கடிதோச்சி மெல்ல எறிந்திருக்கிறார் தலைவர் .. M. K. Stalin ❤️👏
மிக அழகாக அமைச்சர்கள் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளின் செயல்களை கண்டித்தும் .. பழி என் மீதுதான் வரும் என்று இளங்கோ அடிகளின் துணைக்கழைத்து வள்ளுவனின் சொல்லை ஏற்று "கடிதோச்சி மெல்ல எறிக" மென்மையாக கண்டித்திருக்கிறார்
தலைமையின் மாண்பு இது ..
..
இரண்டாம் நிலை தலைவர்கள் அமைச்சர்கள் வெற்றிக்கு பிறகான அவர்களின் செயல்கள் நடவடிக்கைகள் பேச்சுகள் உடல்மொழிகள் சிலரை புண்படுத்தியிருக்கிறது .. எல்லோரும் இல்லையென்கினும் சிலரின் செயல்பாடுகளும் உடல்மொழியும் திமிரின் வெளிபாடாய் இருந்திருப்பதும் சிலரின் சொல் நகைச்சுவை என்றெண்ணி கேலியாகியிருப்பதும் நாம் அறிந்தது தான் .. சொல் முக்கியம்
வெல்லும், கொல்லும் என தெளிவாக உணர்ந்து உரையாற்றி
தலைவராய் உயர்ந்துநிற்கிறார் இது எச்சரிக்கை மணி ..
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்
அவர்கள்
அன்பாகவும் சொல்ல தெரியும் தேவைபட்டால் சுழற்றவும் தெரியும் என்பதை பொட்டில் அடித்தாற்போல் பொதுக்குழுவில் பேசியிருக்கிறார் .. புரிந்தவர்கள் தெளிந்து உணர்ந்து செயல்பட்டால் நல்லது ..
..
கடிதோச்சி மெல்ல எறியும் குணம் கலைஞரிடத்தில் காணலாம்.. கட்சிகாரர்கள் ஏதேனும் தவறிழைத்துவிட்டு வந்தால் அதை அவர்கள் மனம் புண்படாதவாறு நறுக்கென்று கொட்டி சொல்லி திருத்துவார் .. அதைப்போல தளபதியாரும் மெல்ல கொட்டியிருக்கிறார் .. அமைச்சர்களின் ஆணவம் மூத்த நிர்வாகிகளின் அலட்சிய போக்கு கொள்கை தெளிவற்றவர்களின்
சமீபகால நடவடிக்கைகள் .. தொண்டர்களை உதாசீனபடுத்தும் நெறிக்கெட்டவர்கள் என தளபதி லட்சியத்திற்கு இடையூறுயாய் நிற்போரை நல்லமொழியில் புத்தி சொல்லியிருக்கிறார் ..
..
இனியேனும் கவனமாய் இருங்கள்
ஏனெனில்
stalin is more dangerous than karunanidhi.. பகைவருக்கு மட்டுமல்ல.. கொள்கைபிழைகளுக்கும் அகம்பாவம் கொண்டோருக்கும்
திமிரோடு திரிபவருக்கும் தொண்டனை கண்டுக்கொள்ளாத பொறுப்பாளர்களுக்கும் தான்
இது எச்சரிக்கை மணி ..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment