Sunday, October 9, 2022

இவர்தான் பெரியார்,..,
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
"நீங்கள் என்னை என்னதான் சொன்னாலும், என்னதான் செய்தாலும்,
உங்கள் ஒருவர் மீதும் தனிப்பட்ட முறையில்
ஒரு துளி கோபமோ, வெறுப்போ கொள்ள மாட்டேன். 

வலிக்குமென்று அஞ்சிக்கொண்டு இருக்காமல், ஒரு மருத்துவர் எப்படி உங்களுக்கு ஊசி போடுகிறாரோ, தேவைப்பட்டால் எப்படி அறுவைச் சிகிச்சை செய்கிறாரோ, அப்படியே நானும் அதிக உரிமை எடுத்துக் கொண்டு, உங்களை எல்லாம் விமர்சிக்கிறேன் என்று எடுத்துக் கொள்ளுங்கள். 

உங்கள் ஒவ்வொருவரையும் நான் அளவு கடந்து நேசிக்கிறேன். தீங்கு விளைவிக்கும் எந்தக் கிருமியும் உங்களை அண்டி விடக் கூடாது என்பதற்காகத்தான், உங்களை எந்நேரமும் கவனித்து வருகிறேன்.

நாக்கில் தழும்பு ஏறும்வரை உங்களுக்காகப் பேசுவேன். கை சாய்ந்து கீழே தொங்கும் வரை உங்களுக்காக எழுதுவேன். கால்கள் துவளும் வரை, பட்டி தொட்டிகளில் எல்லாம் நடப்பேன்.

எனக்கு உண்மையென்று பட்டதை நான் நம்புவதைப் போல, நீங்களும் உங்களுக்கு உண்மையென்று பட்டதை நம்புங்கள். அந்த உண்மையைப் பாதுகாக்கப் போராடுங்கள். அது ஒன்று போதும்."
                        - தந்தை பெரியார்.
#Periyar #பெரியார் #dravidianmovememt

No comments:

Post a Comment