Wednesday, November 16, 2022

எழுவரும் விடுதலையானது மகிழ்ச்சியளிக்கிறது.. உத்தரவு நகல் கிடைத்த உடனேயே அவர்களை விடுதலை செய்த 
காருண்யர்  #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்  அவர்களுக்கு நன்றி ..
சொன்னதை செய்யும் தந்தையின் அதே குணம் .. அதோடு நீண்டநாள் சிறைவாசம் அனுபவிக்கும் இஸ்லாமியர்கள் உள்ளிட்டோரையும் விடுதலை செய்ய முனைப்பு காட்ட வேண்டும் என்ற கோரிக்கையையும்  வைக்கிறோம்
..
நண்பர் பிலால் அலியார் Bilal Aliyar 
 மிக தெளிவாக பதிவிட்டிருக்கிறார் அதில் இஸ்லாமிய அமைப்புகள் ஒருங்கிணைந்து சட்ட போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்கிறார் அதில் உடன்படுகிறேன் ..  தெருக்களில் இறங்கி போராடுவதால் அமைப்பின் பலத்தை சமுதாய மக்களிடையே உறுதிபடுத்தலாமே தவிர வேறெந்த பயனுமில்லை .. அற்புதம்மாளின் நீண்ட சட்ட போராட்டம்  ஒருகட்டத்தில் தானாகவே நீதிமன்றமே தனிகவனம் செலுத்தியதும் மனிதநேய அமைப்புகளின் தன்னாதரவும் பல்வேறு கட்சி/ இயக்கங்களின் ஆதரவு தமிழ்நாடு அரசின் அக்கறை மற்றும் உறுதி, விடாமுயற்சியும் விடுதலையை சாத்தியமாக்கியது
..
இஸ்லாமிய அமைப்புகளின்
விவரமின்னையும், தலைவர்களாக 
தன்னை முன்னிலைபடுத்தி கொள்பவர்களின் கேடுகெட்ட பதவி ஆசையும் பல துகள்களாக சிதறி நிற்கும் சமுதாய இளந்தளிர்கள் .. சரியான வழிகாட்டல் இல்லாமல்  "எடுப்பார்கைப்பிள்ளை " போல வார்த்தை ஜாலத்தில் மயங்கி நிற்கிறார்கள் ..
..
கம்பீரமான தலைமையில் துவங்கி இயக்கம் ஆர்எஸ்எஸ் தோன்றிய அதே காலகட்டத்தில் தோன்றிய இயக்கம் வலுமையான முடிவுகளை இந்திய ஒன்றியத்தின் எடுத்தவர்கள் இன்று ஒரு "குற்றபரம்பரை" போல நடத்தபடும் அவலம் .. நன்மை பயக்கும் நல்லவைகளை விதைக்க தவறி 
மதம் தலைக்கேறியதும் தனித்தனி பிரிவாய் சிதறுண்ட தேங்காயைப்போல தேவையுள்ளவன் சட்னி அரைக்கும் அவலநிலை .. இன்னமும் நானே எல்லாம் அறிந்தவன் என சித்தம் கலங்கியவன் போல் பேசி திரிவதும் தான் சமுதாயத்தின் பின்னோக்கிற்கு காரணிகளாகும் 
..
இன்றைய தேதியில் முஸ்லிம்கள் வெகுமக்கள் ஆதரிக்கும் அதே வேளை தங்களுக்கு பாதுகாப்பானது எது என அறிந்து அந்த கட்சி/இயக்கத்தில்  பயணபட்டால் தான் எதிர்கால சந்ததியர்களுக்கு கொஞ்சமேனும் நன்மை புரிந்தவராவீர்கள் ..  
வீண்வம்பு பேசியும் வீராப்போடு திரிந்தால் சமுதாயம் இன்னும் பிளவுபடும் 
..
நீண்டநாள் சிறைவாசிகள் விடயத்தில் ஒருங்கிணைந்து சட்ட போராட்டத்தை முன்னெடுப்பு காலத்தின் அவசியம் .. பல்வேறு அமைப்புகளுக்கு பல நேரங்களில் இஸ்ஸாமிய சமுதாயம் பெரும் பொருளுதவியை செய்திருக்கிறது அதனால் பலனடைந்ததென்னவோ அமைப்புகளும் தலைவர்களும் தான் இனியாவது இந்த ஒரு விடயத்திலாவது சேர்ந்துநின்று சாதிக்க முயலுங்கள் ..
அனுசரணையான அரசு இருப்பதும் நல்ல சட்ட ஆலோசனை வழங்க திராவிட இயக்கத்தின் சட்ட வல்லுநர்களை தொடர்புகொண்டு சரியான நகர்வை செய்தால் நிச்சயம் விடுதலை சாத்தியப்படும் 
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment