மாமனிதன்🤣 வைகோ ..
நான் கண்ட அரசியல் தலைவர்களில் மிகவும் பலவீனமானவர் .. அரசியல் வாழ்வில் மிகச் சிறந்த உயரத்தை தொடுவாரென என்னைப் போல பலரும் நினைத்ததுண்டு .. சிலநேரம் தலைவருக்கு பிறகான அரசியலில் "தலைமை" ஆகும் வாய்பிருக்குமென இளம்பிராயத்தில் நினைத்ததுண்டு..
ஆனால் கோமாளியைப்போல நாட்கள் நகருமென யாருமே எதிர்பார்க்கவில்லை
..
எங்கே சறுக்கியதென்பதை இதுவரை உணராமல் இருப்பதுதான் இவரின் வீழ்ச்சிக்கு காரணம் .. புலிகளோடான தொடர்பும் அதை தொடர்ந்து இவரை இயக்கியவர்களின் "சொல்" கேட்டு ஆடியதும் எல்லாம் தப்பாட்டமாய் போனது .. முடிவுகளை உணர்ச்சிவயப்பட்டு எடுப்பதும் எடுத்த முடிவில் உறுதியாக இல்லாமல் சஞ்சலபடுவதும் வெளிப்படையாகவே தெரிந்தது.. இவரின் "கண்டு" படித்தவர்கள் கூட முகம் நேர பேசுகிறார்கள் ..
..
வீராவேசமாக பேசினால், தொண்டர்களை கட்டிபோடலாம் .. ஆனால் விவேகம் தான் அடுத்த நிலைக்கு கொண்டு போகும் .. எல்லாவற்றையும் மறந்து சிறைசாலை வெளியே காத்திருந்த தவைவனை புறக்கணித்த அந்த "நொடி " மாபெரும் தவறை அரசியல் வரலாற்றில் செய்த தருணமாக இருந்தது ..
கட்சியிலிருந்து நீக்கபட்ட போது
அவரை நம்பி வந்த 9 மாவட்ட செயலாளர்கள், சில முன்னணி தலைவர்கள், அதோடு பார்ப்பன ஊடகங்கள் உருவாக்கிய பிம்பம் எல்லாம் மௌனமாய் கடந்து
"மறுபடியும் திமுக" என மதிமுகவை
விளித்த தலைவனின் தொலைநோக்கை கண்டு வியக்காமல் இருக்கமுடியவில்லை
எம்ஜிஆர் பிரிந்த போது கூட வருத்தபடாதவர் "கூட இருந்தவன் " கொலைவாளை உறுகுவதைப்போல கட்சிக்கு உரிமை கொண்டாடிய போது கொஞ்சம் வருத்தபட்டாலும்
வைகோ மீது தனி பாசம் மட்டும் குறையாமல் இருந்ததால் தான் "வருவான் " தம்பி என சிறைவாசலில் காத்திருந்தார்.. ஆனால் காலம் வலியதென்பதை உணர்த்தி கடைசியில் மெல்ல கரையும் கற்பூரக் கட்டியைப்போல மதிமுக கரைந்து கடைசியில் வையாபுரியில் நிற்கிறது .. இருக்கும் சொற்பமும் மௌனமாய் நகரும் காலம் வரும்
..
இளைஞர்கள் யார் பின்னால் செல்வதென்று கேட்டால் திருமுருகன் பின்னால் செல்லுங்கள் என கூறுவேன் என்கிறார் .. அன்று செய்த அதே தவறை "இளைஞர்களை வழிகெடுப்பதை " இன்னமும் செய்கிறார் .. மேடையில் புகழ வேண்டுமென்பதற்காக தகுதிக்கு மீறிய வார்த்தைகளை கையாள்வது பேச்சாளர்களுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம் ஆனால் ஒரு கட்சியின் தலைவனுக்கு கொஞ்சமும் பொருந்தாத விடயம் ..
நல்ல தலைவனாகவோ நல்ல வழிகாட்டியாகவோ நல்ல ஜனநாயகவாதியாகவோ இல்லை .. புலிகள் ஈழம் என வாழ்வின் பாதியை வீணடித்து கடைசியில் "பலனடைந்தோர்" கூட கண்டுக்கொள்ளாத நிலையில் "இருப்பே" கேள்வி குறியாகி நிற்பதை காணும் போது .. கடந்த காலங்களில் "போர்வாளாய் " இருந்தவர் என்கிற ஆதங்கம் மட்டுமே மிஞ்சுகிறது ..
வீரனின் கையில் இருக்கும் வரை தான் அதற்கு போர்வாள் .. காயலாங்கடையில் "எடைப்பொருள்" அவ்வளவுதான்
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment