Thursday, December 22, 2022

காவி..
இந்த நிறத்திற்கென்று ஒருமரியாதை இருந்தது ஒருகாலம் .. தன்னை முழுமையாக எளிமைபடுத்தி லௌகீக ( உலகப்பற்று) வாழ்க்கை முறையிலிருந்து மீண்டு, ஞானம் தேடி கரைந்து, பசி கோவம்,அடக்கி மெய்ஞனை தேடும் தவம் அது .. இறைஞ்சி வாழும், தேவையறியாது வாழ்வில் போக்கில் அழுக்கோடு திரிந்தாலும் உள அழுக்ககற்றி உடல் மெலிந்து 
உலகாசபாசங்களை விட்டொழிந்து கருணையாய் நிற்பது 
..
காவிகள் சிலரை கண்டாலே புன்முறுவலோடும் தன்னை தாழ்த்தியும் வரவேற்று மகிழ்ந்த காலமுண்டு.. ஆனால் உழைப்பதற்கஞ்சி, குடும்பபாரத்தை விட்டொழித்து 
காடு மலையென கடந்தேறி பொய்ஞானம் பேசி கிடைத்தவரை லாபம் என "வாழ" தொடங்கியதில் தான் "காவி" எனும் சொல்  செருக்காகிப்போனது ..
..
காவி 
மதத்தின் அடையாளமாய் மாறி அது அரசியலாய் போனதால் 
லாபம் கொழிக்க நல்ல வாய்ப்பென சிலர் காவிக்குள் அடைக்கலமாகினர்.. அது அரசின் அங்கீகாரமானதும்  வாழவே தகுதியற்றதுகளின் பாதையாய் ஆனது காவி .. கொள்ளையடி, சிலைகடத்து, கொலை கூட செய் ஆனால் காவியின் நிழலில் நில் .. நீதியே தலைவணங்கும் 
..
காவி அணிந்து கலவரம் செய் ..
பிற மதத்தவரை மாட்டின் பெயரைச் சொல்லி கொல், கர்ப்பிணியை வன்புணர்வு கொள், பிறமதத்தின் நம்பிக்கையை தலையிட்டு கலாச்சாரம் சீரழிவதாக சொல்,  காக்க காவி உண்டு .. 
..
மதம் வழிபாடும் வணக்கத்திற்கே தவிர 
அடுத்தவரை இம்சிக்க அல்ல..
நீ நம்பும் கோட்பாட்டில் உறுதியாய் இரு .. அது அடுத்தவர் நம்பிக்கையில் தலையிடுவதல்ல
இணக்கமாய் வாழ தான் எல்லா சமயங்களும் சொல்கின்றன.. சிலர் சுய உயர,தாங்கள் தான் மேல் என அடுக்குகளை அமைத்து அதை திரும்ப திரும்ப சொல்லி மூளையை மழுங்கடித்ததால் .. தான் தாழ்வானவன் எனச் சொல்லும் போது கூட தன்னை விட தாழே ஒருத்தன் இருக்கிறானென மீசை முறுக்கி நிற்கும் அவலம் .. 
காவிகள் மிக அழகாய் அடுக்கிய பொய் பிம்பங்கள் அறிவைக்கொண்டு வெல்லும் நாள் வெகுவிரைவில் வரும்.. அதற்கு கல்வி ஒன்றே தெளிவு தரும் ..
..
காவி மட்டுமல்ல .. மதத்தின் நிறங்கள் ஆபத்தானவை .. அறிவை மழுங்க செய்யும் ஆயுதம், 
மெல்ல கொல்லும்,மனதை மலடாக்கும், கடிவாளமிடும்,  அதை விட்டொழி..
..
ஞானமெனும் வெளிச்சத்தில் உலகை காண் .. அது வாழ்வின் யதார்த்ததை சொல்லும்.. எளிமையையும், பிறருக்கு உதவும் மனமும், வறியவரை கண்டால் வாடுதலும்,.உயர்வில் செருக்கின்றி வாழுதலும், நன்னெறி,நற்செயலும் நாவினிக்க மொழிதலும் நன்னடக்தையும் வாழ்வின் அறம் ..
எத்தனை நாள் வாழ்வாய்..
வாழும் வரை மதம் தலைக்கேறாமல் வாழ்வோம் இனிதாய் ..
..
நிறங்கள் அழகு ..
அது .. 
அடுத்தவரை காயபடுத்தாதவரை..
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment