Tuesday, October 18, 2022

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை அறிக்கை ..
ஆறுமுகசாமி ஆணையம்  அறிக்கையில் சசிகலா அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜய்பாஸ்கர் துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் குற்றவாளிகளாக கருதபட்டு விசாரணை மேற்கொள்ள பரிந்துரை ..
..
திமுக ஏற்கனவே சொன்னதுதான் தொடர்ந்து கலைஞர் வலியுறுத்தியும் வந்தார் ஜெயலலிதா சிகிக்சை பெறும் புகைபடம் வேண்டும் என்ற போது "பெண் என்றும் பாராமல்" என கொதித்தவர்கள் இன்றைய விசாரணை கமிஷன் பரிந்துரையை முழுவதுமாக படிக்கவேண்டும் .. ஜெயலலிதா இறந்த தேதியில் கூட குளறுபடிகள் 
மருத்துவர்களின் பரிந்துரையை ஏற்று அறுவை சிகிச்சை செய்யபடவில்லை .. அப்பலோ எந்த நேரமும் டிஸ்சார்ஜ் செய்யபடலாமென பொய்யான தகவலை தந்திருக்கிறது .. இப்படி நிறைய முன்னுக்கு பின் முரண்.. உண்மைகள் மறைக்கபட்டிருக்கிறது..
..
சசிகலா யார் என இன்று கேட்கும் அதிமுக எடப்பாடி எல்லாம் எப்படி கைகட்டி நின்றார்கள் .. மிக கேவலமாக நடத்தபட்டார்கள்.. அங்கே சுயமரியாதை தெரியாத பணம் ஒன்றே குறிக்கோளாய் கொண்ட நேர்மையற்றவர்கள், திருடர்கள்,ஊழல் செய்வோர் சுரண்டர்காரர்கள் மட்டுமே உண்டு .. பொதுநலம் மக்கள்  வாழ்வாதாரத்திற்காக சிந்திக்க தெரியாத சினிமா பைத்தியங்கள் மட்டுமே இருந்ததால் தங்கள் தலைவி உடல்நலமில்லாமல்  மருத்துமனையில் இருந்த போது பாஜகவோடு கைகோர்த்து தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்தார்கள் நீட் தேர்வு உட்பட 
..
கொள்ளையடித்த கோடிகளை பாஜக காலில் கொட்டி தப்பித்தவர்கள், கேட்கும் தொகுதியை தாரைவார்த்து பாசிசம் காலூன்ற காரணமானார்கள் .. ஆட்சி மாற்றம் ஏற்படாமல் போயிருந்தால் இவர்கள் நல்லவர்களாக உருமாறியிருப்பார்கள்..  முறையான விசாரணைக்கு ஏதுவாக வழக்கு பதிவு செய்து துறை செயலாளர் உட்பட அனைவரையும் கைது செய்து விரைந்து விசாரிக்க வேண்டும்
..
சசிகலா அவ்வளவு சக்தி வாய்ந்தவராக அதிமுகவில் வலம் வந்தார் என சொல்வதற்கு ஆணையம் தேவையில்லை நமக்கே அறிந்தவிடயம் தான் ..அம்மாவிற்கு பிறகு நீங்கள் தான் சின்னம்மா என்று காலில் விழுந்த வரலாறு அடிமைகள் எல்லோருக்கும் உண்டு .. எய்ம்ஸ் மருத்துவக்குழுவை அனுமதிக்காத செயல் ஏன் இதுவரை பன்னீர் உட்பட வேகவேகமாக பொறுப்பேற்றுக்கொண்டவர்கள் சொல்லவில்லை 
..
ஜெயலலிதா எனும் கிரிமினல் எந்தளவிற்கு கொள்ளையில் ஊழலில் சம்பந்தபட்டிருக்கிறாரோ அதே அளவு 
சசிகலா மற்றும் இன்றைய அதிமுக தலைவர்களுக்கு பங்குண்டு அதிகாரத்தை பயன்படுத்தி மக்களை முட்டாளாக்கி இவர்கள் நடத்திய "கொள்ளை நாடகம் " ஒவ்வொன்றும் விசாரிக்கபடவேண்டும் ..
காலதாமதபடுத்தாமல் விரைவான விசாரணைக்கு உத்திரவிடவேண்டும் .. பொய்யான தகவலை தந்த அப்பலோ மருத்துமனை நிர்வாகம்
விசாரணை வளையத்தில் ஆணையம் பரிந்துரைவர்கள் மட்டுமல்ல பின்நின்று இயக்கியவர்கள்.. ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள், ஜெயலலிதா மரணமடைந்தால் யாருக்கு பயன் என்று விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்து 
"பலவீனமான" ஜெயலலிதாவின் மரணம் குறித்து உண்மையை கொண்டுவரும் பொறுப்பு திமுக அரசிற்கு இருக்கிறது 
அபலைப் பெண் ஜெயலலிதா
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment