Wednesday, December 7, 2022

ஆர்எஸ்எஸும் அர்விந்த் கெஜ்ரிவாலும் பின்னே உவைசியும் 
..
ஆர்எஸ்எஸின் கள்ளகுழந்தைகள் 
மக்களிடம் மதிப்பிழக்கிற போது 
வாக்குகள் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸிற்கு போகாமல் மடைமாற்றுவதும், பாஜக எதிர்ப்பு வாக்குகளை பிரிக்க உதவுவதும் மட்டுமே அவர்களுக்கு கொடுக்கபட்ட வேலை அதை தெளிவாக சரியாக செய்கிறார்கள் .. பஞ்சாப்பில் காங்கிரஸுக்கு காரியம் செய்ய சிந்துவை களமிறக்கிய போதே சீக்கியர்கள் பாஜகவை ஆதரிக்கமாட்டார்கள் என அறிந்து ஆம்ஆத்மிக்கு ஊடக வெளிச்சம் தந்தார்கள் .. டெல்லி பெருநகரம் கைவிட்டு போகும் என அறிந்து காங்கிரஸ் வரகூடாதென்பதில்  பாஜகவைவிட காங்கிரஸில் இருக்கும் பார்ப்பன சங்கிகள் அதிகம் கவலைக் கொள்வதும் கவனமாக இருப்பதும் வெளிப்படையாகவே தெரிந்தும் காங்கிரஸ் தலைமை களைந்தெறிய தயங்குவதுதான் வியப்படைய வைக்கிறது ..
..
காங்கிரஸ் தனிநபர் செல்வாக்கோடு மீண்டும் பழைய நிலைக்கு வருவது மிக கடினம் .. ராகுலின் "யாத்திரை" மக்களின் செல்வாக்கை வாக்குகளாக்க முடியாமல் பிரித்தாளும் சூழ்ச்சியை காங்கிரஸ் "கிழங்கள்" செய்துக் கொண்டிருக்கிறது .. சிறுபான்மையினரின் இயல்பாகவே வரும் பாஜக எதிர்ப்பை தனியாக பிரித்து பொது எதிர்ப்பிலிருந்து தனித்து காட்ட நினைத்து ஒவ்வொருமுறையும் பாஜகவிற்கு வழிவிடுவதும் இஸ்லாமியர்களை பொது சமூகத்திலிருந்து தனிமைபடுத்த தன்னாலான முயற்சியை தொடர்ந்து செய்துவருகிறார் .. கர்நாடகாவில் காங்கிரஸ் தோற்க காரணமாக இருந்தவர் இப்போதும் அதே பணியை குஜராத்திலும் செய்கிறார் உவைசி எனும் கோடாரி
..
கெஜ்ரிவால் செல்லப்பிள்ளை என்றால் உவைசி கள்ளப்பிள்ளை 
உவைசி மட்டுமல்ல நிறைய இஸ்லாமிய அமைப்புகளும் (குறிப்பாக SDPI  போன்ற ) இதையே தான் செய்கிறது இவர்கள் முஸ்லிம்களுக்கு உதவிபுரியவில்லை மாறாக கெடுதலை தெரிந்தே செய்கிறார்கள் .. இதோடு மாநிலத்திற்கு மாநிலம் பல்வேறு பிரிவுகள் தலைமை, மற்றும் புகழுக்காக வேரில் வெந்நீரை ஊற்றுகிற செயலை கொஞ்சமும் நெஞ்சில் சஞ்சலமில்லாமல் செய்கிறார்கள் 
இவர்கள் இருக்கிறவரை ஆர்எஸ்எஸையும் அதன் அரசியல் கட்சியான பாஜகவை அசைக்கமுடியாது 
..
நல்வாய்ப்பாய் தென்னகத்தில் குறிப்பாக தமிழ்நாடு, கேரளம், ஆந்திரத்தில் மக்கள் மதவெறிக்காளாமால் புரிந்து நிற்கிறார்கள் இங்கேயும் குறிப்பாக தமிழ்நாட்டில் நிறைய உவைசிகள் சமுதாயத்தின் சாபகேடாய் நின்றாலும்  தெளிவோடு மக்கள் இவர்களை பிச்சாங்கையால் புறந்தள்ளுகிறார்கள் ..
நிறைய சாதீய அமைப்புகளும் அதிலும் குறிப்பாய் பட்டியலின சங்கிகளும், பணம் புகழுக்காக ஈசலைப்போல வந்து விழுகிறவர்களும் பெருக்கெடுத்தாலும் சூரியனின் பெருநெருப்பில் பொசுங்கி போகிறார்கள் 
..
நாடு எங்கே போகிறது .. தன்னலம் பாராமல் உழைப்பவர்களை விட கார்ப்பரேட் சேவகர்களை கொண்டாடுகிறது .. மதம் தலையின் கிரீடமென நம்பி வடவர்கள் சிந்திக்கும் திறனற்று நிற்பது, சாதிய சனாதர்ம கோட்பாட்டை எதிர்க்க துணிவற்று மடமையில் ஊறி, புராண புரட்டுகளை நம்பி நாட்டை அழிவின் விளிம்பிற்கு கொண்டு செல்கிறார்கள் .. பொதுவுடமை பேசும் சிவப்புகள் இரத்ததிற்கு பிறகு காவியை பூசிதான் தொடங்கியது.. மக்கள் விழிப்படைந்து சகாக்களை புறக்கணிக்க தொடங்கியவுடன்  கெஜ்ரிவாலையும் உவைசிகளையும் வைத்து  "சூது" செய்கிறார்கள் 
..
இந்திய ஒன்றியத்திற்கு இப்போதைய தேவை பல்வேறு கட்சிகளின் ஒருங்கிணைப்பும் நல்ல தலைமையும் ..  எதிர் அணியினர் கருத்துவேறுபாடுகளை களைந்து, புற்றீசல்போல் வளர்ந்து வரும் உவைசிகளையும் கெஜ்ரிவால் போன்ற கள்ளக்குழந்தைகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு, தங்களின் பிரதமர் ஆசைகளை ஒதுக்கிவைத்துவிட்டு ராகுல் காந்தியை (காங்கிரஸை) முன்னிறுத்தி நாட்டில் மாற்றத்தை கொண்டுவரவேண்டும் .. இதைதான் போன தேர்தலிலேயே 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் சொன்னார் .. 
இப்போதாவது விழிந்தெழுங்கள்
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment