் .. 
..
இரத்தத்தில் உயிரில்லாத அடிமைகள் வயதை மீறி காலில் விழுந்து உலகம் பார்க்க கேலியானவர்கள் 
தலைவர் தளபதியை பற்றி பேச அருகதை இல்லை.. 
மானமொன்றே பெரிதெனக் கொண்டு வாழ்வதெங்கள் பழக்கம் .. மானங்கெட்ட 
கோழைகள் எங்களுக்கு பாடமெடுக்க கூடாது ..
..
குறை இல்லா செல்வம்
நிறைவான ஆளுமை 
அப்பழுக்கற்ற வெளிப்படைதன்மை 
எதையும் நேர்மையோடு நன்னெறியோடும்
அதிகாரமென்பது மக்கள் பணி செய்ய நல்வாய்ப்பு என செயல்படும் எங்கள் 
முதல்வர் 
Chief Minister of Tamil Nadu 
தகத்தாய சூரியன் எங்கள் தலைவர் தளபதி
M. K. Stalin 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் 
..
ஆலஞ்சியார்

Sunday, October 9, 2022

கடிதோச்சி மெல்ல எறிந்திருக்கிறார் தலைவர் .. M. K. Stalin ❤️👏
மிக அழகாக அமைச்சர்கள் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளின் செயல்களை கண்டித்தும் .. பழி என் மீதுதான் வரும் என்று இளங்கோ அடிகளின் துணைக்கழைத்து வள்ளுவனின் சொல்லை ஏற்று "கடிதோச்சி மெல்ல எறிக" மென்மையாக கண்டித்திருக்கிறார் 
தலைமையின் மாண்பு இது ..
..
இரண்டாம் நிலை தலைவர்கள் அமைச்சர்கள்  வெற்றிக்கு பிறகான அவர்களின் செயல்கள் நடவடிக்கைகள் பேச்சுகள் உடல்மொழிகள் சிலரை புண்படுத்தியிருக்கிறது .. எல்லோரும் இல்லையென்கினும் சிலரின் செயல்பாடுகளும் உடல்மொழியும் திமிரின் வெளிபாடாய் இருந்திருப்பதும் சிலரின் சொல் நகைச்சுவை என்றெண்ணி கேலியாகியிருப்பதும் நாம் அறிந்தது தான் .. சொல் முக்கியம் 
வெல்லும், கொல்லும் என தெளிவாக உணர்ந்து உரையாற்றி 
தலைவராய் உயர்ந்துநிற்கிறார் இது எச்சரிக்கை மணி .. 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் 
அவர்கள்
அன்பாகவும் சொல்ல தெரியும் தேவைபட்டால் சுழற்றவும் தெரியும் என்பதை பொட்டில் அடித்தாற்போல் பொதுக்குழுவில் பேசியிருக்கிறார் .. புரிந்தவர்கள் தெளிந்து உணர்ந்து செயல்பட்டால் நல்லது ..
..
கடிதோச்சி மெல்ல எறியும் குணம் கலைஞரிடத்தில் காணலாம்.. கட்சிகாரர்கள் ஏதேனும் தவறிழைத்துவிட்டு வந்தால் அதை அவர்கள் மனம் புண்படாதவாறு நறுக்கென்று கொட்டி சொல்லி திருத்துவார் .. அதைப்போல தளபதியாரும் மெல்ல கொட்டியிருக்கிறார் .. அமைச்சர்களின் ஆணவம் மூத்த நிர்வாகிகளின் அலட்சிய போக்கு கொள்கை தெளிவற்றவர்களின் 
சமீபகால நடவடிக்கைகள் .. தொண்டர்களை உதாசீனபடுத்தும் நெறிக்கெட்டவர்கள் என தளபதி லட்சியத்திற்கு இடையூறுயாய் நிற்போரை நல்லமொழியில் புத்தி சொல்லியிருக்கிறார் ..
..
இனியேனும் கவனமாய் இருங்கள் 
ஏனெனில் 
stalin is more dangerous than karunanidhi.. பகைவருக்கு மட்டுமல்ல.. கொள்கைபிழைகளுக்கும் அகம்பாவம் கொண்டோருக்கும் 
திமிரோடு திரிபவருக்கும் தொண்டனை கண்டுக்கொள்ளாத பொறுப்பாளர்களுக்கும் தான் 
இது எச்சரிக்கை மணி ..
..
ஆலஞ்சியார்
இவர்தான் பெரியார்,..,
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
"நீங்கள் என்னை என்னதான் சொன்னாலும், என்னதான் செய்தாலும்,
உங்கள் ஒருவர் மீதும் தனிப்பட்ட முறையில்
ஒரு துளி கோபமோ, வெறுப்போ கொள்ள மாட்டேன். 

வலிக்குமென்று அஞ்சிக்கொண்டு இருக்காமல், ஒரு மருத்துவர் எப்படி உங்களுக்கு ஊசி போடுகிறாரோ, தேவைப்பட்டால் எப்படி அறுவைச் சிகிச்சை செய்கிறாரோ, அப்படியே நானும் அதிக உரிமை எடுத்துக் கொண்டு, உங்களை எல்லாம் விமர்சிக்கிறேன் என்று எடுத்துக் கொள்ளுங்கள். 

உங்கள் ஒவ்வொருவரையும் நான் அளவு கடந்து நேசிக்கிறேன். தீங்கு விளைவிக்கும் எந்தக் கிருமியும் உங்களை அண்டி விடக் கூடாது என்பதற்காகத்தான், உங்களை எந்நேரமும் கவனித்து வருகிறேன்.

நாக்கில் தழும்பு ஏறும்வரை உங்களுக்காகப் பேசுவேன். கை சாய்ந்து கீழே தொங்கும் வரை உங்களுக்காக எழுதுவேன். கால்கள் துவளும் வரை, பட்டி தொட்டிகளில் எல்லாம் நடப்பேன்.

எனக்கு உண்மையென்று பட்டதை நான் நம்புவதைப் போல, நீங்களும் உங்களுக்கு உண்மையென்று பட்டதை நம்புங்கள். அந்த உண்மையைப் பாதுகாக்கப் போராடுங்கள். அது ஒன்று போதும்."
                        - தந்தை பெரியார்.
#Periyar #பெரியார் #dravidianmovememt
கனிமொழி கருணாநிதி ..
Kanimozhi Karunanidhi 
சில தினங்களாக பெரிதும் பேசபடுகிற பெயர் .. திமுக உட்கட்சி
தேர்தல் அதில் துணைச் செயலாளர் பதவியை தரவேண்டும் /தரப்படும்  என செய்தி வலம் வருகிறது ..  மானமிகு சுப்புலெட்சுமி ஜெகதீசன் Jegadeesan Subbulakshmi 
விலகியதை தொடர்ந்து யார் ..? என்ற கேள்வி எழுந்து விடைகாணும் நேரம் இது ..
கனிமொழி மிக தகுதி வாய்ந்தவர் 
மறு கருத்தே இல்லை ..
..
ஆனால் ..
தொடர்ந்து மகளிர்க்காக மட்டும் என்ற சொற்சொடரே சரியானதாக படவில்லை. மகளிருக்கான பிரிவில் தான் என்பது நெருடலை தருகிறது.. பொதுபிரிவில் ஏன் போட்டியிட கூடாதா ..
பொதுச் செயலாளர்  /பொருளாளர் பதவிகள் ஏன் ஆண்களுக்கு மட்டுமே சொந்தமா என்ன.. ஏன் பெண்களை முன்னுறுத்தபடுவதில்லை .. மாவட்டளவில் கூட இன்னமும் நாம் மிகவும் பின்தங்கிதானே இருக்கிறோம் .. அங்கங்கொன்றும் இங்கொன்றும் என்பது சரியா.. பெண்களின் உரிமைகளை, அவர்களுக்கு அதிகாரம் வழங்கவேண்டுமென தொடர்ந்து பேசிவரும்  திராவிடஇயக்கம்
அதிகாரத்தில் அமர்த்தி அழகுபார்க்கவேண்டாமா ..
..
திராவிடர் கழகத்தில் பொருளாளராக பிறைநுதல் செல்வி இருந்தார் அவர் மறைவிற்கு பிறகு அந்த பதவியை பெண்களுக்கு ஒதுக்கபடவில்லை ..
அதை தி.கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர். கலி.பூங்குன்றன் அவர்களிடத்தில் கேட்டோம் .. எனது ஆசான் வளைகுடாபெரியார் செல்லபெருமாள் அய்யா அவர்களும் அதை வெகுவாக  பாராட்டினார் அப்போது பதிலளித்த பூங்குன்றனார். .. சரியானவர் கிடைக்கும் போது என்றபோது தகுதியானவர்கள்  இல்லையென்கிறீர்களா நிறைய பேரை அடையாளம்காண முடிகிறதே என்ற போது மழுப்பலான பதிலை தந்தார் .. அப்போது திருக்குறள் மாநாட்டிற்கு வருகை தந்த சென்னை பல்கலைக்கழக அரபுத்துறை பேராசிரியர் திருக்குறளை அரபுமொழியாக்கம் செய்தவருமான டாக்டர். ஜாஹீர்உசேன்
DrJahir Husain Jamia Madras அவர்களும் உடனிருந்தார்.. 
..
விடயத்திற்கு வருவோம் 
பெண்களின் முன்னேற்றம் ,உரிமை சமநீதி சமவாய்ப்பு என பேசி வரும் நாம் பெண்களுக்கான அதிகார வரம்பை ஏன் சுருக்கி வைத்திருக்கிறோம் ..பெரியாரை பேசுகிற நாம், பெரியாரை அடியொற்றி கொள்கைகளை வகுத்து பயணிக்கிற நாம் பெண்கள் அதிகாரத்திற்கு வருவதையோ மிகப்பெரிய பொறுப்பில் ஆளுமை செலுத்துவதையோ விரும்புவதில்லை  என்பது கசப்பான உண்மை ..
..
கனிமொழி 
எல்லா தகுதியும் திறமையும் ஆளுமை பண்பும் அரவணைத்து செல்லும் ஆற்றலும் கொண்டவர் ..
துணைச் செயலாளராக அல்ல பொதுச் செயலாளராகவே  வர முழுமையான  தகுதியுடையவர் .. காலம் கனியும் போது வருவார் எல்லாம் சரி .. வாய்ப்புகளை உருவாக்கி பெண்களை பொதுவாழ்வில்  சிறந்து விளக்குவோரை
உரிய முக்கியத்துவம் வழங்கி மின்னும் வைரங்களாய் ஜொலித்திட வகை செய்வோம் 
மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என இலக்கியத்தில் புகழ்ந்தால் மட்டும் போதுமா .. இயக்கத்தை, அரசை, நிர்வகிக்கும் நம்மை ஆளும் சிறப்பை, ஆளுமையை பறைச்சாற்ற வாய்ப்பை, வழங்கிட வேண்டாமா.
நிச்சயம் காலம் கனியும் 
..
ஆலஞ்சியார்

Saturday, October 8, 2022

தலைவராகிறார் ..
எம் இனத்தின் காவலர் .. பகைவருக்கோ சிம்மசொப்பனம்,
பகையறிந்து படையோட்டம் நடத்தும் தளபதி.. 
அன்னையைப்போல அன்புகாட்டும் பேருள்ளம்,
மக்களின் மனம் கவர்ந்தவர்..
..
தெளிவான கொள்கை பிரகடனம் 
தெள்ளத் தெளிவாக இதுதான் திராவிட மாடலென சொல்லி அதில் உறுதியோடும், துணிவோடும் ஆட்சி நடத்தும் அழகு ..
அனைவரைக்குமான ஆட்சி.. 
பள்ளத்தில் கிடப்போரை படிகளில் ஏற்றிட கல்வி ஒன்றே வழிசெய்யுமென எல்லோருக்கும் ஏற்றதாழ்வற்று கல்வி கிடைத்திட 
மாநில கல்விக் கொள்கை வகுத்து சமதர்ம சமுதாயம், சமநீதியோடு, சமூகநீதியோடு, கிடைத்திட வேண்டி ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் தலைவர் .. நம் முதல்வர் 
இரண்டாம் முறையாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகிறார் ..
வாழ்த்துகள் ..
..
நல்லவர் கையில் தமிழ்நாடு என மக்கள் நம்பிக்கையோடும்,நிம்மதியோடும் இருக்கிறார்கள் .. கயவர்கள், காட்டிகொடுப்போர்,அடிமைத்தனத்தில் ஊறி,  நாட்டை அடகுவைத்த அயோக்கிய கும்பல், சாதிமத வெறிகளுக்கு ஒத்தூதி அமைதியை கெடுத்தாயினும் தங்களை காத்துக்கொள்ள எண்ணி தமிழ்நாட்டை சீரழித்த எடப்பாடி பன்னீர் எனும் இரட்டையர்களின் துரோகத்தை கண்டு இனியும் விட்டால் கூறுபோட்டுவிடுவார்கள் மதவெறி தலைதூக்கி மனிதம் செத்துவிடுமென அறிந்து ..இதோ மகராசன் வந்துவிட்டான் இனி வல்லூறுகளின் பிடியிலிருந்து காப்பான் என நம்பி அகமழிந்து 
தளபதியை அறியணை ஏற்றினார்கள் .. அவர்களின் நம்பிக்கை பொய்த்துவிடாமல் நல்ல விளைச்சலை தருகிறார் ..
தமிழகம் மிளிர்கிறது ..
..
சற்றென்று முளைத்தல்ல.. நேற்றைய மழையில் வந்த காளான் அல்ல.. செம்மை படுத்தி .. நல்ல விதையை நீண்டநாள் காத்து சரியான பருவத்தில் விதைத்திருக்கிறார்கள் மக்கள் ..  
எங்கும் மத விசமம் துவேசம், அடுத்தவரின் நம்பிக்கையை குலைப்பது, மாட்டிற்காக மனிதனை கொல்வது, பிற மத அடையாளங்களை அழிப்பது .. சாதிமதமறியாது அண்ணனாய் தம்பியாய் மாமன் மச்சானாய் வாழ்ந்தவனிடம் வர்ணம் கொண்டு பிரித்து அடித்து கொள் என ஏவிவிட்டு அந்த தீயில் குளிர்காய்ந்து தம் மக்களை உயரத்தில் ஏற  வழிசெய்யும் பாசிசத்தின் செயலை ஒடுக்க கிழக்கில் உதிக்கும் சூரியனாய் வந்தவர் .. அதிகாரத்தின் இருளை அகற்ற வந்த சூரியனாய்  எல்லோருக்கும் வெளிச்சம் தந்து நல்லாட்சி தருகிறார் 
..
இந்திய ஒன்றியத்தின் நம்பிக்கையாய், பாசிச சூழ்ச்சிக்கஞ்சாத நெஞ்சுரம் கொண்ட தலைவனை இந்திய தேசம் வியப்போடு பார்க்கிறது .. திராவிடம் மட்டுமே இந்திய ஒன்றியத்தின் வளர்ச்சிக்கு உதவும் என நம்புகிறார்கள் .. யாரை கொண்டு மதவெறியர்களுக்கு கடிவாளம் போட முடியும் .. இந்த தேசத்தின் பன்முகத்தன்மை காக்க திராவிட சித்தாந்தமே சரியானதென நடுநிலையாளர்களும் தேசபிமானிகளும் நாட்டின் மீது தீராத பற்றுக்கொண்டவர்களும் ஸ்டாலின் யாரை முன்னுறுத்துகிறார் என காத்திருக்கிறார்கள் .. பிரதமரை உருவாக்கும் சக்தியாக திகழ்கிறார் ..
.. 
திராவிட இயக்கத்தின் நான்காம் தலைமுறையின் தலைவர் 
மாண்பிமை #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் 
திமுகவின் தலைவர் 
நாட்டின் சிறந்த தலைவர்களில் ஒருவர் ..
நாட்டின் நம்பிக்கை.. 
தமிழர்களின் "வேள்"..
..
ஆலஞ்சியார்

Monday, October 3, 2022

சேரன் சோழன் பாண்டியன் 
எவனுமே மக்களுக்கு நல்லது செய்திடவில்லை .. அரச அதிகார மோகம், பெண் பித்து,மக்களின் உரிமைகளை பறித்தல் .. சகோதர யுத்தம், பெண்களை போதையாக்குவது அடிமைபடுத்துவது, ஆரிய சூழ்ச்சிக்கு அடிமையாவது  மக்களிடம் வரிப்பணத்தை வசூல் செய்து ஆரியனுக்கு தங்கள் புகழ்பாடிகளுக்கு "இனாமாக " வழங்குவது அங்கு வாழும் மக்களை அவர்களுக்கு அடிமைசாசனம் எழுதி தருவது 
யுத்தம் என்ற பெயரில் கொள்ளையடிப்பது இதுதான் இவர்களின் வரலாறு ..
..
கோவில்களை கட்டிய அளவிற்கு கல்வியறிவு தந்தானா ..
மக்களுக்கு மருத்துவ வசதிகளை கட்டி இனாமாக தந்தானா .. அந்தரபுரத்தில் "அழகில்" மயங்கி ஊர்ஊராக எழுதி தந்ததை தவிர வேறென்ன செய்தார்கள் .. விளைச்சலுக்காக சில நன்மைகள் அது கூட வரிவருவாய் பெருக வேண்டுமென்பதற்காகவே அன்றி மக்களுக்காக அல்லவே ..
மந்திரம் பூஜை யாகம் என ஆரியத்தின் பிடியில் அழிந்ததை தவிர இவர்கள் வரலாறு அப்படியொன்றும் மக்களுக்கான ஆட்சியாளன் என்றில்லை..
..
இமயம் வரை சென்றான் ..சரி எத்தனை உயிர்கள் போயின .. அங்கிருந்து கல் சுமந்து கோவில் கட்டியதை தவிர .. மக்கள் மடிந்ததும் குலம் அழிந்ததை தவிர..
தஞ்சை பெரிய கோவிலும், கங்கை கொண்ட சோழபுரமும், மீனாட்சி கோவில் கட்டிட கலையும் தமிழனின் தனித்திறமையை பறைச்சாற்றியும் .. உலக அதிசயமாக கொண்ட முடியாமல் போனது இவை மதத்தின் அடையாளமாக போனதால் தான்.. சீனப் பெருஞ்சுவரை போல தாஜ் மஹல் (காதல்)போல பொதுவானதாக இல்லை ..
தமிழ் மன்னர்கள் பிராமணீய மதத்தை வளர்த்த அளவிற்கு தமிழ்த் தொண்டெல்லாம் செய்யவில்லை என்பது தானே வரலாறு ..
..
ராஜராஜன் ஆட்சி மநுநீதியின் அடிப்படையிலானது.. குறைந்தபட்சம் நெடுஞ்செழியன் ஆட்சி போல் கூட இல்லை .. ஜனநாயகன் என தம்பட்டம் அடித்தாலும் மக்களுக்காகவோ மண்ணுக்காகவோ தமிழுக்காகவோ ஆட்சி நடத்தவில்லை .. அப்படியிருந்தால் "கல்கி" கும்பல் கொண்டாடியிருக்காது.. 
"பிராமண" மதத்தை நம்மீது திணக்கவும் அதை கொண்டாடவும் நடைமுறைபடுத்தவும் பயன்பட்டதே தவிர வேறொன்றுமில்லை 
..
ஆலஞ்சியார்

Thursday, September 29, 2022

அரசியல் செய்வது எங்களுக்கு பழகிப்போன செயல் .. நீங்கள் ஆரம்பபள்ளியில் எழுத்துகூட்டி படிக்க தொடங்குகிறீர் .. நாங்கள் பேரறிஞரிடம் பாடம் பயின்று, முத்தமிழறிஞரின் கைப்பிடித்து வளர்ந்தவர்கள் ..
..
ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தடை கூடவே விசிக அமைதி பேரணிக்கும் .. எச்.ராசா சொன்னது தான்  #StalinIsMoreDangerous 🔥..
இப்போது அல்ல முன்பும் இப்படிதான் பதறினார்கள் .. கருணாநிதியிடம் ஜாக்கிரதையாக இருங்கள் என்றார் பார்பனர்கள் ராஜதந்திரி என கொண்டாடிய ராஜகோபால் ..
ஆனால் அரசியல் தெளிவற்ற "சமுதாய" அலப்பறைகள் ஸ்டாலினை வாய்க்கு வந்தபடி விமர்சித்து அரிப்பை தீர்த்துக்கொண்டார்கள் .. உண்மையில் இவர்களிடம் (முஸ்லீம்லீக் தவிர்த்து எல்லா அமைப்புகளிடம்) சமுதாயம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் ,புகழ் போதையும் பணமும்,அதிகார ஆசையும் சமூகம் மிகப்பெரிய பின்னடைவை சந்திக்க காரணமானவர்கள் .. இஸ்லாமிய நெறிகளின் படியும் இல்லை கோட்பாடும் புரியவில்லை 
ஒற்றுமை எனும் கயிற்றை பலமாக பற்றி பிடித்துக்கொள்ளுங்கள் .. யாருக்கோ சொல்லபட்டது போல நகர்கிறார்கள் ..
..
மற்றொரு விடயம் CNN NDWS18 
ஊடகங்களின் சார்பில் சென்னை – டவுன் ஹாலில் நடைபெற்று வரும் கருத்தரங்கில் நேற்று 'திராவிட மாடல் என்றால் என்ன என்பதை மிக தெளிவாக விளக்கினார்  மாண்பிமை தமிழ்நாடு முதலமைச்சர் 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்

நூறு ஆண்டுகளுக்கு முன் அனைத்து சமூக மக்களும் கல்வி – வேலைவாய்ப்பில் பெற்றிருந்த நிலையையும், இன்று அடைந்துள்ள வளர்ச்சியையும் ஒப்பிட்டுப் பார்த்தால் திராவிட மாடல் சிந்தனையின் வெற்றி தெரியவரும். வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது எனும் ஒரு காலம் இருந்தது. ஆனால் இன்று வடக்கை விட தெற்கு பல்வேறு துறைகளில் முன்னேறி இருக்கிறது. இதுதான் திராவிட சிந்தனைகளின் வெற்றி!..

ஏற்றுமதியை கணக்கிடுவது வேறு மாடல்; மக்களின் ஏற்றத்துக்கு வித்திடுவது திராவிட மாடல்!
இறக்குமதியை கணக்கிடுவது வேறு மாடல்; இரக்கச் சிந்தனையோடு திட்டங்கள் தீட்டுவது திராவிட மாடல்!
ஒற்றை சிந்தனைக் கொண்டது வேறு மாடல்; பரந்த ஒருமைச் சிந்தனையைக் கொண்டது திராவிட மாடல்! என்றார் 
..
இது சிறப்பென்னவென்றால்
இந்தியஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், “தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு என்ன காரணம் என்பதை இங்கு பிறந்தவர் என்ற உணர்வுடனும், #மனசாட்சியோடும் கூறுங்கள்”, என நெறியாளர் கேள்வி எழுப்பினார்..
 தமிழ்நாடு 1960ஆம் ஆண்டுக்குப் பிறகு கல்வியறிவு – தொழில்சார் கொள்கை - ஆங்கில மொழியறிவு ஆகியவற்றில் மிகுந்த கவனம் செலுத்தி, தொழில்நுட்பத் துறை மற்றும் சேவைத்துறையில் மிகவும் முன்னேறியுள்ளது.

தமிழ்நாட்டில் ஏராளமான தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டிருக்கும் அதே நேரத்தில், விவசாயமும் பெருமளவு வளர்ச்சி பெற்றுள்ளது.
என்று தெரிவித்தார்..
..
எல்லா நேரமும் பொய் சொல்லிக்கொண்டிருக்க முடியாது என நிர்மலா அறிவார் .. ஏனெனில் அங்கே கேள்வியை எழுப்புகிறர் அனைத்து தரவுகளையும் கையில் வைத்திருக்கிறார் ஒட்டுமொத்தமாக மானம் கப்பலேறிவிடும் என்பதை அறிந்து 60 என துவங்குகிறார் .. 
..
 தளபதி ஸ்டாலின் ஆட்சி பொறுப்பிற்கு வந்ததற்கு பிறகு நிறைய இடையூறுகள், கவர்னர் முதல் தேடபடும் "நல்லவர்கள்" வரை எதையாவது உளறுவதும் அதை ஊடகங்கள் பெரிதாக ஊதி பெருக்குவதும் கடைசியில் ஊசியில் மாட்டிய பலூன் போல ஆவதும் வாடிக்கையாகிவிட்டது ..
பாஜக தலைவர் நட்டா அடிப்படை அறிவு கூட இல்லாதவராக இருக்கிறார்.. PFI தடை செய்தாகிவிட்டது இனி டாலர் மதிப்பு உயருமாம் .. முன்பெல்லாம் விபரம் தெரிந்த "முரளிமனோகர் ஜோஷி" அத்வானி வாஜ்பாய் போன்றவர்கள் பாஜகவில் இருந்தார்கள் அவர்கள் மதத்தை பிடித்துக்கொண்டு உயர எழும்ப நினைத்தார்கள் .. சில நேரமெங்கிலும் விபரமாக பேசினார்கள் இப்போது  எந்த கல்லூரியில் படித்தார் என தெரியாதவர் முதன்மை அமைச்சர் 
வரலாறு முழுக்க பொய்களால் கட்டமைக்கபடும் மாயை .. அதிகாரத்தை  கைப்பற்ற எந்தநிலைக்கும் போவோம் .. நீதிமன்றங்களும்  தனிஅதிகாரம் கொண்ட புலனாய்வு அமைப்புகளும், தேர்தல் ஆணையமும் போதும் நாடு எக்கேடு கெட்டால் என்ன என்கிற நிலை .. 
..
எல்லா அமைப்புகளுக்கும் தடை என்பதலிருந்து சட்டத்தின்/நீதிமன்றத்தின் மூலம் ஊர்வலம் நடத்தலாம் என திட்டமிட்ட பாசிச சூழ்ச்சியை "திருமா" எனும் காயை வைத்து மிக சரியாக தடுப்பாட்டம் ஆடியிருக்கிறார் ..சர்வதேச செஸ் ஆட்டத்தை நடத்திகாட்டியவர் .. மீண்டும் குறுக்குவழியில் யோசித்தால் "முன் எச்சரிக்கை" நடவடிக்கை வரும் ..
நாங்கள் இந்திய ஒன்றியத்திற்கு எப்படி கட்சி நடத்தவேண்டும் என சொல்லி தந்தவர்கள் .. கரை வேட்டி, தேர்தல் அறிக்கை, என இந்தியா அதுவரை அறிந்திராதவைகளை அறிமுகம் செய்தவர்கள் .. ஜனநாயகத்தோடு கட்சி நடத்தும் இந்தியாவில் ஒரே கட்சி உட்கட்சி தேர்தல் முதல் தலைவர் தேர்தல் வரை ஜனநாயகமாய் திகழ்பவர்கள் .. முன்பு தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் இந்திய ஒன்றியத்தில் தேர்தலை சந்திக்க தகுதியுடைய ஒரே கட்சி திமுக தான் என்றார் காரணம் நியமனங்களில் கட்சி நடத்துவது கூட தேர்தல் விதிமுறைகளுக்கு  எதிரானது ..
..
திமுக எதை செய்தாலும் அதில் பொருள் பொதிந்திருக்கும் அவசரகாரர்களுக்கு இது புரியாது..
..
ஆலஞ்சியார்

Wednesday, September 28, 2022

 சுய பரிசோதனை செய்துக்கொள்ளுங்கள் ..
முதலில் பெட்ரோல் குண்டு வீசியது பாஜகவினராக தான் இருக்குமென பெரும்பாலானோர் நம்பினர் .. அவர்கள் வேலைதான் இதற்கு நிறைய சம்பவங்களில் தங்கள் உடமைகளை எரித்து நாடகமாடியவர்கள் என்பதால் பொது சமூகம் பாஜகவின் செயலாக இருக்குமென நம்பியது .. வரும் செய்திகளும் கைதும் SDPI சார்ந்த  முஸ்லிம் இளைஞர்கள் இதில் சம்பந்தபட்டிருப்பது தெரிகிறது  சும்மாவே முஸ்லிம் மீது "தீவிர"மனப்பான்மை கொண்டிருப்பவர்கள் இப்போது இதோ பார் என கேள்வி எழுப்புகிறார்கள் 
..
திமுக வந்தாலே முஸ்லிம்கள் ஆயுதம் எடுப்பார்கள் குண்டு வீசுவார்கள், ஜெயா இருந்தபோது  ஒன்பது துவாரங்களையும் பொத்திக்கொண்டிருப்பார்களென பேச தொடங்கியிருக்கிறார்கள் .. திமுக யாருக்கும் அணுசரனையாக இல்லை என்பதும் சட்டத்தின் நிழலில் நின்று எல்லோருக்கும் பாதுகாப்பு அளிப்பதும் தவறிழைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதும் என தன் கடமையை செய்கிறது .. ஆனால் 
பாஜக வந்துவிடும் என பயமுறுத்தி எங்களை திமுகவிற்கு வாக்களிக்க வைத்தீர்களென சிலர் அறியாமையில் உளறுவதும் கேட்க முடிகிறது ..
..
இஸ்லாமிய இயக்கங்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொள்ளவேண்டும் .. பல பிரிவுகளாக இருப்பதும் எல்லாவற்றிக்கும் வன்முறை தீர்வாகும் என முட்டாள்தனமாக நம்புவதும் சங்கடத்தை தரும்..  பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும் ..யாரோடு சேர்கிறார்கள் எங்கே சுற்றுகிறார்கள் .. யாரோடு சகவாசம் என அறிந்து அவர்களை நல்வழிபடுத்த வேண்டும் .. 
இல்லையெனில் பிள்ளைகள் சிறையிலும் குடும்பம் நீதிமன்ற படிக்கட்டுகளில் நிற்கவேண்டி வரும் .. நான்கு பேரின் செயல் மொத்த இஸ்லாமியர்களுக்கும் கெட்ட பெயரை பெற்று தரும் ..
அரசியல் வேண்டாம் என்பதல்ல.. அரசியலை அறிந்து ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையோடு சரியான வழியில் மக்களின் ஆதரவோடு ஒற்றுமையாக அரசை எதிர்த்தோ ஆதரித்தோ அரசியல் செய்ய பழகுங்கள் .. அரசியல் தெளிவு .. நம் சமுதாயம் எதில் பின்தங்கியிருக்கிறது.. கல்வியின் அவசியம்  இது போன்ற சமுதாய முன்னேற்றத்திற்கான பணிகளில் கவனம் செலுத்தவேண்டும் ..
..
பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு மற்றும் பஸ்கண்ணாடி உடைத்த வழக்கு என ஆறு வழக்குகளில் இரண்டில் "இருவர்" எஸ்டிபிஐ கட்சி பொறுப்பில் உள்ளவர்கள் கைதாகியிருக்கிறார்கள் .. பெட்ரோல் குண்டுதானே அதிக சேதாரமில்லை என நினைக்கவேண்டாம் .. சேதாரம் என்னவோ ஒட்டுமொத்த சமுதாயத்திற்கு .. இரண்டு முட்டாள்களின் செயல் .. இது தொடர்ந்தால் சமுதாயமே "குற்றப் பரம்பரை" கூட்டில் நிறுத்தப்படும்
..
அரசியல் தேவை அது ஒன்றுபட்ட சமூகநலன் சார்ந்ததாக இருந்தல் வேண்டும் ..எடுத்தேன் கவிழ்த்தேன் என்றல்ல..  எப்போது எப்படி பகைவரை வீழ்த்துவதென அறிந்து யார் வந்தால் நன்மை பயக்குமென அறிந்து யார் வரகூடாதென தெளிவாக உணர்ந்து ஜனநாயக முறையில் " வாக்கு"  எனும் பெரும் ஆயுதம் கொண்டு வீழ்த்தவேண்டுமே தவிர .. வன்முறையில் அல்ல..
..
புரிந்தால் நல்லது 
..
ஆலஞ்சியார்

Sunday, September 25, 2022

தங்களுக்கு  உடனே நீதி கிடைக்கவேண்டும் ..நாங்கள் சொல்வதை உடனே கேட்கவேண்டும்,.. பார்த்தாயா இவர் மெல்ல பாசிசத்திற்கு செவி சாய்கிறார்.. ஆர்எஸ்எஸ் பிடியில் திமுக அரசு.. விடிந்தும் விடியவில்லை என்றெல்லாம் சமுதாய அலப்பறைகள் .. இஸ்லாத்தின் நவீன பாசறை தம்பிகள் முனகுவதும் முழங்குவதும் முழுவதும் அறிந்தாற்போல் சமூக வலைதளங்கள் தீர்ப்பெல்லாம் எழுதுகிறார்கள் .. 
..
திமுக துரோகம் செய்துவிட்டது திமுக நமக்கான பாதுகாப்பை தரவில்லை திமுக நம்பி பலனில்லை என "தீர்க்கதரிசிகள்" வாய்மொழி தீர்ப்பளிக்கிறார்கள் ..
உண்மையில் பரிதாபகரமாக இருக்கிறது விடுதலைக்கு முன்பு தீர்மானிக்கும் இடத்திலிருந்த சமூகம் இன்று இந்த நிலையில் இருப்பதற்கு யார் காரணமென இப்போதும் சிந்திக்க நேரமில்லாமல் பழி சொல்வதிலேயே பகுதி வாழ்வை இழக்கிறார்கள் ..
இப்போதும் சொல்கிறோம் திமுகவை நம்பவேண்டும் என யாரும் சொல்லவில்லை.. உங்களுக்கு சௌகரியமான இடத்தில் சேர்ந்து  பயணிக்கலாம் அதற்கு முன்பு இப்போதிருக்கும் 
நிலையை நினைவில் கொள்ளுதல் நலம்..
..
சமுதாயம் ஏன் பிரிந்து கிடக்கிறது 
யார் காரணம், எதனால் இந்த பின்னடைவு, என சிந்திப்பதே இல்லை .. எது நம்மை தடுக்கிறது 
குற்ப்பாக இளைஞர்களை வழிகெடுத்து அவர்களை மூளைச்சலவை செய்து வழிகேட்டில் நிறுத்துவது யார் ..
எதை எப்படி அணுகுவதென்று கூட தெரியாது போனதா .. சமுதாய ஒருங்கிணைப்பு ஏன் சாத்தியமாகாமல் போனது ..  மண்ணெண்ணெய் பாட்டில் வீசினால் வீரனென யார் சொன்னார்கள்..  உணர்வை வெளிபடுத்த ஆயுதம் தூக்க சொல்லி யார் கற்றுதந்தது ..
உண்மையில் பரிதாபகரமாக நிலையை எண்ணி வருத்தம் மேலிடுகிறது ..
..
பாசிசம் விரும்புவது அதுதான்.. உம்மை குற்றவாளி கூண்டில் நிறுத்தி  வளர வேண்டும்.. இதோ பார் முஸ்லிம்கள் தீவிரவாதிகள், ஜிதாதிகள், அவர்கள் இரத்தத்திலேயே ஊறிபோன விடயம் .. இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்கள் என பரப்புரை செய்ய இது போதும் .. பகைவர்கள் கையில் இஸ்மாயில் என பச்சைகுத்திக்கொண்டு காந்தி கொலையையும் அதன் தொடர் கலவரத்தையும்  மதத்தின் பேரில் எழுதிவைக்க நினைத்ததும்  பெரியார் கூட அப்போது காந்தியை கொன்றது பார்ப்பான் என பகிரங்கமாக வானொலியில் பேசியதும் .. உத்தமர்காந்தியை கொன்றது ஊதாரி பார்ப்பான்  என கலைஞர் முரசொலியில் எழுதியதும் நினைவிற்கு வருகிறது இது அவர்களின் வரலாறு பழிகளை சுமத்த இஸ்லாமியன் வேண்டும் அதைச் சொல்லி கலவரம் நடத்த சூத்திரன் வேண்டும் கலவரத்தின் குளிர்காய வேண்டும் இதுதானே காலங்காலமாய் நடக்கிறது .. இப்போதும் அதே கட்டத்தில் தான் ..
எச்சரிக்கை..
..
மிக சாதூர்யமாக செயல்படவேண்டிய காலகட்டம் யார் பகைவர் என்பதை உணர்ந்து 
என்னவெல்லாம் சூழ்ச்சிவலை பின்னுகிறார்கள் .. இந்நாட்டில் தற்போதைய அவஸ்தை என்ன.. நெடுங்காலம் தீட்டிய திட்டத்தை நம் கைகளை கொண்டே நிறைவேற்றிட நேரம் பார்த்து காத்திருக்கிறார்கள் .. தொப்புள்கொடி உறவுகளை கூர்தீட்டுகிறார்கள் .. ஒவ்வொரு பாஜகவினரும் வாய்திறந்தாலே மதம்,வாய்கூசும் சொல், இஸ்லாமிய  வெறுப்பு .. பிற மதத்தை இப்படி பேசிவிட்டு உயிரோடு இருக்கமுடியுமா என தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தல் 
இந்நாடு அறபாதையிலிருந்து விலகி வெகுகாலமாகிவிட்டது..
இப்போது வாழவே தகுதியற்றதாகி கொண்டிருக்கும் வேளையில் .. நல்வாய்ப்பாய் தென்னகத்தில் காலூன்ற முடியாதவாறு திராவிட சித்தாந்திகள் அறிவுக்கண்ணை திறந்து எதையும் யோசித்து செய் என அறிவூட்டியதால் இன்று கொஞ்சமேனும்  நிம்மதி பெருமூச்சு விடுகிறோம் ..அதையும் கெடுக்கதான் "பலி ஆடுகளை" கொண்டு பேயாட்டமாட நினைக்கிறார்கள் .. எரிகிற நெருப்பை அணைக்காவிட்டாலும் எண்ணெய்யாய் இல்லாமல் இருந்தால் போதும் 
..
தமிழ்நாட்டில் மிக பெரிய கலவரத்தை நடத்திட முயல்கிறார்கள் 
திமுக அரசு கவனத்தோடு செயல்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது .. நம்பிக்கையில்லாதோர் மாற்றுபாதையில் செல்லவும்..
ஜனநாயகத்தின் கண்கள் கூர்மையானது 
எல்லாவற்றையும் உள்வாங்கும் .. சரி செய்கிற நேரத்தில் சரி செய்யும் ஏனெனில் இங்கே வெகு மக்கள் விரும்புவது 
சமூக நல்லிணக்கம் .. சகோதரத்துவம், சமூகநீதி .. இவையாவும் தான் மனித சமூக மேன்மைக்கு வழிவகுக்கும் ..
தோக்கு தூக்க எம்மை பழக்கவில்லை 
அறிவு கொண்டு எதையும் வெல்  என்று தான் திராவிடம் சொல்லி தந்திருக்கிறது ..
நம் முதல்வர் 
நமக்கானவர் 
நன்மை நிறைந்தவர் ..இங்கே பாசிசத்திறேகும் பாசாங்கிற்கும் இடமில்லை கலவரம்  செய்வோர் மீது கருணைகாட்ட முடியாது  கடுமையான நடவடிக்கைதான் தேவை.. கசடுகளை களைவோம் ..  நல்லதை விதைப்போம்
..
இங்கே சாதி மத பிணி நீங்கி 
நல்லதொரு சமுதாயம் படைப்போம் ..
..
ஆலஞ்சியார்

Tuesday, September 20, 2022

நாராயணகுரு 
உயர்ஜாதியினருக்கான குளத்தில் குளித்துக்கொண்டிருந்தததை அறிந்து அவரை அடிக்க "சிலர்" வந்தனர் .. என்னை தொட்டு அடிப்பதால் தீட்டுபடாதா என கேட்டார் .. பொருள் விளங்க கொஞ்சம் நேரம் பிடித்தது அதே போல் இன்று ராசாவை திட்டுகிற 
கேவலமாக பேசுகிற சில மூத்திரம்குடிகளுக்கு புரிய சில காலம் தேவைபடும் ..
..
அடி தடி கலவரம் இவைகளை சொல்லி தமிழ் சமூகத்தை வளர்த்தெடுக்கவில்லை ..படி படி என எம்மை தலையில் கொட்டி புரிகிறமாதிரி பெரியாரும் பேரறிஞரும் பேரறிவாளனும் சொன்னதால் தான் இன்று கம்பெடுத்துவரும் காலி குடங்களை கண்டு கண் சிமிட்டி சிரிக்கிறோம் 
முதலில் மநுநீதியை படியுங்கள் ஏன் அப்படி எழுதினான் .. காலகாலமாக நம்மை சூத்திரனாக எப்படி அடிமைபடுத்தியிருந்தான் என விளங்கும். உடனே பெரியாரை தேடுவாய் அப்போது எப்படி அரணாய் நம்மை காத்து நின்றார் பார்பன கும்பலின் சதிராட்டத்திலிருந்து எப்படி மீட்டார் என புரியும் ..
..
படி என்றது திராவிடம் 
சிந்தி என்றது திராவிடம் 
எவன் சொன்னாலும் உன் அறிவேற்காததை ஏற்காதே என்றது திராவிடம் ..
எம் இனிய எதிரிகளே..
இடையில் வந்தவன் பணத்தாசையும் பதவி ஆசையும் காட்டி வழிகெடுக்கிறான் 
சிந்தி ..
நாளை நடுத்தெருவில் நிற்கும் போதும் உனக்கு திராவிடமே துணை நிற்கும் ..
..
ஆலஞ்சியார்

Saturday, September 17, 2022

எல்லோரும் பெண்களை 
"அழகு" பொருளாக்கி கவிதைபடித்து கொண்டிருந்தபோது 
இந்த "கிழவன் " மட்டும் 
உரிமை குறித்து பேசிக்கொண்டிருந்தான் 
"நீங்கள் ஏரோப்ளேன் ஓட்டவேண்டாமா .." 

எல்லோரும் 
பெண்களை சம்பளமில்லா வேலைக்காரியாக 
நினைத்த போது 
இந்த கிழவன் மட்டும் 
கரண்டியை பிடிங்கிக் கொண்டு 
புத்தகத்தை கொடு என்றான் 
..
இந்திய தர்மம் குற்றங்களால் ஆனது மநுநீதி உள்ளவரை ஒழுக்கம்  நியாயம் நேர்மை நீதி பெற முடியாது..  தமிழ் படித்தவனெல்லாம் சாமியாராய் போனான் என்றார் இந்து லாவில் 
பிராமணா சூத்திரா இரண்டுதான் உண்டு ..
நீங்கள் என்னை என்னதான் சொன்னாலும், என்னதான் செய்தாலும்,
உங்கள் ஒருவர் மீதும் தனிப்பட்ட முறையில்
ஒரு துளி கோபமோ, வெறுப்போ கொள்ள மாட்டேன். 
வலிக்குமென்று அஞ்சிக்கொண்டு இருக்காமல், ஒரு மருத்துவர் எப்படி உங்களுக்கு ஊசி போடுகிறாரோ, தேவைப்பட்டால் எப்படி அறுவைச் சிகிச்சை செய்கிறாரோ, அப்படியே நானும் அதிக உரிமை எடுத்துக் கொண்டு, உங்களை எல்லாம் விமர்சிக்கிறேன் என்று எடுத்துக் கொள்ளுங்கள். 
..
ராமசாமிக் கழுதை செத்துப் போய்விட்டது  ராமசாமியின் மனைவி நாகம்மாள் அவிசாரி என்றும் எழுதியிருந்தார்கள் அதற்கவர்
இராமசாமிப் பெரியார் சிரஞ்சீவியாய் இருக்க வேண்டும் என்று எழுதியிருந்ததைப் பார்த்து சந்தோஷப்பட்டிருந்தேனேயானால், இராமசாமிக் கழுதை செத்துப் போய்விட்டது என்பதற்கு நான் வருத்தப்பட வேண்டும். என்றார் .. பெரியார் எதைப்பற்றியும் கவலைபடாதவர் மனிதபற்றை தவிர வேறொன்றும் அறியார் எம் பெரியார்
..
பெரியார்..
இரண்டு விடயங்களை மிக கடுமையாக எதிர்த்தார் .. ஒன்று சாதிய அடுக்கு மற்றொன்று ஆணாதிக்கம்..  இரண்டுமே பெண்களுக்கெதிரானது .. சாதிய கொடுமை ஆண்களை மட்டுமல்ல பெண்களை மிக கடுமையாக கையாண்டது மதமெனும் போர்வையில் உயர்ஜாதி பெண்கள் கூட வரையறைக்குள் கொண்டுவந்து நிறுத்தியிருந்தது .. சாஸ்திரங்கள் என்ற பெயரில் பெண்களுக்கெதிரான செயல்களை நியாயபடுத்தியது .. ஜகத்குருக்கென்று தங்களை அடையாளபடுத்திக்கொண்டவர்கள் தெய்வத்தின் குரலாய் .. பெண்களின் மீதான அடக்குமுறையை சொன்னார்கள்.. வேலைக்கு போகும் பெண்களை விபச்சாரியென்று பேசினார்கள் மாதவிடாய் பெண்கள் வெளியே வருவதால் தான் லோகம் கஷ்டபடுகிறதென்று "மகாபெருசுகள்" உளறிவைத்தன.. பெண்களை போதை பொருளாகவே சமூகம் பார்த்தது .. ஆண்களை விட  எல்லாவற்றிலும் தகுதி குறைந்தவளென்றே "எல்லா மதமும்" சொன்னது ..
பெண்களை ஆண்களுக்காகவே படைக்க பட்டிருப்பதாக தெய்வ செய்திகளை கொண்டுவந்தவர்கள்..? கூட சொன்னார்கள் ..
சமைத்து போடுவதற்கும்  தங்களின் குல வாரிசை சுமைக்க.. களைத்துப்போய் வந்தால் கால் அமுக்கிவிட.. சம்பளமில்லாத வேலைக்காரியாக நினைத்தார்கள்..பெண்களை தங்களின் சுகத்திற்காக சந்தோசத்திற்காக படைக்கபட்டதாக நினைத்தார்கள்..
..
பெரியார் தான் பெண்களின் கல்வியின் அவசியத்தை சொன்னார் ..ஆண்குழந்தைகளை படிக்கவைக்காவிட்டாலும் பெண் குழந்தைகளை படிக்கவையுங்கள் அதற்கான வசதி உங்கள் ஊரில் இல்லையென்றால் வெளியூர் சென்று கூலி வேலை செய்தாவது படிக்கவையுங்கள் என்றார்.. பெண்களுக்கு ஆண்களுக்கு உள்ளதுபோல சகல உரிமையும் உள்ளதென்றார் 
பூர்வீக சொத்தில் பங்கு கொடுக்கவேண்டுமென்றார்... (இதே கருத்தை அண்ணல் அம்பேத்கர் சட்டமாக்க முற்பட்டு மசோதா தாக்கல் செய்தபோது
உயர்ஜாதியினர் கடுமையாக எதிர்த்து மசோதாவை தோற்கடித்தனர்.. பின்னர் கலைஞர்தான் இந்தியாவிற்கே வழிகாட்டி தமிழகத்தில் கொண்டுவந்து சட்டமியற்றினார் )..
பெண்களுக்கு சொத்து கொடுத்தால் குடும்ப உறவுகள் சீரழிந்துபோகுமென்று ஜகத்குருக்கள் சொன்னார்கள்..
..
பெண்கள் எல்லாதுறையிலும் வரவேண்டும் என்று ஆசைபட்டவர் ..ஆண்கள் செய்யும் அனைத்தும் பெண்களாலும் செய்யமுடியும் என்றார்.. ஆண்களை போல உடையணியுங்கள் 
பெண்கள் கையிலிருந்த கரண்டியை பிடிங்கிவிட்டு புத்தகத்தை கொடுங்கள் ..
மாற்றம் தானாய் வரும் .. எவ்வளவு தீர்க்கதரிசன பார்வை.. இன்றைக்கு  மருத்துவர் பொறியாளர் .. வழக்கறிஞர் அரசு ஊழியர்.. அரசு அதிகாரிகள்..இந்திய அரசுப்பணி.. உயரத்தில் பறக்கும் விமானி.. என்னைப்போன்ற சாமானியனின் வீட்டுப்பெண்கள் நீதிபதியாய் வர முடிந்தது இவையனைத்திற்கும் தொடக்கம் குறித்தவர் 
பெரியார்.. ஆம் பிள்ளையார் சுழியெல்லாம் போடாதீர்கள் மடமை..பெரியார் கைத்தடியை போடுங்கள் அதுவே அறிவுடைமை..
..
1938ல் பெண்களெல்லாம் ஒன்று கூடி "பெரியார்" என்றழைத்தார்கள் ..ஆம் பெண்களின் நலனுக்காகவே அதிகம் உழைத்தவர் .. பெண்களால் மட்டுமே சமூதாயத்தில் மாற்றத்தை புரட்சியை நடத்திக்காட்டமுடியும்.. என நம்பியவர் .. அவரின் முயற்சி எண்ணம் எல்லாம் 
திராவிட ஆட்சியால் நடந்தது ..
..
 இன்னமும் பெரியாரின் சிந்தனைகள் கருத்துகள் அவர் தந்த தெளிவான பாதையில் பகுத்தறிவு துணைக்கொண்டு மானுட சமுதாயம் மேம்பட சமதர்மசமுதாயம் அமைந்திட சமூகநீதியை நிலைநாட்டிட  தொடர்ந்து 
திராவிட மாடல் ஆட்சி செயல்படும் என உறுதி ஏற்போம் ..
வாழ்க! பெரியார் 
..
பெரியார்
The LEADER OF DRAVIDIAN SOIL
..
ஆலஞ்சியார்

Friday, September 16, 2022

ஜூன்3 ..
கொள்கைக்காரன் ..
பிடிவாதபோக்கு, சமசரமற்ற நோக்கு,
எவருக்கும் அஞ்சாத கொள்கை உணர்வு,
கட்சி,தலைவர் கொடி இவைதான் முக்கியம்
யாராக இருந்தாலும் சேர்ந்து பணியாற்றுவேன் என்ற உணர்வோடு  கட்டிதங்கமாய் மிளிரும் 
இயக்கத்தின் முன்னோடி 
கலைஞரின் 
#பயமறியாத_தம்பி
அன்பு உடன்பிறப்பு
பாப்பா தியாகராஜன் அவர்களுக்கு
பிறந்தநாள் வாழ்த்துகள்..
..
ஆலஞ்சியார்
ஆளுநர் மாற்றம் பாண்டேக்கள் குதூகலம் .. நடைமுறையில் வந்துபோகும் மாற்றங்களைக் கண்டு கொள்கையாளர்கள் மிரளுவதில்லை .. ஒரு முதியவர் போய் மற்றொருவர் அவ்வளவுதான்.. துணைநிலை ஆளுநர் பதவியல்ல இங்கே தமிழ்நாடு யூனியன் பிரதேசமும் அல்ல.. ஆட்டம் ஆரம்பம் என சிலர் தங்களுக்குள் சிரித்துகொள்கிறார்கள் திராவிடத்தின் நிஜஆட்டத்தை கண்டால் மிரண்டுபோவீர்கள்.   
ஆம் அவர்களுக்கே தெரியும்.. மிசாவைகாட்டி மிரட்டினால் தமிழ்நாட்டுக்கு வர விசா வாங்கவேண்டிவரும் என்றவர்கள் 
ஆட நினைத்தால் பிராமணர்கள் வாழ தகுதி இல்லாத தமிழ்நாடு என அவர்களே சொல்ல நேரிடுமென அறிவார்கள் இப்போதே திமுக ஆட்சிக்கு வந்தாலே பிராமணாள் எதிர்ப்பு வலுப்பதாக அவர்களே கலவரபடுவதும் தேவையில்லாத அச்சபடுவதும் அறிந்ததுதான் அதனால் தான் மனசாந்திக்காக ஆட்டம் ஆரம்பம் என திருப்தி அடைந்துக்கொள்கிறார்கள் .. எதிர்கட்சியாக இருந்த போதே ஆளுநரை ஆய்விற்கு சென்றதை அடக்கியவர்கள் பிரதமரே சுவரை உடைத்து வந்த சுவடே தெரியமால் ஓடியதும் வரலாறு பேசியது 
..
ஆட்டுக்கு தாடி எதற்கென்பதே எமது கொள்கை ஆனாலும் ஆளுநர் பதவி இருக்கிறவரை அவருக்கான மரியாதை உண்டு அவர் ரப்பர்ஸ்டாம்பை போல என்பதை அரசியலமைப்பு நமக்கு உறுதியளித்திருக்கிறது மக்களால் தேர்ந்தெடுக்க அரசிற்கே அதிகாரம்
ஏற்கனவே திமுக ஆட்சியில் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற பாத்திமாபீவி ராஜீவ் கொலைவழக்கில் நளினிக்கு தூக்குதண்டனையை ரத்துசெய்து ஆயுள்தண்டனையாக மாற்றியதை ஏற்காதபோது உயர்நீதிமன்றம் கேபினெட் முடிவை ஏற்பதுமட்டுமே ஆளுநரின் அதிகாரவரம்பு என சுட்டிகாட்டி கடைசியில் கையெழுத்திட்டது அறிவோம் .. 
மக்களின் நலனுக்காக செயல்படும் அரசை மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட அரசை புறவழியில் கலைக்க முடியாதென்ற பொம்மை வழக்கின் தீர்ப்பையும் மாநில ஆளுநர் குறிப்பிட்ட வரம்பிற்குள் நின்று செயல்பட மட்டுமே முடியும் என்றும், அரசியலமைப்பு தெளிவாக விளக்குகிறது ..
..
வருவதற்கு முன்பே தமிழ்நாட்டில் அவரை கிழிக்க தொடங்கிவிட்டார்கள் ..
இரண்டு அரசு பங்களாவை காலி செய்ய மறுத்து, அதற்காக இருவரை மிரட்டி, அந்த இருவர் கொடுத்த புகாரின் பேரில்
கடந்த மாதம் வரை விசாரணை கமிட்டி சம்மன் அனுப்பியும், நேர்நிற்காதவர்.. இங்கே எதையும் பிரித்து மேய்ந்துவிடுவார்கள் .. 
..
தமிழ்நாடு "தனி" மாநிலம் இங்கே மிரட்டல் எடுபடாது பகுத்தறிவு பேசும் .. அதிலும் இங்கே ஆள்கிறவர் #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் 
எதற்கும் அஞ்சாத படைத்தலைவன்
நேர்மை நன்னெறி அரசியல் இந்தியாவிற்கே எடுத்துகாட்டான செயல்பாடுகள் இந்திய ஒன்றியத்தின் பிற மாநிலங்கள் கண்டு வியந்து "இங்கிவனை யாம் பெறாமல் போனோமே" என ஏக்கம் கொள்கிறார்கள் .. ஒன்றிய அரசிற்கே வழிகாட்டி மரமாய் உயர்ந்து நிற்கிறார் வெளிப்படையான  அரசு மதவெறியர்கள் சாதிபித்தர்கள் கலங்குகிறார்கள்  இங்கே மதவெறியை தூண்டினாலோ பிறமதத்தை இழிவுபடுத்தினாலோ கட்டம் கட்டபடுவார்கள் என  அறிந்து அடக்கிவாசிக்கிறார்கள் 
உண்மையில் நல்லதொரு மக்களாட்சி நடைபெறுகிறது இடையூறு செய்ய நினைத்தால் இங்கே வேறுமாதிரியாகும் என்பதை நாக்பூர் அறியும் ..
..