Thursday, November 17, 2022

பெண் ஆளுமைகள்.
எதிர்கருத்தாக்கங்களை கொண்டவர்களை கவனித்துக்கொண்டிருக்கிறேன்.. நிறைய பெண்கள் குறிப்பிட வரையறைக்குள் தங்களின் பணி அல்லது கடமை முடிந்துவிட்டதாக நினைக்கிறார்கள்.. அவர்களுக்கென்று நிறைய தடைகளை அவர்கள் குடும்ப மற்ற சமூக பின்னணியே தருவதை பார்க்கலாம்..
..
அரசியலில் பெண்கள் மிக சொற்ப எண்ணிக்கையில்தான் பங்கேற்க முடிகிறது அதிலும் சில கட்டாயத்தின் பெயரில் இடஒதுக்கீடு போன்ற நிர்பந்தங்களால் சிலர் மீது திணிக்கப்படுகிறது..
சுயமாக எழ வாய்ப்புக்கள் மறுக்கபடுவதோடு மட்டுமல்லாமல் தடையிடவும் செய்கிறது இந்த சமூகம்..
என் உறவினர் கூட தன் துணைவியாரை உள்ளாட்சியில் நிர்வாகத்தில் சுயமாக பணி செய்ய விடவே இல்லை.. பெண்களின் சுயசிந்தனைகள் பங்களிப்புகள் திறமைகள் மறுக்கபட்டு/மறைக்கபடுகின்றன என்பதுதான் உண்மை.. கடைசிவரை அந்த சகோதரியை சேர்மன் என்று யாரும் அழைக்கவில்லை
அவரது கணவரைதான் சேர்மன் என்றழைத்தார்கள்..
..
பெரிய பதவிகளை வகிக்க அல்லது பகிர்ந்துக்கொள்ள கருத்தை கேட்க அரசியல் கட்சிகள் முன்வருவதில்லை..திராவிட சிந்தனை பேசும் பெரியாரியம் பேசும் கட்சிகளில் கூட மிக மிக குறைவான பங்களிப்பையே காணமுடிகிறது என்பதை  ஒப்புக்கொள்ளதான் வேண்டும்.. பகுத்தறிவு சமநீதி சமஉரிமை பேசும் திராவிட இயக்கங்களில் கூட இன்னமும் சரியான பிரதித்துவம் பெண்களுக்கு கொடுக்கபடவில்லை.
..
அத்திபூத்ததைப்போல சிலர் மட்டுமே அரசியலில் பொதுவாழ்வில் பங்களிக்கிறார்கள்  மாற்று கருத்தை கொள்கை முரண் கொண்டவர்களை கூட அவர்களின் பங்களிப்பிற்காகவே பாராட்ட போற்றவேண்டும்..
ஜெயலலிதா மாயவதி மம்தா தொடங்கி சுஷ்மா  என பட்டியல் நீளும்.. கோபம் முரட்டு பிடிவாதம் என நிர்வாகத்தில் படுமோசமாக நடந்துக்கொண்டபோதும் அவர்களின் அர்ப்பணிப்பை குறை கூறமுடியாது
..
சிலர் ஆபூர்வமாய் வருகிறார்கள் .. தன் கருத்தை உறுதியோடு அதேவேளை நாகரீகம் கெடாமல் எதிர்கருத்தாளர்களையும் மதித்து கடமையை செம்மையாக செய்கிற சிலர் அவர்களில் #கனிமொழிகருணாநிதி வியக்கதக்க வகையில் செயலாற்றுகிறார் 
வரும்போது தன் மீது விழுந்த நிழலின் படிமம் கூட தெரியாதவகையில் செயலாற்றுகிறார்
தன்னை தடுத்துநிறுத்தி விமானநிலைய பாதுகாவலரின் செயலை எதிர்த்து #இந்திதெரியாதுபோடா என தமிழகமே சொல்ல வைத்த ஆளுமை .. உதவி என கேட்போரை அக்கறையோடு அருகில் அழைத்து கேட்கும் தாயுள்ளம்.. சமூகநீதிக்கெதிராக கூடஇருந்த பொதுவுடமைவாதி ஆதரித்தபோது நாடாளுமன்றத்தில் கடும் கண்டனதை பதிவு செய்த வீரம் .. தன் நிலைபாட்டை மாற்றிக்கொள்ளாமல் தான் நாத்திகம் பேசுபவர் தான் என சொல்லும் நேர்மை  தன் மீது சுமத்தபட்ட பெரும்பழியை சட்டத்தால் வென்று "ஜெயிச்சுட்டோம்பா" என குழந்தையைபோல குதூகலித்த போது அவரின் இயல்பு பளிச்சிட்டது .. 2ஜி எனும் இமாலய கற்பனையை சொல்லி கழகத்தை வீழ்த்திவிடலாம் தலைவரை முடக்கிவிடலாமென கங்கணம்கட்டி செயல்பட்டோருக்கு "#அப்பனைப்போல" அறம்வெல்லும் என்ற நம்பிக்கையோடு வென்று காட்டிய போராளி.. மக்களை சந்திப்பதில் எப்போதும் சுணக்கம் காட்டாமல் 
கொடுந்தொற்று காலத்திலும் சிலர் முடங்கி கிடக்கும்வேளையில் நீண்ட பயணம் காரிலேயே பயணபட்டு தன் தொகுதிமக்களின் துயரில் பங்குகொண்ட அவரின் அர்ப்பணிப்போடு கூடிய பொதுவாழ்வு .. வியக்கதக்க போராளியாய் பெண்ணியம் பேசும் தலைவராய் மிளிர்கிறார்..
..
பெண்கள் பொதுவாழ்விற்கு வரும் போது வரும் விமர்சனங்கள் பாலியல்வதந்திகள் எல்லாவற்றையும் நேர்கொண்டு தன் கடமையை சரியாய் செய்தால் பொய்கள் விழுந்து போகும் உண்மை வென்று உன்னதம் தரும் .. நிறைய பெண்கள் பொதுவாழ்விற்கு வரவேண்டும் .. அதற்கான களத்தை முற்போக்கு சமதர்மம் சமூகநீதி பேசும் கட்சிகள் அமைத்திடவேண்டும்..
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment