சேர,சோழ பாண்டிய நாயக்கர்,மன்னர்கள் முகமதியர்,காங்கிரஸ்காரர் இன்னும் எத்தனையோ பேர் ஆண்டிருக்கிறார்கள்
ஆனால் அண்ணா போன்று சாதிவேண்டாம் மதம் வேண்டாம் சாஸ்திரம் வேண்டாம் என ஒரு பகுத்தறிவு அரசாங்கத்தை யார் அமைத்தார்கள் ..இது சாதாரண காரியமல்ல பிரமாண்ட சாதனையாகும் .. இது மக்களுக்கு புரிகிறதோ இல்லையோ எதிரிகளுக்கு புரிகிறது .. புத்தனாலும் முடியவில்லை என்னாலும் முடியவில்லை வாய் அளவில்தான் பேசினோம்.. அண்ணா ஒருவர் தான் சாதித்தார்
பெரியார்..
(01.11.1970 பம்பாய்)..
..
ஆம் எதிரிகள் இப்போதும் கதறுகிறார்களே
ஒன்றியத்தில் தங்களின் சொல்படி ஆடும் "பொம்மை " ஆட்சி இருந்தும் தமிழகத்தில் அடிமைகளை வைத்து ஆடிய ஆட்டம் முடிவுக்கு வந்ததும் செய்வதறியாது உளறல்களும் உதறல்களும் அதிகம் சத்தத்தில் கேட்கிறது .. பெரியாரும் அண்ணாவும்,கலைஞரும் அந்தளவு செய்துவிட்டு போயிருக்கிறார்கள் ..
..
இன்னும் பத்ரிகளும் பாண்டேக்களும் ராகவன்களும் வரிசை கட்டுவார்கள் மாலன்களும் ஒத்தூதும் சமஸ்களும் வந்துக்கொண்டே தான் இருப்பார்கள் .. காரணம் அந்தளவு எழவே முடியாதளவு ஆப்பு அடித்திருக்கிறார்கள் .. அமைதியாக இருப்பான் திருநீறு பூசி தொழுது நிற்பான் ஆனால் தமிழகத்தில் அண்ணாவையோ பெரியாரையோ குறைகூற முயன்றாலே மண்டையிலேயே போடுவான் .. காரணம் இன்றைய வளர்ச்சியும் நிறைவும் மரியாதையும் உயர்வும் இவர்கள் உழைப்பில் வந்ததென அறிவான் .. வடக்கே பிழைக்கவே நாடுவிட வேண்டியிருக்கும் நிலையில் இங்கே நிறைகுறையெனினும் மானத்தோடும் மரியாதையோடும் வாழ முடிகிறதே .. பிற மாநிலங்களை ஒப்பிடும் போது மெச்ச தகுந்த நிலையில் இருக்கிறோமே .. கல்வி வேலைவாய்ப்பில் எவரும் தொடாத உயரத்தை நோக்கி பயணிக்கிறோமே இவையாவும் திராவிடத் தலைவர்களால் வந்தது என அறிவான் அதனால் தான் இங்கே உயிர்போடு திராவிட இயக்கம் இருக்கிறது ..
..
தமிழகம் எப்போதும் பாசிசத்திற்கு தலைவணங்காது. சில சோடைகள் வாழ்வாதாரத்திற்காக கூச்சல் போட்டாலும் அடித்தளம் சரியாக கட்டமைக்கபட்டதால் பாசிசத்தின், பகைவரின் எண்ணம் ஈடேறாது ..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment