பாஜகவின் வெற்றியும் தோல்வியும் ..
..
நடந்து முடிந்த தேர்தல் சில உண்மைகளையும், சில கசப்பான செய்திகளையும் தருகிறது .. வீழ்த்த முடியாததென்று எதுவுமில்லை என்ற யதார்த்ததை எதிர்கட்சிகள் உணரவேண்டுமென சொல்கிறது ..
..
குஜராத் தேர்தல் நாட்டின் பிரதமரே 20 நாட்கள் அங்கேயே தங்கி தேர்தல் பணிகளை செய்ததும், தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிப்பை கூட தள்ளிவைத்து 16 ஆயிரம் கோடி நலத்திட்டங்களை அறிவிக்கும் வரை காத்திருந்ததும் வாக்குபதிவின் போது மக்களை வாக்களிக்கவிடாமல் அவர்களே வாக்குபதிவு செய்ததும், சில இடங்களில் குறிப்பாக சிறுபான்மையினர் மிரட்டபட்டதும்
ஒருவழியாக வெற்றியை தந்திருக்கிறது .. வெற்றியை "பனியாக்கள்" நலனுக்காக இதை கூட செய்யவில்லையென்றால் எப்படி..? இத்தனை ஆண்டு தொடர் வெற்றியை மக்கள் தருகிறார்கள் என்றால் மக்கள் நம்பிக்கையில் இருக்கவேண்டும் அல்லது கல்வியறிவில் மிகவும் பின் தங்கியிருக்கவேண்டும் .. முதலாளிகளின் நலனில் அக்கறை கொண்ட அரசை அடிமை தொழிலாளிகள் ஆதரிக்கதான் செய்வார்கள் ..
..
காங்கிரஸ் வியூகம் இமாச்சலத்தை போல சரியாக வகுக்கபடவில்லை.. 2017 ல் காங்கிரஸ் துளிர்த்தெழுந்தது கண்டு பாஜக காங்கிரஸில் செல்வாக்குள்ள தலைவர்களை தன்பக்கம் இழுத்து மீண்டும் அவர்களுக்கே சீட் கொடுத்தது அமைச்சராக்கபடுவீர்கள் என்ற வாக்குறுதியும் தரப்பட்டு சிலர் மாறினார்கள் .. பெரும் தொகையை இரு குஜராத் முதலாளிகளிடமிருந்து பெற்று வாரி இறைக்கபட்டது .. மோடி மான பிரச்சனை என அதிகாரிகள் பவ்யத்தோடு தங்களாலான "கடமை" யை செய்தார்கள் .. அதிகாரிகள் "சாத்திய" விசுவாச படையல் ..
..
இமாச்சலமும் இடைத்தேர்தல்களும் சில சமிஞ்சைகளை தந்திருக்கிறது .. உங்கள் பிரதமர் கனவை துறந்துவிட்டு விரும்பியோ விருப்பமில்லாமலோ காங்கிரஸை அரவணைத்தே ஆகவேண்டும் .. ஒன்று கூடி இழுத்தால் பாஜகவை தூர எறிந்துவிடலாம் .. தேசநலன் பற்றி துளியேனும் அக்கறையிருந்தால், ஆர்எஸ்எஸ் யாருக்காக செயல்படுகிறது .. பாஜக குறிப்பிட்ட சமூகத்திற்காக பெரும்பான்மை மக்களை சுரண்டுவதும் வாழ்வாதாரத்தை கல்வியை வேலைவாய்ப்பை சுரண்டுவதும் சனாதனத்தை உயர்த்தி பிடித்து மடையர்களாக வைத்திருக்க நினைப்பதும் அறிந்து பாஜக அப்புறபடுத்தபடவேண்டிய "சக்தி" என்பதை உணர்ந்து தங்களின் கனவுகளை ஒதுக்கிவைத்துவிட்டு பாஜகவை அதிகாரத்திலிருந்து கீழிறக்க வேண்டும்
..
முடியாததன்று எதிவுமில்லை என்பதை இந்த தேர்தல் உணர்த்தியிருக்கிறது .. ஒற்றுமை, தொலைநோக்கு, தேசநலன், ஒருமைபாடு, எல்லாருக்கும் எல்லாம், சமநீதி, அவரவர் நம்பிக்கைக்கு பாதுகாப்பு மீது அக்கறைக் கொண்ட ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து நின்றால் பாஜகவை வெல்லலாம்..
ராகுல் அரசியல் செய்ய பழக வேண்டும் குஜராத் பாலம் விழுந்ததை எடுத்துச் செல்வதில் கூட அக்கறைகாட்டாதவர் ..
பலர் மரணத்தில் அரசியல் செய்யவிரும்பவில்லை என்றால், கேட்க சுகமாக இருக்கும் ஆனால் பாஜகவின் தோல்வியை, அவர்களை ஊழலை வெளிகொணரவேண்டியது அவசியத்தை மறந்தார்
..
கலைஞர் சிறிய விடயத்தை கூட பேசு பொருளாக்குவார் ..
ஒருமுறை கப்பல் பேர ஊழல் என்றார் கலைஞர் உடனே எம்ஜிஆர் வாங்காத கப்பலுக்கு ஊழலா என்ற போது .. கலைஞர் கவிதை நடையில் பதில் தந்தார் ..
நீங்கள் அன்றாடம் பார்த்து மகிழும் திரைபடத்தின் மூலமே விளக்கம் தர எண்ணுகிறேன்
தன்னந்தனியாக
ஒரு அழகி
தாமரை முகத்தால்
தனியே சென்றிடுவாள்
அவரை சில முரடர்கள் வழிமறித்து கற்பை சூறையாட முனைவார்கள்
அப்போது மரத்திலிருந்தோ, மதில் சுவற்றிலிருந்தே கதாநாயகன் பொத்தென குதிப்பான்
பின்னர் என்ன நடக்கும்
முரடன் ஒருவனுக்கு கால் உடையும் ஒருவனுக்கு கை உடையும்
பின் கதாநாயகியை அழைத்துச் செல்வான்
அப்போது அடிபட்ட முரடர்கள்
ஏனப்பா "கதாநாயகரே"
நாங்கள் தான் அந்த பெண்ணின்
கற்பை சூறையாடவில்லையே
ஏனப்பா அடித்தாய் என கேட்டால் எப்படி நகைச்சுவையாக இருக்குமோ அப்படிதான் வாங்காத கப்பலுக்கு பேரமா என்பது என்பார்
கப்பல் வாங்குவதற்கு முன்தானே பேரம் பேசமுடியும் என்பதை அழகாக விளக்குவார்..
எதை அரசியல் செய்யவேண்டும் எப்போதும் எதிலும் ஆளும்கட்சிக்கு குடைசல் கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும் .. மேம்போக்கான அரசியல் எடுபடாது .. அரசியல்கட்சி நடத்துகிறோம் அரசியல் தானே செய்யவேண்டும் ..
..
ராகுல் கலைஞரை படிக்கவேண்டும் .. இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது .. துரோகிகளை இனங்கண்டு கட்டம்கட்டவேண்டும் .. ஒற்றை கருத்துடைய எதிர்கட்சிகளை அரவணைத்து விட்டுகொடுத்து சாதி,மதவெறிகளை விலக்கி நல்லதொரு விடியலை தர தொடர்ந்து முயற்சித்தால் விடியும் பாஜக கதை முடியும் ..
முடியாததென்று எதுவுமில்லை
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment